Author: Mukthiyaar Basha

அவரும் அவளை நாடினார்

சூரத்துல் யூசுஃப் என்ற 12வது அத்தியாயத்தின் 24வது வசனத்திற்குப் பொருள் செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யூசுப் (அலை) அவர்கள் ஒரு மன்னருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னருடைய மனைவி யூசுஃப் நபியவர்களின் அழகில் மயங்கி அவரை தவறான பாதைக்கு வற்புறுத்துகின்றார். இதைப் பற்றி இறைவன் 24வது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இவ்வசனத்திற்கு ஒரு சாரார் பின்வருமாறு பொருள் செய்கின்றனர். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் […]

அழகாய் தோன்றும் (அரசியல்) அமல்கள்

மனிதனுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட அல்குர்ஆன், இம்மை மறுமை நன்மைகளைப் பற்றி மிகத் தெளிவாகவே எடுத்துச் சொல்கின்றது. இவ்வுலகிலும், மறு உலகிலும் மாபெரும் நன்மைக்குரியவர் யார்? மாபெரும் நஷ்டத்திற்குரியவர் யார்? என்பதையும் திருக்குர்ஆன் நமக்கு விளக்கி விடுகின்றது. திருக்குர்ஆன் ஒருவனை மிகப் பெரிய நஷ்டத்திற்குரியவனாக, ஈடு இணையற்ற இழப்பையுடையவனாகக் கூறுகின்றது. திருக்குர்ஆனைப் படிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நஷ்டவாளி நாம் தானா? என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் அந்த வகையைச் சார்ந்தவரில்லை என்றால் நமது […]

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு! மவ்லிது விழா புறக்கணிப்பு! திருமண விழா புறக்கணிப்பு! நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு! பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு! கத்னா விழா புறக்கணிப்பு! இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு! இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு! இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு! புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் […]

கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக்

அண்மையில் நம்முடைய ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட சிலர், ஒரு பாட்டைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்த பாக்கரை இப்படி அநியாயமாகத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது தான் அந்தப் பாட்டு! இதற்குரிய விளக்கத்தை தியாகமா? துரோகமா? என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம். இங்கே நாம் காணப் போவது கஅப் பின் மாலிக் அவர்களின் வரலாறு! இது முழுக்க முழுக்க புகாரியில் இடம்பெறும் ஹதீஸாகும். நபித்துவம் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் மாபெரும் […]

இவர்கள் முஸ்லிம்களா?

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம் ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கையெழுத்தாகவுள்ள அந்த ஒப்பந்தத்தின் இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவை. 1. இந்த ஆண்டு உம்ரா செய்யக் […]

விதி ஒரு வரையாவிலக்கணம்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது; அதில் ஆழமான நம்பிக்கையையும் வைக்க வேண்டும். அல்லாஹ் மலக்குமார்கள் நபிமார்கள் வேதங்கள் இறுதி நாள் […]

ஏகத்துவவாதிகளே! சிந்தியுங்கள்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவன் மனிதனைப் படைத்து அவன் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காக அவனிலிருந்தே அவனது ஜோடியைப் படைத்தான். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன்: 7:189)➚ ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குத் […]

மனத்தூய்மையும் மகத்தான கூ­லியும்…

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய […]

குருதி கொடுப்போம்

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, “எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்‘ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், “உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?’ என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, […]

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழ­ல் நிற்போம்

அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை! ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன. நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை […]

பாடம் 3-நான்கு குறியீடுகள்

அ) மெய்யெழுத்தின் குறியீடு கீழ்க்கானும் அரபு எழுத்துக்களை வாசிக்கும் போது அதில் போடப்பட்டுள்ள குறியீடுகளைக் கவனித்து அதற்கேற்ப வாசிக்க வேண்டும். உதாரணமாக எழுத்தின் மேலே ـْ அரை வட்டம் போன்ற குறியீடு இருந்தால் அந்த எழுத்தை தமிழ் மெய்யெழுத்து போல் வாசிக்க வேண்டும். இந்தக் குறியீடு ஸுக்கூன் எனப்படும். நூன் மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று نْ இருந்தால் (ன்) என்று வாசிக்க வேண்டும்.. தா மேல் ஸுக்கூன் குறியீடு ـْ போடப்பட்டு என்று […]

பாடம் 2 – வரிசை மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துக்கள்

கீழுள்ள எழுத்துக்கள் அகர வரிசைப்படி இல்லாமல் வரிசை மாற்றித் தரப்பட்டுள்ளது. எழுத்துக்களைச் சரியான முறையில் கண்டறிவதற்கு இந்தப் பயிற்சி அவசியம்.

