Tamil Bayan Points

35) நரகத்திலிருந்து பாதுகாப்பு

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

நரகத்திலிருந்து பாதுகாப்பு

 قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி – 1417

விளக்கம்:

மறுமை நாளில் வெற்றி பெறுவதற்கு இஸ்லாம் பல வழிகளைக் காட்டியிருக்கிறது. அதில் முக்கியமானதாக தர்மத்தை இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. பெருநாள் தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியது தர்மமாகும். ‘பெண்கள் அதிகம் நரகத்தில் இருப்பதை நான் கண்டேன். எனவே நீங்கள் உங்கள் ஆபாரணத்திலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்’ என்று நபிகளார் குறிப்பிட்டது நரகத்தை விட்டுப் பாதுகாக்கும் கவசமாக இந்த தர்மம் இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.

பெரியளவில் இருந்தால் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை குறைந்த அளவு தர்மம் கூட மறுமை நாளில் நரகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்திடும். நாம் மனத் தூய்மையோடு செய்யும் குறைந்தளவு தர்மம் மறுமை வெற்றிக்கு வித்திடும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்து நரகை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.