Category: அறிவியல் உண்மைகள்

b530

நாம் முடிவு செய்வதற்கு முன்பே மூளை செயல்படுகிறதா?

ஒருவர் ஒரு செயலைச் செய்ய முடிவெடுப்பதற்கு முன்பே, அவரது மூளை அந்தச் செயலுக்கான ஆணையை உருவாக்கிவிடுகிறது. இது மூளையின் வியப்பான செயலாகும். ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சமூக உறவுகள் தொடர்பான மூளைச் செயல்பாடுகளில் புதிய ஆய்வு ஒன்றை நடத்தினர். ஒருவர் மற்றொருவரை அணுகிச் செல்லும் முடிவை எடுப்பதற்கு பல வினாடிகள் முன்னரே, மூளையில் உள்ள ஒரு தனித்துவமான பகுதியில் நரம்பியல் செயல்பாட்டு வடிவம் தோன்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்விற்காக, விஞ்ஞானிகள் “ஜீப்ரா […]

வியாழன் மற்றும் சனிக்கு ஏன் அதிக நிலவுகள்?

சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பட்டியலின்படி, ஜனவரி 2026இல் வியாழன் கோளுக்கு 95 நிலவுகளும், சனிக்கோளுக்கு 146 நிலவுகளும் உள்ளன. நம் பூமிக்கு ஒரே ஒரு நிலவு. வெள்ளி, புதன் கோள்களுக்கு நிலவு ஏதுமில்லை. ஒரு கோள், துணைக்கோள்களை (நிலவு) மூன்று விதங்களில் பெறுகிறது. முதலாவது, கோள் உருவாகும்போதே அதனுடன் சேர்ந்து உருவாவது. இப்படித்தான் வியாழன் கோளின் பெரிய நிலவுகளான ஐயோ (Io), யூரோபா (Europa), கனிமீட் (Ganymede), காலிஸ்டோ (Callisto) போன்றவை உருவாயின. இவை வியாழன் கோள் […]

யுரேனஸ், நெப்டியூன் கோள்களில் வைர மழை பொழியுமா?

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களில் வைர மழை பொழிகிறது என்று வானியலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது ஒரு கோட்பாட்டு ஊகம் மட்டுமே. இதுவரை நேரடியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் கோள்கள் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள ‘பனி ராட்சதக் கோள்கள்’ (Ice Giants) என்று அழைக்கப்படுகின்றன. வானியலில் ‘பனி’ என்பது உறைநிலையில் உள்ள ஹைட்ரஜன் அடங்கிய லேசான தனிமங்களின் சேர்மங்களைக் குறிக்கும். இந்தக் கோள்களின் வெளிப்பகுதி ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன், நீர், அமோனியா ஆகியவற்றால் […]

புறக்கோள்களில் நீரை எப்படிக் கண்டறிகிறார்கள்?

பிற சூரிய மண்டலங்களைச் சேர்ந்த புறக்கோள்களில் (Exoplanets) நீர் உள்ளதா என்பதை வானியலாளர்கள் ஒளியின் இயல்பைப் புரிந்துகொண்டு கண்டறிகிறார்கள். ஒவ்வொரு தனிமமும் ஒவ்வொரு மூலக்கூறும் ஒளியுடன் தனித்துவமான வழியில் தொடர்புகொள்கின்றன. இந்தத் தனித்துவத்தைப் பயன்படுத்தியே தொலைதூரப் புறக்கோள்களின் வாயுமண்டலத்தை ஆராய முடிகிறது. இதற்கான முக்கியக் கருவி நிறமாலை ஆய்வு (Spectroscopy) ஆகும். வெள்ளொளியை ஒரு முப்பட்டகம் (Prism) வழியாகச் செலுத்தினால், ஏழு வண்ணங்களின் வானவில் கிடைக்கும். ஆனால், எந்த ஒரு வாயு அல்லது பொருளின் வழியாக இந்த […]

வால்மீன்களுக்கு வால் எப்படி உருவாகிறது?

வால்மீன்கள் என்பவை உறைந்த பனிக்கட்டிகள், தூசுப் படலங்கள், சிறு கற்கள், மணல் துகள்கள் ஆகியவற்றின் கலவையாகும். இவை கார்பன் மோனாக்சைடு, கார்பன் டைஆக்சைடு, நீர், மீத்தேன், அமோனியா போன்ற வாயுக்களின் உறைந்த பனிக்கட்டிகளாக இருக்கும். வால்மீன்கள் கோள்களைப் போலவே சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் அவற்றின் சுற்றுப்பாதை மிகவும் நீள்வட்டமானது. அதாவது, அவை சூரியனிலிருந்து மிகத் தொலைவுக்குச் சென்றுவிட்டு, பின்னர் ஒருமுறை சூரியனை நெருங்கி வரும். சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது வால்மீன்கள் முற்றிலும் உறைந்த நிலையில் […]

மின்னல் தாக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

மின்னல் வெளியே தாக்கும்போது, வீட்டுக்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. ஒருவேளை நீங்கள் வெளியே இருக்கும்போது மின்னல் தாக்கத் தொடங்கினால், உடனடியாக வீட்டுக்குள் செல்ல வேண்டும். அல்லது மேற்பக்கம் மூடியுள்ள ஒரு அறைக்குள் அல்லது கூரையுள்ள காருக்குள் சென்று ஜன்னல்களை முழுவதுமாக மூடிக்கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும். வயலில் இருந்தால் மோட்டார் அறைக்குள் செல்லலாம். ஒளிந்துகொள்ள வீடோ, மறைவோ இல்லாதபோது, குத்தவைத்து அமர்ந்து (squatting position) கால்களை ஒன்றாக வைத்துக்கொண்டு தலையை உள்பக்கமாக சுருட்டி, காதுகளைக் கைகளால் மூடி அப்படியே […]

இறக்கும் முன் நம் மூளை என்ன செய்யும்?

