Author: Trichy Farook

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா?

அஜினமோட்டோ பயன்படுத்தலாமா? கூடாது. அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் […]

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைக்கலாமா?

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைக்கலாமா? வைக்கலாம். சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல. ரிங் டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர் இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்று கூறுகின்றனர். குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் […]

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? வாழ்த்துவது போன்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது. மார்க்த்திற்கு உட்பட்டு இறைவனிடம் பிரார்திப்பது போன்ற வார்த்தைகளை கொண்டு சொல்லலாம். முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற சமுதாய மக்களுடன் வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனபைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் […]

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அங்கே செல்லலாமா?

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அங்கே செல்லலாமா? செல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். حدثنا مسعود بن جويرية قال حدثنا وكيع عن هشام عن قتادة عن سعيد بن المسيب عن علي قال صنعت طعاما فدعوت النبي صلى الله عليه وسلم فجاء فدخل فرأى سترا فيه تصاوير فخرج وقال إن الملائكة […]

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? தொழுகை போன்ற கடமையை செய்வதற்கு சம்பளம் கொடுக்கக்கூடாது. மற்ற வேலைகளுக்காக தரலாம். வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது […]

சோதனைக் குழாய் குழந்தை அனுமதி உள்ளதா?

சோதனைக் குழாய் குழந்தை அனுமதி உள்ளதா? கீழ் உள்ளதில் முதல் முறைக்கு மட்டும் அனுமதி உள்ளது, சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. 1-கணவனின் உயிரணுவை எடுத்து,மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும். 2-கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதனுடன் ஒரு பெண்ணின் கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும். 3- கணவன் அல்லாத […]

அக்டோபஸ் உண்ணலாமா?

அக்டோபஸ் உண்ணலாமா? கேடு விளைவிக்காத கடல்வாழ் உயிரினம் அனைத்தும் ஹலால். أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ(96)5 உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அல்குர்ஆன் (5 : 96) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “கடல் நீர் […]

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

செஸ் விளையாட்டு சூதாட்டமா? விளையாட்டில் பங்கு பெறாதவர் வெற்றி பெற்றவருக்கு பரிசளித்தால் தவறில்லை. விளையாடுபவர்களிடம் இருந்து வெற்றி பெற்றவருக்கு பணம் வந்தால் அது சூதாட்டம். சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் […]

நகப்பாலிஷ் இடலாமா?

நகப்பாலிஷ் இடலாமா? சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நகப் பாலிஷ் இடலாம். தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் நனைய வேண்டியது அவசியமாகும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் மேனி நனைய வேண்டும். நகப் பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல் பாலிஷ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும். […]

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா? அணியலாம். தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ […]

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்? இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை. அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவைகள் ஆண்களுக்குத் தடுக்கப்படவில்லை. தங்கம் இரும்பை விடக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டாலும் அப்போதும் அது ஆண்களுக்கு தடுக்கப்பட்டதாகவே இருக்கும். இது குறித்து முஸ்லிம் அறிஞர்கள் சிலர் ஆய்வு செய்து ஒரு உண்மையை வெளிப்படுத்தி உள்ளனர். தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை […]

குட்மார்னிங் சொல்வது குற்றமா? வணக்கம் ஆகுமா?

குட்மார்னிங் சொல்வது குற்றமா? வணக்கம் ஆகுமா? இதில் வணங்குதல் போன்ற அர்த்தம் இல்லை. இந்த வாழ்த்துக்களைத் தவிர்த்து சலாம் கூற இயலுமானால் சலாம் கூறிக் கொள்ள வேண்டும். குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட் (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகள் பிரார்த்தனை வடிவத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யும் தோரணையில் அமைந்துள்ள இவ்வார்த்தைகளில் பிறரை வழிபடும் இணை வைப்பு இல்லை. எனவே இவ்வார்த்தைகளை ஒருவர் கூறினால் பிறரை வழிபட்டவராக ஆக […]

ஜமாத் உறுப்பினர் படிவத்தில் கையொப்பம் வாங்குவது பைஅத் தானே?

ஜமாத் உறுப்பினர் படிவத்தில் கையொப்பம் வாங்குவது பைஅத் தானே? மார்க்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நபிகள் நாயகம் ஸல் தவிர வேறு யாரிடமும் பைஅத் செய்யக் கூடாது. இது அதுபோன்றது இல்லை. தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் மார்க்கம் தடை செய்த பாவமான காரியங்களைச் செய்ய மாட்டேன் என்றும் உறுதிமொழி அளிப்பதற்கு பைஅத் என்று சொல்லப்படுகின்றது. இந்த ஆன்மிக பைஅத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்றே நாம் […]

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது? தேவைப்படாத பிரதிகளை அழிப்பதற்கு நாம் விரும்பிய எந்த வழியை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும் சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் […]

சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா?

சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா? சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும் வானத்தில் அல்லாஹ் என்ற வார்த்தையின் வடிவில் மேகக் கூட்டம் திரண்டது எனவும் இன்னும் இது போன்று பல செய்திகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது. இணையதளத்தில் வெளியிடப்படும் இது போன்ற செய்திகள் நம்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு பேச்சுக்கு இவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் இவை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு […]

கழிவறைக்கு செல்போனை எடுத்துச் செல்லலாமா?

கழிவறைக்கு செல்போனை எடுத்துச் செல்லலாமா? செல்லலாம். இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல் போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட் குர் ஆன் அரபி மூலம் மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்தால் அது போல் […]

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா? அந்த நிலை இருந்தால் செய்யலாம். கர்ப்பமாவதால் உயிருக்கு ஆபத்து இருந்தால் கர்ப்பத்தடை ஆபரேசன் செய்யலாம். நிரந்தரமாக கற்பத் தடை செய்து கொள்வது மார்க்கம் தடை செய்த ஒன்றாகும். நிர்பந்தம் ஏற்படும் போது தடுக்கப்பட்ட விஷயங்கள் ஆகுமானதாகி விடும். இனி கரு உருவானால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் இது நிர்பந்தமான நிலை தான். நிர்பந்தமான நிலை ஏற்படும் போது மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் குறுக்கே நிற்காது. […]

வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா?

வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா? வேறு கிரகங்களில் உயிரினங்கள் உண்டு. பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிரிணங்கள் வாழ முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதே இதற்குக் காரணம். திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று […]

வருமான வரியில் இருந்து தப்பிக்க?

வருமான வரியில் இருந்து தப்பிக்க? நம்முடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நாட்டுக்கு வரி செலுத்த வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாம் விதித்த விதிமுறையல்ல. இந்த வரியைக் கொடுக்க வேண்டும் என்றோ கொடுக்கக் கூடாது என்றோ இஸ்லாம் கூறவில்லை. ஒருவர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைச் செலுத்தாவிட்டால் இதன் காரணத்தால் அவருடைய செல்வம் ஹராமான செல்வமாகி விடாது. ஆனால் உலக ரீதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவரே பொறுப்பாளியாவார். இதனால் அவருக்கு ஏற்படும் […]

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா? இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லத ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது. ஷேர் மார்க்கெட் என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழிலில் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார். ஒரு பங்கு என்பது 10 […]

நபிகள் நாயகம் பற்றி சினிமா எடுக்கலாமா?

நபிகள் நாயகம் பற்றி சினிமா எடுக்கலாமா? சரி வராது. திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர். ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல் சிலை இல்லாமல் நாடகம் சினிமா இல்லாமல் நபிகள் நாயகம் குறித்த செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்து கொண்டு தான் உள்ளது. தனது சமரசம் செய்து கொள்ளாத கொள்கை மூலம் […]

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா?

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா? கண் தானம் செய்யலாம். ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்: 5:32)➚ என்ற வசனத்தின் அடிப்படையில் கண் தானம் என்பது நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. உடல் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது […]

தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன?

தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன? தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன. ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி). (புகாரி: […]

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா?

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா? இல்லை. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் “ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது” என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு […]

பிள்ளைகளை திட்டாதீர்!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஏனடா இவ்வளவு சேட்டை செய்கின்றாய்? நீ நாசமாகப் போக மாட்டாயா? தொலைந்து போ, கொள்ளையில் போய் விடுவாய், வாந்தியில் போய் விடுவாய் – இப்படி படுபாதகமான இந்த நோய்களில் அழிந்து போக வேண்டும் என்று யாரைப் பார்த்து யார் சாபமிடுகின்றார்கள் தெரியுமா? பெற்ற தாய் தான் தனது பிள்ளைகள் மீது இந்த அனல் தெறிக்கும் வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சிக்கின்றாள். பிள்ளை இல்லை என்று ஏங்கி ஏங்கி கண்ணீர் சொரிகின்ற தாய்மார்கள் எத்தனை பேர்கள். […]

இசையில் மயங்கும் இளைய சமுதாயம்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர். இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். […]

