Category: மற்ற கேள்விகள்

q132

குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?

கேள்வி :குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா? பதில்: திருக்குர்ஆனை ஓதி முடிக்கும் போது ஸதக்கல்லாஹுல் அளீம் (மகத்துவ மிக்கவன் உண்மையை கூறினான்) என்று சொல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது. திருக்குர்ஆன் வசனங்களை ஓதி முடித்தவுடன் இவ்வாறு கூற வேண்டுமென்று திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெறவில்லை. எனவே இவ்வாறு சொல்வது நபிவழி அல்ல. இறைக் கருத்தை வலியுறுத்தி பேச வேண்டிய இடங்களில் அவசியம் ஏற்பட்டால் ஸதக்கல்லாஹுல் அளீம் “ மகத்துமிக்க […]

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

கேள்வி: ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? பதில்: ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்ல முடியும். நீ பிறந்த தேதியையும், உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்கிறேன் என்று […]

ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா?

கேள்வி: ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா? – முஹம்மத் ஆஸாத் பதில்: சுன்னத் என்றால் நபிவழி என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் செய்த காரியங்களை நாம் கடைப்பிடிப்பது அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெற்றுத் தரும் வணக்கமாகும். மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக உருவாக்கவில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபியவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விசயங்களாகும். இதை வெளிப்படையாகப் பார்க்கும் போது நாம் நபிகள் நாயகம் (ஸல்) […]

தூதர் மற்றும் நபி இரண்டும் வேறுபட்டவையா?

கேள்வி: வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்கின்றேன் என்று இறைவன் கூறுகின்றான். இதை ஆதாரமாகக் கொண்டு வேதம் என்பது குர்ஆனைக் குறிக்கும் என்றும், ஞானம் என்பது நபிகள நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தைக் குறிக்கும் என்றும் வாதிடுகிறிர்கள். இரண்டும் வெவ்வேறு என்றால் முஹம்மது நபி அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார் என்ற வசனத்தின் படி (ரசூல்) தூதர் வேறு, நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா? – சாதிக், சென்னை. பதில்: திருக்குர்ஆனில் பல இடங்களில் வேதத்தையும் ஞானத்தையும் […]

பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா?

கேள்வி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா? – மசூது, கடையநல்லூர் பதில்: பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது மட்டுமே பாலியல் வன்முறையைக் குறைக்க உதவாது. கடும் தண்டனைகள் இருந்தாலும், மனிதனுக்கு காம வெறியை ஏற்படுத்தி, அறிவுக் கண்ணை மறைக்கும் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டால் மட்டுமே இந்தச் சட்டங்கள் பயன் தரும். 1.ஆபாசமான சினிமாக்கள், ஆபாசமான நாடகங்கள், சுவரொட்டிகள் போன்ற […]

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம்

கேள்வி: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்கத் தக்கதா? – பர்வீன், துபை பதில்: எந்தத் தண்டனை வழங்குவதாக இருந்தாலும், சட்டப்படியும் நீதித்துறை வழியாகவும் தான் வழங்க வேண்டும். அரசாங்கம் இதைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாலியல் குற்றத்தில் ஒருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தால், அது சரியானதாக இல்லையா என்பதை நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பளித்த பின்னரே அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். அவ்வாறு இல்லாமல் கைது […]

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்?

கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே? – ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை. பதில்: ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர், தான் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். […]

வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது?

கேள்வி: வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது? எங்கள் குடும்பத்திற்கு பூர்வீக நிலம் எங்கள் தாத்தா சொத்து 42 சென்ட் உள்ளது. நான் ஒரு ஆண் மற்றும் எனக்கு மூன்று சகோதரிகள், எங்களுடைய அப்பா வபாத் ஆகி விட்டார்கள். அம்மா உள்ளார்கள். இந்தச் சொத்தை ஷரியத் படி எப்படி எத்தனை பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று விளக்கமாக அறியத்தரவும். சொத்தின் மதிப்பு சுமார் 60 இலட்சம் இருக்கும். நான் என் அப்பா இறந்த பிறகு […]

விளையாட்டுக்கு அனுமதி உண்டா?

