Author: Sumaya

செல்போனில் படம் பிடிக்கலாமா?

கேள்வி: செல்போனில் படம் பிடிக்கலாமா? பதில்: தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது ஆகியன மார்க்கத்தில் அனுமதி இல்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது தவறல்ல. வீடியோ கேமராவில் படம் பிடிப்பதற்கு உரிய மார்க்கச் சட்டம் செல்போன் மூலம் படம் பிடிப்பதற்கும் பொருந்தும். இது குறித்து […]

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?

கேள்வி: தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா? பார்வையைத் தாழ்த்தும்படி திருக்குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதால் டிவியில் பெண்களைப் பார்ப்பதற்கும் தடை உண்டா? – சமீா் பதில்: கூடாது. பெண்களை நேரடியாகப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு தடை உண்டோ அதே தடை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எந்த அளவுக்கு அனுமதி உள்ளதோ அதே அனுமதி தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எவ்விதத் தேவையுமில்லாமல் தவறான நோக்கத்தில் ஆண்கள் பெண்களைப் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களான ஆண்கள் அவ்வாறு பார்ப்பதை விட்டும் தங்களின் பார்வையைத் […]

சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா?

கேள்வி: சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பதில்: பாட்டுக்கள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று இசைக்கருவிகள் மூலம் இசையை இணைத்து பாடப்படும் பாடல்கள். மற்றொன்று இசைக் கருவிகள் மூலம் இசையை இணைக்காமல் ராகமாகப் பாடும் பாடல்கள். இசைக் கருவிகள் மூலம் இசைத்தல் கூடுமா என்பதை இசைக் கருவிகள் கூடுமா என்ற ஆக்கத்தில் அறிந்து கொள்ளலாம் பாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் அடங்கிய […]

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

கேள்வி: இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்? பதில்: இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். எந்த ஒரு பிரச்சனையானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறைமறுப்பாளனாக இருக்கும் ஒருவன் […]

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா?

கேள்வி: கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா? பதில்: கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன. ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. 4282 – حدثنا مسدد أن عمر بن عبيد حدثهم ح وثنا محمد بن العلاء ثنا أبو بكر يعني ابن […]

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா?

கேள்வி: இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா? இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இருக்காது என்று கூறப்படுகின்றதே இது சரியா? – ருஜாஹிம். பதில்: இவ்வாறு கூறுவோர் இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் உள்ள சில நாடுகளைப் பார்த்து விட்டு இந்தக் கருத்துக்கு அவர்கள் வந்திருக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன என்று யோசித்தால் இக்கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்ளலாம். […]

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்? பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோருக்கும், அவர்களின் பாட்டனாருக்கும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை. இதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக!. )முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். (நீர்) நேரான பாதையில் […]

பெண்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களிக்கலாமா?

கேள்வி:பெண்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களிக்கலாமா? பெண்களை ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்பது மார்க்கத்தின் நிலை. அப்படியிருக்க கடந்த தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏன் ஜெயலலிதாவை ஆதரித்தது? – ஃபஹத் பதில்: பெண்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவது கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல் இறை மறுப்பாளர்களையும் ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. لَا يَتَّخِذْ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنْ اللَّهِ فِي شَيْءٍ […]

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? – மறு ஆய்வு

கேள்வி: இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? – முஹம்மது. பதில்: கூடாது. மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசைக்கருவிகள் இசைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்கள். இசைக் கருவிகள் கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி […]

தப்ஸ் அடிக்கலாமா?

கேள்வி: தப்ஸ் அடிக்கலாமா? பதில்: இசைக் கருவிகள் தடுக்கப்பட்டதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. பார்க்க: இசை ஓர் ஆய்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பெண்கள் தஃப் அடித்து வரவேற்றார்கள் என்ற செய்தி பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தஃப் (கொட்டு) எனப்படும் தோலால் செய்யப்பட்ட கருவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசைக்கருவியின் வகையில் சேர்க்கவில்லை. இந்தக் கருவியின் மூலம் திருமணம் மற்றும் இன்ன பிற சந்தர்ப்பங்களில் ஓசை எழுப்பும் […]

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

கேள்வி: இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?-ஃபாத்திமா பதில்: இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை வெளியேற்றும் போது புதிதாக நல்ல இரத்தம் உடனே உற்பத்தியாகி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அந்த மக்கள் நம்பினார்கள். உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் இரத்தத்தை வெளியேற்றும் கலை அறிந்த வைத்தியர்கள் மூலம் இதைச் […]

மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா?