செல்போனில் சீரழியும் பிள்ளைகள்

செல்போனில் சீரழியும் பிள்ளைகள் பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் […]

நோன்பின் சட்டங்கள்

அருள்மிகு ரமலான் பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி வந்துவிட்டது அருள் மிக்க ரமலான்! “ரம்மியமான ரமலான் வராதா? அல்லாஹ்வின் அருள் மிக்க பாக்கியம் கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பலர் “ஏன்டா ரமலான் வருகிறது?” என்று எண்ணிப் புலம்பித் தவிக்கின்றனர். காரணம் என்னவென்றால், தன் பிள்ளைக்கு இதுதான் தலை நோன்பு! எனவே புது மருமகனுக்குச் சீர் செய்ய வேண்டுமே! இதுவே பெரும்பான்மை யான, பெண்ணைப் பெற்ற முஸ்லிம்களின் நிலை. இது […]

3) ஓத வேண்டிய துஆக்கள்

ஓத வேண்டிய துஆக்கள் “நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 3275) ➚ மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும். “எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த […]

2) உளுச் செய்ய வேண்டும்

உளுச் செய்ய வேண்டும் படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். பராஃ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். (புகாரி: 247) ➚ இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. […]

வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்யலாமா?

வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்யலாமா? செய்யலாம். திருமணம் செய்யும் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாகத் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே வயதில் இளைய ஆணைத் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

1) முன்னுரை

தூங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை. முஸ்லிம்களாக இருந்தால் அந்தக் காரியத்தை இஸ்லாம் எவ்வாறு செய்யச் சொல்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. சிலருக்குத் தெரிந்தாலும் அதைச் சரியான முறையில் செய்வதில்லை. […]

சந்தோஷமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்லலாமா?

திக்ரு ஆக சொல்லும்போது சப்தமில்லாமலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சொல்லும்போது தேவைக்கேற்ப விரும்பியவாரும் சொல்லலாம். “என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று கூறினோம். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்கள். நாங்கள், […]

ஜும்ஆவின் சிறப்புகளை அறிவோம்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ – வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும். இன்று அரபகத்தைத் தவிர உலகத்தின் பல […]

சமைக்க தெரியாத மனைவியை அடிக்கலாமா?

சமைக்க தெரியாத மனைவியை அடிக்கலாமா? கூடாது. பொருளாதாரத்தைத் திரட்டும் வேலை செய்யும் கணவருக்கு நல்ல உணவை சமைத்து கொடுப்பது மனைவியின் கடமை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், நபி (ஸல்) அவர்கள் உட்பட நபித்தோழர்களுக்கு அவர்களின் மனைவியே சமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் விருந்தினருக்கு நல்ல உணவை அளித்தும் உள்ளார்கள். உணவு சரியாக சமைக்கத் தெரியாதவர்கள் பக்கத்துவீட்டு பெண்கள் மூலமாகக் கூட நல்ல உணவைச் சமைத்து தம் கணவருக்குக் கொடுத்துள்ளார்கள். என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் […]

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா? உதவ வேண்டும். வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணி துவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும். மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து […]

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இஸ்லாம் மிகவும் எளிமையான மார்க்கமாகும். அகில உலக அருள்பாலிப்பவன், படைப்பினங்களின் இரட்சகன் அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும். அது அல்குர்ஆனையும் அதன் விளக்கவுரையாக அமைந்த அல்லாஹ்வின் திருத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றையும் நெறிமுறையாகக் கொண்டு செயல்படுத்தும் மார்க்கமாகும். “நான் கடவுளை வழிபாடு செய்கிறேன்; ஆராதனை செய்கிறேன்” என்று ஒரு மனிதன் தன் விருப்பப்படி எதையும் செய்திட முடியாது. அதைப் போன்றே மார்க்கம் சொல்லும் காரியத்தையே ஒரு மனிதன் […]

என் கணவன், என் தாய் வீட்டில் தான் வாழ்கிறார்!

மனைவியின் புகார்: எனது கணவர், எங்களது திருமணத்திற்குப் பிறகு எனது தாய் வீட்டில் என்னுடன் வாழ்ந்து வருகிறார். பெண், கணவன் வீட்டில் போய் வாழ வேண்டுமா?அல்லது கணவன், மனைவியின் வீட்டில் போய் வாழ வேண்டுமா? மனைவி வீட்டில் கணவன் வாழக்கூடாது. சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன்: 4:34)➚ ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்றும், ஆண்களே பெண்களுக்காக பொருள் […]

மார்க்கத்தின் பார்வையில் மினா உயிர்ப் பலிகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனை நெருங்குவதற்காக இன்று பலர் பல வகையான வணக்கங்களைப் புரிந்து வருகிறார்கள். தங்களைத் தாமே வருத்திக் கொண்டு புரியும் வணக்கமே இறைவனுக்குப் பிடித்தமானது என்றும் அதன் மூலமே அவனது பொருத்தத்தைப் பெற முடியும் என்றும் நினைக்கிறார்கள். காலணிகள் இருக்கும் போது, “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” […]

மனைவியை தாய் என்று சொல்லலாமா?