கேள்வி: விளையாட்டுக்கு அனுமதி உண்டா? – முஹம்மத் ரியாஸ் பதில்: விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதிக்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது. صحيح البخاري حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَجْرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنَ الخَيْلِ مِنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى […]

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? – மறு ஆய்வு

கேள்வி: இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? – முஹம்மது. பதில்: கூடாது. மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசைக்கருவிகள் இசைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்கள். இசைக் கருவிகள் கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி […]

முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா?

கேள்வி: முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா?-முஹம்மத் பதில்: முகத்தை மறைத்து உறங்குவதை மார்க்கம் தடை செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முகத்தை போர்வையால் மறைத்து உறங்கியுள்ளார்கள். இதைப் பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. 988 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى […]

உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை?

கேள்வி: உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை? அப்துல் கனி பதில்: உலக அளவில் பிரச்சாரம் செய்ய யாராலும் முடியாது. ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் அது உலக அளவில் பிரச்சாரம் செய்வதாக ஆகாது. ஆங்கிலம் அறியாத மக்கள் தான் உலகில் அதிகமாக உள்ளனர். அதே சமயத்தில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் எல்லா மொழி பேசும் மக்களிலும் ஆங்கிலம் அறிந்த சிலர் உள்ளதால் அவர்கள் மூலம் அந்தக் கருத்து பரவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் நாம் அதற்காக […]

விபச்சாரக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால்…

சாட்சிகள் இல்லாத நிலையில் விபச்சாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால் என்ன செய்வது? பைசல், நெல்லை பதில்: ஆண், பெண் ஆகிய இருவரில் விபச்சாரம் செய்ததாக ஒருவர் மட்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு, ஷரீஅத் சட்டம் வழங்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். விபச்சாரக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்றொருவர் விபச்சாரம் செய்யவில்லை என்று மறுத்துவிட்டால் சாட்சிகள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்கப்படாது. இதனைக் […]

விபச்சாரக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால்…

சாட்சிகள் இல்லாத நிலையில் விபச்சாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால் என்ன செய்வது? பைசல், நெல்லை பதில்: ஆண், பெண் ஆகிய இருவரில் விபச்சாரம் செய்ததாக ஒருவர் மட்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு, ஷரீஅத் சட்டம் வழங்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். விபச்சாரக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்றொருவர் விபச்சாரம் செய்யவில்லை என்று மறுத்துவிட்டால் சாட்சிகள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்கப்படாது. இதனைக் […]

36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

36:13➚,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? 36:13➚,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர் அவர்கள் இதை மறுக்கின்றார்கள். எனவே இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளனவா? கே. அப்துர்ரஹ்மான், புதுக் கல்லூரி, சென்னை பதில்: ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது […]

குர்ஆனை உருது உச்சரிப்பில் ஓதலாமா?

குர்ஆனை உருது உச்சரிப்பில் ஓதலாமா? நா ங்கள் உருதைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். நாங்கள் அரபி ஓதும் பொழுது,ஹ ங் ந ஆகிய மூன்று எழுத்துக்களையும் ழ உச்சரிப்பில் ஓதி வருகின்றோம். இவ்வாறு ஓதுவது சரியா? ஏ. பல்கீஸ் பானு, அஷ்ரபுத்தீன், பண்டாரவாடை பதில்: குர்ஆன் வசனங்களை ஓதும் போது வார்த்தை, உச்சரிப்பு போன்றவற்றை இயன்ற வரை சரியாக ஓத வேண்டும். திருக்குர்ஆனும் இதையே வலியுறுத்துகின்றது. குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன்: 73:4)➚ பொதுவாகவே உருது பேசும் மக்களிடம் […]

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன?

சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர்வழி பெற்றோரையும் அறிந்தவன். (அல்குர்ஆன்: 16:125)➚ நபிமார்கள் காலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நபிக்குக் கட்டுப்பட்டு ஒரு கருத்தில் தான் […]

அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையுமா?