கேள்வி: மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா?-முஜீப் பதில்: மீசை, நகம், அக்குள் மற்றும் மறைவிடத்தில் வளரும் முடிகள் ஆகியவற்றை நாற்பது நாட்களுக்குள் அகற்றிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இட்டுள்ளார்கள். 379حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ جَعْفَرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ أَنَسٌ […]

தாடி வைப்பதை இளைஞர்கள் தவிர்க்கலாமா?

கேள்வி: தாடி வைப்பதை இளைஞர்கள் தவிர்க்கலாமா? சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை; ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம்; வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்? பதில்: மார்க்கத்தில் முதியவர்கள் என்பதற்காக அவர்களின் பலவீனம் கருதி விதிவிலக்குகள் உள்ளனவே தவிர இளைஞர்கள் என்பதற்காக எந்த விதிவிலக்கும் இல்லை. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا […]

கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?

கேள்வி: கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?-நிஷாத் சிலர் கிப்லாவை நோக்கி கால்நீட்டி தூங்கக் கூடாது என்கிறார்கள். எந்த்த் திசை நோக்கி தூங்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த்த் திசை நோக்கி தூங்கினார்கள் என்று ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? பதில்: மேற்குத் திசை நோக்கி காலை நீட்டக்கூடாது என்று முஸ்லிம்களில் அதிகமானோர் நம்புகின்றனர். கஅபா ஆலயம் மேற்குத் திசை நோக்கி அமைந்திருப்பதால் அதை நோக்கி கால் நீட்டுவது கஅபாவை அவமதிக்கும் செயல் என்று கருதுகின்றனர். கஅபாவை […]

முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா?

கேள்வி: முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா?-முஹம்மத் பதில்: முகத்தை மறைத்து உறங்குவதை மார்க்கம் தடை செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முகத்தை போர்வையால் மறைத்து உறங்கியுள்ளார்கள். இதைப் பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. 988 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى […]

பட்டாசு கொளுத்தி மகிழலாமா?

கேள்வி: பட்டாசு கொளுத்தி மகிழலாமா?-எஸ்.எம்.காசிம் பதில்: மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வதும் பட்டாசு கொளுத்துவதும் சமமானவை அல்ல. மகிழ்ச்சிக்காக கல்யாணம் செய்யலாம் என்பதால் மகிழ்ச்சிக்காக விபச்சாரம் செய்யலாமா என்று கேட்பது போல் உங்கள் கேள்வி அமைந்துள்ளது. நாம் சுற்றுலா செல்வதால் இதில் நம் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது. யாருக்கும் எந்தத் தீங்கும், நட்டமும் இல்லை. பட்டாசுகள் வெடிப்பதால் ஏராளமான கேடுகள் மனித குலத்துக்கு ஏற்படுகின்றன. பட்டாசிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள […]

புத்தாண்டு கொண்டாடலாமா?

கேள்வி: புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா?-ஸாஜிதா பதில்: ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. (ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பது தனி விஷயம்.) புத்தாண்டு கொண்டாட்டம் கிறித்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதை நாம் கொண்டாடக் கூடாது. 3512 […]

இசை ஹராமா?

கேள்வி:இசை ஹராமா?-ரிபாஸ், கத்தார் இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்? பதில்: இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. صحيح البخاري 5590 – وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، […]

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

கேள்வி: தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா?-மஹபூப் ஜான் பதில்: பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது பிள்ளைகள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. 1513 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ […]

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா?

கேள்வி: தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா? பதில்: பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். صحيح البخاري 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ […]

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

கேள்வி:வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? பதில்:நோற்கலாம் எந்த தடையும் இல்லை. துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3 / 167) قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ ». துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் […]

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா?

கேள்வி:கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா?-ஹபீபுர்ரஹ்மான் கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? பதில்: ஆயதுல் குர்ஸி ஓதுவது சுன்னத் ஆகும். கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். السنن الكبرى للنسائي– كتاب عمل اليوم والليلة أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، […]

மனைவி பீடி சுற்றும் தொழிலை விட மறுத்தால்?

