கடலின் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது?

அறிவியல் உண்மைகள்

கடலின் நிறம் நீலமாகத் தெரிவதற்கு வானத்தின் நிறம் காரணம் என்று பலர் நினைக்கிறார்கள்.

ஆனால், வானத்தின் நிறம் நீலமாக இருப்பதற்கும், கடலின் நிறம் நீலமாக இருப்பதற்கும் ஒரே அறிவியல் காரணம் தான்.

சூரிய ஒளியில் பல வண்ணங்கள் கலந்துள்ளன. இவை வானவில்லில் தெரியும் நிறங்கள் போல இருக்கும்.

கடல் நீர் சூரிய ஒளியில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களை உறிஞ்சிக் கொள்கிறது.

ஆனால், நீல நிற ஒளியை கடல் நீரால் முழுமையாக உறிஞ்ச முடிவதில்லை.

அதனால், நீல நிற ஒளி கடல் நீரால் உறிஞ்சப்படாமல், மீண்டும் வெளியே பிரதிபலிக்கப்படுகிறது.

இந்த நீல நிற ஒளி நம் கண்களுக்குத் தெரிவதால், கடல் நீல நிறமாகத் தோன்றுகிறது.

இதே காரணத்தால்தான் வானமும் நீல நிறமாகத் தெரிகிறது.

ஆதாரம்: தினமணி