Tamil Bayan Points

மாதவிடாய் காலத்தில் மாதரை வதைக்கும் மதங்கள்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on December 21, 2020 by

மாதவிடாய் காலத்தில் மாதரை வதைக்கும் மதங்கள்

பொதுவாக யூத, இந்து மதங்களுக்கு மத்தியில் பல ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

  1. உயர் ஜாதி

உலகத்தில் யூதர்கள் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நம்பக் கூடியவர்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள். அது போல் தான் (உயர் ஜாதி) இந்துக்கள்,

  1. யூதர்கள் காளை மாட்டைக் கடவுளாக வணங்குபவர்கள். இந்துக்கள் பசுவைக் கடவுளாக வழிபடக்கூடியவர்கள்.
  2. மாதவிடாயின் போது யூதர்கள் பெண்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அது போன்று தான் இந்து மதத்தினரும் பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இங்கே இந்து மதம் என்று நாம் குறிப்பிடுவது ஆரிய இந்து மதமாகும்.

இப்படி சில ஒற்றுமைகளை நாம் யூத, இந்து மதங்களுக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கின்றோம். இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக இந்த மூன்றாவது ஒற்றுமையைப் பார்ப்போம்.

எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் மாதவிடாய் பற்றி கூறுகின்றான்.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்:2:222.)

இந்த வசனம் இறங்கியதற்குரிய காரணத்தை முஸ்லிமில் இடம் பெறுகின்ற பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ‘‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!… என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, ‘நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்’ என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர்.

நூல்: முஸ்லிம்-455

இந்த ஹதீஸ் யூத மதம் எப்படிப் பெண்களை மாதவிடாயின் போது தனிமைப்படுத்தி, கொடுமைப் படுத்துகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. இதே கொடுமையைத் தான் இந்து மதம் செய்கின்றது. இதற்கு எடுத்துக் காட்டு நேபாளம். உலகில் ஓரே தனி இந்து மத நாடு என்று சொல்லப்படுகின்ற நாடாகும். அந்த நாட்டின் மேற்கு மாநிலங்களில் இன்றளவும் நவீனம் நுழையவில்லை. இந்தப் பகுதிகளுக்குள் வாகனங்கள் சுலபமாகச் செல்ல முடியாது. இங்குள்ள மக்கள் கல்வியறிவும் இல்லாதவர்கள். வடமேற்கு மாநிலங்களில் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

சாபக்கேடான சாவ்பாடி குடிசை

இப்பகுதியில் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் இந்து மதத்தின் பெயரால் சொல்ல முடியாத சோதனைகளை அனுபவிக்கின்றனர். மாதவிடாய்க் காலத்தில் இவர்களுக்கு வெறும் சுடுநீரில் கரைத்த மாவும், சிறிதளவு வெல்லமும் தான் உணவு! இவர்கள் எதையும் தொட்டுவிடக் கூடாது, அப்படித் தொட்டால் அது தீட்டாகிவிடுமாம்.

ஆகையால் மாதவிடாய் வந்தவர்களை ஊரைவிட்டுத் தள்ளி, எந்த ஒரு பாதுகாப்புமே இல்லாத ஒரு மிகவும் சிறிய குடிசையில் தங்க வைக்கின்றனர். இந்த குடிசைக்கு “சாவ்பாடி” என்று பெயர்.

மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய்க் குடிசையில் தான் அவர்கள் தங்க வேண்டும். இந்தக் குடிசைக்குள் நுழைந்து காயம் படாமல் வருவது மிக மிக அரிது; கூனிக் குறுகி தான் அமரமுடியும். இதில் கொடுமை என்னவென்றால், சில நேரங்களில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இங்கே தங்கவேண்டியிருக்கும். ஏனென்றால் பலருக்கு இந்த மாதவிடாய்க் குடிசை கட்டும் அளவுக்கு வசதியில்லை. கடுங்குளிர், கும்மிருட்டு, காற்றோட்டமின்மை இன்னும் சொல்லி முடியாத எத்தனையோ துன்பங்கள். மாதவிடாய்க் காலத்தில் வரும் மன அழுத்தம், சோர்வு, உடல்வலி இதையெல்லாம் உணர்வதற்குக் கூட இவர்களுக்கு வழியில்லை.

மாதவிடாயின் போது இரத்தப் போக்கு கடவுளுக்கு எதிரானது; ஆகவே இவர்களை ஊரில் வைத்திருப்பது பேரழிவைத் தந்துவிடுகிறதாம். ஆகவே கடவுளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடுகின்றனர்.

பெரும்பாலான பெண்கள் இந்த மூடப்பழக்க வழக்கத்தை விரும்பவில்லை என்றாலும் இது மதம் சம்பந்தப்பட்ட ஒரு வகையான புனிதம் என்ற நம்பிக்கையால், இதை மீறும் பட்சத்தில் குடும்ப உறுப்பினருக்கோ, உடைமைகளுக்கோ, ஊருக்கோ, ஏன் நாட்டுக்கே கூட இழப்புக்கள் கடுமையாக இருக்கும் என்ற பயம் காரணமாகவும் எந்தப் பெண்களும் இதை எதிர்ப்பதில்லை.

மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராயாமல் அது கடவுள் விடுக்கும் எச்சரிக்கை என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி அதையே காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது இந்து மதம்.

