Author: Abdur Rahman

வலீமா விருந்து எப்போது கொடுக்க வேண்டும்?

கேள்வி: வலீமா விருந்து எப்போது கொடுக்க வேண்டும்? திருமணம் முடிந்த தினமே வலீமா விருந்தைக் கொடுக்கலாமா? அல்லது மணப் பெண்ணைச் சந்தித்த பிறகு தான் வலீமா விருந்து கொடுக்க வேண்டுமா? – ரியாஸ் இர்ஃபான், சென்னை. பதில்: நிபந்தனை எதுவும் இல்லை. திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் […]

திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா? உரை நிகழ்த்தலாமா?

கேள்வி: திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? விளக்கவும்.- பின்த் காஸிம், சென்னை. பதில்: திருமணங்களில் […]

காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா?

கேள்வி: நான்கு மத்ஹப்கள் இல்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் வஹ்ஹாபிகளின் ஆட்சி சவூதியில் அமைவதற்கு முன்னர் கஅபாவில் நான்கு மத்ஹபுகளுக்கும் தனித்தனி தொழும் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும், வஹ்ஹாபிகள் தான் அதை மாற்றி விட்டார்கள் என்றும் நண்பர் கூறுகிறார். அது உண்மையா? இம்ரான் கான் பதில்: அவர் சொல்வது உண்மைதான். சவூதி மன்னர்களின் ஆட்சி அமைவதற்கு முன்னால் ஷாஃபி முஸல்லா, ஹனஃபி முஸல்லா, மாலிகி முஸல்லா, ஹம்பலி முஸல்லா என நான்கு திசைகளிலும் நான்கு தொழும் இடங்கள் […]

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?

கேள்வி: தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது? ஆர். அஹ்மத் பதில்: தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில் உள்ள கவலை நீங்கி நிம்மதி ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)➚ இவற்றைச் செய்து […]

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

கேள்வி: பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை பதில்: பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை தான். அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் சிலை வழிபாடு செய்தால் […]

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம்

கேள்வி: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்கத் தக்கதா? – பர்வீன், துபை பதில்: எந்தத் தண்டனை வழங்குவதாக இருந்தாலும், சட்டப்படியும் நீதித்துறை வழியாகவும் தான் வழங்க வேண்டும். அரசாங்கம் இதைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாலியல் குற்றத்தில் ஒருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தால், அது சரியானதாக இல்லையா என்பதை நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பளித்த பின்னரே அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். அவ்வாறு இல்லாமல் கைது […]

உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை?

கேள்வி: உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை? அப்துல் கனி பதில்: உலக அளவில் பிரச்சாரம் செய்ய யாராலும் முடியாது. ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் அது உலக அளவில் பிரச்சாரம் செய்வதாக ஆகாது. ஆங்கிலம் அறியாத மக்கள் தான் உலகில் அதிகமாக உள்ளனர். அதே சமயத்தில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் எல்லா மொழி பேசும் மக்களிலும் ஆங்கிலம் அறிந்த சிலர் உள்ளதால் அவர்கள் மூலம் அந்தக் கருத்து பரவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் நாம் அதற்காக […]

நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா?

கேள்வி: சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா? எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை பதில்: இது ஆதாரப்பூர்வமான செய்தி தான். புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் உள்ளது. صحيح البخاري 4586 – حدثنا محمد بن […]

தொப்பியும் தலைப்பாகையும்

தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. […]

லைலத்துல் கத்ர் இரவில்…

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா? பதில்: குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது. (முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம். (அல்குர்ஆன்: 76:23)➚ […]

ஒரு கடைக்குப் பக்கத்தில் கடை வைக்கலாமா?

கேள்வி: ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அதே போல் மற்றொரு கடை உருவாக்கலாமா? பக்கத்துக் கடையின் விலையை அறிந்து நாம் குறைத்துக் கொடுக்கலாமா? அது போன்று பக்கத்துக் கடைகளில் என்ன விலை வைக்கின்றார்கள் என்று பார்த்து அதற்குத் தக்க விலை வைத்துக் கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை. பதில்: ஒரு கடைக்குப் பக்கத்தில் அதே போன்ற மற்றொரு கடையை உருவாக்குவதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கடைவீதிகள் இருந்ததற்கும், சந்தை கூடி வியாபாரம் […]

இரகசிய ஞானம்

கேள்வி: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159➚,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே! பதில்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகத் தெரிவிக்கும் இந்தச் செய்தி எது என்பது குறித்த விளக்கம் எதுவும் ஹதீஸ்களில் […]

திருமணத்தில் பெண்கள் என்ன துஆ ஓத வேண்டும்?

