Category: நம்பிக்கை தொடர்பானவை

q115

தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கேள்வி: தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பதில்: மனிதர்கள் அனைவருக்கும் தீய எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும். ஷைத்தான் பல வழிகளில் தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். நல்லறங்களில் ஈடுபடும் போதும்கூட தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். இது போன்ற நேரங்களில் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். என் அடியார்கள் நல்லதையே பேசவேண்டும் என அவர்களுக்குக் கூறுவீராக! அவர்களுக்கிடையே ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான், மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கிறான். […]

வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?

கேள்வி : வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்கள், நல்லவார்த்தைகள் ஆகியவற்றுக்கு வஸீலா என்று கூறப்படும். அது போன்று மறுமைநாளில் இறைவன் தன்னுடைய அடியார்களில் மிகவும் நெருக்கமான ஒருவருக்கு வழங்கும் பதவிக்கும் வஸீலா என்று கூறப்படும். பதில்: பின்வரும் இறைவசனத்தில் இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்களைச் செய்வது வஸீலா என்று கூறப்பட்டுள்ளது. يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (سورة المائدة) […]

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன?

கேள்வி: ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? பதில்: பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். சிறு பாவங்களுக்குரிய பரிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற பிரச்சனையைச் சந்தித்த நபித்தோழருக்கு இவ்வாறே நபியவர்கள் வழிகாட்டினார்கள். حَدَّثَنَا […]

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா?

கேள்வி: குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா? குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாது, சில கணக்குகள் ஃபிக்ஹைக் கொண்டு தான் பிரிக்க முடியும் என்று ஓர் ஆலிம் கூறுகின்றார். இது சரியா? பதில்: இதன் மூலம் அவர் என்ன கூற விரும்புகின்றார்? குர்ஆன் ஹதீஸை விட ஃபிக்ஹ் தான் உயர்ந்தது என்று கூறப் போகின்றாரா? அல்லது குர்ஆன் ஹதீஸில் இல்லாதது ஃபிக்ஹில் தான் உள்ளது என்று கூறுகின்றாரா? இந்த இரண்டில் […]

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்? பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோருக்கும், அவர்களின் பாட்டனாருக்கும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை. இதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக!. )முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். (நீர்) நேரான பாதையில் […]

கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?

கேள்வி: கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?-நிஷாத் சிலர் கிப்லாவை நோக்கி கால்நீட்டி தூங்கக் கூடாது என்கிறார்கள். எந்த்த் திசை நோக்கி தூங்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த்த் திசை நோக்கி தூங்கினார்கள் என்று ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? பதில்: மேற்குத் திசை நோக்கி காலை நீட்டக்கூடாது என்று முஸ்லிம்களில் அதிகமானோர் நம்புகின்றனர். கஅபா ஆலயம் மேற்குத் திசை நோக்கி அமைந்திருப்பதால் அதை நோக்கி கால் நீட்டுவது கஅபாவை அவமதிக்கும் செயல் என்று கருதுகின்றனர். கஅபாவை […]

அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?

கேள்வி:அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?-ஷமீம் ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? பதில்: திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து […]

இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா?

கேள்வி: இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா? பதில்: முடியாது. இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நல்லடியாராக இருந்தால், நெருங்கிய உறவினரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாத புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக என்று வானவர்கள் கூறுவார்கள் என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது. நெருங்கிய உறவினரைத் தவிர என்ற வாசகம், நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியும் என்ற கருத்தைத் தருகின்றதே? இது 46:5➚, 39:42➚, 23:99➚ ஆகிய வசனங்களுக்கு முரணாக உள்ளது. விளக்கவும். பி.எம். ஷேக் […]

இறந்தவர் செவியுற முடியுமா?

கேள்வி: இறந்தவர் செவியுற முடியுமா? ‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52➚ வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும் போது, நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கும் போது, இறைவன் தான் நாடினால் தான் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்த வசனத்தை அருளினான். இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதை […]

லைலத்துல் கத்ர் இரவில்…

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா? பதில்: குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது. (முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம். (அல்குர்ஆன்: 76:23)➚ […]

இரகசிய ஞானம்

கேள்வி: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159➚,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே! பதில்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகத் தெரிவிக்கும் இந்தச் செய்தி எது என்பது குறித்த விளக்கம் எதுவும் ஹதீஸ்களில் […]

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்?

ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயிலுக்கும் யார் எதிரியாக இருக்கின்றார்களோ அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான் என்று(அல்குர்ஆன்: 2:98)➚வசனத்தில்,வா னவர்கள் என்று கூறி விட்டு பின்பு ஜிப்ரீல், மீகாயீல் என்று அல்லாஹ் தனியாகக் குறிப்பிடுகின்றான். ஜிப்ரீலும், மீகாயீலும் வானவர்கள் தான் எனும் போது ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? ஜிப்ரீலைப் பற்றி தெரியும். மீகாயீலைப் பற்றி விளக்கவும். எம். திவான் […]

இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா?

இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா? இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நல்லடியாராக இருந்தால், நெருங்கிய உறவினரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாத புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக என்று வானவர்கள் கூறுவார்கள் என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது. நெருங்கிய உறவினரைத் தவிர என்ற வாசகம், நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியும் என்ற கருத்தைத் தருகின்றதே? இது 46:5➚, 39:42➚, 23:99➚ ஆகிய வசனங்களுக்கு முரணாக உள்ளது. விளக்கவும். பி.எம். ஷேக் அப்துல் காதிர், மதுரை […]

கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்

கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்: ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. வழக்கம் போல் மக்கள் எல்லோரும் குர்பானி கொடுத்தார்கள். நாமும் குர்பானி கொடுத்தோம். தனியாகவும், கூட்டாகவும் ஆடு,மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன. இந்தக் குர்பானி ஏன் கொடுக்கப்படுகின்றது?இதற்குப் பின்னணியாக இருப்பது யார்? உலக இறுதி நாள் வரை வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிம் – யூதர் – கிறித்தவர் – இணை வைப்பவர் எவராலும், என்றும் மறக்க முடியாத மாமனிதர் இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஹஜ் மாதங்களில் […]

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா?

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும். குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் […]

பூமி நிலையாக நிற்கிறதா?

பூமி நிலையாக நிற்கிறதா? சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியில் உலகிற்கு முதலில் கூறியவர் கலிலியோ என்ற அறிஞர் ஆவார். இவர் இத்தாலியில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் பிறந்தார். அதே பிப்ரவரி 15, 2015 ஆம் நாளில் துபாய் சார்ஜாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சவூதி அரேபிய அறிஞர் “பன்தர் அல்ஹைபரி” அவர்களிடம் பூமி சுற்றுகிறதா? அல்லது நிலையாக நிற்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. […]

நபி (ஸல்) அவர்களை கஷ்பில் காணமுடியுமா?

நபி (ஸல்) அவர்களை கஷ்பில் காணமுடியுமா? கடந்த மார்ச் மாத மனாருல் ஹுதா இதழில் நபிகளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தொடர்பாக ஒரு கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது. அதில், “நபிகளாரைக் கனவில் காணலாம். அது தொடர்பாக ஹதீஸ்கள் இருக்கிறது. ஆனால் நனவில் நபிகளாரைக் காண்பது தொடர்பாக நம்பகத்தனமான ஹதீஸ்கள் இல்லை. எனினும் நபிகளாரின் சுன்னத்துகளை அடிபிறழாமல் பின்பற்றும் அல்லாஹ்வின் நல்லடியார்களால் கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரை மனித உருவத்தில் காணமுடியும்” என்று ஒரு அற்புதமான […]

நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா?

பதில்: நீங்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ […]

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً […]

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும், தர்மம் செய்யுமாறும் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். (புகாரி: 1040, 1041, 1042, 1043, 1044) ➚ கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை. விஞ்ஞான அடிப்படையில் வெறும் கண்ணால் […]

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா?

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா? கேள்வி: இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? இஹ்ஸாஸ் இலங்கை. பதில்: இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்து தவறானது. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. ஹதீஸ்களை ஆராயும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் இருட்டில் தான் உறங்கினார்கள் […]

ஹதீஸ்கள் தேவையா?

கேள்வி: ஹதீஸ் தேவை என்றால் நபி ஏன் அதை எழுதச் சொல்லவில்லை? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னவர்களின் வாதம் எப்படி உண்மை என்று நம்புவது? முஹம்மது ஃபைசல் பதில் : ஹதீஸ்கள் தேவையில்லை என்பதால் தான் அவற்றை எழுத வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற வாதம் தவறானது. குர்ஆன் வசனங்கள் இறங்கினால் அதை உடனே நபித்தோழர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஹதீஸ்களை எழுதினால் குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும் […]

எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

உலகத்தில் கோடிக்கணக்கான மக்களால் பலதரப்பட்ட மதங்கள், சித்தாந்தங்கள், கொள்கை – கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் எந்த மதத்தில் தங்களை அங்கம் வகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, ஆசைப்படுகின்றார்களோ, அந்த மதத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை சுலபான முறையில் தொடர்கிறார்கள். இஸ்லாம் அல்லாத வேறுவேறு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், வேறுவேறு சித்தாந்தத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும் ஏற்படுகின்ற சிரமம், பாதிப்பு, சோதனை என்பது மிகமிகக் குறைவு தான் என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். ஆனால் […]

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்பதன் விளக்கம் என்ன?

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்றால் குர்ஆனில் அளவற்ற அருளாளன் என்பதன் பொருள் என்ன? பதில் : அல்லாஹ் அடியார்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறான் என்பது தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்திகள் : صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ )123 6469- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ، عَنْ سَعِيدِ […]

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா?