கேள்வி: மனைவி பீடி சுற்றும் தொழிலை விட மறுத்தால்?-முஹம்மத் மனைவி பீடி சுற்றுவதை கணவன் விரும்பவில்லை. இதை அன்பாகவும், கடுமையாகவும் தெரிவித்தும் அதை அவர் விடுவதாக இல்லை. அவ்வாறு கணவன் பேச்சை மீறி மனைவி பீடி சுற்றலாமா? பதில்: மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களைத் தாயாரிப்பதையும், அது தொடர்பான வேலைகளைச் செய்வதையும் மார்க்கம் தடை செய்துள்ளது. وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(195)2 அல்லாஹ்வின் […]

அல்லாஹ் உருவமற்றவனா?

கேள்வி:அல்லாஹ் உருவமற்றவனா? அபூஉஸாமா பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது. உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய் நீளம்’ என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள் என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் ந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. […]

அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?

கேள்வி:அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?-ஷமீம் ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? பதில்: திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து […]

நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா?

கேள்வி:நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா?-எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா? பதில்: இது ஆதாரப்பூர்வமான செய்தி தான். புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய […]

இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா?

கேள்வி: இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா? பதில்: முடியாது. இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நல்லடியாராக இருந்தால், நெருங்கிய உறவினரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாத புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக என்று வானவர்கள் கூறுவார்கள் என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது. நெருங்கிய உறவினரைத் தவிர என்ற வாசகம், நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியும் என்ற கருத்தைத் தருகின்றதே? இது 46:5➚, 39:42➚, 23:99➚ ஆகிய வசனங்களுக்கு முரணாக உள்ளது. விளக்கவும். பி.எம். ஷேக் […]

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?

கேள்வி: உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு வானவர்கள் வரமாட்டார்கள் என்றால் இவை உள்ள வீட்டிற்கு உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா? – அப்துல் கஃபூர் பதில்: நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறும் செய்தியின் சரியான பொருள் என்னவென்றால் இறைவனின் அருளையும், அமைதியையும் கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்பது தான். சில வானவர்கள் மனிதர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல், அவனுக்குப் பாதுகாப்பு கொடுத்தல், ஷைத்தானை விரட்டுதல், அல்லாஹ்வின் கருணையைக் கொண்டு […]

ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா?

கேள்வி: வாய் கொப்பளிக்க பயண்டுத்தப்படும் மவுத்வாஷில் சிறிதளவு ஆல்கஹால் கலந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா? – ரஹீம். பதில்: கூடாது அனைத்து மவுத் வாஷ்களிலும் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி கலந்திருந்தால் அதன் மூலம் வாய் கொப்பளிக்கக் கூடாது. ஆக்கஹால் போன்ற போதைப் பொருட்களை வெளி உபயோகத்துக்கு பயன்படுத்தத் தடை இல்லை. ஆனால் உள் உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. ஒரு பொருளை அதிகமாகச் சாப்பிட்டால் போதை ஏற்படும் என்றால் அதில் குறைவான அளவைச் சாப்பிடுவதும் கூடாது. குறைவான […]

இப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன?

கேள்வி: அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் விருந்துகள் பற்றி உங்கள் கருத்து என்ன? நஸ்ருத்தீன். பதில்: அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி! இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி! கருணாநிதி போன்றவர்கள் பங்கேற்கும் இப்தார் நிகழ்ச்சி என்பது முதல் வகையில் சேரும். பள்ளிவாசலிலோ, அல்லது திருமணக் கூடங்களிலோ நோன்பு துறக்க முஸ்லிம் தலைவர்கள் ஏற்பாடு செய்து கருணாநிதி வகையறாக்களை நோன்பு […]

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 17:1)➚ ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். ஒரேயொரு […]

கிலாபத் எப்போது வரும்?

கேள்வி:கிலாபத் எப்போது வரும்?-முஹம்மது மர்சூக் ஒருவருக்குப் பின் அவரது இடத்துக்கு மற்றவர் வருதல் என்பது கிலாஃபத் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும். இச்சொல்லில் இருந்து தான் கலீஃபா என்ற சொல் பிறக்கிறது. அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட போது மன்னர், அதிபர், ராஜா போன்ற பெயரில் அவர்கள் அழைக்கப்படவில்லை. கலீஃபத்து ரசூலில்லாஹ் – அதாவது நபிகள் நாயகத்தின் கலீஃபா எனும் பிரதிநிதி என்று தான் அழைக்கப்பட்டார்கள். அதாவது அல்லாஹ்வின் […]

ஹிஜ்ரி ஆண்டுக் கொண்டாட்டம் உண்டா?

