Tamil Bayan Points

லைலத்துல் கத்ருக்கு நிகரான வணக்கம்?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on December 6, 2020 by

லைலத்துல் கத்ருக்கு நிகரான வணக்கம்?

سنن الترمذى – مكنز – (3 / 291)

763 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْبَصْرِىُّ حَدَّثَنَا مَسْعُودُ بْنُ وَاصِلٍ عَنْ نَهَّاسِ بْنِ قَهْمٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِى الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مَسْعُودِ بْنِ وَاصِلٍ عَنِ النَّهَّاسِ. قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعْرِفْهُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ مِثْلَ هَذَا. وَقَالَ قَدْ رُوِىَ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مُرْسَلاً شَىْءٌ مِنْ هَذَا. وَقَدْ تَكَلَّمَ يَحْيَى بْنُ سَعِيدٍ فِى نَهَّاسِ بْنِ قَهْمٍ مِنْ قِبَلِ حِفْظِهِ.

துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் மற்ற நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளைவிட அல்லாஹ் வுக்கு மிகவும் விருப்பமானவை ஆகும். அவற்றில் நோற்கப்படும் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஓராண்டு நோன்புக்கு நிகரானதாகும். அவற்றில் ஒவ்வோர் இரவில் நின்று தொழுவதும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று தொழுவதற்கு நிகரானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதீ (689), இப்னுமாஜா (1718) ஷுஅபுல் ஈமான், பாகம்: 5, பக்கம்: 311.

‘‘நான், இமாம் புகாரி அவர்களிடம் இந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், இந்த ஹதீஸில் உள்ளதைப் போன்று இந்த அறிவிப்பாளர் தொடரில் தவிர வேறு அறிவிப்பாளர் தொடரில் வந்திருப்பதாக எமக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள்’’ என்று திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்.

யாரும் சொல்லாத புதிய கருத்தாக இந்தச் செய்தி அமைந்துள்ளது என்பது புகாரி அவர்களின் ஆட்சேபணையாகும்.

(இதன்  நான்காவது அறிவிப்பாளர்) நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பாரின் நினைவாற்றல் குறித்து யஹ்யா பின் சயீத் அல்கத்தான் அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இதையும் இமாம் திர்மிதீ இந்தச் செய்தியின் கீழே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் பல அறிஞர்கள் நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال أحمد كان قاضيا وكان يحيى بن سعيد يضعف حديثه

இவருடைய செய்திகள் பலவீனமானது என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال الدوري عن ابن معين كان ابن عدي يقول لا يساوي شيئا

இவருடைய செய்திகள் எந்த மதிப்பும் இல்லாதது என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

قال ابن معين وليس هو بشئ كذا قال أبو حاتم

இப்னு மயீன், அபூஹாத்திம் ஆகியோர் இவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று குறிப்பிட்டுளார்கள்.

وقال عثمان الدارمي وغير واحد عن ابن معين ضعيف.

உஸ்மான் தாரிமி உட்பட பலர் இவரை பலவீனமானவர் என்று இப்னுமயீன் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال النسائي ضعيف

நஸாயீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال ابن حبان كان يروي المناكير عن المشاهير ويخالف الثقات لا يجوز الاحتجاج به

பிரபலமானவர்கள் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர். நம்பகமானவர்களின் செய்திகளுக்கு மாற்றமாக அறிவிப்பவர். எனவே இவரின் செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இப்னுஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال الدارقطني مضطرب الحديث تركه يحيى القطان.

இவர் ஹதீஸ்களை குளறுபடியாக அறிவிப்பவர். இவரை யஹ்யா அல்கத்தான் அவர்கள் (ஆதாரத்திற்குரியவராக எடுக்காமல்) விட்டுள்ளார்கள் என்று தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

وقال العقيلي قال يحيى بن سعيد القطان لست اخذت عنه بشئ.

இவரிடமிருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்று உகைலீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,

பாகம்: 10, பக்கம்: 426,427

மேலும் இந்தச் செய்தி மஸ்வூத் பின் வாஸில் என்பவர் வழியாக மட்டும்தான் வந்துள்ளது என்றும் திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த மஸ்வூத் பின் வாஸில் என்பவர் வலிமையானவர் இல்லை என்று அபூதாவுத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

تهذيب التهذيب ـ محقق – (10 / 108(

قال الآجري عن أبي داود ليس بذاك

இவர் நம்பகமானவர் இல்லை என்று அபூதாவுத் அவர்கள் குறிப்பிட்டதாக ஆஜிரீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

பாகம்: 10, பக்கம்: 108.

تهذيب التهذيب ـ محقق – (10 / 108(

وقرأت بخط الذهبي ضعفه أبو داود الطيالسي ثم وجدت ذلك في الضعفاء لابن الجوزي.

அபூதாவுத் தயாலிஸி இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்னுல் ஜவ்ஸி அவர்களும் லுஅஃபா (என்ற நூலில் பலவீனமானவர் பட்டியிலில்) இணைத்திருந்தைப் பார்த்துள்ளேன்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,

பாகம்: 10, பக்கம்: 108.

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல.

மேலும் இது போன்று சிறப்புகள் உள்ளதாக வேறு சில செய்திகளும் உள்ளன. அதன் தரத்தைப் பார்ப்போம்.

تذكرة الموضوعات – الفتني – (1 / 119)

عائشة “ صيام أول يوم من العشر يعدل مائة سنة واليوم الثاني يعدل مائتي سنة فإذا كان يوم التروية يعدل ألف عام وصيام يوم عرفة يعدل ألفي عام “ فيه محمد بن المحرم كذاب.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் முதல் நாள் நோன்பு நோற்பது நூறு வருடங்கள் நோன்பு நோற்பதற்கு சமமாகும். இரண்டாம் நாள் நோன்பு நோற்பது இருநூறு வருடங்கள் நோன்பு நோற்பதற்குச் சமமாகும். தர்விய்யா (துல்ஹஜ் எட்டாம்) நாள் நோன்பு நோற்பது ஆயிரம் வருடங்கள் நோன்பு நோற்பதற்குச் சமமாகும். அரஃபா நாளன்று நோன்பு நோற்பது இரண்டாயிரம் வருடம் நோன்பு நோற்பதற்குச் சமமாகும்.

நூல்: தத்கிரத்துல் மவ்லூஆத்,

பாகம்: 1, பக்கம் : 119.

இச்செய்தியில் இடம்பெறும் முஹம்மத் பின் முஹர்ரம் என்பவர் பொய்யராவார் என்று இந்த செய்தியைப் பதிவு செய்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானது அல்ல. எனினும் இந்தச் செய்தியில் குறிப்பிடும் அளவுக்கு சிறப்புகள் இல்லாவிட்டாலும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்கு சில சிறப்புகள் உள்ளதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் எந்த நற்செயலும் இந்த (அய்யாமுத் தஷ்ரீக்) நாட்களில் செய்யும் எந்த நற்செயலையும் விடச் சிறந்ததல்ல’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறப்போர் (ஜிஹாத்) கூட (சிறந்தது) இல்லையா? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அறப்போர் கூட(ச் சிறந்தது) இல்லைதான். ஆனால், தம் உடலையும் தமது பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணிக்கப் புறப்பட்டுச் சென்று எதுவுமில்லாமல் திரும்பி வந்த மனிதரைத் தவிர’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்கள்: புகாரி (969), திர்மிதீ (688), அபூதாவுத் (2082), இப்னுமாஜா (1717), அஹ்மத் (1867)

இந்தச் செய்தி ஆதாரப்பூரமானதாகும்.