Tamil Bayan Points

Category: குடும்பவியல்

b108

பெண்ணுரிமை பேணிய புனித வேதம்

பெண்ணுரிமை பேணிய புனித வேதம் இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர உலகிலுள்ள ஏனைய எல்லா மதங்களும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றன. பெண் என்றால் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதும், அவனுடைய இச்சையைத் தீர்த்து வைப்பதும், அவனுக்காகக் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் தான் அவளது வேலை என்று பெண்களை அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர். பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை. சம்பாதிக்கும் உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. பிடிக்காத கணவனை […]

தீண்குலப் பெண்களின் பண்புகள்-2

தீண்குலப் பெண்களின் பண்புகள்-2 திருமணத்திற்கு பின்:- நபியவர்கள் திருமணம் என்பது எனது வழிமுறை என்று கூறியுள்ளார்கள், பெண்களாகிய நாம் பலவருடங்கள் நம்முடைய பெற்றோர் உறவினர்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்திருப்போம், இடையில் ஒரு புதிய சொந்தத்தை அல்லாஹ் நம்மோடு இணைத்து வைக்கிறான். அது தான் கணவன் என்கிற உறவு, பல வருடம் நாம் நமது பெற்றோர்களோடு இருந்து வந்தோம் அதனால் அவர்கள் மீது நமக்கு அன்பு வந்தது, ஆனால் இடையில் நம்மோடு இணையும் உறவு அவர்கள் மீது அளவுகடந்த […]

தீண்குலப் பெண்களின் பண்புகள்-1

தீண்குலப் பெண்களின் பண்புகள் முன்னுரை:- இவ்வுலகத்தை படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமின் அதில் மனிதர்களை வாழ்வதற்கு படைத்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை முஹம்மது (ஸல்)  அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரத்தின் மூலமாக விளக்கியுள்ளான். நாம் வாழுகின்ற இவ்வுலகம் மிகவும் கவர்ச்சியாகவும்,உள்ளத்தை ஈர்க்கும் விதமாக இருந்தாலும், இவ்வுலக வாழ்க்கை நிரந்தமற்றது என்கிற ஒன்றை மட்டும் நாம் எப்போதும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ […]

மங்கையர் நலன் நாடும் மாமறை

மங்கையர் நலன் நாடும் மாமறை சமூகம் எனும் கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமெனில் அதன் அடித்தளமாகத் திகழும் ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தோடு வாழ்வது அவசியம். ஆகவேதான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், ஒழுக்கமே உண்மையான சொத்து போன்ற சொற்கள் சமூக வழக்கில் உள்ளன. இந்த வகையில், பொதுநலன் பேணும் இஸ்லாமிய மார்க்கம் ஆண்களும் பெண்களும் சுய ஒழுக்கத்தோடு வாழுமாறு அதிகம் போதிக்கிறது. அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி இருப்பது போன்று, சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அவற்றில் ஆரம்பகட்ட […]

கதை வடிவில் மார்க்கம் அறிவோம்

கதை வடிவில் மார்க்கம் அறிவோம் “கண்டதைப் படி பண்டிதனாவாய்” என்பது பன்னெடுங்காலமாகத் தமிழில் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளில் ஒன்றாகும். மார்க்கத்துக்கு முரணில்லாத நல்லவற்றில் இதை வாசிப்பேன், அதை வாசிக்க மாட்டேன் என்று எந்த ஒதுக்குதலும் இல்லாமல் வாசிக்கின்றவன் நிச்சயம் கற்றுத்தேர்ந்த கல்விமானாக உருவாவான் என்பது நிதர்சனமான உண்மையும் கூட. ஆனால், இன்றைய தலைமுறையினரின் நவீன வாழ்க்கையில் புத்தக வாசிப்பு என்பது அரிதான ஒன்றாகிவிட்டது. தான் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை ஒருவன் வாசிக்கின்ற போது கூட […]

அனுமதிக்கப்பட்ட பொய்கள்

அனுமதிக்கப்பட்ட பொய்கள் நபியவர்கள் இரவுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் கண்விழித்தால் அவருடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது. எனவே இது போன்று பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பதும் கணவன் மனைவிக்குள்ள கடமை என்று விளங்குகிறது. வெறுமனே தாம்பத்யம் மட்டுமே இல்லறக் கடமை கிடையாது. மற்ற விஷயங்களிலும் மனைவிக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) […]

எது நாகரீகம்?

