Tamil Bayan Points

கடல் மட்டம் உயர்வு : அன்றே உரைத்த திருக்குர்ஆன்

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on November 7, 2019 by

கடல் மட்டம் உயர்வு : அன்றே உரைத்த திருக்குர்ஆன்

கடல் மட்டம் தற்போது முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு மிக வேகமாக உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதையடுத்து உலகின் அனைத்து நீர் நிலைகளும், சமுத்திரமும் உயர்ந்து வருவதாக நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

இது குறித்து 36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்த ஆய்வறிக்கையை ஐ நா சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நாசா விஞ்ஞானி ஜோஷ் வில்லீஸ் அளித்துள்ள அறிக்கையில், பூமி வெப்பமை யமாதலுக்கு முக்கியக் காரணம் கடலும் வெப்பமடைந்து வருவதாகும் என கண்டறிந்துள்ளார். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் கடல் நீரில் அதிகரித்து வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரிக்கும் எனவும் இது மிகவும் ஆபத்தான போக்கு எனவும் குறிப்பிடுகிறார்.

கடந்த நூறு ஆண்டு கணக்கோடு ஒப்பிடுகையில் தற்போது கடல் நீர் மட்டம் உயரும் வேகமானது இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதை விட அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை (Governmental panel on climatic ) எனும் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், இந்த பிரச்ச னையின் வீரியமானது உடனடியாக மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் கூட இருக்கலாம் எனவும், சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் கடல் நீரானது நிலத்தினை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

முன்னரே உரைத்த குர்ஆன் : 

சமீபத்திய இந்த விஞ்ஞான ஆய்வுகள் நமக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் ஒரு பக்கம் தந்தாலும், இவற்றைக் குறித்து திருமறை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே உரைத்திருக்கும் பேரதிசயத்தை தற்போது நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.

(குர் ஆன் 13:41)

நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்படுவதாலும், நீர் நிலைகளின் மட்டம் உயர்வதால் அவை நிலப்பரப்பை ஆக்கிர மிப்பதாலு ம் நிலத்தின் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது என்கிற நுணுக்கமான ஆய்வுகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு யாரும் அறிந்திருக்க முடியாது..! ஓரங்களில் சிறிது சிறிதாக நிலப்பரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியதன் மூலம் திருக்குர்ஆன், இறைவனின் வார்த்தை என்பது நிரூபணமாகின்றது..!

Source: unarvu (அக்டோபர்- 04 – 10, 2019.)