மரத்தில் பாயும் மின்சாரம் மரக்கட்டையில் ஏன் பாய்வதில்லை?
தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தும் என்பது உண்மைதான்.
ஆனால், சுத்தமான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது.
தண்ணீரில் கலந்திருக்கும் உப்புகளும் தாதுக்களும் (கனிமப் பொருட்கள்) தான் மின்சாரத்தைக் கடத்துகின்றன.
மரங்கள் தண்ணீரை உறிஞ்சும்போது, இந்த உப்புகளும் தாதுக்களும் மரத்திற்குள் செல்கின்றன.
அதனால், பச்சை மரங்கள் மின்சாரத்தைக் கடத்தும் தன்மை கொண்டவை.
காய்ந்த மரக்கட்டைகளில் நீர்ச்சத்து இருக்காது.
நீர்ச்சத்து இல்லாததால், காய்ந்த மரக்கட்டைகள் மின்சாரத்தைக் கடத்துவதில்லை.
இதனால்தான் மின்சாரம் தொடர்பான வேலைகளைச் செய்யும்போது, மரக்கட்டை அல்லது மரத்தால் செய்யப்பட்ட பலகையின் மீது நின்று வேலை செய்யச் சொல்வார்கள்.
இது மின்சார அதிர்ச்சியில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
ஆதாரம்: இந்து தமிழ் திசை