Author: Sumaya

காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா?

கேள்வி: கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று திர்மிதி, அஹ்மத், அபூதாவூதில் ஹதீஸ் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குலா பெற்று கணவனைப் பிரிந்த பெண்கள் நயவஞ்சகர்கள் ஆவர் என்ற ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் படி குலா பெறும் பெண்கள் தகுந்த காரணத்தோடு தான் […]

முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா?

கேள்வி: முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா? – ஜன்னத் பதில்: மூன்று தடவை தலாக் கூறும் வாய்ப்பு கணவன்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் மூன்று தலாக் கூறி முடித்தால் தான் அந்தப் பெண் மறுமணம் செய்ய முடியும் என்று மார்க்க அறிவில்லாத சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவ்றாகும். கணவனால் தலாக் விடப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் இத்தா இருக்க வேண்டும். இந்தக் காலம் முடிவடைவதற்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு உள்ளது. […]

தன்னைவிட குறைவான வயதுடையவரை ஒரு பெண் திருமணம் செய்யலாமா?

கேள்வி: எனக்கும், என் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மணமகன் என்னை விட ஒரு வயது இளையவர். இவரைத் திருமணம் செய்வது சரியா? இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் என்னைப் பெண் கேட்டார். அவரிடம் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்லி விட்டேன். (மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த) அவரை மறுத்ததால் நான் பாவத்திற்குள்ளாவேனா? எம். ராபியா பஸ்ரின். பதில்: திருமணம் செய்யும் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாகத் தான் இருக்க வேண்டும் […]

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

கேள்வி: ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? பதில்: ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்ல முடியும். நீ பிறந்த தேதியையும், உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்கிறேன் என்று […]

வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?

கேள்வி: தாடி சம்மந்தமான ஒரு ஹதீஸில் (அஹ்மத்: 21252) ➚ ரசூல் (ஸல்) அவர்கள் செருப்பு அணிந்தும், வேட்டி உடுத்தியும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறி உள்ளார்கள். எனவே இந்த செயல் சுன்னத் ஆகுமா? பதில்: நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இது தான்: حدثنا زيد بن يحيى حدثنا عبد الله بن العلاء بن زبر حدثني القاسم قال سمعت أبا أمامة يقول خرج رسول الله صلى الله […]

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை?

கேள்வி: தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும், உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா? – இம்ரான் ஹுஸைன் பதில்: தொப்பி அணிந்து தொழுவது உப்புள்ள உணவைச் சாப்பிடுவதைப் போன்றது. தொப்பி அணியாமல் தொழுவது உப்பில்லாத உணவை உண்பதைப் போன்றது என்று இமாம் மாலிக் கூறினார் என்று சொல்பவர்கள் அவர் எந்த நூலில் அவ்வாறு கூறியுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். […]

தாடி எடுக்க அனுமதி உண்டா?

கேள்வி: தாடி எடுக்க அனுமதி உண்டா? – நிஃமதுல்லாஹ் பதில்: ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ “ நபிகள் நாயகம் […]

ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா?

கேள்வி: ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா? – முஹம்மத் ஆஸாத் பதில்: சுன்னத் என்றால் நபிவழி என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் செய்த காரியங்களை நாம் கடைப்பிடிப்பது அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெற்றுத் தரும் வணக்கமாகும். மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக உருவாக்கவில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபியவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விசயங்களாகும். இதை வெளிப்படையாகப் பார்க்கும் போது நாம் நபிகள் நாயகம் (ஸல்) […]

அன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணியலாமா?

கேள்வி: பெண்கள் வெளியே செல்லும் போது மோதிரம், வளைய, கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து செல்லலாமா? ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா? பதில்: பெண்கள் தங்களது அலங்காரங்களை கணவன் மற்றும் மஹ்ரமான (மணமுடிக்கத் தகாத) உறவினர் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ […]

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா?

கேள்வி: முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா? பதில்: முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர். முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் […]

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன?

கேள்வி: ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? பதில்: பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். சிறு பாவங்களுக்குரிய பரிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற பிரச்சனையைச் சந்தித்த நபித்தோழருக்கு இவ்வாறே நபியவர்கள் வழிகாட்டினார்கள். حَدَّثَنَا […]

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா?

