மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம் 3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். 4. நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இவ்வசனங்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகத்தை நேர்வழியில் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் வஹீயின் அடிப்படையில் செயல்படுவதுதான் என்பதை பின்வரும் வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான். வஹீ மட்டும்தான் நேர்வழி! உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக ! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். (அல்குர்ஆன்: […]