Tamil Bayan Points

Category: குர்ஆன் கூறும் அறிவியல்

b127

தாடியின் நன்மைகள்

தாடியின் நன்மைகள் சத்திய மார்க்கம் – தாடியின் நன்மைகள் : அறிவியல் சான்றுகள் – இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள் – டாக்டர் த.முஹம்மது கிஸார் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட சில இளங்கலை மாணவர்களிடம், தாடி […]

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்!

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்! 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவன் குர்ஆனில் கூறியவை நாம் வாழும் சமகாலத்தில் அறிவியலின் மூலமாக உண்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலொன்றாக, பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுவதைப் பற்றி குர்ஆன் கூறும்போது இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டுமென்று கூறுகிறது. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு […]

குர்ஆன் கூறும் அண்டவியல் தத்துவத்தை உண்மைப்படுத்திய ஸ்டீபன் ஹாக்கிங்

குர்ஆன் கூறும் அண்டவியல் தத்துவத்தை உண்மைப்படுத்திய ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்திய அண்டவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த வாரம் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். இவர் கேம்பிரிட்ஜ்ப் பல்கலைக் கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார் இவர் 1942 – ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரத்தில் பிறந்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றவர். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய […]

குர்ஆன் ஒரு மருத்துவ விஞ்ஞானி

குர்ஆன் ஒரு மாபெரும் மகப்பேறு மருத்துவ விஞ்ஞானி இன்றைய நவீன அறிவியல் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு, தீர்க்கதரிசனமாக குர்ஆன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களில் நாம் கண்கூடாக இதைப் பார்த்திருக்கிறோம். கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை ஆழமாக ஆராய்ந்தால், ஐந்து மருத்துவக் கருத்துகளை, மிக சாதாரணமாக, அப்படியே போகிற போக்கில் குர்ஆன் விளக்கியுள்ளது. அதுவும், மருத்துவ முன்னேற்றம் எதுவும் இல்லாத காலத்தில், மகப்பேறு மருத்துவர்களால் சென்ற பத்தாண்டு வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு விஷயத்தை, மிக அழகான சம்பவம் மூலம் […]

குர்ஆன் கூறும் கருவியல்

குர்ஆன் கூறும் கருவியல் – மனிதப் படைப்பின் அற்புதம் நிச்சயமாக நாம் மனிதனை களி மண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்: பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்: பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற (ஒட்டிக் கொண்டு தொங்கும்) நிலையில் ஆக்கினோம்: பின்னர் அந்த அலக்கை ஒரு (சவைக்கப்பட்ட மாமிசம் போன்ற ஒரு) தசைப் பிண்டமாக ஆக்கினோம்: பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாக ஆக்கினோம்: பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்: பின்னர் […]

பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!

பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்! இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும், […]

கத்னா என்னும் சுன்னத் செய்யச் சொல்லும் தினமலர்!

கத்னா என்னும் சுன்னத் செய்யச் சொல்லும் தினமலர்! ஆண்குழந்தைகளுக்கு கத்னா என்னும் சுன்னத் செய்வதை இஸ்லாம் வழிமுறையாக ஆக்கி உள்ளது. சுன்னத் என்னும் கத்னா செய்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதற்கு ஒரு பெரிய பட்டியலையே இடலாம்; அந்த அளவிற்கு ஆண்களுக்கான ஒரு சிறந்த மருத்துவ முறையாகவும், ஆண்களது இல்லற வாழ்வு சிறப்பாக அமைய சுன்னத் எனும் கத்னா வழிவகை செய்கின்றது என்பதையும் அறிவியல் உலகம் ஆதாரங்களுடன் தற்போது படியலிட்டு வருகின்றது. சுன்னத் செய்வதால் சுன்னத் […]

தோலின் உணர்ச்சிகள் (Dr.Tagatat Tejasen)

தோலின் உணர்ச்சிகள். டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr.Tagatat Tejasen) இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்”ஆகும். அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் […]

எறும்புக்கு அறிவு உண்டா?

சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் 12வது பதிப்புக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ள பதிப்பில் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளோம். (இப்பதிப்பு ஜூலையில் வெளியாக உள்ளது) 470 எறும்புகளுக்கும் அறிவு உண்டு حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ […]

மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்

மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர் யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. பெரிய திமிங்கலத்தின் வயிற்றில் மனிதனால் உயிருடன் இருக்க முடியும் என்பதை இலங்கையில் இருந்து வெளியாகும் வீயரகேசரி நாளிதல் ஏப்ரல் 6-2016 அன்று பின் வரும் செய்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) மோசமான வானிலை […]

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்

மரத்திலிருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த […]

குளவிக்கு சொல்லிக் கொடுத்தவன் யார்?

குளவிகளின் இனப் பெருக்கம் இந்த உலகில் எத்தனையோ வித விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அந்தப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் சிறந்த உள்ளுணர்வையும், அறிவுத் திறத்தையும் அல்லது நமக்கே புரியாத ஒரு தகுதியையும் புலப்படுத்துபவையாகத் திகழ்கின்றன. உதாரணமாக குளவிகளுக்கு இனப் பெருக்கக் காலம் வந்ததும் ஆண் குளவி ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்து, அதில் எந்த இடத்தில் குத்தினால் அது உணர்விழந்து விடும் என்பதைத் தெரிந்து, அந்தப் பொருத்தமான இடத்தில் ஒரு குத்து குத்தி அதை உணர்விழக்கச் செய்கின்றது. உணர்விழந்த […]

தலை சுற்ற வைக்கும் தேனீக்களின் வாழ்க்கை!

1 லட்சம் கிமீ பயணிக்க வல்ல, தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. வேலை ரீதியாக, தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் […]

« Previous Page