Tamil Bayan Points

48) அங்கீகாரம் இல்லாத அமல்கள்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

அங்கீகாரம் இல்லாத அமல்கள்

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»

நம்முடைய கட்டளையில்லாத அமலை யார் செய்வாரோ அது (அல்லாஹ்விடம்) நிராகரிக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் – 3541

விளக்கம்:

இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையை விளக்கும் ஒரு நபிமொழியாகும் இது இன்று மார்க்கத்தின் பெயரால் எத்தனையோ புதுமையான அமல்கள் நிறைந்துள்ளன. இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை முழுமையாக மறைக்கும் அளவிற்கு இந்தப் புதிய களைகள் நிறைந்து விட்டன. இவற்றைப் பிடுங்கி எறியாவிட்டால் இஸ்லாம் முழுமையாக இவற்றில் மூழ்கிப் போய்விடும்.

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள ஒவ்வொரு அமலும் மார்க்க அங்கீகாரம் இல்லாததாகவே இருக்கின்றது. மவ்லித் ஓதுதல், ஒன்று. ஏழு நாற்பது மீற்றும் வருட பாத்திஹாக்கள் ஒதுதல், தொழுகை முறைகள் தர்ஹா வழிபாடுகள் என்று ஏராளமான, மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இவை வளர்வதற்குக் காரணம் இந்த நபிமொழியைப் பற்றி விளங்காதது தான் மார்க்கம் தொடர்பான எந்த அமலாக இருந்தாலும், இதற்கு நபிகளாரின் அங்கீகாரம் இருக்கிறதா? கட்டளையிருக்கிறதா? என்ற கேள்வியை மட்டும் நாம் கேட்டு அமல் செய்தால் தற்போது முளைத்திருக்கும் இந்தக் களைகள் அனைத்தும் இல்லாமல் போய்விடும்.