கேள்வி: மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா? – ரபிக் பதில்: கேள்வியே தவறாக உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் தான் விமர்சனமே செய்ய முடியும். உங்களின் கருத்தும், என் கருத்தும் ஒன்றுதான் என்றால் நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட்டோம். மாற்றுக் கருத்துடையவரை விமர்சிக்கக் கூடாது என்றால் அறவே விமர்சிக்கக் கூடாது என்பதுதான் பொருள். விமர்சனம் என்பது இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று கொள்கை ரீதியிலான விமர்சனம். மற்றொன்று தனி நபர் சம்பந்தப்பட்ட விமர்சனம். ஒருவர் கொண்டிருக்கிற கொள்கையை […]

முஸாஃபஹா, முஆனகா சட்டம் என்ன?

கேள்வி: முஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்? – ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை. பதில்: இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாஃபஹா என்று பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸாஃபஹா (கை குலுக்குதல்) வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. صحيح البخاري حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ المُصَافَحَةُ فِي […]

இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?

கேள்வி: மத்ஹபை ஆதரிக்கும் சகோதரர்கள் இரண்டு கைகளால் முஸாபஹா செய்கின்றார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் ஒரு கையால் முஸாபஹா செய்கின்றார்கள். இரண்டில் எது சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும். – எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு பதில்: இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாபஹா என்று பெயர். ஸாஃபஹ என்ற சொல்லில் இருந்து தான் முஸாஃபஹா என்ற சொல் பிறந்துள்ளது. இச்சொல்லுக்கு ஒரு […]

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி: இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா? – -ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி. வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்? பி. இதாயத்துல்லாஹ், மதுராவயல் பதில்: ஸபுர் என்றால் பொறுமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதற்காக ஒப்பாரி […]

முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா?

கேள்வி: ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவரை மற்ற மனிதர்கள் அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யலாமா? அல்லது முஸ்லிம்களின் தனி அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா? – உதயா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் தனியாகவும், இணைவைப்பாளர்கள் தனியாகவும் அடக்கம் செய்யப்பட்டு வந்தனர். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الْأَسْوَدِ بْنِ شَيْبَانَ […]

அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா?

கேள்வி: அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா? – நாஸ்லி பதில்: இது குறித்து இருவிதமான கருத்துக்கள் கொண்ட ஹதீஸ்கள் உள்ளதால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. حَدَّثَنَا عَيَّاشٌ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ […]

இஸ்லாத்தை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா?

கேள்வி: இஸ்லாத்தை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? – அ. ஸைஃபுல்லாஹ், புளியங்குடி பதில்: கிடைக்காது. நல்லறங்கள், தியாகங்கள் மூலம் சொர்க்கம் அடையலாம் என்பது பொதுவானதல்ல. நிபந்தனைக்கு உட்பட்டது. அல்லாஹவை நம்பி அல்லாஹ்வுக்கு எதையும் அல்லாஹ்வுக்கு இணையக்காமல் இருந்தால் மட்டுமே எந்த நல்லறத்துக்கும் மறுமையில் கூலி கிடைக்கும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் செய்யும் எந்த நல்லறத்துக்கும் அல்லாஹ் கூலி தர மாட்டான். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக […]

வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா?

கேள்வி: வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா? மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு – அந்தளவு இடம் – அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது என்று கூறினார்கள். – அப்துல்லாஹ் […]

சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா?

வழிகேடர்களுக்குப் பதில் சூனியத்தை உண்மையென்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சூனிய நம்பிக்கை பித்தலாட்டம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக நாம் எடுத்துக் காட்டிவருகிறோம். இந்தச் செய்தி முஸ்னத் அஹ்மத் எனும் ஹதீஸ் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்னத் அஹ்மத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி முஸ்னத் அஹ்மத் நூலில் இல்லையென்றும், அது பலவீனமான செய்தியென்றும் இரு வேறு விமர்சனங்களை சூனியக் கூட்டத்தினர் முன்வைத்து வருகிறார்கள். இந்தச் […]

தூதர் மற்றும் நபி இரண்டும் வேறுபட்டவையா?