ஒருவர் மரணமடையும்போது என்ன நடக்கும் என்பது பற்றி ஒரு புதிய ஆய்வு சில தகவல்களைத் தருகிறது. ஒரு விஞ்ஞான ஆய்வு நடந்துகொண்டிருந்தபோது, ஒரு நோயாளி இயற்கையாக மாரடைப்பால் இறந்து போனார். அப்போது, இறக்கும் தருவாயில் மனித மூளையில் சில எதிர்பாராத பதிவுகள் கிடைத்தன. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளி ஒருவரின் மூளை அலைகளை விஞ்ஞானிகள் குழு கண்காணித்து வந்தது. அவர் மாரடைப்பால் இறந்தபோது, இறப்பதற்கு முன்னும் பின்னும் 30 வினாடிகளில், அவரது மூளை அலைகள் […]

முதுமை: உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன?

வயதாவது என்பது உடலின் செல்கள் மற்றும் உறுப்புகளின் செயல்திறன் காலப்போக்கில் குறைவதைக் குறிக்கிறது. இது ஒரு இயற்கையான உயிரியல் செயல்முறை ஆகும். மனித உடலில், மூலக்கூறு, மரபணு மற்றும் செல் சேதங்கள் குவிவதால் உடல் மற்றும் மனத் திறன்கள் குறைந்து, நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மனித உடல் தினமும் சுமார் 330 பில்லியன் செல்களைப் புதுப்பிக்கிறது. இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு 7 முதல் 10 வருடங்களுக்குள், ஒரு முழுமையான செல் புதுப்பித்தல் நடைபெறுகிறது. எனினும், […]

மச்சங்கள் எப்படி உருவாகின்றன?

நம் தோலில் மெலனோசைட்டுகள் (melanocytes) என்ற சிறப்பு செல்கள் உள்ளன. இந்த செல்கள் மெலனின் (melanin) என்ற நிறமியை உருவாக்குகின்றன. இந்த மெலனின்தான் நம் தோலுக்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுக்கிறது. மெலனோசைட்டுகள் பொதுவாக தோல் முழுவதும் பரவி இருக்கும். ஆனால் சில சமயங்களில், இந்த மெலனோசைட்டுகள் ஒரே இடத்தில் குவிந்துவிடும். அவ்வாறு ஒரே இடத்தில் குவிந்துவிடும்போது, அங்கே மச்சம் உருவாகிறது. பெரும்பாலான மச்சங்கள் ஆபத்தற்றவை. ஆனால், ஒரு மச்சம் திடீரென்று பெரிதானாலோ, அதில் அரிப்பு ஏற்பட்டாலோ, அல்லது […]

குளிர்காலத்தில் நிறம் மாறும் விலங்குகள் எவை?

சில விலங்குகள் குளிர்காலத்தில் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை. ஆர்க்டிக் நரி (Arctic fox) பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் இது வெள்ளை நிறமாக மாறும். குழிமுயல் (Snowshoe hare) வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும். இந்த முயல்கள் பனிக்காலத்தின் போது வெள்ளை நிறமாக மாறும். டார்மிகன் (Ptarmigan) ஒரு வகை பறவை. இது பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும். பனிக்காலத்தில் இதன் இறகுகள் வெள்ளை நிறமாக மாறும். குறுவால் […]

நிலவில் ஏன் ஈர்ப்புவிசை குறைவு?

பண்டைய காலத்தில், நெருப்பு மேலே செல்வதையும், கல் கீழே விழுவதையும் வைத்து, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ‘இயல்பு இயக்கம்’ இருப்பதாகக் கருதினார்கள். நெருப்பு சூரியனை நோக்கி மேலே செல்கிறது என்றும், கல் பூமிக்குச் சொந்தமானது என்பதால் கீழே விழுகிறது என்றும் நம்பினார்கள். பூமி ஒரு கோளம் என்று அறிஞர்கள் கண்டறிந்தபோது, பந்தின் அடியில் இருப்பவர்கள் கீழே விழுந்துவிட மாட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் ‘குருத்துவாகர்ஷணம்’ என்ற கருத்து உருவானது. அதாவது, பூமி கனமான பொருள்களைத் தன்னை […]

சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் எதனால் ஆனவை?

சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்களை பயனியர் 11 (Pioneer 11), வாயேஜர் 1 (Voyager 1), வாயேஜர் 2 (Voyager 2), காசினி (Cassini) ஆகிய நான்கு விண்கலங்கள் ஆய்வு செய்துள்ளன. இந்த ஆய்வுகள், சனியின் வளையங்கள் திடமான அமைப்பு அல்ல என்பதைக் காட்டின. கோடிக்கணக்கான பொருள்கள் அருகருகே சனியைச் சுற்றி வருவதால், தொலைவிலிருந்து பார்க்கும்போது அவை ஒரு வளையம் போலத் தோற்றமளிக்கின்றன. சனியின் வளையங்கள் சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் வரை விரிந்திருந்தாலும், அவற்றின் தடிப்பு (thickness) […]

பாலூட்டிகளுக்கு ஏன் ஐந்து விரல்கள் உள்ளன?

