Category: பொதுவான கட்டுரைகள்

z507

மார்க்க உரைகள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனை அலசி ஆராய்ந்து, மக்களுக்கு மார்க்கத்தை அறிவுரைக்கும் ஆலிம்கள், முதலில் தங்களின் வாழ்வை வான்மறை அடிப்படையில் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அதனைத் தொடர்ந்து, அந்த ஆலிம்களால் நிகழ்த்தப்படும் மார்க்க உரைகள் மனிதர்கள் வாழ்வில் எத்தகைய திருத்தத்தைத் தரவேண்டும் என்பதை இத்தொடரில் பார்ப்போம். எழுத்துக்கள் மூலம் ஏற்ப்படுத்திட முடியாத எழுச்சியைக் கூட பேச்சின் மூலம் பாய்ச்சிட முடியும். அரியனையைப் பிடிக்க அரசியல் பேசுபவர்களும், மதபோதகர்களும், […]

புறம் பேசுவதை செவியேற்பது தடை & புறம் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு… புறம் பேசுவதைச் செவியேற்பது தடைசெய்யப்பட்டதாகும். யார் தடைசெய்யப்பட்ட புறம் பேசுதலை செவியேற்கிறாரோ அவர் அதனை மறுத்து, புறம் பேசியவரை நிராகரிக்க வேண்டும். அவருக்கு இயலாவிட்டால், அல்லது அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சபையை விட்டும் அவருக்கு வெளியேறுவது சாத்தியமானால் வெளியேறிவிடவேண்டும். قال اللَّه تعالى: ﴿وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ ﴾ அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் அவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதனைப் புறக்கணிப்பார்கள்.(அல்குர்ஆன்: 28:55)➚ وقال تعالى: ﴿ […]

மறுவுலக நம்பிக்கை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மறுமை நம்பிக்கை என்பது மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையை உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் […]

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை தாக்குதல்

முன்னுரை இன்று இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதற்கு எதிரிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆகும். அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமடைந்தது. இன்றளவும் இராக், சிரியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான் என முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. […]