கேள்வி அதிகமாக தர்க்கம் செய்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? பதில் : அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நம்மால் பார்கக்க முடியவில்லை. இவ்வாறு ஹதீஸ் இருப்பதாக யார் கூறுகின்றார்களோ அவர்களிடம் இந்தச் செய்தி எந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது எனக் கேளுங்கள். மேலும் இதன் கருத்து குர்ஆனுக்கு முரணாகவும் அமைந்துள்ளது. ஏனென்றால் அழகிய முறையில் விவாதம் செய்ய […]

முஹம்மத் நபிக்கும், ஈஸா நபிக்கும் இடையே நபிமார்கள் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஈஸா (அலை) அவர்களுக்கும் இடையே உலகில் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. صحيح البخاري 3442 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ، وَالأَنْبِيَاءُ أَوْلاَدُ عَلَّاتٍ، لَيْسَ […]

கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டுமா?

பொதுவாக அப்படி மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. நாயின் எச்சில் பாத்திரத்தில் பட்டால் மண் போட்டு கழுவுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். நாயின் எச்சில் மிகவும் விஷத்தன்மையுடையது. இதன் மூலம் ரேபிஸ் என்ற நோய் பரவுவதாகச் செய்திகள், எச்சரிக்கை நோட்டீஸ்கள் எல்லா மருத்துவமனையிலும் ஒட்டப்பட்டுள்ளன. எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அதை ஏழு முறை கழுவ வேண்டும் என்றும், முதலாவது தடவை மண்ணால் கழுவ வேண்டும் என்றும் கூறினார்கள். […]

தலை முடி வெட்டிய பின் குளிப்பது அவசியமா?

குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள் எவை என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. முடியை வெட்டினால் குளிப்பது கடமை என்று மார்க்கம் கூறவில்லை. முடிவெட்டினால் தலையிலும், உடலிலும் வெட்டப்பட்ட முடிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை முழுவதுமாக உடலிலிருந்து அப்புறப்படுத்த குளிப்பது சிறந்த வழிமுறை. இந்த உலக நன்மைக்காக குளிப்பது அவரவரது விருப்பத்தைப் பொறுத்தது. மார்க்கம் இதைச் சட்டமாக்கவில்லை. எனவே ஒருவர் முடி வெட்டி விட்டு குளிக்காவிட்டால் அவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையுமில்லை. தாராளமாக ஈடுபடலாம்.

முஸ்லிமல்லாதவர் குர்ஆனைத் தொட அனுமதிக்கலாமா?

ஒரு முஸ்லிம் பத்திரிகையில் மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா? என்ற கேள்விக்கு கூடாது, ஹராமாகும் என்று பதிலளித்துள்ளார்கள். இது சரியா? தவறாக இருந்தால் விரிவாக விளக்கவும். பதில்: அந்தப் பத்திரிகையில் கூறப்பட்ட பதில் தவறு மட்டுமல்ல! வன்மையாகக் கண்டிக்கத்தக்க பதிலாகும். இது போன்ற குறுகிய சிந்தனைகளால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தடைக் கல்லாக நிற்கிறார்கள். இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 38:87)➚ குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக்கும் வழிகாட்டி என்று 2:185➚, 3:138➚, 14:52➚, 17:89➚, […]

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

நான் லண்டனில் வசித்து வருகிறேன். இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும், என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள். மேலும் அவர்களை விட எனக்குச் சோதனை அதிகமாகவும் நெருக்கடி அதிகமாகவும் உள்ளன. சமயத்தில் எனக்கு அவர்களைப் போல் இருந்து விடலாம் போலும் தோன்றுகிறது. இந்நிலையில் நான் என்ன செய்வது? தயவு செய்து நல்ல விளக்கம் தரவும். எனக்காக துவா செய்யவும். பதில் : […]

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்?

உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்? முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக இருந்தாலே நம் நிலை இப்படித்தான் இருக்குமோ என்ற கருத்தை விதைக்கின்றனர். ஆனால் உலகில் எல்லா மக்களையும் தான் துன்பங்கள் தொடர்கின்றன. முஸ்லிம்களை விட அதிகத் துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவோரும் துன்பங்களை அனுபவிப்போரும் அதிகமாக உள்ளனர். எத்தனையோ நபிமார்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அது போல் நல்ல மக்கள் இன்றும் […]

ஆண்கள் வைரம் அணியலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மட்டுமே ஆண்களுக்குத் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ […]

நகப்பாலிஷ் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?

நகப்பாலிஷுக்கும், ஹேர் டைக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் மாறுபட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன. தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் உடல் நனைய வேண்டும். நைல் பாலிஸ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே உள்ளது. அதாவது காய்ந்து போன பெயிண்ட் போல் ஆவதால் நகத்தில் தண்ணீர் படாது. எனவே நைல் பாலிஸ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் […]

பட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா?

ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது. سنن الترمذي 1720 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حُرِّمَ لِبَاسُ الحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ» […]

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?

ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது. 5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ رواه البخاري நபிகள் […]

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?

தொப்பி அணிவதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பற்றி நமது இணையதளத்தில் விரிவாக பதில் தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒருவர் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் தொப்பி அணிந்தால் அதைத் தவறு என்று கூற முடியாது. தொப்பி அணியும் எவரையும் நாம் தடுப்பதில்லை. எனவே தான் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிகளில் நீங்கள் தொப்பி அணிந்து தொழுதால் அவர்கள் உங்களைத் தடுக்க மாட்டார்கள். இதே போன்று தொப்பி அணியாத ஒருவரை தொப்பி அணியுமாறு வற்புறுத்துவதும் கூடாது. ஒரு […]

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன?

ஆடைகளின் நிறங்களைப் பொருத்தவரை ஆண்களுக்கு காவி நிறம் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து எல்லா நிறங்களிலும் ஆண்கள் ஆடை அணியலாம். பெண்களுக்கு காவி உட்பட எல்லா நிற ஆடைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த ஒரு நிற ஆடையும் தடுக்கப்படவில்லை. இதற்கான ஆதாரங்கள்: மஞ்சள் ஆடை صحيح البخاري 166 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ: لِعَبْدِ اللَّهِ […]

பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்கலாமா?

முஸ்லிமலாத எனது நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார். பதில் : பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஅபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. புதுப்பித்தவர்கள் அனைவரும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் […]

முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா?

தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கும், அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை. குறிப்பிட்ட வகையினருக்கு மட்டும் தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை; இரண்டாவது வகை. முழுமையாகத் தடை செய்யப்படாமல் ஒரு அளவுக்குத் தடை செய்யப்பட்ட இந்த வகைப் பொருட்களை முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம். பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் […]

பொன்னாடையும் ஒரு அன்பளிப்பு தானே?

அன்பளிப்புகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது பொன்னாடை போர்த்திக் கொள்வதை எந்த அடிப்படையில் கூடாது என்கிறீர்கள்? விளக்கம் தரவும். பதில்: மனிதனை மனிதன் துதிபாடுவதும் அன்பளிப்பும் ஒன்றாகாது. சாதாரண ஆடையைப் பொன் (தங்கம்) ஆடை என்று சொல்லி தங்க ஆடை போர்த்துவதற்கு தகுதியானவர் இந்தத் தலைவர் என்று சித்தரிக்கவே பொன்னாடை கலாச்சாரம். பொன் ஆடை அதாவது தங்க ஆடை என்று அதற்குப் பெயர் சூட்டியதில் இருந்து இதன் போலித் தன்மையை உணரலாம். இவனுக்கெல்லாம் பொன்னாடை போர்த்த வேண்டியுள்ளதே […]

இரத்தத்தை விற்கலாமா?

கேள்வி: இரத்தத்தை விற்கலாமா? பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தும் தொழில் நுட்பமும், ஒருவரது இரத்தத்தை மற்றவருக்கு செலுத்தும் வசதியும் இருக்கவில்லை. இன்றைக்கு அந்தத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்துக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் வந்துள்ளனர். கிட்னி இரத்தம் போன்றவற்றை விற்கலாமா என்றால் இதற்கான விடை காண்பது எளிதானது தான். மார்க்கத்தில் எந்த ஒன்றை தர்மமாகக் கொடுக்க அனுமதி உள்ளதோ அதை விற்பதற்கும் […]

சொர்க்கம் பூமியில் தான் உருவாக்கப்படுமா?

சொர்க்கம் வானத்தில் இல்லையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போதும், இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது என்ற காரணத்தினால் நமது கூற்றை சிலர் மறுக்கின்றனர். உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று குர்ஆன் கூறுவதாலும், பச்சை நிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் […]

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.?

கேள்வி: ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.? பதில்: மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று எனும் போது ஆல்கஹால் கலக்கப்பட்ட நறுமண பொருட்களை நாம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருமறைக்குர்ஆனில் சொல்லும் அடிப்படையையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லக்கூடிய விளக்கத்தையும் பார்த்தால் இந்த கேள்விக்கான […]

நாய் வாய் வைத்த பாத்திரத்தின் செய்தியில் முரண்பாடா?