மனிதர்களுக்குக் கைகளிலும் கால்களிலும் ஐந்து விரல்கள் இருப்பதுபோல, பூனைகள், நாய்கள் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளின் கால் பாதங்களில் ஐந்து விரல்கள் அமைந்திருப்பது ஏன் என்பது நீண்ட காலமாக அறிவியலாளர்களுக்கு விடை தெரியாத கேள்வியாக உள்ளது. விலங்குகளின் கால் பாதங்களில் சில விரல்கள் சுருங்கியிருக்கலாம் அல்லது இடம் மாறியிருக்கலாம். ஆனாலும் ஐந்து என்னும் எண்ணிக்கையில் மாற்றம் இருப்பதில்லை. முற்றிலும் வேறுபட்ட சூழலில் பரிணாம வளர்ச்சிபெற்றுவந்த மனிதர்களுக்கும், மயிருள்ள விலங்குகளுக்கும் இப்படி ஓர் ஒற்றுமை இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க […]

வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் ஏன் சூடேறுவதில்லை?

வண்ணத்துப்பூச்சிகள் (butterflies) மிக வேகமாகப் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் சூடேற வேண்டும் என்று இயற்பியல் விதிகள் கூறுகின்றன. ஆனால், பகலில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் சூரிய வெப்பத்தினால் கூட சூடேறுவதில்லை என்று ஒரு ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகள் குளிர்ந்திருப்பதற்கு அவற்றின் தனித்துவமான கட்டமைப்பே காரணம். வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளில் உள்ள உயிருள்ள பகுதிகளான பூச்சிக்குருதியைக் (hemolymph) கடத்தும் நாளங்கள் மற்றும் ஆண் வண்ணத்துப்பூச்சிகள் வெளிப்படுத்தும் மணமுள்ள ஃபெரோமோன்களைக் (pheromones) கொண்ட பைகள் வெப்பத்தை விரைந்து கடத்திவிடுகின்றன. இவற்றைச் […]

வானம் எங்கே முடிகிறது, விண்வெளி எங்கே தொடங்குகிறது?

சூரிய ஒளி எல்லா நிறங்களையும் கொண்டது. அது வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, வாயு மூலக்கூறுகளில் மோதிச் சிதறுகிறது. குறுகிய அலைநீளம் கொண்ட நீல ஒளி எல்லா திசைகளிலும் அதிகமாகச் சிதறுவதால், வானம் நீல நிறமாகத் தெரிகிறது. இந்த வானம் எவ்வளவு உயரம் கொண்டது, எங்கே முடியும் என்ற கேள்விகள், 1957 அக்டோபர் 4 அன்று சோவியத் ஒன்றியம் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் I-ஐ பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு முக்கியத்துவம் பெற்றன. ஸ்புட்னிக் பல நாடுகளின் மேலே பறந்து […]

நிலவு பூமியை விட்டு விலகிச் செல்கிறதா?

நிலவு ஆண்டுக்கு சுமார் 3.78 சென்டிமீட்டர் (cm) வேகத்தில் பூமியை விட்டு விலகிச் செல்கிறது. இந்தத் தகவல் லேசர் கற்றைத் தொழில்நுட்பம் (laser beam technology) மூலம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு எடுத்துச் சென்ற அப்பல்லோ விண்கலத்தில் லேசர் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் ஒரு பகுதி அங்கேயே தங்கிவிட்டது. 1970-ல் ஏவப்பட்ட லூனா 17 விண்கலத்தில் சென்ற சோவியத் ஒன்றியத்தின் முதல் ரோபாட் வாகனமான ‘லூனோகோட் […]

மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா?

பூமியில் வானம் நீல நிறமாகத் தெரிவதற்குக் காரணம் ராலே ஒளிச்சிதறல் (Rayleigh scattering) ஆகும். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, காற்றில் உள்ள மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் நீல நிற ஒளியை அதிக அளவில் சிதறடிக்கின்றன. இந்தச் சிதறிய ஒளிக்கதிர்கள் தூசிகளில் பட்டு பூமியை நோக்கித் திரும்புவதால், வானம் நீலமாகத் தெரிகிறது. சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வானம் நீலமாக இருந்திருக்காது; ஆரஞ்சு நிறத்தில் […]

பூமி ஏன் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கிறது?

நாம் மிதிவண்டியை ஓட்டும்போது, பெடலை மிதிப்பதை நிறுத்தினால், அது சிறிது தூரம் ஓடி நின்றுவிடும். ஊஞ்சலையும் தொடர்ந்து ஆட்ட, நாம் தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள, அதை எது தூண்டுகிறது? பூமி எப்படித் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கிறது? இதற்கான விடையை கலிலியோ (Galileo) கண்டறிந்தார். அவர் பொருள்களின் இயக்கத்தை ஆய்வு செய்தார். இரண்டு வழுவழுப்பான பலகைகளை ‘V’ வடிவில் வைத்து, முதல் பலகையில் ஒரு பந்தை உருட்டிவிட்டார். பந்து கீழே உருண்டு, இரண்டாவது […]

கரடிகள் ஏன் நீண்ட நேரம் உறங்குகின்றன?