கேள்வி: திருமணத்தில் பெண்கள் என்ன துஆ ஓத வேண்டும்? பதில்: பெண்களுக்கென்று பிரத்யேகமான துஆ இல்லை. திருமணத்தில் பெண்கள் ஓதுவதெற்கென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட எந்த துஆவையும் கற்றுத் தரவில்லை. திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு حدثنا قتيبة حدثنا عبد العزيز بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي […]

ஸாபித் பின் கைஸ் (ரலி) கறுப்பாகவும், குள்ளமாகவும், அருவருப்பாக இருந்தாரா?

கேள்வி: ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மையில்லாதவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று கூறி வருகிறீர்கள். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின் கைஸ் (ரலி) கறுப்பாகவும், குள்ளமாகவும், அருவருப்பான தோற்றம் உடையவராகவும் இருந்தார்; அதனால் தான் அவரது மனைவி அவரை விவாகரத்துச் செய்தார் என்று எழுதப் பட்டுள்ளது. இதில் எது சரி? பதில்: حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا خَالِدٌ عَنْ […]

மனக்கட்டுப்பாட்டிற்கு மார்க்கம் கற்றுத்தந்த வழிகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு. கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனக்கட்டுப்பாட்டு குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! மனிதனை அல்லாஹ் மற்ற அனைத்து படைப்புக்களைவிடவும் சிறப்பாக படைத்துள்ளான். அதற்கு காரணம் அவனுடைய பண்புகள் அப்படிப்பட்ட நல்ல […]

பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்

பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்: 2018ஆம் ஆண்டு ரமலான் மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் முதல் அமர்வு 27.09.18 அன்று திருச்சியிலும் இரண்டாம் அமர்வு 17. 10. 2018 புதன் அன்று தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையிலும் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு மாதமும் பிறை அறிவிப்பு செய்வதுடன் நோன்பு மற்றும் பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெருநாளில் தமிழகமெங்கும் […]

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு: தொடர்: 3 பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே! பணமாக, பாத்திரமாக, நகையாக, நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் உணவாக வாங்குவது, அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது, அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் […]

குளிப்பு கடமையான நிலையில் தயம்மும் செய்யலாமா?

குளிப்பு கடமையான நிலையில் நோயின் காரணமாகவோ அல்லது தண்ணீர் இல்லாமலோ தயம்மும் செய்யலாமா? தயம்மும் செய்து சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழலாமா? பதில்: குளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு, குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் குளிப்பதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்ளலாம். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் […]

தொப்பி தலைப்பாகை

தொப்பி தலைப்பாகை: இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை என்று கூறுகின்றீர்களே! மேற்கண்ட ஹதீசுக்கு என்ன விளக்கம்? பதில்: دَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ الزُّهْرِيِّ […]

தொழுகையில் மனக் குழப்பம்?

தொழுகையில் மனக் குழப்பம் நான் தொழ ஆரம்பித்தால் எனக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தால் ஆடையில் பட்டிருக்குமோ என்ற சந்தேகம். தண்ணீர் பட்டாலும் அது சிறுநீராக இருக்குமோ என்ற சந்தேகம். தூங்கி எழுந்தால் விந்து வெளியாகி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதனால் தொழ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் இக்குழப்பத்தால் தொழ முடியாமல் போகின்றது. இதற்கு என்ன செய்வது? பதில்: தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகின்றது என்று ஒருவர் நபிகள் […]

வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா?

வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா? நா ன் வங்கியில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தேன். அதில் கிடைக்கும் வட்டி ஹராம் என்று தெரிய வந்ததும் தனியாக ஒரு அக்கவுண்ட் திறந்து அந்த வட்டியைப் போட்டு வருகின்றோம். உதவி கேட்பவர்களுக்கு அதிலிருந்து உதவி வருகின்றோம். இதனால் நன்மை கிடைக்காது என்பது தெரியும். ஆனால் இப்படிச் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? ஏ. ஆயிஷா, பொதக்குடி பதில்: பேங்க் வட்டியாக இருந்தாலும் இதர வட்டியாக இருந்தாலும் மார்க்க அடிப்படையில் வட்டி […]

தலாக் விடப்பட்டவளிடம் அன்பளிப்பைத் திரும்பக் கேட்கலாமா?

தலாக் விடப்பட்டவளிடம் அன்பளிப்பைத் திரும்பக் கேட்கலாமா? பதில்: ஒருவன் மனைவியுடன் சேர்ந்து வாழும்போது கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போதோ, அதன் பின்போ திரும்பப் பெறக்கூடாது. அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை திரும்பப் பெறுவது அநாகரீகமான செயல் எனவும் அது கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். 3072 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عُمَرَ وَابْنِ […]

விபச்சாரக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால்…

சாட்சிகள் இல்லாத நிலையில் விபச்சாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால் என்ன செய்வது? பைசல், நெல்லை பதில்: ஆண், பெண் ஆகிய இருவரில் விபச்சாரம் செய்ததாக ஒருவர் மட்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு, ஷரீஅத் சட்டம் வழங்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். விபச்சாரக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்றொருவர் விபச்சாரம் செய்யவில்லை என்று மறுத்துவிட்டால் சாட்சிகள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்கப்படாது. இதனைக் […]

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை என்ன?

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை என்ன? பதில்: கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை என்றும் நான் அப்போதே கொடுத்து விட்டேன் என்றும் கூசாமல் பொய் சொல்கிறார்கள். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது மனிதனின் மனநிலை இப்படியெல்லாம் மாறிவிடுகிறது. ஆனால் ஒருவன் நல்ல முஸ்லிமாக இருந்தால் இது போன்ற […]

விபச்சாரக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால்…

சாட்சிகள் இல்லாத நிலையில் விபச்சாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால் என்ன செய்வது? பைசல், நெல்லை பதில்: ஆண், பெண் ஆகிய இருவரில் விபச்சாரம் செய்ததாக ஒருவர் மட்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு, ஷரீஅத் சட்டம் வழங்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். விபச்சாரக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்றொருவர் விபச்சாரம் செய்யவில்லை என்று மறுத்துவிட்டால் சாட்சிகள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்கப்படாது. இதனைக் […]

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை என்ன?

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை என்ன? பதில்: கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை என்றும் நான் அப்போதே கொடுத்து விட்டேன் என்றும் கூசாமல் பொய் சொல்கிறார்கள். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது மனிதனின் மனநிலை இப்படியெல்லாம் மாறிவிடுகிறது. ஆனால் ஒருவன் நல்ல முஸ்லிமாக இருந்தால் இது போன்ற […]

வட்டிக்கு அறவே அனுமதி இல்லையா?

வட்டிக்கு அறவே அனுமதி இல்லையா? பதில்: இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும். வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். மேலும் வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் […]

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் என்று சொல்லப்பட்ட நபித்தோழரின் இந்தச் செய்கை மூலம் பித்அத் என்பது கடுமையான குற்றம் இல்லை, சாதாரண பாவம் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை பதில்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய […]

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு: பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே! பணமாக, பாத்திரமாக, நகையாக, நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் உணவாக வாங்குவது, அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது, அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் […]

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்?

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்? பத்து வருடங்களுக்கு முன் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா? உஸ்மான் பதில்: வேண்டும் என்றே செய்யும் காரியங்களுக்குத் தான் இறைவனிடம் தண்டனை உண்டு. அறியாமல் செய்யும் எந்தக் காரியத்துக்கும் அல்லாஹ்விடம் தண்டனை இல்லை என்பது இஸ்லாத்தின் முக்கியமான கோட்பாடாகும். எவரையும் அவரது […]

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? உ ஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் என்று சொல்லப்பட்ட நபித்தோழரின் இந்தச் செய்கை மூலம் பித்அத் என்பது கடுமையான குற்றம் இல்லை, சாதாரண பாவம் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை பதில்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) […]

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்?