கேள்வி:ஹிஜ்ரி ஆண்டுக் கொண்டாட்டம் உண்டா?-எம்.ஹாஜி முஹம்மது, நிரவி முஸ்லிம் வருடப் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடும் முறை நடைமுறையிலுள்ளது. ரசூல் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டதா? பதில்: இரு பெருநாட்கள் மட்டுமே! வேறு கொண்டாட்டமில்லை. இஸ்லாமியர்களின் வருடப் பிறப்பு நாள் என்பதும், ஹிஜ்ரி ஆண்டு என்பதும் என்பதும் இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி பரந்து விரிந்து விட்டதனால் […]

ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா?

ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா? கேள்வி: ஜிஹாத் என்ற உணர்வு மனிதனிடத்தில் (சிறிதளவு கூட) இல்லையென்றால் அவன் முஃமினாக இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அரசாங்கம் தான் போர் செய்ய வேண்டும் என்றால் மனிதனிடத்தில் எவ்வாறு அவ்வுணர்வு வர முடியும்? எஸ்.எம். ஷாஃபி, நாகூர் பதில்: இஸ்லாத்தில் எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் அது எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும். ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களை இதற்கு உதாரணமாகக் […]

காஷ்மீர் பிரச்சனை என்ன?

காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான் என்று பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டனர். கறுப்பு மை பூசப்பட்டனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்? இதற்கான விடை அறிய காஷ்மீர் வரலாறு […]

மதுபானம் அருந்தியவரின் தொழுகை ஏற்கப்படாதா?

கேள்வி:மதுபானம் அருந்தியவரின் தொழுகை ஏற்கப்படாதா?-நூர் பதில்:அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நஸாயி, முஸ்னத் அஹ்மத் மற்றும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. أخبرنا علي بن حجر قال أنبأنا عثمان بن حصن بن علاق دمشقي قال حدثنا عروة بن رويم أن بن الديلمي ركب يطلب عبد الله بن عمرو بن العاص قال بن الديلمي فدخلت عليه فقلت […]

போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?

கேள்வி:போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா? அப்துல் காதிர் பதில்:அனுமதி இல்லை. இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாக உள்ளதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 3670حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ وَائِلٍ الْحَضْرَمِيِّ […]

ஜும்ஆவின் முன் ஸுன்னத் உண்டா?

கேள்வி: ஜும்ஆவின் முன் ஸுன்னத் உண்டா? ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை உண்டு என நாம் எழுதியதை அனைவரும் அறிவீர்கள். இதில் உடன்பாடில்லாதவர்களில் இலங்கை நண்பர், மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரியும் ஒருவர். நாம் எழுதியதை மறுத்து நமக்கு ஒரு மடல் வரைந்திருந்தார். அந்த மடலை அல்ஜன்னத்தில் வெளியிடச் செய்து, அதற்கு நாம் அளிக்கும் விளக்கத்தை அறிந்து கொள்வதற்குக் கூட நண்பருக்குப் பொறுமையில்லை என்பதா? அல்லது இதற்கு வேறு நோக்கம் ஏதும் இருக்கும் என்பதா? நமக்குப் புரியவில்லை. […]

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா?

கேள்வி: பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா? பெண்கள் பொதுவாக எந்த அளவுக்கு ஆடை அணிய வேண்டும்? தொழுகையின் போது எந்த அளவுக்குத் தமது உடலை மறைக்க வேண்டும்? பதில்: முகத்தை மறைப்பது அவசியம் இல்லை. பெண்களின் ஆடை குறித்து அறிஞர்கள் மத்தியில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது தான் நமக்குத் தெளிவு ஏற்படுத்தும். • பெண்கள் தமது முகத்தையும் முன் கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் […]

ஹஜ்ஜின்போது மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்ய வேண்டுமா?

கேள்வி: ஹஜ்ஜின்போது மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்ய வேண்டுமா? பதில்: ஸியாரத் செய்ய வேண்டும். பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜின் ஒரு வணக்கம் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை. மதீனாவுக்குச் செல்வது […]

இறந்தவர் செவியுற முடியுமா?

கேள்வி: இறந்தவர் செவியுற முடியுமா? ‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52➚ வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும் போது, நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கும் போது, இறைவன் தான் நாடினால் தான் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்த வசனத்தை அருளினான். இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதை […]

« Previous Page