
நரகிலிருந்து தப்பிக்க இஸ்லாமியர்கள் அனைவர்களும் சொர்க்கத்தில் நுழைவதையும் நரகிலிருந்து தப்பிப்பதையுமே குறியாக லட்சியமாக கொண்டுள்ளனர். ஒவ்வொருவர்களும் அவரவர்களுக்கு இயன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் இந்த லட்சியத்தை நிறைவேற்றிட முயல்கின்றனர். பலவழிகளின் மூலமும் நரகிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். அதில் நல்ல சொல்லை சொல்வதின் மூலம் கூட நம்மை நரகிலிருந்து காப்பாற்றி அந்த பேரிடரிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று நபிகளார் சொல்லித் தருகின்றார்கள் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் […]