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயிலுக்கும் யார் எதிரியாக இருக்கின்றார்களோ அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான் என்று(அல்குர்ஆன்: 2:98)➚வசனத்தில்,வா னவர்கள் என்று கூறி விட்டு பின்பு ஜிப்ரீல், மீகாயீல் என்று அல்லாஹ் தனியாகக் குறிப்பிடுகின்றான். ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? ஜிப்ரீலைப் பற்றி தெரியும். மீகாயீலைப் பற்றி விளக்கவும். எம். திவான் […]

36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

36:13➚,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? 36:13➚,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர் அவர்கள் இதை மறுக்கின்றார்கள். எனவே இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளனவா? கே. அப்துர்ரஹ்மான், புதுக் கல்லூரி, சென்னை பதில்: ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது […]

என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?

என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா? நான் பெண் வீட்டில் வரதட்சணை வாங்கவில்லை. ஆனால் பெண்ணின் தாயார்,என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்று கூறுகின்றார்கள். இதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? கீழத்தெரு ஹபீப் ரஹ்மான், துபை பதில்: ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர் அன்பளிப்பாக எதையும் வழங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதா? மறுப்பதா? என்பது குறித்து அந்தப் பெண் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அவளது […]

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா?

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? ஒ ரு தவ்ஹீதுவாதி ஓரளவு வசதி படைத்தவர். அவர் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? அல்லது ஏழையைத் திருமணம் செய்ய வேண்டுமா? மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்கின்றார். என்றாலும் பெண் வீட்டில் பெண்ணுக்கு அதிகம் நகை போடுகின்றார்கள். இது சரியா? எம்.எஸ். அலாவுதீன், துபை பதில்: பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்குத் தடையோ அல்லது ஏழைப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ மார்க்கத்தில் […]

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா?

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா? பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம் பதில்: சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா […]

இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா?

இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா? இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நல்லடியாராக இருந்தால், நெருங்கிய உறவினரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாத புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக என்று வானவர்கள் கூறுவார்கள் என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது. நெருங்கிய உறவினரைத் தவிர என்ற வாசகம், நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியும் என்ற கருத்தைத் தருகின்றதே? இது 46:5➚, 39:42➚, 23:99➚ ஆகிய வசனங்களுக்கு முரணாக உள்ளது. விளக்கவும். பி.எம். ஷேக் அப்துல் காதிர், மதுரை […]

கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்

கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்: ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. வழக்கம் போல் மக்கள் எல்லோரும் குர்பானி கொடுத்தார்கள். நாமும் குர்பானி கொடுத்தோம். தனியாகவும், கூட்டாகவும் ஆடு,மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன. இந்தக் குர்பானி ஏன் கொடுக்கப்படுகின்றது?இதற்குப் பின்னணியாக இருப்பது யார்? உலக இறுதி நாள் வரை வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிம் – யூதர் – கிறித்தவர் – இணை வைப்பவர் எவராலும், என்றும் மறக்க முடியாத மாமனிதர் இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஹஜ் மாதங்களில் […]

பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்

பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்: 2018ஆம் ஆண்டு ரமலான் மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் முதல் அமர்வு 27.09.18 அன்று திருச்சியிலும் இரண்டாம் அமர்வு 17. 10. 2018 புதன் அன்று தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையிலும் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு மாதமும் பிறை அறிவிப்பு செய்வதுடன் நோன்பு மற்றும் பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெருநாளில் தமிழகமெங்கும் […]

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா?

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும். குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் […]

தூங்குவதின் ஒழுங்குகள் – பயான் குறிப்புகள்

كتاب آداب النوم தூங்குவதின் ஒழுக்கங்கள்: باب آداب النوم والاضطجاع والقعود والمجلس والجليس والرؤيا தூக்கம், சாய்ந்து படுத்தல், அமர்தல், சபை, நண்பர்கள், கனவுகள் ஆகியவைகளின் ஒழுக்கங்கள். عن الْبَراءِ بن عازبٍ رضيَ اللَّه عنهما قال: كَانَ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إذا أَوَى إلى فِرَاشِهِ نَامَ عَلى شِقَّهِ الأَيمنِ ثُمَّ قال: « اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إليْكَ وَوجَّهْتُ وَجْهي إلَيْكَ […]

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு: பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!: பணமாக, பாத்திரமாக, நகையாக, நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் உணவாக வாங்குவது, அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது, அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் […]

இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன?

இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன? ஒரு விஷயத்தில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும் போது தொழும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அந்த நேரத்தில் ஓதுவதற்கென ஒரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள். ‘உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர், اَللّٰهُمَّ […]

என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?

என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா? நான் பெண் வீட்டில் வரதட்சணை வாங்கவில்லை. ஆனால் பெண்ணின் தாயார்,என் மகளுக்கு நான் நகை போட்டு அனுப்புவேன் என்று கூறுகின்றார்கள். இதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? கீழத்தெரு ஹபீப் ரஹ்மான், துபை ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர் அன்பளிப்பாக எதையும் வழங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதா? மறுப்பதா? என்பது குறித்து அந்தப் பெண் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அவளது கணவனுக்கு […]

பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்

பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்: 2018ஆம் ஆண்டு ரமலான் மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் முதல் அமர்வு 27.09.18 அன்று திருச்சியிலும் இரண்டாம் அமர்வு 17. 10. 2018 புதன் அன்று தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையிலும் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு மாதமும் பிறை அறிவிப்பு செய்வதுடன் நோன்பு மற்றும் பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெருநாளில் தமிழகமெங்கும் […]

சூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்

சூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்: எவ்விதத் தொடர்புகளும் இல்லாமல் படைப்பினங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்ற ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும். இது போன்ற ஆற்றல் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. சூனியத்தை நம்பக் கூடியவர்கள் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதால் அல்லது எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பிறருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தும் ஆற்றலை சூனியக்காரனுக்கு அல்லாஹ் வழங்குவான் என்று நம்புவதாலும் இது இணைவைப்பு நம்பிக்கையாகும். சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் […]

தொழுகையில் மனக் குழப்பம்

தொழுகையில் மனக் குழப்பம்: நான் தொழ ஆரம்பித்தால் எனக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தால் ஆடையில் பட்டிருக்குமோ என்ற சந்தேகம். தண்ணீர் பட்டாலும் அது சிறுநீராக இருக்குமோ என்ற சந்தேகம். தூங்கி எழுந்தால் விந்து வெளியாகி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதனால் தொழ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் இக்குழப்பத்தால் தொழ முடியாமல் போகின்றது. இதற்கு என்ன செய்வது? தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகின்றது என்று ஒருவர் நபிகள் நாயகம் […]

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா?

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா? சவூதியில் மக்கள் ரொட்டித் துண்டை குப்பைத் தொட்டியில் போடாமல் அதன் பக்கத்தில் போடுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியில் ஆதாரம் இருக்கின்றதா? செய்யது மஸ்ஊத். பதில்: வீண் விரயம் செய்வது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. صحيح البخاري 1477 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: […]

ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா?

ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா? ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்றும், யார் அம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறக்கச் செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இன்னும் கூடுதல் செய்திகளுடன் ஒரு ஹதீஸ் பதிவு ஷுஅபுல் ஈமான்- பைஹகீ நூலில் செய்யப்பட்டுள்ளது. شعب الإيمان – أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الضَّرِيرُ بِالرَّيِّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ […]

பொருளாதாரத்தின் நன்மைகள்

பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள்: இஸ்லாத்தின் ஏராளமான கடமைகள் பொருளாதாரம் இருந்தால் தான் நிறைவேற்ற முடியும் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜகாத் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும். பொருளாதாரம் இருந்தால் தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும். செல்வத்தைச் தேடவோ, சேர்த்து வைக்கவோ கூடாது என்றால் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியாது. இஸ்லாத்தின் மற்றொரு கடமை ஹஜ். இந்தக் கடமையைச் செய்ய மக்காவில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவில் பொருளாதாரம் தேவைப்படாது என்றாலும் மற்றவர்கள் ஹஜ் செய்வதாக இருந்தால் பொருள் வசதி […]

Next Page »