Tamil Bayan Points

Category: தொழுகை

q110

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா? பதில் நபியின் கட்டளையில்லை. செய்வதும் தவறில்லை. கைகளால் காதுகளை மூட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது அவர்களின் இரு விரல்களயும், இரு காதுகளில் வைத்திருந்ததாக திர்மிதி, அஹ்மத், மற்றும் சில நூல்களிலும் ஹதீஸ் உள்ளது. مسند أحمد بن حنبل – (ج 4 / ص 308) 18781 […]

செருப்பணிந்து பாங்கு சொல்லலாமா?

செருப்பணிந்து பாங்கு சொல்லலாமா? பதில் சொல்லலாம் செருப்பு அணிந்து பாங்கு சொல்லக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. மேலும் வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு செருப்பு ஒரு தடையில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பாங்கை விட தொழுகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செருப்பில் அசுத்தம் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியும் போது அதைக் கழற்றிவிட்டு தொழ வேண்டும். அசுத்தம் தெரியாவிட்டால் செருப்பணிந்து கொண்டே தொழலாம் என்று மார்க்கம் […]

பாங்கை பதிவு செய்து பாங்காகப் பயன்படுத்தலாமா?

வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா? பதில் கூடாது இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது ஓர் வணக்கமாகும். 609حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الْأَنْصَارِيِّ ثُمَّ الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ […]

முன் சுன்னத்களை பாங்குக்கு முன்னாள் தொழலாமா?

முன் சுன்னத்களை பாங்குக்கு முன்னாள் தொழலாமா? பதில் பாங்கு சொன்ன பிறகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் சுன்னத் தொழுதுள்ளனர் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. 1709 – حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن نافع عن ابن عمر أن حفصة أم المؤمنين أخبرته أن رسول الله -صلى الله عليه وسلم- كان إذا سكت المؤذن من الأذان لصلاة الصبح […]

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?

நாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இது சரியா? பதில் கிடக்கலாம் இந்த நம்பிக்கைக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. 626-حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن […]

அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம் என்று கூற ஆதாரம் உண்டா?

ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று கூற நபிமொழியில் ஆதாரம் உள்ளதா? பதில் உண்டு தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஃபஜர் தொழுகைக்கான பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு முறை கூறப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறைக்கு சரியான நபிமொழிகளில் ஆதாரம் இல்லை என்று தற்காலத்தில் சிலர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக […]

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

பெண்கள் பாங்கு சொல்லலாமா? பதில் பள்ளியில் கூடாது. தனக்காக சொல்லும் பாங்கை பெண்கள் சொல்லலாம் பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன. மக்களை பள்ளிவாசலுக்கு அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியைப் பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் […]

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா?

பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று முஅத்தின் சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றாரே இது நபிவழியா? பதில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

பாங்குக்கு உளூ அவசியமா?

கேள்வி : ஆடு, மாடுகளை அறுப்பதற்கும், பாங்கு சொல்வதற்கும் உளூச் செய்வது அவசியமா? பதில்: இல்லை ஆடு,மாடுகளை அறுப்பதற்கு உளூ அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம். பாங்கு சொல்வதற்கு உளூ அவசியம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும்.(பார்க்க : திர்மிதி 201,202) பாங்குக்கு உளூ அவசியம் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. முஅத்தின் பாங்கு சொல்வதைக் […]

உளூ பாங்கின் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? பதில்: இல்லை பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். ஆனால் உளூச் செய்யும் போதும், பாங்கு கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. மேலும் உளூச் செய்யும் போது தலைக்கு மஸஹ் செய்வது அவசியமாகும். தலைக்கு மஸஹ் செய்யும் போது […]

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா?

தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா? பதில் ஆம். பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபி மொழிகள் வலியுறுத்துகின்றன. இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நாம் தாமதமாகச் சென்றால் அங்கே நாம் பாங்கு சொல்லத் தேவை இல்லை. அப்பள்ளியில் முன்னரே சொல்லப்பட்ட பாங்கு நம்முடைய தொழுகைக்கும் போதுமானதாகும். ஜமாஅத்தைத் தவற விட்டு தாமதமாக […]

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா? பதில் அதிகமாக நீட்டப்படுவது கூடாது தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன. பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும். பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை. இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்ய வேண்டும். வாசிக்கும் போது எங்கு நீட்ட வேண்டும்? எங்கு […]

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா?

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா? செய்யலாம் எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான் (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முழங்கால் தெரிகிறது) இப்படி செய்வது சரியா? ஆடை அணிவதன் முறையை விளக்கவும். ஹஸன் முஹம்மது ஆண்கள் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூச் செய்வதோ, சாப்பிடுவதோ தவறல்ல. இவற்றைச் செய்யும் போது முட்டுக்கால் மறைக்கப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இவை தவிர இதர நேரங்களிலும் […]

இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா?