சாவ்பாடியை ஒழிக்க அரசின் சிறப்பு சட்டம்

இந்த சாவ்பாடி குடிசைகளில் கடுங்குளிரினாலோ அல்லது பாம்புகடித்தோ, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியோ தொடர்ந்து பெண்கள் மரணமடைந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவிடாய்க் குடிசை தீப்பிடித்து எரிந்ததில் 3 பெண்கள் மரணமடைந்தனர்.

நேபாள அரசாங்கம் 2006ஆம் ஆண்டு சாவ்பாடியை ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றியது. இருப்பினும் நேபாளத்தில் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன. சில இடங்களில் மாதவிடாய்க் குடிசை இடித்து நொறுக்கப்பட்ட பிறகும் தொடர்கிறது.

மூத்திரத்தைத் தெளிக்கும் மூடப் பழக்கம்

மாதவிடாய் முடிந்த பிறகு அவருடைய உறவினரோ அல்லது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவரோ பசுவின் மூத்திரத்தை மாதவிடாய் நின்ற பெண்களின் கைகளில் ஊற்ற, பெண்ணும் அதைப் பருகிவிட்டு தலையில் தெளித்துக் கொள்கிறார். பிறகு அந்தச் சிறுமி அவள் வீட்டையும், அவர்கள் பயன்படுத்தித் துவைத்து வைத்திருக்கும் துணிகளின் மீதும் மூத்திரத்தைத் தெளித்து தூய்மைப்படுத்துவார்கள்.

இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்களைக் காப்பாற்ற நேபாள அரசு கடுமையான சட்டமொன்றை இயற்றியுள்ளது.

இது நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மாதவிலக்குப் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலோ, அவர்களை சாவ்பாடி குடிசைக்குச் செல்லுமாறு வற்புறுத்தினாலோ அவர்களுக்கு 3 மாதம் சிறைதண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

ஏற்கெனவே சில கடுமையான சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டதன் விளைவுதான் கடந்த ஆண்டு இந்த குடிசை எரிந்து 3 பெண்கள் மரணமடைந்தனர்.

நேபாளத்தைப் பொறுத்தவரை உலகிலேயே ஒரே ஒரு இந்துமத அரசு அங்குதான் கோலோச்சியது.

அரசும் இந்து மதம் என்று ஆன நிலையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கேட்கவும் வேண்டுமா?

மாதவிடாயும் தடைகளும்

மாதவிடாய் என்பது மாதா மாதம் பெண்களுக்கு ஏற்படுகின்ற ஓர் உடல் ரீதியிலான தொல்லை. அதனால் அந்தக் காலக்கட்டத்தில் உடலுறவை மட்டும் இஸ்லாம் தவிர்க்கச் சொல்கின்றது. அத்துடன் வேறு எந்தத் தீண்டாமையையும் கடைப்பிடிப்பதை அனுமதிக்கவில்லை.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் புனித ஹஜ்ஜுக்குச் சென்ற சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) யிடம் ஹஜ்ஜின் வணக்கங்கள் அனைத்தையும் செய்யச் சொல்கின்றார்கள். அதே சமயம் புனிதப் பள்ளியான கஃபா எனும் இறை ஆலயத்தில் வலம் வர வேண்டாம், அதாவது தவாஃப் என்ற அந்த வணக்கத்தைச் செய்ய வேண்டாம் என்று மட்டும் தடுக்கின்றார்கள். (புகாரி  294)

பெண்கள் இது போன்ற காலக்கட்டத்தில் மக்காவில் உள்ள பள்ளிக்கு வருவது மட்டுமல்ல! உலகில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வருவது தடையாகும். இந்தத் தடை பெண்களுக்கு மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் இந்திரியம் வெளியானால் பள்ளிக்கு வருவதற்குத் தடையாகும்.

பெண்கள் மாதவிடாய் முடிந்ததும் குளித்து விட்டால் அந்தத் தடை நீங்கி விடும். அது போல் ஆண்கள் குளித்து விட்டால் அந்தத் தடை நீங்கி விடும். இதைத் தவிர்த்து அவர்களுக்கு எதிராக எந்தத் தடையும் கிடையாது என்பதற்கு இந்த ஹதீஸ் சரியான சான்றாகும். தவாஃப், தொழுகை,  நோன்பு ஆகிய வணக்கங்கள் மாதவிடாய் காலத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. குளித்து விட்டால் அந்தத் தடையும் நீங்கி விடுகின்றது.

இது போன்ற தடைகளைத் தவிர்த்து வேறு எந்தத் தடையும் கிடையாது. இன்று தமிழகத்தில் மாதவிடாய் தொடர்பாக பழக்கத்தில் உள்ள மாதவிலக்கு, தீட்டு என்று வார்த்தைகளே தீண்டாமையை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மாதவிடாய் தொடர்பான தீண்டாமையை உடைத்தெறிகின்றது.

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.
இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

தீவிரவாதம் என்ற பொய் பிரச்சாரத்துக்குப் பின்னர் தான், இஸ்லாத்தின் பால் உலகம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் முஸ்லிகளால் நடத்தப்படவில்லை, அது யூதர்களால் நடத்தப்பட்டது, எனினும் முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் செய்யபட்டது, ஆனால் அதற்கு பிறகு தான், அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகமாகி உள்ளது.

அதே போன்று தான், இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.