Tamil Bayan Points

57) போதுமென்ற மனம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

Last Updated on July 12, 2023 by

போதுமென்ற மனம்

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَيْسَ الغِنَى عَنْ كَثْرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ»

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று, மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி – 6446

விளக்கம்:

மனிதனுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றே ஆசைப்படுவான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களுக்கு இரண்டு தங்க ஒடைகள் இருந்தாலும் அவனுக்கு இன்னொரு ஒடை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுவான். மண்ணறையில் வைத்தால் மட்டுமே அவனது ஆசை நிறைவு பெறும்” என்று கூறினார்கள்.

மனிதனுக்கு இறந்து போகும் வரை ஆசை இருக்கும் என்பதால் நமக்குக் கிடைப்பதைப் பொருந்திக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் வாழ்க்கை நிம்மதியானதாக அமையும். இருப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒருவன் கற்றுக் கொண்டால் அவன் தான் உண்மையில் மிகப் பெரிய செல்வந்தன் பேராசைப்பட்டு, பணம் பணம் என்றலைந்தால் மிஞ்சப் போவது அலைச்சலும் மன உளைச்சலும் தான். எனவே உழைப்போம்: இருப்பதை வைத்து நிறைவு பெறுவோம்.