Tamil Bayan Points

38) கோபம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

கோபம்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الغَضَبِ»

மக்களைத் தனது பலத்தால் அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன் உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி – 6114

விளக்கம்:

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று கூறுவார்கள் கட்டுப்பாட்டை இழந்து, கடும் கோபப்பட்டு, தான் என்ன செய்கிறோம் என்பதைப் புரியாமல் நடந்து கொள்பவர்கள் பேரிழப்பைச் சந்திப்பார்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்பட்டு, நியாயமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் பின்னால் சிரமத்திற்கு ஆளாவார்கள் அதிகம் கோபப்படும் ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, ‘எனக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள்? என்று பல தடவை கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘கோபப்படாதே! கோபப்படாதே! என்றே கூறினார்கள். (புகாரி 6116) அடிக்கடி தேவையில்லாமல் கோபப்படுபவன் செய்ய வேண்டிய முதல் வேலை, கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதே! அடுத்தவரை அடித்து வீழ்த்துவது பெரிய காரியமில்லை! கோபம் வரும் போது கட்டுப்படுத்தி இருப்பதே சிறந்த காரியமாகும்.