கேள்வி: வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்கின்றேன் என்று இறைவன் கூறுகின்றான். இதை ஆதாரமாகக் கொண்டு வேதம் என்பது குர்ஆனைக் குறிக்கும் என்றும், ஞானம் என்பது நபிகள நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தைக் குறிக்கும் என்றும் வாதிடுகிறிர்கள். இரண்டும் வெவ்வேறு என்றால் முஹம்மது நபி அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார் என்ற வசனத்தின் படி (ரசூல்) தூதர் வேறு, நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா? – சாதிக், சென்னை. பதில்: திருக்குர்ஆனில் பல இடங்களில் வேதத்தையும் ஞானத்தையும் […]

அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா?

கேள்வி: 33:72➚ வசனத்திற்கு அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் ஜின்களுக்கும் பகுத்தறிவு உள்ளதாக குர்ஆன் வசனங்கள் மூலம் அறிகின்றோம். ஆனால் மேற்கண்ட வசனத்தில் மனிதன் மட்டும் அதைச் சுமந்து கொண்டான் என்று கூறப்படுகின்றது. ஜின்களைக் குறிப்பிடவில்லை. விளக்கம் தரவும். – ஹிஜாபுல்லாஹ், பல்லாவரம். பதில்: ! ஜின்கள் தனி இனமாக இருந்தாலும் பொதுவான விஷயங்களில் ஜின் இனத்தை, மனித இனத்தோடு இணைத்தே கூறப்படுவதை திருக்குர்ஆனில் காண முடிகின்றது. உதாரணமாக திருக்குர்ஆன் மனித […]

தடை செய்யப்பட்ட உயிர் எது?

கேள்வி: 25:68➚ வசனத்தில், அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி கொல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட உயிர் எது? விளக்கவும். – எஸ்.எம். இல்யாஸ்,. திருமங்கலக்குடி பதில்: ! கொலை செய்யக் கூடாது என்று குறிப்பிடும் இடங்களிலெல்லாம் பெரும்பாலும், இவ்வாறே கூறப்படுகின்றது. எனவே இது பொதுவாகக் கொலை செய்யக் கூடாது என்பதையே குறிக்கும். இதை ஏன் அல்லாஹ் இப்படிக் கூறவேண்டும்? கொலை செய்யக் கூடாது என்று மட்டும் கூறினால் போதாதா? என்ற […]

பெருநாள் தினத்தில் குளிப்பது

கேள்வி: பெருநாள் தினத்தில் குளிக்காமல் இருக்கலாமா? பதில்: பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை. இப்னுமாஜா, பஸ்ஸார் போன்ற நூல்களில் பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அவை பலவீனமானவையாக உள்ளன. “பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நான் காணவில்லை” என்று பஸ்ஸார் அவர்களே […]

கெட்டவர்களின் மரணச் செய்தி கேட்டால் இன்னா லில்லாஹ் கூறலாமா?

கேள்வி: கெட்டவர்களின் மரணச் செய்தி கேட்டால் இன்னா லில்லாஹ் கூறலாமா? முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா? பதில்: துன்பம் நேரும் போது அதனால் துவண்டு விடாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தூண்டுவதற்காக இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்பதைக் கூறி பொறுமையை மேற்கொள்ள வேண்டும். இதன் பொருள்: நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடம் செல்லக் கூடியவர்கள். ஒருவர் மரணித்து அதனால் நமக்குத் துன்பம் ஏற்படும் போது இவர் மட்டும் தான் […]

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

கேள்வி: உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா? பல வருடங்களுக்கான பிறையை முன்கூட்டியே கணித்து விடலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.முன்கூட்டியே தலைப்பிறையைத் தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும், அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள். நார்வே போன்ற நாட்டை உதாரணம் காட்டுகின்றனர். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக […]

ஏழாம் நாளில் குழந்தையின் முடியை மழிக்க வேண்டுமா?

கேள்வி: குழந்தை பிறந்து ஏழாம் நாள் தலை முடியை மழிக்க வேண்டும். ஆனால் குழந்தை தலை மிருதுவாக இருப்பதால் மழிக்க அச்சமாக உள்ளது. கத்தியால் மழிக்காமல், கத்தரிக் கோலா, அல்லது டிரிம்மர் மெசினால் குழந்தையின் தலை முடியை டிரிம் செய்யலாமா? – கொடிநகர் ஹனிஃப்- சவூதி. பதில்: குழந்தை பிறந்த ஏழாவது நாளில் குழந்தையின் தலை முடி மழிக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي […]

திருந்திய பெண்ணை நபி தண்டித்தது சரியா?

