Tamil Bayan Points

46) ஹலாலா? ஹராமா

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

ஹலாலா? ஹராமா

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ بِمَا أَخَذَ المَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ»

தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி – 2083

விளக்கம்:

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சியில் இருக்கும் இக்காலத்தில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக, அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எல்லா வழிவகைகளையும் கையாளுகின்றனர். எந்தத் தொழிலில் அதிக லாபம் வருகிறது என்பதை மட்டும் பார்த்து அதில் முதலீடு செய்கின்றனர். அந்த வியாபாரம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடை என்பதையெல்லாம் இந்த அவசர உலகத்தில் சிந்திப்பதில்லை.

பணம்! பணம் என்பது மட்டுமே குறிக்கோள் என்பதால் மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவமான வட்டித் தொழியில் இஸ்லாமியர்கள் ஈடுபடுகின்றனர். லாட்டரி மது என்று மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் வியாபாரத்தையும் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர் இவையெல்லாம் உலக அழிவுக்கு அறிகுறியாகும். மறுமை வெற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் எந்தத் தொழிலாக இருந்தாலும், அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? இல்லையா என்பதை அறிந்து ஈடுபட வேண்டும்.