படுத்திருக்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டாலோ அல்லது இல்லறத்தில் ஈடுபட்டாலோ பாய், போர்வை போன்றவற்றைத் துவைக்க வேண்டுமா? இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவ வேண்டும் பதில் ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து விட்டால் அந்தப் பகுதியைச் சுரண்டி விட்டால் போதும். حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ […]

குழந்தையின் சிறு நீர் பட்டால்?

குழந்தையின் சிறு நீர் பட்டால்? குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? குழந்தையின் சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா? பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும் பெண் குழந்தையின் சிறுநீர் பட்டால் ஆடையை மாற்ற வேண்டும் என்று ஹதீஸ் கூறவில்லை. சிறுநீர் பட்ட இடத்தைக் […]

தயம்மும் செய்து பள்ளியில் ஜமாஅத்துடன் தொழலாமா?

தயம்மும் செய்து பள்ளியில் ஜமாஅத்துடன் தொழலாமா? தொழலாம் குளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு, குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் குளிப்பதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்ளலாம். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் […]

தூக்கம் உளூவை முறிக்குமா?

தூக்கம் உளூவை முறிக்குமா? சிறு தூக்கம் முறிக்காது, ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும் தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன. காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: நஸாயீ 127, அஹ்மத் […]

காயம்பட்டவர்கள் எப்படி குளிப்பது?

காயம்பட்டவர்கள் எப்படி குளிப்பது? ஒருவர் காலில் அடிபட்டுள்ளது அவருக்கு குளிப்பு கடமை என்றிருக்கும் பட்சத்தில் அவர் தண்ணீரைக் கொண்டு உளூ செய்யலாம். ஆனால் காலில் மட்டும் தண்ணீர் பட முடியாது. இப்பொழுது உளூ செய்வது எப்படி? காலுக்கு மட்டும் மஸஹ் செய்யலாமா? அப்படி செய்தால் உளூ கூடுமா? பதில் தயம்மும் செய்ய வேண்டும் உங்கள் கேள்வி குழப்பமாக உள்ளது. குளிப்பு கடமையானவர் குளிக்க வேண்டுமே தவிர உளூச் செய்வது குளிப்புக்குப் பகரமாக ஆகாது. உளூ செய்தால் குளிப்பு […]

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? இல்லை பதில் : தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய வேண்டும் என்ற சட்டம் தொழுகைக்கு மட்டும் உரியது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் […]

நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? இமாமாக யாரும் இல்லை. கேள்வி : 63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களுக்கு இமாமாக நின்று ஜனாஷா தொழுகை நடத்தியது யார்? நான் மார்க்க அறிஞர்கள் பலரிடம் கேட்டேன். யாரும் எனக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை. மலக்குமார்கள் தொழவைத்தார்கள் என்றும் ஆண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று தொழுதார்கள் என்றும் பெண்கள் ஒரு முறை ஜமாஅத்தாக நின்று […]

பீடி மண்டி நடத்தும் இமாம் பின்னால் தொழலாமா?

பீடி மண்டி நடத்தும் இமாம் பின்னால் தொழலாமா? தொழலாம். கேள்வி : நான் ஐவேளைத் தொழுகைக்காக ……. உள்ள மஸ்ஜிதே நூர் தவ்ஹீத் பள்ளிக்குச் சென்று வருகிறேன். அங்கு தொழுகைக்காக இமாம் யாருமில்லை. ஆதலால் அங்கு யார் தவ்ஹீத் வாதி வருகிறாரோ (குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தவர்) அவர் தொழவைக்கலாம். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு நபர் இமாமத் செய்கிறார். அவர் பீடி மண்டி நடத்துகிறார். அவர் இமாமத் செய்யலாமா? இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் […]

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா? கூடாது. கேள்வி : அல் குரான் (62:9) – “நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.” மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப் பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்துள்ளான். நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் […]

கஸ்ர் எத்தனை நாளைக்கு?

கஸ்ர் எத்தனை நாளைக்கு? வரையறை இல்லை. எனினும்….. ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது […]

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்?

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்? 25கிமீ சென்றால் கஸ்ர். ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம். கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தனர். முஸ்லிம் 1230   சுமார் 25 கிலோ மீட்டர் அளவிற்கு […]

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா? நான்கையும் ஒரு ஸலாமில். லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் நான்கு ரக்அத்துகளை எப்படித் தொழ வேண்டும்? லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக்அத்கள் […]

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா?

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் […]

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா?

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா? தொழலாம் கடமையான தொழுகைக்கு முன்னால் நிறைவேற்றப்படுவதே முன் சுன்னத். இதை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழர் ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தை ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் தொழுதுள்ளார். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் […]

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா? உடனே தொழக் கூடாது. நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் : (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் […]

வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ருக்குப் பின் தொழலாமா? சிறந்தது அல்ல. விதிவிலக்காக தொழலாம். ‘இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 998, 472 எனவே வித்ரை கடைசி தொழுகையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.  எனினும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.   நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா?

வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா? ஆம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் […]

வித்ர் குனூத்தில் கைகளை உயர்த்த வேண்டுமா?

வித்ர் குனூத்தில் கைகளை உயர்த்த வேண்டுமா? இல்லை. குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா?

இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா? ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1145) […]

மக்காவில் 20 ரக்அத்கள் ஏன்?

மக்காவில் 20 ரக்அத்கள் ஏன்? மக்கா நமது வழிகாட்டி இல்லை. சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும் மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியிலும் மட்டும் இருபது ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றது. அதை நாம் ஏன் முன்னுதாரணமாக ஆக்கக் கூடாது என்ற கேள்வி தவறாகும். மக்காவையும், மதீனாவையும் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை. மாறாக, நான் […]

தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது?

தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது? இஷாக்கு பிறகு பஜர் முன்னர் வரை. வித்ர் பஜ்ருக்கு பிறகும். ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: நஸாயீ […]

தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? தொழலாம். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை. 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை. 3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை. அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி) நூல்: முஸ்லிம் 1373 மேற்கண்ட மூன்று […]

இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?

இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா? இல்லை. இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்றனர். இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். […]

குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா?

குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா? குளிப்பாட்டலாம். குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர். அவர்கள் ழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லவில்லை. குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், உளூ இல்லாதவர்களும் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாம். தொடலாம். எனினும், அடக்கம் செய்பவர் நேற்றிறவு இல்லறத்தில் ஈடுபடாதவர் இருந்தால், முக்கியத்துவம் […]

தொழுகையில் அரயில் தான் துஆ கேட்கனுமா?

தொழுகையில் அரயில் தான் துஆ கேட்கனுமா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையில் அனைத்தையும் அரபியில் தான் ஓதியுள்ளனர். இது தான் அவர்களின் ஆதாரம். இந்த ஆதாரத்தினடிப்படையில் தொழுகையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். அவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டால் பதில் இல்லை. நபியவர்கள் தொழுகையில் மட்டுமின்றி தொழுகை அல்லாத நேரங்களில் செய்த பிரார்த்தனைகளையும் அரபியில் தான் செய்துள்ளனர். அப்படியானால் தொழுகைக்கு வெளியில் கேட்கும் துஆக்களையும் அரபியில் தான் கேட்க […]

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா? துஆ கேட்கலாம். நஃபில் தொழுகை கூடாது. மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை, 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை. 3. சூரியன் […]

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா?

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா? கூடாது. சஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம். ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் […]

வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா?

வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா? ஆம். உண்டு. நபியவர்கள் வித்ரு (ஒற்றைப் படை)த் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹ்ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற 87  வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல்யா அய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) குல்ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்லுவார்கள். அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), […]

தொழுகைக்கு முன் சிறுநீர் மற்றும் காற்றை அடக்கலாமா?

தொழுகைக்கு முன் சிறுநீர் மற்றும் காற்றை அடக்கலாமா? மலம், ஜலம், காற்று ஆகியவற்றை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. இவற்றை வெளியேற்றி நிதானமான பின்பே தொழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 969 தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்குச் […]

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்?

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? தூய்மை செய்த பின்னர் சிறுநீர் வெளிப்பட்டால் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும். ஆனால் எத்தனை முறை கழுவினாலும் சிறுநீர் கசியும் நோயுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம் ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண்.  நான் […]

உளூ நீங்கியது போல் உணர்ந்தால்

உளூ நீங்கியது போல் உணர்ந்தால் உளூச் செய்த பின் உளூ முறிந்து விட்டது போல் உணர்கிறேன். மீண்டும் உளூச் செய்ய வேண்டுமா? உளூ முறியாமலேயே உளூ முறிந்து விட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்து விட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தால் தான் மீண்டும் நாம் உளூச் செய்ய வேண்டும். காற்றுப் பிரிந்த சப்தத்தை நாம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் உளூ முறிந்து […]

பிரச்சனைக்கான குனூத் ஆமீன் கூடுமா?

பிரச்சனைக்கான குனூத் ஆமீன் கூடுமா? துபையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒரு வாரமாகக் கடமையான தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவுக்குப் பின் நின்று கொண்டு துஆச் செய்கிறார்கள். இமாம் துஆச் செய்யும் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்கிறார்கள். இதை நாமும் பின்பற்றலாமா? இது பற்றிக் கேட்ட போது, பாலஸ்தீனத்தில் நடக்கும் சம்பவங்களுக்காக இவ்வாறு செய்வதாகக் கூறுகிறார்கள். விளக்கம் தரவும். குடியாத்தம் இர்ஃபான் துபை குனூத் நாஸிலா நீங்கள் குறிப்பிடுவது குனூத்துன் நாஸிலா வாகும். சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு […]

« Previous Page