கேள்வி: விபச்சாரம் செய்தபின் அதை தவறு என்று உணர்ந்துவிட்ட பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் தண்டனை வழங்கினார்கள்? என்று இந்து நண்பர் கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது? பதில்: நீங்கள் குறிப்பிடும் சம்பவம் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. حَدَّثَنِي أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ أَبَا […]

பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா?

கேள்வி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா? – மசூது, கடையநல்லூர் பதில்: பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது மட்டுமே பாலியல் வன்முறையைக் குறைக்க உதவாது. கடும் தண்டனைகள் இருந்தாலும், மனிதனுக்கு காம வெறியை ஏற்படுத்தி, அறிவுக் கண்ணை மறைக்கும் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டால் மட்டுமே இந்தச் சட்டங்கள் பயன் தரும். 1.ஆபாசமான சினிமாக்கள், ஆபாசமான நாடகங்கள், சுவரொட்டிகள் போன்ற […]

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா?

கேள்வி: உளூவின்றி குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? பதில்: தொடலாம் உளூ இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனைத் தொடலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். (அல்குர்ஆன்: 56:79)➚ குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. […]

SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா?

கேள்வி: குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்.எம்.எஸ் இல் அனுப்பக்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஏனென்றால் படித்த பிறகு அதை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறது. குர்ஆன் ஆயத்துகளை ஒரு முஸ்லிம் தன் கரத்தினாலே அழிப்பான் என்று கியாமத்து நாளின் அடையாளமாகக் கூறப்பட்டுள்ளது. இது உன்மையா? உங்கள் ஜாமத்தும் மொபைல் மூலமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்.எம்.எஸ் இல் அனுப்பி வருகிறது. – சப்ரோஸ். பதில்: அனுப்பலாம். முஸ்லிம் தன் கரத்தாலே […]

காரணமில்லாமல் விருந்து கொடுக்கலாமா?

கேள்வி: கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட வளைகாப்பு என்ற பெயரில் விருந்து வைபவம் நடத்தலாமா? – நஸ்ரின் பானு. பதில்: கூடாது. வளைகாப்பு விருந்து பிறருக்கு விருந்தளிக்கும் செயலை இஸ்லாம் நன்மையான காரியமாக, அழகிய பண்பாடாக குறிப்பிடுகிறது. صحيح البخاري حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ […]

அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா?

கேள்வி: அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா? பதில்: அல்ஜன்னத் இதழில் ஜனவரி 1996ல் அளித்த பதில் உங்களுடைய இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும் என இஸ்லாம் கூறுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் அரபு நாடுகளில் ஏராளமானோர் அறுத்துப் பலியிடுவதால் வாங்குவோர் இன்றி மாமிசங்கள் புதைக்கப்படுகின்றன. இது வேஸ்ட் தானே! என்று என் தோழி ஒருத்தி கூறுகிறாள். இதற்கு என்ன பதில் கூறலாம். […]

நபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா?

கேள்வி: ஒரு தேவை நிறைவேறுவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு நபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா? அவ்வாறு செய்வதற்கு அனுமதி இருந்தால் நான்கு நான்கு ரக்அத்துகளாகத் தொழலாமா? – அப்துல் ஹமீத், பதில்: இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இதுவரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன் என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர். இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே […]

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

கேள்வி: ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருக்கும் என்றும், அதற்குக் கீழ் பலவீனமானவை என எழுதப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறார்களே இது சரியா? விளக்கம் தரவும்.– ஆர்.மிஹ்ராஜ் நிஷா. பதில்: இந்தக் கேள்வி இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானதாகும். நீங்கள் குறிப்பிடும் ஆறு நூல்களும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதங்கள் […]

ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா? அதா பின் ஸாயிப் பலவீனமானவரா?