பாடம் 1 – அரபு எழுத்துக்களும் அதன் பெயர்களும்

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை அரபு மொழியில் உள்ள எழுத்துக்கள். அரபு எழுத்துக்கள் மொத்தம் 29 ஆகும். ஆனால் குர்ஆனைக் கற்றுத் தரும் அனைத்து புத்தகத்திலும் 30 எழுத்தாக போட்டிருப்பார்கள். லாம் என்பது ஒரு எழுத்து, அலிஃப் என்பது ஒரு எழுத்து. இந்த இரண்டு எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து லாம்அலிஃப் என 30 வது எழுத்தாக சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் லாம் அலிஃப் என்பது ஒரு எழுத்தே கிடையாது.

மறுவுலக நம்பிக்கை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மறுமை நம்பிக்கை என்பது மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையை உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் […]

சிறு துளி! பெரு வெள்ளம்!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கம் உலகில் உள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற அழகிய மார்க்கமாகும். ஏனெனில் அது அகில உலகத்தையும் படைத்து ஆளுகின்ற அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கமாகும். அதில் மனித சக்திக்கு உட்பட்ட பல கடமைகளும், உபரியான வணக்கங்களும் உள்ளன. எந்த அளவிற்கென்றால் சின்னச் சின்ன […]

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே! இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர். இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது […]

நரகம் – ஒரு நேர்முகம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் […]

del – உலகம் பிறந்தது எதற்காக?

திருமறைக் குர்ஆனையும், திருநபி வழிமுறையையும் கொள்கையாகக் கொண்ட நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ தீமையான காரியங்கள், இணை வைப்புக் காரியங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவற்றில் பல தீமைகளில் சமுதாயம் தீமையெனத் தெரிந்தே மூழ்கி இருக்கிறது. இதற்கு உதாரணமாக வட்டி, வரதட்சணை, சூதாட்டம், மது பானங்கள், சினிமா போன்றவற்றைக் கூறலாம். ஆனால் தீமை என்றே உணரப்படாமல், நன்மை என்ற பெயரில் பல்வேறு இணை வைப்புக் காரியங்கள் தலை விரித்தாடுகின்றன. அவற்றில் ஒன்று தான் ரபியுல் அவ்வல் மாதம் வந்து […]

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? […]

இஸ்திஃக்ஃபார்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! வல்ல ரஹ்மானின் அளப்பெரும் கிருபையால் இவ்வருட சங்கை மிகு ரமளானில் நாம் அனைவரும் இருந்துகொண்டிருக்கின்றோம். நமக்கும் வல்ல ரஹ்மானுக்கும் அதிக நெருக்கம் உள்ள இவ்வேளையில், அவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு தேடுபவர்களாக இருக்க வேண்டும். கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்… அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? […]

06) பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவது பித்அத்தா?

இந்த கேள்வி மார்க்கம் பற்றிய அடிப்படை தெரியாததால் எழும் கேள்வியாகும். இதற்கான விடையறிய மார்க்கத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்ள வேண்டும். மார்க்கம் என்பது வஹியில் உள்ளவை மட்டுமே என்ற அடிப்படையை முன்னர் அறிந்தோம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் உலக பழக்க வழக்கங்களுக்கு மார்க்கம் ஒரு அனுமதியை நமக்கு தருகிறது. இதை பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் […]

05) பித்அத்கள் தோன்ற காரணமும், பித்அத்தின் விபரீதங்களும்

இறை நேசமா? முன்னோர் பாசமா? மேலே குறிப்பிட்ட விஷயங்களையெல்லாம் நாம் கூறினால் சிலர், என்ன தான் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு தெரியாதா? காலம் காலமாக செய்து வருவதை எப்படி விடுவது என்று கேட்பார்கள். இந்த கேள்விகள் சாதாரணமாக தெரியலாம். ஆனால் இது ஒருவரின் இறை நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் பாதகத்தை விளைவிக்கும். ஏனெனில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் அல்லாஹ்வையே அனைவரையும் விட அனைத்தையும் விட நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும்விட […]