எது நாகரீகம்? அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலங்கள் மாற மாற அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் கண்டுகொண்டே இருக்கிறோம். நமது சிறு வயதில் கண்கவர் பொருளாக இருந்த மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி, மாட்டுவண்டி போன்றவை இன்று தடம் தெரியாமல் அழிந்து விட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற பொருட்கள் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. இவையெல்லாம் இன்றைய சமூகம் கண்ட வளர்ச்சி என்று […]

இல்லறம் இனிக்க

இல்லறம் இனிக்க ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றிய மனித சமுதாயம் இன்று கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு குடும்பத்தைச் சுற்றி வாழ்கிறான். ஒவ்வொரு மனிதனின் நிம்மதியையும், மன நெருக்கடியையும் தீர்மானிக்கும் விஷயங்களில் பெரும் பங்கு வகிக்கக் கூடியவையாக குடும்பங்களே இருக்கின்றன. நிம்மதிக்கான வழி பொருளாதாரத்தில் இருக்கிறது என்று கற்பனை செய்து கொண்டு ஓடுகிற சில மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் கிட்டுகிறது. ஆனால் நிம்மதியில்லை. எவ்வளவு கோடிகள் தன்னிடத்தில் அவர் வைத்திருந்தாலும் […]

மகப்பேறும் திருக்குர்ஆனும்

மகப்பேறும் திருக்குர்ஆனும் இன்றைய நவீன காலத்தில் கண்டறியப்பட்ட அனேக அறிவியல் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு, தீர்க்கதரிசனமாக திருக்குர்ஆன் உள்ளது. கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால், ஐந்து மருத்துவக் கருத்துகளை, மிகச் சாதாரணமாக, அப்படியே போகிற போக்கில் திருக்குர்ஆன் விளக்கியுள்ளது. அதுவும், மருத்துவ முன்னேற்றம் எதுவும் இல்லாத காலத்தில். மகப்பேறு மருத்துவர்கள் சென்ற பத்தாண்டு வரை கண்டு பிடிக்காத ஒரு விஷயத்தை, மிக அழகான சம்பவம் மூலம் விளக்குகிறது. மரியம் என்ற அத்தியாயத்தில் உள்ள வசனங்களைக் கவனியுங்கள். […]

பெண்களே! ஒழுக்கம் பேணுவோம்!

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதரிகளே!  இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. பெண்கள் பேண வேண்டிய பல்வேறு ஒழுக்கங்களை மார்க்கம் நமக்கு கற்றுத் தருகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் தற்போது காண்போம்! அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம் وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ… (سورة النور […]

அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுவோம்!

முன்னுரை இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். எனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். […]

காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறுவதில்லை

முன்னுரை ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். அல்குர்ஆன் 17:15 ஏக இறைவனாகிய அல்லாஹ் தன் அருள்மறையாம் திருமறையில், ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார் என்று குறிப்பிடுகிறான். ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது என அல்லாஹ் கூறுகின்றான். உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொரு வன் என்ற […]

தியாக நபியின் தியாகக் குடும்பம்

முன்னுரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!  சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! ஏகத்துவ தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் […]

ஒழுக்கங்களை பேணுவோம்

ஒழுக்கங்கள் அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம் وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ… (سورة النور : 31) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை […]

நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!

முன்னுரை பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  1359- حَدَّثَنَا عَبْدَانُ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ الزُّهْرِيِّ ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ […]

உறவு ஓர் அருட்கொடை

முன்னுரை எந்த ஒரு மனிதனும் உறவுகள் இல்லாமல் உறவுகளே வேண்டாம் என்று சொல்லி தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகள் பெரும் சுமையாக பலநேரங்களில் இருந்தாலும் உறவுகள்தான் மனிதனின் மிகப் பெரும் பலம். ஆபத்துகளில் கைகொடுக்கும், துயரங்களில் ஆறுதல் கூறும்,இன்ப துன்பங்களில் அக்கரையோடு பங்கெடுக்கும் ஒன்றுதான் உறவுகள். இன்றைக்கு உறவுகளின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் உணராமல் உறவுகளோடு சேர்ந்து வாழாமல் உறவுகளை முறித்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உறவுகள் என்றால் யார்? அவர்களால் என்ன பயன் என்பதை விளங்காமல் […]

நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – இஸ்லாமியத் தீர்வு

முன்னுரை இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை. இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள். நமது காலத்தில் பெரும்பாலும் […]

வீடு என்பது இறைவனின் அருட்கொடை!