மனைவியை தாய் என்று சொல்லலாமா? கோபத்தில் சொல்லக்கூடாது. உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 58:2)➚ இந்த வசனத்தில் “மனைவியை கோபத்தில் தாய் எனக் கூறுதல்’ என்ற சொற்றொடருக்கு அரபியில், “ளிஹார்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. “ளிஹார்’ என்பது அன்றைய அறியாமைக் கால […]

இஸ்லாத்தை அழிக்க இயலாது

இஸ்லாத்தை அழிக்க இயலாது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! இன்றைக்கு உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ஏராளமான சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். எனினும், அல்லாஹ் இஸ்லாம் எனும் இந்த ஜோதியை ஒருக்காலும் யாராலும் அழிக்க முடியாது என்று சூளுரைக்கிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான். அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் அது மறையுமிடங்களையும் கண்டேன். என்னிடம் சுருட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதிகளை எனது சமுதாயத்தின் […]

கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா?

கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா? சொல்ல வேண்டியதில்லை. தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்ற கருத்தில் சில ஹதீஸ் உள்ளது. أَنْبَأَنَا بِذَلِكَ بُنْدَارٌ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ أَنْبَأَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَمَّنْ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ […]

வஸீலா தேடுவோம்

இன்றைக்கு தேடப்படும் வஸீலா அன்பிற்குரிய சகோதர்களே, அல்லாஹ் தனது திருமறையில், يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ‏ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு “வஸீலா”வைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன்: 5:35)➚ மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் அவனை நோக்கி ஒரு “வஸீலா”வை தேடிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறான். ஆனால் இன்றைக்கு வஸீலா என்ற […]

கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கலாமா?

கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கலாமா? போதுமானதை நியாயமான முறையில் மனைவி மக்கள் எடுக்கலாம். ஒரு பொருளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது தான் திருட்டாகும். இதை யார் செய்தாலும் திருட்டு தான். எனினும் ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்திற்குத் தேவையான பொருளைத் தர மறுக்கும் போது, அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பாளரோ பணத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் குடும்பத் […]

பெற்றோருக்குப் பிடிக்காவிட்டால் மனைவியை தலாக் சொல்லலாமா?

பெற்றோருக்குப் பிடிக்காவிட்டால் மனைவியை தலாக் சொல்லலாமா? தகுந்த நியாயமான காரணத்துடன் சொன்னால் மட்டும் தலாக் செய்யலாம். கணவன் இடத்தில் நல்ல விதமாக நடக்கும் எந்த குறையும் சொல்ல முடியாத ஒரு மனைவியை கணவனின் தாய் தலாக் செய்துவிடு என்று சொன்னால் உடனே தலாக் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தேவை. நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும் இறை […]

மனைவியின் பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளலாமா?

மனைவியின் பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாது. மனைவியின் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாது என்று நபிமொழிகள் உள்ளதாக அறிகின்றோம். ஆனால்(அல்குர்ஆன்: 2:223)➚வசனமும்(புகாரி: 4528) ➚ஹதீசும் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளலாம் என்ற கருத்தில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றதே? எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு நீங்கள் சுட்டிக்காட்டும் புகாரியின் 4528வது ஹதீஸில் மலத் துவாரத்தில் உடலுறவு கொள்வது பற்றிப் பேசவில்லை. அதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் இந்தக் கேள்வி எழுகின்றது. ஒருவர் தம் மனைவியிடம் […]

கோடை வெயிலும் நரக வெயிலும்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் அவ்வப்போது 106, 107 டிகிரி […]

குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா?

குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? நிரந்தரமான குடும்பக் கட்டுப்பாடு செய்யக்கூடாது. கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டு விடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

1) முன்னுரை

கஅபா வரலாறும் சிறப்புகளும் அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. “கஅபா’ ஆலயத்திற்கும், […]

மனைவியின் விந்தைக் சுவைப்பது கூடுமா?

மனைவியின் விந்தைக் சுவைப்பது கூடுமா? கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாறத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் […]

Next Page » « Previous Page