கரடிகள் மிக நீண்ட காலம் தூங்கக்கூடியவை. பழுப்பு கரடிகள் எட்டு மாதங்கள் வரை கூட தூக்கத்தில் இருக்கும். இவ்வளவு நீண்ட நாட்கள் ஒரு மனிதன் தூங்கினால், எலும்புகள் வலுவிழந்து, தோல் வறண்டு, தசைகள் சிதைந்து மோசமான நிலை ஏற்படும். கரடிகள் தூங்கும் போது அவற்றின் இதயம் நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கிறது. இது சாதாரண உறக்கத்தைக் கடந்த ஒருவித ஓய்வு நிலை. கரடிகள் உறங்கும் போது எப்படி எந்த நோயும் இல்லாமல், இரத்தம் உறைந்துவிடாமல் உறங்குகின்றன […]

கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன?

கண்ணாடிக்குத் தனியாக ஒரு நிறம் இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். சிலர் கண்ணாடியின் நிறம் வெள்ளி அல்லது வெள்ளை என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் கண்ணாடிக்கு மிகச் சிறிய பச்சை நிறச் சாயல் உள்ளது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்கா கிளாஸ் (silica glass) போன்ற பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் பின்புறத்தில் ஒளியைப் பிரதிபலிக்கும் உலோகப் பூச்சு அமைக்கப்படுகிறது. ஒரு சரியான கண்ணாடி அனைத்து நிறங்களையும் ஒரே அளவில் பிரதிபலித்தால், அது வெள்ளை நிறமாகவே […]

கடலின் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது?

கடலின் நிறம் நீலமாக இருப்பதற்கும், வானத்தின் நிறம் நீலமாக இருப்பதற்கும் ஒரே காரணம் தான். சூரிய ஒளியில் பல நிறங்கள் கலந்துள்ளன. இந்த நிறங்களில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களை கடல் நீர் உடனடியாக உள்ளிழுத்துக் கொள்கிறது. ஆனால், நீல நிறத்தை மட்டும் கடல் நீரால் உள்ளிழுத்து மறைத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால், சூரிய ஒளி கடல் நீரில் படும்போது, மற்ற நிறங்கள் உறிஞ்சப்பட்டு, நீல நிறம் மட்டும் பிரதிபலிக்கிறது. இதன் காரணமாகவே கடல் நீர் […]

நம் பற்கள் தேயுமா?

வண்டிகளின் டயர்கள் தேய்வது போல, இரும்பாலான சங்கிலிகள் கூடத் தேய்மானம் அடையும். ஆனால், நாம் தினமும் துலக்கும் பற்களும், மென்று தின்னும் பற்களும் ஏன் தேய்வதில்லை என்று சிலர் கேட்கலாம். உண்மையில், பற்களும் தேய்கின்றன. ஆனால், அது மெதுவாகவே நடக்கிறது. நாம் பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் பற்பசை, பற்கள் அதிகமாகத் தேய்மானம் அடையாமல் பாதுகாக்கிறது. முன்பு சாம்பல் அல்லது பற்பொடி கொண்டு பற்களைத் தேய்த்தார்கள். கடினமான உணவுகளை மென்று சாப்பிட்டார்கள். அதனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் பற்கள் […]

மரத்தில் பாயும் மின்சாரம் மரக்கட்டையில் ஏன் பாய்வதில்லை?

தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தும் என்பது உண்மைதான். ஆனால், தூய்மையான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. தண்ணீரில் கலந்துள்ள உப்புகளும் தாதுக்களும்தான் மின்சாரத்தைக் கடத்துகின்றன. மரங்கள் தண்ணீரை உறிஞ்சும்போது, தண்ணீரில் உள்ள உப்புகளும் தாதுக்களும் மரத்திற்குள் செல்கின்றன. அதனால் பச்சை மரங்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன. ஆனால், காய்ந்த மரக்கட்டைகளில் நீர்ச்சத்து இல்லை. அதனால் அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. மின்சாரம் தொடர்பான வேலைகளைச் செய்யும்போது, மரக்கட்டை அல்லது மரத்தால் செய்யப்பட்ட முக்காலி மீது நின்றுகொண்டு வேலை செய்யச் சொல்வதற்கு இதுவே காரணம். […]

பேருந்தில் தூங்கும்போது தலை ஏன் ஆடுகிறது?

நாம் படுத்துத் தூங்கும்போது நம் தலை ஆடுவது இல்லை. ஆனால் பேருந்திலோ, நாற்காலியிலோ அமர்ந்து தூங்கும்போது தலை ஆடுகிறது. நாம் தூங்கும்போது உடலில் உள்ள பல தசைகளின் செயல்பாடு குறைகிறது. குறிப்பாக, கழுத்தைத் தாங்கிப் பிடிக்கும் தசைகளின் செயல்பாடும் குறைகிறது. படுக்கையில் தூங்கும்போது தலை, கழுத்து, உடலுக்குப் படுக்கையும் தலையணையும் ஆதரவாக இருப்பதால் தலை நிலையாக இருக்கிறது. ஆனால், பேருந்தில் செல்லும்போது பேருந்தின் இயக்கம், வேகம், திருப்பம் காரணமாகத் தலை அசைகிறது. பேருந்தில் தூங்கும்போது கழுத்துத் தசைகளின் […]

தேனடை ஏன் அறுங்கோண வடிவில் உள்ளது?

