சாட்சிகள் இல்லாத நிலையில் விபச்சாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால் என்ன செய்வது? பைசல், நெல்லை பதில்: ஆண், பெண் ஆகிய இருவரில் விபச்சாரம் செய்ததாக ஒருவர் மட்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு, ஷரீஅத் சட்டம் வழங்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். விபச்சாரக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்றொருவர் விபச்சாரம் செய்யவில்லை என்று மறுத்துவிட்டால் சாட்சிகள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்கப்படாது. இதனைக் […]