கேள்வி: ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா? அதா பின் ஸாயிப் பலவீனமானவரா? பதில்: அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவர் என்பதில் ஐயமில்லை. அது போல் அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட ஹம்மாத் பின் ஸலமாவும் நம்பகமான அறிவிப்பாளராவார். ஆனால் அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று அல்பானி கூறி ஏராளமான ஹதீஸ்களை பலவீனப்படுத்தி உள்ளதால் இது குறித்து விரிவாக விளக்கும் அவசியம் ஏற்படுகிறது. அதா பின் ஸாயிப் இறுதிக்காலத்தில் […]

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்?

கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே? – ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை. பதில்: ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர், தான் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். […]

பெண் வீட்டு விருந்து கூடுமா?

கேள்வி: ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை ஒட்டி மன விருப்பத்துடன் விருந்தளித்தால் அது தவறா? – நூருத்தீன். பதில்: செய்யக்கூடாது. இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்து மட்டுமே மார்க்கத்தில் உள்ளதாகும். இதைத் தவிர வேறு விருந்தை திருமணத்தில் இஸ்லாம் காட்டித் தரவில்லை. ஆனால் இன்றைக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய வலீமாவைப் போன்று பெண் வீட்டு விருந்து திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இது இல்லாமல் […]

கடனை நிறைவேற்றிய பிறகுதான் சொத்தைப் பிரிக்க வேண்டுமா?

கேள்வி: கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டுமா? பதில்: ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. …..(இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. (அல்குர்ஆன்: 4:11)➚ உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால்பாகம் […]

முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?

கேள்வி: முஸ்லிமல்லாத பெண் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுடைய பெற்றோரின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையிலோ, அல்லது மற்ற அடிப்படையிலோ அந்தப் பெண்ணுக்கு ஆகுமானதா? – முஹம்மத் பதில்: விரும்பிக் கொடுத்தால் பெறலாம். தவிர சட்டப்படி உரிமை இல்லை. முஸ்லிமுடைய சொத்துக்கு முஸ்லிமல்லாதவரும் முஸ்லிமல்லாதவரின் சொத்துக்கு முஸ்லிமும் வாரிசாக ஆக முடியாது. தானாக விரும்பிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாமே தவிர சட்டப்படி உரிமை கோர முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது?

கேள்வி: 9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள், இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது? – அக்தர். பதில்: பாகப்பிரிவினை சம்மந்தமாக கேள்வி கேட்கும் போது சொத்துக்கு உரியவர் யார்? அவர் இறக்கும் போது யார் யார் உயிருடன் இருந்தனர் என்ற முழு விபரமும் சொல்ல வேண்டும். அதற்கேற்ப சட்டம் மாறுபடும். 9600 சதுர அடிக்கு சொந்தக்காரர் இறக்கும் போது அவருக்கு தாயோ, தந்தையோ, கணவனோ, மனைவியோ இல்லாமல் மூன்று […]

என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடுவது?

கேள்வி: என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி,எனது சகோதரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளோம். சொத்தை எவ்வாறு பங்கிடுவது? பதில்: இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவிக்கு நான்கில் ஒரு பாகமும் அதாவது கால் பாகம் கொடுக்க வேண்டும் என்று […]

தந்தையின் சொத்தை எவ்வாறு பிரிப்பது?

கேள்வி: என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். என் தந்தையின் தாயும் உள்ளார். முதல் மனைவிக்கு ஒரு ஆண் பிள்ளையும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கின்றது. இவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. என் தந்தையின் சொத்தை இவர்களுக்கு எவ்வாறு பங்கு வைப்பது? – சமீவுல்லாஹ். பதில்: இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். அவருக்கு (இறந்தவருக்கு)ச் […]

மனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு?

கேள்வி: ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள். இருவரும் திருமணம் ஆனவர்கள். பிள்ளைகளும் இருக்கின்றார்கள். 4 வருடங்களுக்கு முன் தம்பி இறந்துவிட்டார். தம்பி மனைவி மறுமணம் செய்ய கொளுந்தனார் தடுக்கின்றார். தம்பியின் சொத்துக்களை தம்பி மனைவியிடம் கொடுக்கவில்லை. தம்பியின் பிள்ளைகளுக்கு மட்டும் தருவதாகச் சொல்கின்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் என்ன தீர்வு? – சாகுல், பிரான்ஸ் பதில்: இறந்தவருக்கு மனைவி இருந்தால் இஸ்லாமிய வாரிசு உரிமைச் சட்டப்படி மனைவிக்கு பங்கு உண்டு. இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு […]

ஒருவர் தனது சொத்துக்களை அன்னியருக்கு கொடுத்து விட்டால் வாரிசுகள் வழக்கு போடலாமா?