04) பித்அத்தான செயல்களை கண்டறியும் முறைகள்

இரண்டாம் வழி – முறையை மாற்றுதல் மார்க்கம் என்று செய்யப்படும் ஒரு காரியத்திற்கு மார்க்கத்தில் அடிப்படை ஆதாரமே இல்லையென்றால் அதை வைத்தே அது பித்அத் என்று அறிந்துக் கொள்ளலாம் என்பதை மேலே கண்டோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்ததற்கான காரணம், விதம், அளவு, காலம், இடம், வகை தெளிவுப்படுத்தப்பட்ட பிறகு இவற்றில் எந்த ஒன்றை நாம் மாற்றி அந்த காரணம் அல்லாத வேறு காரணத்திற்காகவோ அல்லது வேறு விதத்திலோ அல்லது வேறு அளவிலோ அல்லது […]

ஒரு வேளை தொழுகையில் கிடைக்கும் பல நன்மைகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், […]

மரணமும் மறுமையும் -30

சொர்க்கம்-2 சொர்க்கவாசிகளின் பானம், உணவு, ஆடை, இருப்பிடம் அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுடன் “மதாயின்” (இராக்) நகரில் இருந்தபோது, அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் (மஜூசி மதத்தவரான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரத்தில் பானம் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு (அங்கிருந்தவர்களிடம்) பின்வருமாறு கூறினார்கள்: நான் (ஏன் அவர்மீது வீசியெறிந்தேன் என்பதற்கான காரணத்தை) உங்களிடம் தெரிவிக்கிறேன். நான் […]

மரணமும் மறுமையும் -29

சொர்க்கம்-1 சொர்க்கத்தின் பெயர்கள் சொர்க்கம் என்பது ஒரே படித்தரம் உடையதன்று. மாறாக, சொர்க்கத்தில் பல படித்தரங்கள் உள்ளன. அது போல, சொர்க்கத்திற்கு பல பெயர்களும் உள்ளது. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. (அல்குர்ஆன்: 18:107)➚ பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:1-11)➚ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் […]

மரணமும் மறுமையும் -28

நரகம்-2 முன்னரே செய்த உடன்படிக்கை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்; அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான். அறி: அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) (முஸ்லிம்: 5402) ➚ ஆனால் இது இந்த துன்யாவில் […]

மரணமும் மறுமையும் -27

நரகம்-1 விதிப்படியே நடக்கும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (முஸ்லிம்: 5160) ➚ அனைவருக்கும் சொர்க்கம் , நரகம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு இஸ்லாம் கூறும் பதில், ஆம். அனைவருக்கும் சொர்க்கம் நரகம் முடிவு செய்யப்பட்டு விட்டது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? […]

மரணமும் மறுமையும் -26

(பரிந்துரை மற்றும் பாலம்) பரிந்துரை பயன் தருமா? மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அறவே பரிந்துரை கிடையாது. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு. இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் தவறாகும். (அல்குர்ஆன்: 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43, 74:48)➚ ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், […]

மரணமும் மறுமையும் -25

(ஒவ்வொருவராக தீர்ப்பளிக்கப்படுதல்) வெளிப்படுத்தப்படும் ஏடு اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏ வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்: 50:17-18)➚ وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏ ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் […]

மரணமும் மறுமையும் -24

(விசாரணையின் தொடர்ச்சி) சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள் அந்த நாளில் அனைத்து ஆட்சியும், அதிகாரமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும், அனைத்து மனிதர்களும் தனக்கு வழங்கப்படும் நீதி உண்மையில் நீதிதான் என்று அறிந்து கொள்ளும் விதமாக அன்றைய தினம் விசாரணை இருக்கும். அதற்காக அல்லாஹ் சாட்சிகளை கொண்டு வருவான். நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். […]

மரணமும் மறுமையும் -23

(விசாரணை ஆரம்பம்) உலகில் செய்தவற்றுக்கு மறுமையில் விசாரணை உண்டு وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். (அல்குர்ஆன்: 14:21)➚ فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். (அல்குர்ஆன்: 15:92-93)➚ அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்: وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ، فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ ‘உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய […]

