Tamil Bayan Points

50) கோள் சொல்லாதே

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

கோள் சொல்லாதே

فَقَالَ لَهُ حُذَيْفَةُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا يَدْخُلُ الجَنَّةَ قَتَّاتٌ»
கோள் சொல்பவன் சொர்க்கம் செல்ல மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி – 6056

விளக்கம்:

மனிதர்களில் சிலர், வெட்டிப் பேச்சுக்களைப் பேசி காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருவனிடம் கேட்ட செய்திகளை அடுத்தவனிடம் கூறி இரண்டு நபர்களுக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்தி இன்பம் பெறுபவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மறுமையில் சொர்க்கம் செல்ல முடியாது.

பிணக்கு ஏற்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறும் போது, நன்றாக இருப்பவர்களுக்கு மத்தியில் கோள் சொல்லிப் பிரிவினை ஏற்படுத்துவது சரியாகுமா ?

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், பேசினால் நல்லதைப் பேசுங்கள் இல்லையென்றால் வாய்மூடி இருங்கள்’ என்று கூறியுள்ளார்கள் (புகாரி 6018) எனவே நம் பேச்சால் மற்றவர்கள் நலன் பெற வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அடுத்தவர்கள் துன்பம் பெறாமலாவது இருக்க வேண்டும்.