கேள்வி: ஒருவர் தனது சொத்துக்களை அன்னியருக்கு கொடுத்து விட்டால் வாரிசுகள் வழக்கு போடலாமா?-அலீம்கான் ஒருவர் தான் சம்பாரித்த சொத்துக்களை மற்றவர்களுக்குக் கொடுக்கலாமா? பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் கொஞ்சம் கூட கொடுக்கவில்லை. எல்லா சொத்துக்களையும் மற்றவருக்குக் கொடுத்து விட்டார். அந்தச் சொத்தில் பிள்ளைகள் சொத்து உரிமை கேட்டு வழக்கு போடலாமா? பதில்: ஒருவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்துக்களை மற்றவருக்கு வழங்குவது இரு வகைகளில் உள்ளன. இந்த சொத்துக்கள் எனது மரணத்துக்குப் பின் இன்னாருக்குச் […]

வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது?

கேள்வி: வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது? எங்கள் குடும்பத்திற்கு பூர்வீக நிலம் எங்கள் தாத்தா சொத்து 42 சென்ட் உள்ளது. நான் ஒரு ஆண் மற்றும் எனக்கு மூன்று சகோதரிகள், எங்களுடைய அப்பா வபாத் ஆகி விட்டார்கள். அம்மா உள்ளார்கள். இந்தச் சொத்தை ஷரியத் படி எப்படி எத்தனை பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று விளக்கமாக அறியத்தரவும். சொத்தின் மதிப்பு சுமார் 60 இலட்சம் இருக்கும். நான் என் அப்பா இறந்த பிறகு […]

குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா?

கேள்வி: குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா? குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாது, சில கணக்குகள் ஃபிக்ஹைக் கொண்டு தான் பிரிக்க முடியும் என்று ஓர் ஆலிம் கூறுகின்றார். இது சரியா? பதில்: இதன் மூலம் அவர் என்ன கூற விரும்புகின்றார்? குர்ஆன் ஹதீஸை விட ஃபிக்ஹ் தான் உயர்ந்தது என்று கூறப் போகின்றாரா? அல்லது குர்ஆன் ஹதீஸில் இல்லாதது ஃபிக்ஹில் தான் உள்ளது என்று கூறுகின்றாரா? இந்த இரண்டில் […]

இசை கூடும் என்று சிலர் கூறுகிறார்களே?

கேள்வி: இசை கூடும் என்று சிலர் கூறுகிறார்களே? எகிப்தை மையமாகக் கொண்டு இயங்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தினர் இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்கிறர்களே? இது பற்றி விளக்குக? இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்? – ரிபாஸ், கத்தார் பதில்: கூடாது இஸ்லாம் இசையைத் தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலையும் நமது இணையதளத்தில் […]

விளையாட்டுக்கு அனுமதி உண்டா?

கேள்வி: விளையாட்டுக்கு அனுமதி உண்டா? – முஹம்மத் ரியாஸ் பதில்: விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதிக்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது. صحيح البخاري حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَجْرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنَ الخَيْلِ مِنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى […]

உயிருள்ள பொருட்களை வரையக்கூடாது எனும் பொழுது மரத்தை வரையலாமா?

கேள்வி:உயிருள்ள பொருட்களை வரையக்கூடாது எனும் பொழுது மரத்தை வரையலாமா? உயிருள்ள உருவங்களை வரையக் கூடாது என்றும், உயிரற்ற பொருட்களை வரையலாம் என்றும் கூறுகிறீர்கள். மரம் வரையலாம் எனும் போது மரமும் உயிருள்ளது தானே! – அபூநஸீரா, துபை பதில்: மரம் போன்றவை வரைவதற்குத் தடையில்லை. மரத்திற்கு உயிர் உள்ளது என்றாலும் ஹதீஸ்களில் உருவங்கள் என்று கூறப்படுவது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களைத் தான் குறிப்பிடுகின்றன. سنن النسائي أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي […]

Next Page » « Previous Page