இதயம் ஓய்வெடுக்குமா?

அறிவியல் உண்மைகள்

நம் இதயம் எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பது போலத் தோன்றும். ஆனால், அது உண்மை இல்லை.

உடலில் உள்ள எந்த உறுப்பாக இருந்தாலும், அது நன்றாகச் செயல்பட ஓய்வு தேவை.

இதயத்திற்கும் இந்த விதி பொருந்தும். ஆனால், மற்ற உறுப்புகள் போல இதயம் முழுமையாக ஓய்வெடுத்தால், நாம் உயிருடன் இருக்க முடியாது.

இதயம் வேலை செய்துகொண்டே ஓய்வெடுக்க இயற்கை ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு முறையும் இதயம் சுருங்கி விரியும் போது, ஒரு நொடியில் பாதி அளவு நேரத்தை (சுமார் 0.3 வினாடிகள்) ஓய்வுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இரவில் நாம் தூங்கும் போது, இதயம் தனது வேலையின் அளவைக் குறைத்துக்கொள்கிறது. அப்போது, மிகச் சிறிய இரத்தக் குழாய்களுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவும் குறைகிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் இயங்க இரத்தமும், அதன் மூலம் கிடைக்கும் பிராண வாயுவும் (ஆக்ஸிஜன்) தேவை.

இதயம் இயங்குவதற்கும் இரத்தம் தேவை. ஆனால், இதயம் தனது அறைகளில் உள்ள இரத்தத்தை நேரடியாகப் பயன்படுத்துவதில்லை.

இதற்குப் பதிலாக, உடலின் பெரிய இரத்தக் குழாயான பெருந்தமனியில் (aorta) இருந்து பிரியும் மூன்று சிறிய இரத்தக் குழாய்கள் (கரோனரி தமனிகள்) மூலம் இதயம் தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெறுகிறது.

இந்த மூன்று இரத்தக் குழாய்கள்தான் இதயத்திற்குத் தேவையான பிராண வாயு, இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கின்றன.

ஆதாரம்: மாலைமலர்