கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் இறைவன் நமக்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளில் மிகப்பெரும் அருட்கொடைதான் “நம் குழந்தைச் செல்வங்கள்” ஒவ்வொரு சிறு குழந்தையும் நாளை இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் என்பதைத் தாண்டி, பெற்றோர்களாகிய நம்மை வழிநடத்தி, பாதுகாக்க இருப்பவர்களும் இந்தக் குழந்தைகள்தான். ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு தாய், தந்தையின் கனவுகள் என்பது எண்ணிலடங்காதவை ஆகும். “என் பிள்ளை என்னைவிடச் சிறந்தவனாக இருப்பான்” “என் பிள்ளை நான் சாதிக்காததையெல்லாம் சாதித்துக் காட்டுவான்” […]