அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட எந்த முஸ்லிமும் தயாராக இல்லை. பாவம் செய்யும் பாவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. […]