தேனீக்கள் மெழுகைப் பயன்படுத்தி கூட்டை உருவாக்கும்போது, முதலில் வட்டம் அல்லது உருளை வடிவத்திலேயே அறைகளை உருவாக்குகின்றன. பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பத்தால் மெழுகு சற்று உருகுகிறது. கூட்டில் உள்ள பல உருளை வடிவ அறைகள் வெப்பத்தால் உருகி, ஒன்றை மற்றொன்று நெருக்கமாக அழுத்துகின்றன. அப்போது, மேற்பரப்பு இழுவிசை (surface tension) மற்றும் அழுத்தத்தின் சமநிலை (equilibrium of pressure) காரணமாக அந்த வட்டங்கள் இயற்கையாகவே அறுங்கோண வடிவமாக […]

தாவரங்களின் முட்களில் உள்ள அறிவியல் என்ன?

தாவரங்களுக்கு முட்கள் இருப்பது, அவற்றை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு வழியாகும். இந்த முட்கள் கூர்மையாக இருப்பதால், அவை விலங்குகளின் தோலை எளிதில் கிழித்து உள்ளே சென்றுவிடும். ஒரு விலங்கு முள்ளின் மீது மிகக் குறைவான விசையைச் செலுத்தினால் கூட, முள்ளின் கூர்மையால் அந்த விசை மிகச் சிறிய பரப்பளவில் செயல்பட்டு அதிக அழுத்தத்தை (pressure) உருவாக்குகிறது. இதனால் முள் எளிதாக தோலைக் கிழித்து உள்ளே செல்கிறது. இதன் காரணமாக, விலங்குகள் முட்கள் நிறைந்த […]

பறவைகள் வழிதவறாமல் பறப்பது எப்படி?

பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பறவைகள் வலசை போவது (Migration) ஒரு பெரிய ஆச்சரியம். ஒவ்வொரு ஆண்டும், குளிர் நாடுகளில் இருந்து வேடந்தாங்கல், கூந்தன்குளம் போன்ற தமிழ்நாட்டுப் பகுதிகளுக்குப் பறவைகள் வருகின்றன. கனடாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பெருங்கடல்களையும், கண்டங்களையும் தாண்டிப் பறவைகள் வலசை செல்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. முந்தைய ஆண்டு எந்த இடத்திற்குச் சென்றனவோ, அதே இடத்திற்கு அடுத்த ஆண்டும் துல்லியமாகப் போய்த் தங்கும் அளவுக்குப் பறவைகள் வழி கண்டுபிடிக்கின்றன. பறவைகள் எப்படி இவ்வளவு தூரம் வழி மாறாமல் செல்கின்றன […]

ஒளிச்சேர்க்கை ஒரு குவாண்டம் நிகழ்வா?

இயற்பியலின் குவாண்டம் கோட்பாடு (quantum theory) அணுக்கள், மூலக்கூறுகள், எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் போன்றவற்றை விளக்க ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது இந்தக் கோட்பாடுகள் உயிரியல் துறையிலும் நுழைந்து, பல கேள்விகளுக்குப் புதிய பதில்களைத் தருகின்றன. குவாண்டம் உயிரியல் (Quantum Biology) இப்போது ஒரு முக்கியமான ஆராய்ச்சித் துறையாக வளர்ந்துள்ளது. இதில், ஒளிச்சேர்க்கை (photosynthesis) பற்றிய ஆராய்ச்சி முக்கியமானது. தாவரங்கள் சூரிய ஒளியை வேதி ஆற்றலாக மாற்றும் செயல்பாடுதான் ஒளிச்சேர்க்கை. தாவர இலைகளில் குளோரோபிளாஸ்ட் (chloroplast) என்ற செல் […]

நட்சத்திரங்கள் ஏன் வெடிக்கின்றன?

சூரியன் போன்ற விண்மீன்களில் ஏற்படும் நிலைகுலைவுதான் ‘விண்மீன் வெடிப்பு’ அல்லது ‘நோவா’ (Nova) எனப்படும் நிகழ்வு. சூரியனின் உள்ளே இரண்டு எதிரெதிர் விசைகள் செயல்படுகின்றன. சூரியனின் ஈர்ப்புவிசைப் பொருள்கள் அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி இழுக்கிறது. அதே நேரத்தில், சூரியனின் மையத்தில் உருவாகும் ஆற்றல் வெளிப்புறமாகத் தள்ளுவிசையைத் தருகிறது. இந்த இரண்டு விசைகளின் தற்காலிக சமநிலையில்தான் சூரியன் குறிப்பிட்ட அளவில் நிலைநிற்கிறது. சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் உள்ளே எரிபொருள் அடர்த்தி குறைந்துவிடும். இதனால் […]

பூமியின் வடிவம் கோளம் என்று எப்படித் தெரிந்துகொண்டார்கள்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தட்டையானது என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், இன்று விண்கலங்கள் எடுத்த படங்களால் பூமி பந்து போல இருக்கிறது என்று சொல்ல முடிகிறது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரியபடர் (பொ.ஆ. 476 -550) என்பவர், பூமி தட்டையானது என்ற பழைய கருத்தை மறுத்து, அது கோளம் என்றார். பூமியின் மேலே இருந்துகொண்டே அவர் எப்படி பூமியின் வடிவத்தைக் கண்டுபிடித்தார்? நம் கண்முன் இருக்கும் நிலப்பரப்பு மேடு பள்ளமாக இருந்தாலும், ஏரி, […]

முழுச் சந்திர கிரகணத்தின்போது நிலவு ஏன் சிவப்பாகத் தெரிகிறது?

