Tamil Bayan Points

33) விவசாயம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

விவசாயம்

யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும் பயிரிட விரும்பாவிட்டால், அதைத் தம் சகோதருக்குப் பயிரிடக் கொடுத்து விடட்டும்” என்று நபி (எல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் – 317

விளக்கம்:

மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவை உற்பத்தி செய்வது மிக மிக முக்கியமானதாகும். ஆனால் இன்று பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இயந்திர உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வருங்காலத்தில் உணவு உற்பத்தி கடுமையாகக் குறைந்து பஞ்சம் ஏற்படும்.

இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, விவசாய நிலத்தை சும்மா போடாமல் உணவு உற்பத்தி செய்ய வேண்டும். அல்லது மற்ற சகோதரருக்கு வழங்கி, உணவு உற்பத்தியைப் பெருக்கவும் அந்தச் சகோதரர் பயன் பெறவும் உதவிட வேண்டும். உணவு உற்பத்தி எவ்வளவு அவசியம் என்பதையும், வீணாக நிலங்கள் இருக்கக் கூடாது என்பதையும் இந்த நபி மொழி தெளிவுபடுத்துகிறது.