கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன?
கண்ணாடிக்குத் தனியாக ஒரு நிறம் இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். கண்ணாடி எல்லா நிறங்களையும் பிரதிபலிப்பதால், அது வெள்ளி அல்லது வெள்ளை நிறத்தில் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள்.
ஆனால் உண்மையில் கண்ணாடிக்கு மிக லேசான பச்சை நிறம் உண்டு.
நாம் வீடுகளில் பயன்படுத்தும் கண்ணாடிகள் சிலிக்கா கிளாஸ் போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன. இந்த கண்ணாடிகளின் பின்புறத்தில் ஒளியைப் பிரதிபலிக்கும் உலோகப் பூச்சு இருக்கும்.
ஒரு சரியான கண்ணாடி எல்லா நிறங்களையும் ஒரே அளவில் பிரதிபலித்தால், அது வெள்ளை நிறமாகத் தெரியும். ஆனால் நாம் பயன்படுத்தும் கண்ணாடிகள் எல்லா நிறங்களையும் ஒரே அளவில் பிரதிபலிப்பதில்லை.
குறிப்பாக, கண்ணாடி பச்சை நிற ஒளியை மற்ற சில நிறங்களை விட சற்று அதிகமாகப் பிரதிபலிக்கும். இதனால்தான் கண்ணாடியின் பிரதிபலிப்பில் லேசான பச்சை நிறம் தெரிகிறது.
இந்த நிற வேறுபாடு மிகவும் சிறியது. அதனால் சாதாரணமாக கண்ணாடியைப் பார்க்கும்போது நம் கண்களுக்கு அது தெரிவதில்லை. அதனால்தான் கண்ணாடி வெள்ளி நிறத்தில் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.
இந்த பச்சை நிறத்தை வீட்டிலேயே எளிதாகக் கவனிக்கலாம். இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று எதிரெதிராக வைத்துப் பாருங்கள்.
கண்ணாடிகளில் தொடர்ந்து உருவாகும் பிம்பங்களைப் பார்த்தால், அவை தொலைவில் செல்லச் செல்ல சற்று பச்சை நிறத்துடன் இருண்டு காணப்படுவதைக் காணலாம்.
ஒளி கண்ணாடிகளுக்கு இடையே பலமுறை பிரதிபலிக்கும்போது, ஒவ்வொரு முறையும் நிறங்களின் பிரதிபலிப்பு விகிதத்தில் சிறிய வேறுபாடுகள் சேர்கின்றன. இதனால் தொலைவில் உள்ள பிம்பங்களில் பச்சை நிறம் தெளிவாகத் தெரிகிறது.
ஆகவே, கண்ணாடியின் நிறம் வெள்ளை அல்லது வெள்ளி என்று சொல்வதை விட, மிக லேசான பச்சை நிறச் சாயல் கொண்டது என்று சொல்வதுதான் சரியானது.
இறைவன் எவ்வளவு நுட்பமாக இந்த உலகைப் படைத்து, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்தன்மையை அளித்துள்ளான் என்பதை இது காட்டுகிறது. அவனது படைப்பின் அழகையும், ஒழுங்கையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆதாரம்: தினத்தந்தி