நாய் வாய் வைத்த பாத்திரத்தின் செய்தியில் முரண்பாடா? இன்று நம் கைகளில் தவழுக்கின்ற நபிமொழிகள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏராளமான நபித்தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்த தாபியீன்கள், தபவு தாபியீன்கள் பலரின் வழியாக வந்துள்ளன. ஆதலால், சிலர் அறிவித்த செய்திகள் சிலரின் செய்திகளுக்கு மாற்றமாகவும், முரணாகவும், கூடுதல் குறைவாகவும், புரிதலை விட்டு சற்று தூரமானவைகளாகவும் உள்ளன. இதில் நாம் அனைவரும் அறிந்த, பிரபலமான ஹதீஸான, “நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும்” என்ற […]

லுக்மான் அவர்கள் நபியா?

லுக்மான் அவர்கள் நபியா? நபி என்பவர் யார்? இறைவனின் கட்டளைகளை அல்லாஹ்விடமிருந்து வஹீயின் மூலம் பெற்று மக்களிடம் சொல்பவர்தான் நபி (இறைத்தூதர்) என்று சொல்லப்படும். அல்லாஹ்விடமிருந்து வஹீ செய்தியை பெற்றவர், மக்களிடம் ஓரிறைக் கொள்கை பிரச்சாரம் செய்தவர் என்பதற்கு திருக்குர்ஆன் அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஆதாரம் இருக்க வேண்டும். உதாரணமாக: وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ “என்னைத் தவிர வேறெந்தக் கடவுளும் […]

பள்ளிகளில் பிறமதத்தவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?

அல்லாஹ்வும் ரசூலும் கற்றுக்கொடுத்துள்ள அத்தியாயங்கள் மற்றும் துஆக்ககளை ஓதி உள்ளங்கையில் ஊதி, உடல்களில் தடவிக்கொள்ளும் ருக்யா எனும் நபிகளார் ஓதிப்பார்த்த முறைக்கு மார்க்கத்தில் இடமுண்டு. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ […]

இயக்கங்களை குறை கூறுவது புறமாகாதா?

? திருக்குர்ஆனில் ஒரு வசனத்தில், “குறை கூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடு தான்” என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வாறிருக்க நீங்கள் ஒவ்வொரு இயக்கத்தைப் பற்றியும், ஒவ்வொரு கொள்கையைப் பற்றியும் குறை கூறுகிறீர்கள். இது தவறில்லையா? இவ்வாறு செய்வதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? குறை கூறுதல், புறம் பேசுதல் போன்ற செயல்கள் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், ஒருவரைப் பற்றிய குறையை எடுத்துச் சொல்லும் போது கேட்பவர்களுக்கு அதனால் பயன் […]

யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா?

(அல்குர்ஆன்: 2:62)➚வசனத்தில் நல்லறம் செய்யும் யூத, கிறித்தவர்களுக்குக் கவலை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா? பதில் நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 9:60)➚ இந்த வசனத்தில், நல்லறம் செய்யும் எல்லா யூத, கிறித்தவர்களுக்கும் கவலை இல்லை என்று கூறப்படவில்லை. […]

மர்யம் அவர்களிடம் வந்தவர் ஒரு வானவரா? பல வானவர்களா?

கேள்வி மர்யம் அவர்களிடம் ஒரு வானவர் வந்ததாக (அல்குர்ஆன்: 19:19)➚ வசனம் சொல்கிறது, பல வானவர்கள் வந்ததாக (அல்குர்ஆன்: 3:45)➚ வசனம் சொல்கிறது. இந்த முரண்பாடு ஏன் பதில் திருக்குர்ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்துள்ளன. ஒரு நிகழ்ச்சியில் முதல்வரும், இன்னும் பல அமைச்சர்களும் பல கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது அ. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார் என்று சொல்லலாம் […]

திருமறையின் 46:15 வசனws 40 வயதை அடைந்ததும் ஒருவர் செய்யும் துஆவைப் பற்றியும், முஸ்லிமாக இருப்பது பற்றியும் இறைவன் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்திற்கான விளக்கம் என்ன?