முழுச் சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தெரிவது ஒரு அழகான காட்சி. இது ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது, பூமியின் அமைப்பு, அது ஏற்படுத்தும் நிழலின் தன்மை ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரு நேர்க்கோட்டில் வரிசையாக அமையும்போதுதான் முழுச் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது, பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே வரும். இதனால் பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. […]

சூரியனுக்கு ஏன் காந்தப்புலம் உள்ளது?

ஒரு காந்தத்தைச் சூடாக்கினால் அதன் காந்தத்தன்மை அழிந்துவிடும் என்று நாம் அறிவோம். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையைத் தாண்டினால், காந்தம் தனது காந்த விசையை முழுவதுமாக இழந்துவிடும். எனவே, மிக அதிக வெப்பத்தைக் கொண்ட சூரியனுக்குக் காந்தத்தன்மையே இருக்கக் கூடாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் சூரியன் என்பது நாம் கையாளும் காந்தம் போன்றது அல்ல. ஒரு சாதாரண காந்தத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய அணுக்காந்தங்கள் (atomic magnets) ஒரே திசையில் அடுக்கப்பட்டிருக்கும். வெப்பம் இந்த ஒழுங்கைக் குலைக்கிறது. வெப்பநிலை […]

இதயம் ஓய்வெடுக்குமா?

நம் இதயம் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றும். ஆனால், அது உண்மை இல்லை. எந்த உறுப்பாக இருந்தாலும், அது நன்றாகச் செயல்பட ஓய்வு தேவை. இதயத்திற்கும் இந்த விதி பொருந்தும். இதயம் சுருங்கி விரியும்போது, ஒவ்வொரு முறையும் அரை நொடிப் பொழுதை ஓய்வுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு விந்தையான வழிமுறை. இரவில் தூங்கும்போது, இதயம் தனது வேலைத்திறனைக் குறைத்து ஓய்வெடுக்கிறது. அப்போது, உடலில் உள்ள மிக நுண்ணிய இரத்தக் குழாய்களுக்குத் தேவையான இரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக்கொள்கிறது. […]

வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏன் ஏற்படுகிறது?

உங்கள் மூளைக்கும் குடலுக்கும் இடையே எப்போதும் தகவல் பரிமாற்றம் நடக்கிறது. ஒரு நல்ல நிகழ்வை நினைக்கும்போது வயிற்றில் ‘பட்டாம்பூச்சிகள் பறப்பது’ போன்ற உணர்வும், பயங்கரமான ஒன்றை நினைக்கும்போது வயிறு ‘பிசைவது’ போன்ற உணர்வும் ஏற்படுவது இதனால்தான். உங்கள் குடலில் ஏற்படும் உணர்வு, உங்கள் முடிவுகளையும் பாதிக்கும். குடல் நரம்பு மண்டலம் (Enteric Nervous System – ENS) என்பது குடல் சுவரில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான நரம்பு செல்களின் (neurons) பெரிய வலையமைப்பு ஆகும். இது […]

பூமியில் வாயுக்கள் எப்படித் தோன்றின?

இன்று நம் பூமியின் வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன், 1% ஆர்கான், 0.04% கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சிறிதளவு நீராவி உள்ளன. ஆனால், பூமி உருவான தொடக்கக் காலத்தில் இந்த வாயுக்களின் கலவை வேறுவிதமாக இருந்தது. மனித வாழ்வுக்கு இன்றியமையாத இந்த வாயுக்கள், பல கோடி ஆண்டுகளாக நடந்த புவியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களால் உருவாயின. பூமியின் வளிமண்டலம் மூன்று முக்கியக் கட்டங்களில் வளர்ந்தது. முதல் கட்டத்தில், சூரியனைச் சுற்றியிருந்த வாயு மற்றும் தூசுத் தட்டிலிருந்து (Solar […]

விண்மீன்கள் எவ்வளவு காலம் வாழும்?

விண்மீன்கள் பிறந்து, வளர்ந்து, மூப்படைந்து, மடிகின்றன. நமது சூரியன் பிறந்து சுமார் 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அது நடுத்தர வயதை எட்டியுள்ளது. அது ஒரு சிவப்பு ராட்சச விண்மீனாக (red giant star) மாறி, பின்னர் வெள்ளைக் குள்ள விண்மீனாக (white dwarf star) மாற சுமார் 500 முதல் 600 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என மதிப்பிடப்படுகிறது. பிரபஞ்சத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி விண்மீன்கள் பிறந்துள்ளன. இவற்றில் பல வாழ்ந்து மடிந்துவிட்டன. […]

விண்மீன் மண்டலங்கள் ஏன் ஆப்பம் போல இருக்கின்றன?