முன்னுரை ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும். கொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது […]

ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும்

முன்னுரை மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லக்கூடிய இடங்கள் நாம் வேலை செய்யும் அலுவலகம், கடைவீதிகள், பேருந்து நிறுத்தங்கள், காய்கறிகடைள், ரயில் நிலையங்கள்,திருமண மண்டபங்கள்,இப்படி பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். இங்கே நம்மை போல் பலரும் வருவார்கள். இவ்வாறு கூட்டமாக சேருமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும். புறப்படும் போது முதலில் வீட்டை விட்டு வெளியே போகும் போதே அல்லாஹ்விடம் […]

சிறந்த தம்பதிகள்

முன்னுரை பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சினை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதற்கும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாகும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறன. […]

கற்பா? கல்லூரியா?

முன்னுரை பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். கல்வி சிறந்ததே அல்குர்ஆன் கல்வியின், அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது. وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ ”அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.” (35:28) […]

அருகி வரும் விருந்தோம்பல்

முன்னுரை விருந்தினரை உபசரிப்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு வணக்கமாகும். விருந்தோம்பல் ஈமானின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கூறுகிறது. 6018- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ أَبِي حَصِينٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ ، […]

யார் மணப்பெண் ?

முன்னுரை மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை. தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான். அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது. ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என […]

அண்டை வீட்டார்கள்

அண்டை வீட்டார்கள் மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறது. இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.திருக்குர்ஆன் நபிமொழிகளில் அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. […]

பெண்ணிற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம்

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இவ்வுலகில் எந்த மதமும் பெண்களுக்கு கொடுக்காத சிறப்பையும் கண்ணியத்தையும் இஸ்லாமிய மார்க்கம் கொடுத்துள்ளது. பெண்கள் இந்நாட்டின் கண்கள், என்றும் ஓர் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்றும் ஏட்டளவில் சொல்பவர்கள் இதைப்போன்றே அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்றும் பெண் புத்தி பின்புத்தி என்றும் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் இதுபோன்று பெண்களை மட்டம் தட்டாமல் பெண்களை மிகச் சிறந்தவர்களாக இஸ்லாம் மதித்து வைத்துள்ளதோடு அவர்களை அவ்வாறு […]

நாணம் இல்லாவிடில் நாசம் தான்

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் […]

வாழ்க்கையே வணக்கமாக….

துறவுடன் அறத்தைச் சேர்த்து, துறவறம் என்று கூறி, தமிழ் மொழியில் துறவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். உலகமெங்கும் உள்ள மதங்களில், மார்க்கங்களில் துறவுக்கு ஒரு மரியாதை இருப்பதால் தான் துறவறம் என்று கூறி தமிழ் மக்கள் அழகு பார்க்கின்றனர். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரை துறவுக்கு அரைக் காசுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல! அதற்கு அனுமதியும் கிடையாது. 5063- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، أَخْبَرَنَا حُمَيْدُ […]

மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும்

       மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும் திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் உள்ளதாகும். இன்று திருமணம் பற்றிப் பேசுவதற்குப் பல பேர் ஒன்று கூடிப் பேசுவது என்னவென்றால், மாப்பிள்ளைக்கு இரண்டு லட்சம் தொகை, நூறு பவுன் நகை, மாருதி கார் என்றெல்லாம் மாப்பிள்ளையின் பெற்றோர் கேட்பார்கள். மாப்பிள்ளை யின் சொந்த பந்தங்களுக்கெல்லாம் பெண் வீட்டார் விருந்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு. இப்போது வல்ல நாயனின் கிருபையால் ஏகத்துவக் […]

உறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்

உறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி, ஜகாத் வழங்கி, நோன்பு நோற்று, ஹஜ்ஜையும் முடித்து விட்டால் நாம் சுவனம் சென்று விடலாம் என்று மக்கள் பொதுவாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சுவனம் செல்வதற்கு மேற்கண்ட காரியங்கள், கடமைகள் மட்டுமல்லாமல் வேறு பல காரியங்களும் கடமைகளும் இருக்கின்றன. அவற்றை செய்யத் தவறி விட்டால் ஒருவர் சுவனம் செல்ல முடியாது என்பதை மக்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர். இப்படிப்பட்ட காரியங்கள் நிறைய உண்டு. அவற்றில் மிக […]