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும். ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது மற்றும் ஐந்தாவது கலிமாக்களில் உள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதே இல்லை. […]

தொற்று நோய் உண்டா?

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول […]

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்பார்களா? மரணித்தவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை. அவர்கள் எதையும் செவியுற மாட்டார்கள். அவர்களுக்கு எந்த ஆற்றலும் கிடையாது. இறைவன் சொல்லிக் காட்டுகிறான்… கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். (அல்குர்ஆன்: 46:5)➚ மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், தன்னை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களை மறுமை நாள் வரும் வரை அழைத்தாலும் அவர்கள் உங்களது அழைப்பை ஒருபோதும் […]

ஸபீலுல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது?

ஸபீலுல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது? வஹீ எனும் இறைச்செய்தியையே முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வஹீ அல்லாத எதுவாயினும் அது பின்பற்றத்தக்கதல்ல என்பதோடு அவைகளைப் பின்பற்றுவது வழிகேடு.! இறைச்செய்தியை மட்டுமே பின்பற்றுதல் எனும் நேர்வழியில் முஸ்லிம்கள் நாமனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து நாம் விடுத்து வருகிறோம். அநேக மக்கள் இந்த சத்தியப் பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். முன்னோர்களைப் பின்பற்றுதல், இமாம்களைப் பின்பற்றுதல், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் என்பன போன்ற […]

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா? ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத, மறுக்கப்பட வேண்டிய செய்திகளில் கண்ணேறு பற்றிய செய்தியும் ஒன்றாகும். (கண்ணேறு, கண்ணூறு, கண்படுதல், கண் திருஷ்டி என்றும் சொல்லப்படும்) புனித அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பதினால் சூனியம் பற்றிய செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அமைந்திருப்பதைப் போல் கண் திருஷ்டி பற்றிய செய்திகளும் புனித குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக அமைந்திருப்பதினால் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக அமைந்திருக்கின்றது. கண் திருஷ்டி பற்றிய […]

நபிமார்கள்  கப்ரில் தொழுகிறார்களா?

நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா? நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர். நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் அறிவிக்கப்படும் செய்திகளில் மூஸா நபி தொடர்பான செய்தியைத் தவிர மற்ற அனைத்தும் தவறான அறிவிப்புகளாகும். மூஸா நபி அவர்கள் கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக […]

ஜின்களுக்கு இறைதூதர் யார்?

ஜின்களுக்கு இறைதூதர் யார்? பதில்: நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால், ஜின்களுக்கென்று தனியாக இறைதூதர்கள் வந்தனர். இதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. ஜின், மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?” (என்று இறைவன் கேட்பான்). “எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. “(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்” எனத் […]

கேட்பவர் பதில் தருவாரா?

முன்னுரை பிரார்த்தனையை இறந்தவர்களால் கேட்கவும் பதில்தரவும் முடியாது. இன்று நம் சமுதாயத்தில் பல மக்கள் இறந்து போனவர், மகான் என்று கருதி அவரிடத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். சிலர் அல்லாஹ்விடம் அவர் பரிந்துரை செய்வார். வாங்கித் தருவார் என்று நம்புகின்றனர். இறந்தவர்கள் பற்றி திருக்குர்ஆன் நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது!(அல்குர்ஆன்: 27:80)➚ உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாகமாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.(அல்குர்ஆன்: 35:22)➚ நீங்கள் அவர்களை […]

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்? தெரியாது. மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர். حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ […]

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. எந்த மனிதனோ, அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும். அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 6:103)➚ முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் […]

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இது மார்க்க அடிப்படையில் சாத்தியமானது தானா? ! மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது திருமறையில் அறிவித்து விட்டான். “வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர […]

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா? இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயை குழி தோண்டி புதைக்கும் விதமாக தோற்றுவிக்கப்பட்ட பிறமதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர். இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ […]

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாதிமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்த ஹதீஸ் தப்ரானியில் உள்ளதாகவும், பெரியார்களின் பொருட்டால் வசீலா தேடலாம் என்ப்தற்கு இது ஆதாரம் என்று சொகிறார்களே அது உண்மையா முஹம்மத் இஹ்ஸாஸ், இலங்கை பதில் நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் இது தான் […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா? மதீனாவில் நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தன் பெயரைப் பற்றி கூறும் போது, நபியுத்தவ்பா என்பதையும் கூறியதாக ஹுதைஃபா (ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், திர்மிதீ போன்ற நூல்களில் உள்ளது. நபியுத்தவ்பா (மன்னிக்கும் நபி) என்று நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி கூறியுள்ளார்கள். இதைத் தானே மவ்லூதில் ஓதுகின்றார்கள். இது சரியா? ரா. ரிஸ்வான் அஹ்மத், தஞ்சாவூர் தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் ஹுதைஃபா […]

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா?

நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன? பதில்: இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும் முறை பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது. மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை பெரும் பாக்கியவான்களுக்குத் தான் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் நபிமொழிகளை ஆராயும் போது இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது […]

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன? கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா? பதில்: இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று […]

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? உமர் (ரலி) ஆட்சியின் போது அவர்கள் அனுப்பிய ஒரு படையினரை மலைக்குப் பின்புறமிருந்து எதிரிப்படையினர் தாக்க முயன்ற போது உரை நிக்ழ்த்திக் கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் மலை ஜாக்கிரதை என்று குரல் கொடுத்ததாகவும் அந்த உரை அந்தப் படையினருக்கு கேட்டதாகவும் சில இமாம்கள் உரை நிகழ்த்துகிறார்கள். இது உண்மையா பதில்: நீங்கள் கூறும் செய்தி அபூ நுஐம் உஸ்புஹானீ என்பவர் தொகுத்த தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் […]

இணைகற்பித்தவருக்கு துஆ செய்யலாமா

இணைகற்பிப்பவர்களுக்காக துஆ செய்யலாமா? என் உறவுப் பெண்கள் சிலர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களைச் செய்கிறார்கள் நானும் என் மனைவியும் தவ்ஹீத் கொள்கையை இயன்றவரைப் பின்பற்றி வாழ்வதை என் உறவுப் பெண்கள் நன்றாக அறிவார்கள் . அவர்களுக்காக நான் துவா செய்யலாமா? எந்த மாதுரி துவா செய்ய மார்க்கத்தில் அனுமதி உள்ளது? பதில்: இணைவைப்பவர்களாகவே மரணித்தவர்களின் மறுமை வெற்றிக்காக பிரார்த்தனை செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்க […]

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு!

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு! நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும். ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து […]

அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கையா?

அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கையா? மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் […]

அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத் தடை!

அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத் தடை! ஒருவரை அடக்கம் செய்யும் போது குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை விட சிறிதளவும் அதிகமாக்கக் கூடாது என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على […]

சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம்

சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம் இறந்தவர்களின் அடக்கத்தலத்தில் வழிபாட்டுத்தலம் எழுப்புவதும், சமாதிகள் பூசப்பட்டுவதும் ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் இதை ஏகமனதாகக் கண்டித்துள்ளனர். இது பிற்காலத்தில் உருவான தீய செயலாகும். இது குறித்து ஹிஜ்ரி 1200களில் வாழ்ந்த இமாம் ஷவ்கானி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். شرح الصدور بتحريم رفع القبور (ص: 8) فنقول: اعلم أنه قد اتفق الناس، سابقهم ولاحقهم، وأولهم وآخرهم من […]

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா? நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர மற்ற யாரும் அற்புதங்கள் செய்ய முடியாது. நபித்தோழர்களோ, மற்ற நல்லடியார்களோ தாம் வாழும் காலத்தில் செய்தததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் கட்டுக் கதைகளாகும். ஏனெனில் ஒருவர் அற்புதம் […]

இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அற்புதங்கள் செய்வது எப்படி?

இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அற்புதங்கள் செய்வது எப்படி? அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவது அவனை அல்லாஹ்வைப் போல் கருதியதாக ஆகும் என்று நாம் கூறுகிறோம். இந்த வாதத்துக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் சில எதிர்க் கேள்விகளையே இதற்கு பதிலாக முன்வைக்கிறார்கள். அல்லாஹ்வைப் போல் […]

கப்ரை முத்தமிடலாமா?

கப்ரை முத்தமிடலாமா? பதில்: பெரும்பாலும் இணைவைப்புக் காரியங்கள் இறந்தவர்களின் பெயராலே அரங்கேற்றப்படுவதால் இவ்விஷயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. கப்றுக்கு மேல் கட்டிடம் எழுப்பக்கூடாது. கப்றை பூசக்கூடாது. கப்றை உயரமாக்குவது கூடாது. புனிதம் கருதி கப்றுக்கு அருகில் அமரக்கூடாது. கப்றை நோக்கித் தொழக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் தடை விதித்துள்ளது. இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளை அனைவரும் சரியாக்க் கடைபிடித்தால் எந்தக் கப்றும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. சில நாட்களிலேயே கப்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இறந்தவர்களின் […]

தர்காக்களில் ஜியாரத் செய்யலாமா

தர்காக்களில் ஜியாரத் செய்யலாமா? மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். حدثنا أبو بكر بن أبي شيبة وزهير بن حرب قالا حدثنا محمد بن عبيد عن يزيد بن كيسان عن أبي حازم عن أبي هريرة قال زار النبي صلى الله عليه وسلم قبر أمه فبكى وأبكى من حوله فقال استأذنت ربي في أن […]

Next Page »