தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நபிமார்களையும், நல்லவர்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவர்களின் அடக்கத்தலங்களில் தர்காக்கள் கட்டியது தான் அவர்கள் இணைகற்பித்த்தற்குக் காரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக எச்சரித்ததைப் பார்த்தோம். தனது அடக்கத்தலத்தில் தர்கா கட்டக் கூடாது என்று அவர்கள் எச்சரித்ததையும் பார்த்தோம். தர்காக்கள் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க வேண்டும் என்று கடுமையான நிலைபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) […]