பெற்றோரை பேணாதாவர்களுக்கு எச்சரிக்கை!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! ஒரு மனிதன் இந்த உலகிற்கு வருவதற்கு காரணமாக இறைவன் ஆக்கிய உறவு பெற்றோர் என்ற மிக முக்கிய உறவு. இந்த பெற்றோர்களை தன்னைவிட மேலாக மதிக்க வேண்டிய மனிதன், அவர்களை இழிவாக பேசுவதும், மதிப்பதும், வீட்டை விட்டு துரத்துவதும் இஸ்லாமிய பார்வையில் […]

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. வெறும் வணக்க வழிபாடுகளோடு நிறுத்தி விடாமல், மனிதர்களிடம் பழகும் முறைகளையும் மார்க்கமாக ஆக்கியுள்ள இஸ்லாம், ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய அங்கமாக திகழும் தனது மனைவிடம் பழகும் முறைகளையும் தெள்ளத்தெளிவாக நமக்கு கற்றுத் தருகிறது. மனிதரில் சிறந்தவர் யார்? 1195 – حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ […]

கட்டுக்கதைகளை புறந்தள்ளுவோம்!

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள் அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! புனிதமிக்க ரமலான் பண்டிகை நம்மை விட்டு கடந்து விட்ட நிலையில் இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவூட்டும் பக்ரீத் பண்டிகை நம்மை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பே அது தொடர்பான விஷயங்களை வெள்ளி மேடைகளில் மக்களுக்கு விளக்கும் முறை நம்மிடையே காணப்படுகிறது. இது ஒரு நல்ல வழமை என்றாலும் இத்தருணங்களில் மார்க்கத்தில் இல்லாத கட்டுக்கதைகளும் […]

இப்ராஹீம் நபியின் துணைவியரின் உறுதி

இப்ராஹீம் நபியின் இரு துணைவியர் அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!  இப்ராஹீம் (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமயத்தில் பூமியில் முஸ்லிம்களே இல்லை. மக்களை நல்வழிப்படுத்த இப்ராஹீம் நபியவர்கள் பெரும் உழைப்புச் செய்தார்கள். அதன் பரிசாக அவரது மனைவி சாரா முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். பிறகு லூத் (அலை) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். சாரா (அலை) அவர்கள் இறையச்சம் நிறைந்த பெண். குழந்தையின்மை அவரது வயோதிகம் வரை தொடர்ந்தது. இப்ராஹீம் […]

பிள்ளைகளை திட்டாதீர்!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஏனடா இவ்வளவு சேட்டை செய்கின்றாய்? நீ நாசமாகப் போக மாட்டாயா? தொலைந்து போ, கொள்ளையில் போய் விடுவாய், வாந்தியில் போய் விடுவாய் – இப்படி படுபாதகமான இந்த நோய்களில் அழிந்து போக வேண்டும் என்று யாரைப் பார்த்து யார் சாபமிடுகின்றார்கள் தெரியுமா? பெற்ற தாய் தான் தனது பிள்ளைகள் மீது இந்த அனல் தெறிக்கும் வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சிக்கின்றாள். பிள்ளை இல்லை என்று ஏங்கி ஏங்கி கண்ணீர் சொரிகின்ற தாய்மார்கள் எத்தனை பேர்கள். […]

இசையில் மயங்கும் இளைய சமுதாயம்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர். இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். […]

குடியை கெடுக்கும் குடிப் பழக்கம்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையை படித்தவர்களும் படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று […]

செல்போனில் சீரழியும் பிள்ளைகள்

செல்போனில் சீரழியும் பிள்ளைகள் பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் […]

வரதட்சணையின் காரணம் என்ன?

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது. நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208) பெரும்பான்மையான […]

கொடிய வரதட்சணையின் கோர முகம்

கொடிய வரதட்சணையின் கோர முகம் 3009 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ حَاتِمٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِىُّ – عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَسَأَلَ عَنِ الْقَوْمِ حَتَّى انْتَهَى إِلَىَّ فَقُلْتُ أَنَا مُحَمَّدُ بْنُ عَلِىِّ بْنِ حُسَيْنٍ. فَأَهْوَى […]

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள் திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான். وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً  ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது […]

மனைவியின் கடமைகள்

மனைவியின் கடமைகள் குடும்ப வாழ்வில், ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை மட்டும் இஸ்லாம் கற்றுத் தரவில்லை. பெண்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குகின்றது. அவர்களும் தக்க முறையோடு நடந்திட வேண்டும் என்பதையும் மார்க்கம் கூறவே செய்கிறது. கட்டுப்பட்டு நடத்தல் தம்பதியர் கடமைகளில் மிகவும் முக்கியமானது, மார்க்கத்திற்கு முரணில்லாத முறையில் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும் இறைவன் இயற்கையிலேயே ஆண்களை வலிமை மிக்கவர்களாகப் படைத்துள்ளான். மேலும் ஆண்கள், பெண்களுக்கும் குடும்பத்திற்கும் செலவு செய்கிறார்கள் என்ற நிலையில் […]

பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சிவோம்!

