கரடிகள் ஏன் நீண்ட நேரம் உறங்குகின்றன?
கரடிகள் மிக நீண்ட காலம் உறங்கும் விலங்குகள். பழுப்பு நிறக் கரடிகள் எட்டு மாதங்கள் வரை கூட உறங்கும்.
ஒரு மனிதன் இவ்வளவு நீண்ட நாட்கள் தூங்கினால், எலும்புகள் வலுவிழந்து, தோல் வறண்டு, தசைகள் பலவீனமாகிவிடும்.
கரடிகள் மட்டும் எப்படி இவ்வளவு நீண்ட நாட்கள் தூங்க முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
கரடிகள் உறங்கும் போது, அவற்றின் இதயம் ஒரு நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கும். இது சாதாரண உறக்கத்தை விட ஆழமான ஒரு ஓய்வு நிலை.
கரடிகள் உறங்கும் போது எந்த நோயும் வராமல், இரத்தம் உறைந்து போகாமல் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
கரடிகளின் இரத்தத்தில் HSP47 என்ற புரதம் உள்ளது. இது இரத்த அணுக்களின் மீது இருக்கும். இந்த புரதம் இரத்தம் உறைவதற்கு உதவுகிறது.
கரடிகள் உறங்கும் போது, இந்த HSP47 புரதத்தின் அளவு இரத்தத்தில் குறைந்துவிடுகிறது. இதுவே அவை நீண்ட நேரம் உறங்க உதவுகிறது.
இந்த புரதத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்த முடியுமா என்று ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.
ஆதாரம்: விகடன்