மரணமும் மறுமையும் -22

(ஹவ்ளுல் கவ்ஸர்) மறுமையின் கடுமையான வெயிலின், வெப்பத்தின், வியர்வையின் நடுவே இறைவனின் அர்ஷின் நிழலில் சிலருக்கு அல்லாஹ் இடமளிப்பான் என்பதனை கடந்த உரையிலே பார்த்தாம். அது போன்ற இன்னொரு நிம்மதி ஹவ்லுல் கவ்ஸர் என்ற நீர்த்தடாகம். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான நாள் மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும். تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍ‌ۚ‏ فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا‏ اِنَّهُمْ يَرَوْنَهٗ […]

மரணமும் மறுமையும் -21

(மஹ்ஷரில் மனிதர்களின் நிலை-2) மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் இறைவன் நிற்பார்கள். சூரியன் தலைக்கு அருகில் கொண்டு வரப்படும். கடுமையான வியர்வையில் மனிதர்கள் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பார்கள், மனிதர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் கொண்டு வரப்படுவார்கள், போன்ற தகவல்களை கடந்த உரையிலே பார்த்தோம். அதில் மீதம் உள்ள சில தகவல்களையும், சொர்க்கம் அல்லது நரகம் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், மஹ்ஷரில் சில கூட்டத்தாருக்கு வேதனை தரப்படும். அது தொடர்பான செய்திகளை இந்த உரையில் பார்ப்போம். பிறரது சொத்தை அபகரித்தவர் أَنَّ […]

மரணமும் மறுமையும் -20

(மஹ்ஷரில் மனிதர்களின் நிலை-1) கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம். ஒன்றுத் திரட்டப்படும் இடம் يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள். (அல்குர்ஆன்: 14:48)➚ உலக அழிவுக்குப் பிறகு அனைவரும் […]

மரணமும் மறுமையும் -19

(உயிர்ப்பித்து எழுப்புதல்) உயிர்ப்பித்தலை ஈமான் கொள்ளுதல், மறுத்தல் ஒருவர் உயிர்ப்பித்தலை மறுத்தால் அவர் அல்லாஹ்வே இல்லை என்று கூறியதற்கு சமம். அல்லாஹ்வை பொய்ப்பிப்பதற்கு சமம். என்று அல்லாஹ் கூறுகிறான். قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَقَوْلُهُ: لَنْ يُعِيدَنِي، كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ: اتَّخَذَ […]

மரணமும் மறுமையும் -18

உலக அழிவு, ஸூர், கியாமத் நிகழ்வு மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் மரணிக்கச் செய்வதற்காக இறுதிநாளில் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி முதலாவது சூரை ஊதுவதற்கு கட்டளையிடுவான். முதலாவது சூர் ஊதப்படும் போது அல்லாஹ் படைத்த அனைத்தும் அழிந்துவிடும். அவன் நாடியவர்களை தவிர. உலகம் அழிக்கப்படும் இறுதி நேரம் எக்காளம் ஊதப்படுவதற்கு முன்னால் உள்ள, இறுதி நேரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால் ஒரு தாய், கடுமையான தூக்கத்தில் இருக்கும் இரவு நேரத்தில் தன் […]

மரணமும் மறுமையும் -17

உலக அழிவு மற்றும் கியாமத் நாள் இறுதி நாளையும் நம்பாவிட்டால் வெற்றி இல்லை இறை நம்பிக்கையின் 6 முக்கிய அம்சங்களில் மறுமை நாளை நம்புவதும் ஒன்று. ஒருவர் இவ்வுலகத்தில் அல்லாஹ்வை வணங்கி, தொழுது, நோன்பு வைத்து ஜகாத் கொடுத்து ஹஜ் செய்து ஏராளமான நன்மைகளை செய்து விட்டு நான், ”மறுமை நாளை நம்பவில்லை” என்று கூறினால் மறுமையிலே அவர் நஷ்டவாளியாக தான் இருப்பார். ஏனென்றால் அல்லாஹ் தனது திருமறையில் தன்னை நம்புவதற்கு அடுத்தபடியாக இறுதி நாளை நம்புவதை […]

