
சொர்க்க நரகத்தை தீர்மானிக்கும் நாவு இறைவன் தந்த உடலுறுப்புகளில் எத்தனையோ இருக்க நாவைப்பற்றி பேசுவதன் அவசியம் என்ன? என்று சிலருக்கு தோன்றும். நியாயமே. ஏன் பேசுகிறோம்? மற்ற உறுப்புகளின் மூலம் (மறை உறுப்பைத்தவிர) ஏற்படும் விளைவை விடவும் நாவு மூலம் ஏற்படும் விளைவு ஒவ்வொரு முஸ்லிமையும் அச்சுறுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ளது. மற்ற உறுப்புகளை அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பதை விடவும் நாவை அடக்கி கட்டுக்குள் வைப்பது சிரமமான ஒன்றாகவே இருக்கின்றது. வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பலநாடுகள் தமக்குள் சண்டையிட்ட தற்கும். […]