ஆடுகளின் உணர்வுசார் நுண்ணறிவு: மனிதக் குரலை அவை புரிந்துகொள்ளுமா?

அறிவியல் உண்மைகள்

ஆடுகள் மனிதர்களுடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. பால், இறைச்சி, தோல் மற்றும் முடி போன்ற பல தேவைகளுக்காக மனிதர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நீண்டகால தொடர்பு காரணமாக, ஆடுகளுக்கு ஒரு சிறப்புத் திறன் வளர்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆடுகள் மனிதர்களின் குரல் தொனியை வைத்து அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆடுகளின் உணர்வுசார் நுண்ணறிவைக் காட்டுகிறது.

இந்த ஆய்வில், பல இனங்களைச் சேர்ந்த 27 ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. ‘ஹே, லுக் ஓவர் ஹியர்’ என்ற ஆங்கில வாக்கியத்தை மகிழ்ச்சியான தொனியிலும், கோபமான தொனியிலும் ஆடுகளிடம் கூறி, அவற்றின் எதிர்வினைகள் பதிவு செய்யப்பட்டன.

ஆடுகளால் மனிதக் குரலின் தொனியைப் புரிந்துகொள்ள முடிந்தது ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நாய்கள் மற்றும் குதிரைகள் போன்ற பிற விலங்குகளும் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மனிதக் குரல்களுக்கும் உணர்வுகளுக்கும் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பற்றி மேலும் பல ஆய்வுகள் தேவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆதாரம்: விகடன்