17) கொண்டை சடை போடுதல்

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

தலைமுடியை சடை பிண்ணுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.

حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّهُنَّ جَعَلْنَ رَأْسَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَلاَثَةَ قُرُونٍ نَقَضْنَهُ، ثُمَّ غَسَلْنَهُ، ثُمَّ جَعَلْنَهُ ثَلاَثَةَ قُرُونٍ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் இறந்த போது அவருக்கு மூன்று சடைகள் போட்டோம் என்று உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கிறார்.

(புகாரி: 1260)

عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ قَالَ: لَا. إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ.

கடமையான குளிப்பின் போது எனது சடைகளை அவிழ்க்க வேண்டுமா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். வேண்டியதில்லை; உன் தலை மீது மூன்று தடவை ஊற்றிக் கொள்வது உனக்குப் போதும். பின்னர் உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள். நீ தூய்மையவாய் என்று அவர்கள் கூறினார்கள் என நபிகளின் மனைவி உம்மு சலமா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி நபிகள் முன்னிலையில் சடை போட்டு இருந்துள்ளதால் சடை போடுவது அனுமதிக்கப்பட்டது தான்.

கொண்டை போட்டுக் கொள்வதில் ஒரு வகையான கொண்டைக்கு மட்டுமே தடை உள்ளது.

صحيح مسلم – عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிக்கும் கூட்டத்தினர் ஆவார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) ஆடை அணிந்தும் நிர்வாணமாக (பிற ஆண்களை) ஈர்த்து (பிறரால் ஈர்க்கப்பட்டும் நடக்கும் பெண்களாவர். அவர்களின் தலைகள் ஒட்டகங்களின் திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

திமில்கள் செங்குத்தாக வானை நோக்கி இருக்கும். அது போல் செங்குத்தாகக் கொண்டை போடுவதைத் தான் இது குறிக்கிறது. மற்ற வகையான கொண்டை போடுவதற்கு எந்த தடையும் இல்லை.