இறைவனுடைய பண்புகளில் இணைவைக்கக்கூடாது படைக்கப்படாமலும் தாய் தந்தை இல்லாமலும் இருத்தல் எந்தப்பொருளின் பக்கமும் தேவையுறாமல் இருத்தல் தூங்காமல் இருத்தல் சோர்வடையாமல் இருத்தல் தவறிழைக்காமல் இருத்தல் மறக்காமல் இருத்தல் மறைவானவற்றை அறிதல் மரணிக்காமல் இருத்தல் இவையெல்லாம் இறைவனின் பண்புகளாகும். இத்தகைய பண்புகள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. யாருக்காவது இத்தகைய பண்புகள் இருப்பதாக ஒருவன் நினைத்தால் அவன் இணைவைத்தவனாகி விடுவான். அல்லாஹ்விற்குத் தூக்கம் இல்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். […]