பல விண்மீன் மண்டலங்கள் (galaxies) ஆப்பம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் மையத்தில் பிரகாசமான புடைப்பு இருக்கும். அதைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் தட்டையான, சுழலும் வட்டுத் தட்டு (disk) அமைந்துள்ளது. கோண உந்த அழிவின்மை (conservation of angular momentum) மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றின் இழுபறியால் இந்த வடிவம் உருவாகிறது. விண்மீன்கள் அடர்த்தியான பிளாஸ்மா கோளங்கள். அவற்றின் மீ ஈர்ப்பு விசை, மீ அழுத்தத்தை ஏற்படுத்தி, அவற்றை உருண்டையாக வைத்திருக்கிறது. ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற […]

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் ஏன் மாறுவதில்லை?

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக நவீன வானியல் கூறுகிறது. ஆனால் கோள்களுக்கு இடையேயான தூரமோ, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவோ மாறுவதில்லை. பிரபஞ்ச விரிவாக்கம் என்பது விண்வெளி (Fabric of Space) இழுத்து நீட்சியடைவதைக் குறிக்கிறது. இந்த விளைவு மிகப் பெரிய அளவுகளில், குறிப்பாக விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான பரந்த இடைவெளியில் மட்டுமே கணிசமாக இருக்கும். தொலைதூர விண்மீன் மண்டலங்கள் நம்மிடமிருந்து விரைவாக விலகிச் செல்வதாகத் தெரிகிறது. இன்னும் தொலைவில் உள்ளவை மேலும் வேகமாக விலகுகின்றன. ஒரு […]

விண்மீன்கள் ஏன் கண் சிமிட்டுகின்றன?

சில புறக்கோள்களை (exoplanets) நேரடியாகத் தொலைநோக்கியில் பார்க்க முடியும். சில விண்மீன்கள் தலையாட்டி பொம்மை போலத் தள்ளாடும். இந்தத் தள்ளாட்டத்தை அதனைச் சுற்றிவரும் கோள் ஏற்படுத்தும். எனவே, ஒரு விண்மீனின் தள்ளாட்டத்தை வைத்து, அதனைச் சுற்றிவரும் புறக்கோள்களைக் கண்டறியலாம். ஆனால், விண்மீனைச் சுற்றிவரும் கோள் பூமியைப் போல நிறை குறைவாக இருந்தால், அது ஏற்படுத்தும் தள்ளாட்டம் மிகச் சிறியதாக இருக்கும். அதை நாம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அதன் ‘கண் சிமிட்டலை’ நாம் படம் பிடித்து, அதன் […]

பூமியில் பருவ காலங்கள் எப்படி ஏற்படுகின்றன?

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இந்தப் பயணப் பாதை ஒரு முழு வட்டமாக இல்லாமல், சற்று நீள்வட்ட வடிவில் இருக்கும். இதனால், பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் ஒரு புள்ளியும், மிகத் தொலைவில் செல்லும் ஒரு புள்ளியும் உண்டு. சூரியனுக்கு மிக அருகில் உள்ள புள்ளியை பெரிஹீலியன் (Perihelion) என்றும், மிகத் தொலைவில் உள்ள புள்ளியை அஃபீலியன் (Aphelion) என்றும் அழைக்கிறார்கள். பூமி பெரிஹீலியன் பகுதிக்கு வரும்போது கூடுதல் வெப்பம் (கோடை) ஏற்படும் என்று சிலர் […]

நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் ஏன் நாம் பார்க்கிறோம்?

பூமியிலிருந்து பார்க்கும்போது நாம் எப்போதும் நிலவின் ஒரே பக்கத்தைத்தான் காண்கிறோம். நாம் தொடர்ந்து நிலவைக் கவனித்தால், அதன் நிலைகள் மாறுவது தெரியும். ஆனால், அதில் உள்ள பள்ளங்களும் மேடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். பிரகாசமான மேட்டுநிலப் பகுதிகளும், இருண்ட ‘மரியா’ சமவெளிகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மை நோக்கியே உள்ளன. பூமியில் வாழ்ந்த எல்லா மனிதர்களும் இதே முகத்தைத்தான் பார்த்துள்ளனர். நிலவும் தன்னைத்தானே சுற்றுகிறது. ஆனால் அதன் சுழற்சி வேகமும் பூமியைச் சுற்றும் வேகமும் ஒன்றாக இருப்பதால், நமக்கு […]

விண்வெளியில் தாவரங்களை வளர்க்க முடியுமா?

விண்வெளியில் மனிதர்கள் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்றால், உணவு, உயிர்வளி (ஆக்சிஜன்) மற்றும் மனநிறைவு மிக முக்கியம். இவற்றைத் தரும் தாவரங்களை விண்வெளியில் வளர்ப்பது ஒரு பெரிய சவால். ஆனாலும், விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றியும் கண்டுள்ளனர். தாழ் விண்வெளி சுற்றுப்பாதையில் (low Earth orbit) எடுத்துச் செல்லப்பட்ட தாவரங்கள், எடையற்ற சூழலில் வளர்க்கப்பட்டன. இவை ‘விண்வெளித் தோட்டங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. 1982-ல் சோவியத் ஒன்றியத்தின் சால்யூட் 7 விண்வெளி நிலையத்தில், […]

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமி வேகமாகச் சுழன்றதா?