மரணமும் மறுமையும் -16

மரணத்திற்கு முன் செய்ய மறந்தவை கப்ரில் நல்ல நிலையை அடைவதற்கு ஏராளமான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கடந்த உரையிலே பார்த்தோம். ஆனால் நாம் எவ்வளவு கவனமாக பல நற்காரியங்களை செய்தாலும் நம்மையும் அறியாமல் சில தீமைகள் சில பாவங்கள் நமக்கு மிகப்பெரும் சோதனையாக வந்து அமைந்து விடும். எனவே அதில் இருந்து ஒரு மனிதனை பாதுகாத்துக் கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் நமக்கு சில வழிமுறைகளை கற்றுத் தருகிறார்கள் மிகப்பெரிய அளவிலே நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும், நபி […]

மரணமும் மறுமையும் -15

கப்ரில் நல்லவர்களின் நிலை-2 இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும் பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த ‘பெண்’ அல்லது ‘இளைஞர்’ ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘அவர் இறந்து விட்டார்’ என மக்கள் […]

மரணமும் மறுமையும் -14

கப்ரில் நல்லவர்களின் நிலை-1 சந்தோஷமான செய்தி கூறப்படும் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் இருந்து நடக்கும் நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள். நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் […]

மரணமும் மறுமையும் -13

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை-3 மண்ணறை தண்டனைக்கான காரணங்கள் உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டிட வேண்டும். உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக […]

மரணமும் மறுமையும் -12

தீயவா்களின் கப்ர் வாழ்க்கை 2 நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான் மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண்ணிற்கு முன்னால் நரகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ’உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், […]

மரணமும் மறுமையும் -11

தீயவர்களின் கப்ர் வாழ்க்கை-1 கப்ர் வேதனை இந்த சமுதாயத்திற்கும் உண்டு அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு “யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்: 5504) ➚ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي امْرَأَةٌ مِنَ الْيَهُودِ، وَهِيَ […]

மரணமும் மறுமையும் -10

மரண வீட்டில், கப்ரில் நடக்கும் கூத்துக்கள்! இன்னாலில்லாஹ் என்று கூறுதல் ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் என்பது இதன் பொருள். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் […]

மரணமும் மறுமையும் -09

மரண நேரமும் மவுத் சோறும் கண்கள் நிலைகுத்தும் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ « إِنَّ الرُّوحَ ‏إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ ». فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ فَقَالَ « لاَ تَدْعُوا عَلَى […]

மரணமும் மறுமையும் -08

இறுதி நேரம் – மரணத் தருவாய் இறுதி நேரத்தில் நம் சிந்தனை, செயல்பாடுகள், எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. இறுதி நேர சிந்தனையே முக்கியம் يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்’’ என்று கூறியதை நான் கேட்டேன். அறி: ஜாபிர் (ரலி),(முஸ்லிம்: 5518) ➚ இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ […]

மரணமும் மறுமையும் – 07

மரண வேளையில் சைத்தானின் ஊசலாட்டம் இறைவனுக்கு இணை வைக்கும் படி தூண்டுவான். மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்வதற்கு இறுதி வாய்ப்பாக இருக்கிற மரண நேரத்தை சைத்தான் தன்னால் முடிந்தவரை பயன்படுத்துவான். அதில் சிக்கி ஏமார்ந்து நம்முடைய மறுமை வாழ்க்கையை நாம் நாசமாக்கி விடக்கூடாது. இறைதூதர் முன்னிலையிலேயே இவ்வாறு நடந்துள்ளது! أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ […]

மரணமும் மறுமையும் -06

(பல்வகை மரணங்கள்) தவணை வந்து விட்டால் ‎அவகாசம் இல்லை وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு ‎வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். ‎பிந்தவும் மாட்டார்கள்.‎ (அல்குர்ஆன்: 7:34)➚‎ وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் ‎அவகாசம் அளிக்க மாட்டான். […]

del-மரணமும் மறுமையும் – 05

(அல்லாஹ்வே நித்திய ஜீவன், நபியின் மரணம்) அல்லாஹ்வே நித்திய ஜீவன் எவ்வளவு தற்காப்பு மேற்கொண்டாலும், கவனமாக இருந்தாலும், மரணம் நிகழ்கிறது. மரணத்தை எதிர்கொள்ளாத எவரும் இல்லை. அல்லாஹ் மடடுமே நித்திய ஜீவன். اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُؕ‏ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (அல்குர்ஆன்: 3:2) اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى […]

Next Page » « Previous Page