நமது நாட்டில் ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்து, புகுந்த வீட்டிற்கு வருகிறாளென்றால் அந்தப் பெண் மட்டும் அவனுக்கு அடிமையல்ல! அந்தப் பெண்ணின் வீட்டார்கள் அத்தனை பேர்களும் கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் அடிமையாய் இருக்கிறார்கள். அவனுடைய வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்குமே அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்தவர்கள் போல் செயல் படவேண்டும் என்ற நிலை உள்ளது. ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்வதென்பது, ஒரு முள் மரத்தில் அழகான சேலையைப் போடுவதைப் போலத் தான். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, பெண் […]

வெளியே செல்லும் பெண்களுக்கு வேதம் சொல்லும் விதிகள்

வெளியே செல்லும் பெண்களுக்கு  வேதம் சொல்லும் விதிகள் وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ‏ உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு […]

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்  “என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது. அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிருந்து […]

கொஞ்சிப் பேசும் குடும்பப் பெண்கள்

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா? “பொம்பள சிரிச்சாப் போச்சு” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை. ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து […]

திருமண சபைகளில் நம் பெண்களின் நிலை

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் ஆஹா! இதோ பார்! சூப்பர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே?  தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி […]

கூட்டுக்குடும்பமா? கவனம் தேவை!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! கணவனும் மனைவியும் அவர்களது பிள்ளைகளும் மட்டுமே வாழும் குடும்பத்தில் அந்நிய ஆடவர்களுக்கு பெரும்பாலும் வேலையிருக்காது. ஆனால் நம் நாட்டில் அதிகமான மக்கள் பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். அது போன்ற குடும்பங்களில் பெண்களும், ஆண்களும் பேண வேண்டிய ஒழுங்குகளை நிறைய உள்ளன. குறிப்பாக அண்ணன் தம்பி திருமணம் ஆன பிறகும் இணைந்து வாழும் குடும்பங்களில் உள்ள நிலையை நாம் கண்டிப்பாக இஸ்லாமிய பார்வையில் சிந்தித்து நம்மிடையே உள்ள தவறுகளை களையவேண்டும். ஏனெனில், அண்ணன் மனைவியான […]

குழந்தைகளைக் கொஞ்சுவோம்

குழந்தைகளைக் கொஞ்சுவோம் இஸ்லாம் என்பது ஒரு அமைதி, அன்பு மார்க்கம். மனிதர்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டச்சொல்லும் அற்புத மார்க்கம். தாய், தந்தை, உறவினர் என அனைவரிடத்திலும் தோழமை பாராட்டச்சொல்லும் இந்த மார்க்கத்தில் பெற்ற குழந்தைகளிடத்தில் அன்பு காட்டுவதையும் அதிகம் அதிகம் வழியுறுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. […]

விருந்தில் சீரழியும் இஸ்லாமிய சமுதாயம்

விருந்தில் சீரழியும் சமுதாயம் நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர் அடக்கம் செய்யப்பட்டதும் விருந்து, மூன்றாம் நாள் பாத்திஹா விருந்து, ஏழாம் நாள் பாத்திஹா விருந்து, நாற்பதாம் நாள் பாத்திஹா விருந்து, ஹஜ்ஜுக்குச் செல்லும் விருந்து என விருந்து மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அம்மழையில் […]

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய கண்ணியம்

பெண்களை பற்றி உலகில் உள்ள பல்வேறு மதங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள் என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்து பார்த்தால், இஸ்லாம் தவிர உள்ள மற்ற கொள்கைகள் பெண்களை எவ்வளவு இழிவாக மதிக்கிறது என்பதையும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதே வேளையில் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு கண்ணியம் தருகிறது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும். பெண்களைப் பற்றி பிறமதங்கள், கொள்கைள் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ ‘பெண் புத்தி பின் புத்தி’ ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ 04.09.1987 அன்று […]

« Previous Page