Tamil Bayan Points

43) சமரசம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

சமரசம்

أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«لَيْسَ الكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، فَيَنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا»

(பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி)

நூல்: புகாரி – 2692

விளக்கம்:

ஐந்து விரல்கள் எப்படி ஒன்றாக இருப்பதில்லையோ அது போல மனிதர்கள் அனைவரும் குணத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை எனவே அவர்களுக்கு மத்தியில் பிணக்குகள், சண்டைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு பிணக்குகள் ஏற்படும் போது. ‘நன்றாகச் சண்டையிடட்டும் என்றிருக்காமல் பின்வரும் வசனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர் சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் : 49:10.)