திருமறையின் 46:15➚ வசனத்தில், 40 வயதை அடைந்ததும் ஒருவர் செய்யும் துஆவைப் பற்றியும், முஸ்லிமாக இருப்பது பற்றியும் இறைவன் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் ஒருவர், “நாற்பது வயதைக் கடந்து மரணிக்கும் ஒருவருக்குத் தான் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு. அதற்கு முன் மரணிப்பவர்கள் அனைவரும் சுவனம் செல்வர். இதைத் தான் இந்த வசனம் கூறுகின்றது” என்று கூறுகின்றார். இதற்கு விளக்கம் என்ன? தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் […]

கப்ரில் மூன்று பிடி மண் அள்ளிப் போடுவது நபிவழியா?

மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல் அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று ‎பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர். இதற்கு ஆதாரம் ‎உள்ளது.‎ ‎ ‎حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِي، حَدّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدّثَنَا سَلَمَةُ بْنُ كُلْثُومٍ، حَدّثَنَا الْأَوْزَاعِي، عَنْ يَحْيَى ‏بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ […]

பூண்டு வெங்காயம் சாப்பிட்டு பள்ளிக்கு வரலாமா

இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவையோ, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்ல. ஆனால் அவற்றை உண்டால் நீண்ட நேரத்திற்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். இந்த துர்நாற்றம் பள்ளியில் உள்ள மற்றவர்களுக்கு நோவினை ஏற்படுத்தும். தொழுகைக்காகப் பள்ளிக்கு வரும் போது, இது போன்ற நாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இதற்கான காரணம். صحيح البخاري 5452 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ […]

கஅபா ஏன் புனித இல்லமாக்கப்பட்டது?

கஅபா இருக்கும் இடம் புனிதமாக்கப்படக் காரணம் என்ன? அதன் சிறப்பு என்ன? உலகம் படைக்கப்படுவதற்கு முன் அந்த இடத்தில் தான் அல்லாஹ் இருந்தான் என்பதால் அது அல்லாஹ்வின் வீடு என்று கூறப்படுவதாகச் சிலர் கூறுகின்றனர். இது சரியா? அனைத்து நபிமார்களும் அங்கு தான் அடக்கம் செய்யப்பட்டனர் எனக் கூறப்படுவதில் உண்மை உள்ளதா? பதில் : பூமி படைக்கப்படுவதற்கு முன்னால் அல்லாஹ் கஅபாவில் இருந்தான் என்பது கட்டுக் கதையாகும். பூமி படைக்கப்படுவதற்கு முன் பூமியின் ஒரு அங்கமான கஅபா […]

இறுதிக் காலத்தில் கஅபா இடிக்கப்படுமா?

மறுமையின் பத்தாவது அடையாளமாக கஅபா இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்பது உண்மையா? இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? பதில் حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَابْنُ أَبِى عُمَرَ الْمَكِّىُّ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ فُرَاتٍ الْقَزَّازِ عَنْ أَبِى الطُّفَيْلِ عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِىِّ قَالَ اطَّلَعَ النَّبِىُّ -صلى الله […]

சொர்க்கவாசிகள் எத்தனை வயதுடையவர்களாக இருப்பார்கள்?

சொர்க்கவாசிகள் எத்தனை வயதுடையவர்களாக இருப்பார்கள்? பதில்: மறுமையில் சொர்க்கவாசிகள் அனைவரும் முப்பத்து மூன்று வயதுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி திர்மிதீ, அஹ்மது, பைஹகீ, மற்றும் தப்ரானீ ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ளது. حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ مُحَمَّدُ بْنُ فِرَاسٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا عِمْرَانُ أَبُو الْعَوَّامِ عَنْ قَتَادَةَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ […]

ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?

ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா? ஜின்னா என்ற வார்த்தை, திருக்குர்ஆனில் இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஜின்கள், இரண்டாவது பைத்தியம். {الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6) } [الناس: 5، 6] அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ளனர்” (அல்குர்ஆன்: 114:5-6)➚ {وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ (158)} [الصافات: 158] […]

del – கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி என்று கூற வேண்டுமா?

கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தான் நிர்ரஜீம் என்று கூற வேண்டுமா? இதற்க்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்ரனர். التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ: هَا، ضَحِكَ الشَّيْطَانُ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா“ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் […]

Next Page »