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் பூமியில் வாழ்ந்தபோது, பூமி இப்போது இருப்பதை விட வேகமாகச் சுழன்றது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அப்போது ஒரு வருடத்திற்கு 372 முறை பூமி சுழன்றது. இப்போது ஒரு வருடத்திற்கு 365 முறைதான் சுழல்கிறது. இதனால், டைனோசர்கள் காலத்தில் ஒரு நாளின் நீளம் 23.5 மணி நேரமாக இருந்தது. இந்தக் கண்டுபிடிப்புகள், 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நத்தையின் ஓட்டை ஆராய்ந்ததன் மூலம் கிடைத்தன. இந்த புதைபடிவத்தை (fossil) […]

அலாஸ்காவில் ராட்சத காய்கறிகள் விளைவது ஏன்?

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் மிக அதிக எடையுள்ள காய்கறிகள் விளைகின்றன. இங்கு 62.5 கிலோ எடையுள்ள முட்டைகோஸ், 30 கிலோ எடையுள்ள பூசணி, 15 கிலோ எடையுள்ள ப்ரோக்கோலி போன்றவை சாதாரணமாக விளைகின்றன. யார் அதிக எடையுள்ள காய்கறியை வளர்க்கிறார் என்று இங்கு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அலாஸ்கா அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ளது. வடக்கு முனையில் இருப்பதால், அலாஸ்காவில் கோடைக்காலத்தில் அதிக நேரம் சூரிய ஒளி கிடைக்கும். ஒரு நாளுக்கு 20 […]

மூச்சுக் காற்றை வைத்து தனிநபரை அடையாளம் காண முடியுமா?

நாம் ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினிகள் (laptops) மற்றும் ஆதார் அட்டை போன்ற பல இடங்களில் பயோமெட்ரிக் முறைகளைப் பயன்படுத்துகிறோம். கைரேகை மற்றும் கருவிழி (iris) போன்ற அடையாளங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகின்றன. இவை ஒருவரை அடையாளம் காண உதவுகின்றன. இதேபோல, மனிதனின் மூச்சுக் காற்றையும் அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியும் என்று சென்னை ஐஐடி (IIT Madras) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நுரையீரலில் இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளைக் […]

பூமியில் உள்ள நீரின் அளவு பற்றிய அறிவியல் உண்மைகள்

பூமியில் மனிதன் வாழ்வதற்கு நீர் மிகவும் முக்கியம். பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரால் நிரம்பியுள்ளது. இந்த நீரில் பெரும்பாலானவை உப்புத்தன்மை கொண்ட பெருங்கடல் நீர் ஆகும். இது குடிப்பதற்கோ அல்லது விவசாயத்திற்கோ பயன்படாது. 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, பூமியில் உள்ள மொத்த நீரில் சுமார் 1.33 பில்லியன் கன கிலோமீட்டர் (320 மில்லியன் கன மைல்) பெருங்கடல்களில் உள்ளது. நிலத்தடி நீர்நிலைகளில் சுமார் 23 மில்லியன் கன கிலோமீட்டர் (5.5 மில்லியன் கன […]

ஆடுகளின் உணர்வுசார் நுண்ணறிவு: மனிதக் குரலை அவை புரிந்துகொள்ளுமா?

ஆடுகள் வீடுகளிலும், பண்ணைகளிலும் வளர்க்கப்படும் விலங்குகள். மனித நாகரிகத்தில் கால்நடை வளர்ப்பு மிக முக்கியமானது, குறிப்பாக ஆடு வளர்ப்பு. உலகில் பல வகையான ஆடுகள் உள்ளன. அவற்றின் பால், இறைச்சி, தோல், முடி என எல்லாவற்றையும் மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆடுகள் மனிதர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றன. இதன் விளைவாக, ஆடுகள் மனிதர்களின் குரல் வழியே அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் திறனைப் பெற்றுள்ளன என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆடுகளுக்கு உணர்வுசார் நுண்ணறிவு (emotional […]

ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை

உண்மையில் நம்மைச் சுற்றியுள்ள கதிர் அலைகளில் பெரும்பகுதியைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள் (cosmic rays), எக்ஸ் ரேக்கள் (X-rays), காமா கதிர்கள் (gamma rays), அல்ட்ரா வயலட் (ultraviolet), இன்ஃப்ரா ரெட் (infrared), ரேடியோ அலைகள் (radio waves), டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் […]

ஞாபக மறதி நோய்க்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையே தீர்வு

நிரூபித்த அமெரிக்க, இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்! மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். இந்த நோய் ஐவேளைத் தொழுகைகளைக் குறித்த நேரத்தில் தொழும் முஸ்லிம்களைத் தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் (Alzheimer’s) எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க – இஸ்ரேலிய […]

புகை

புகை புகை என்பது எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக ஏற்படுவதாகும். எரிபொருள் முழுமையும் எரிந்தால் புகை ஏதும் வெளிப்படாது. பெரும்பாலான எரிபொருள்கள் கரியம் எனப்படும் கார்பன், நீர், வாயுவாகிய ஹைட்ரஜன், உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றையும் சிறிதளவு கந்தகம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.சில கனிமங்களின் சாம்பலும் கலந்திருக்கும். இந்த எரிபொருட்கள் முழுமையாக எரிந்து முடித்தால் இறுதி விளைவாக கரியமில வாயு, நீராவி, நைட்ரஜன் ஆகியவை எஞ்சும். இவை தீங்கற்றவைகளாகும். எரிபொருளில் கந்தகமிருந்தால் கந்தக டை ஆக்ஸைடு […]

Next Page » « Previous Page