
தவறான புரிதலால் ஏற்படும் குழப்பங்கள் வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருக்கும் கணவன், மனைவியிடம் போனில் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசிக் கொண்டிருக்கும் போது செல்போன் துண்டிக்கப்பட்டுவிட்டால் வேண்டு மென்றே துண்டித்துவிட்டாள் என்று கணவனும், கோபத்தில் போனைத் துண்டித்துவிட்டார் என்று மனைவியும் நினைக்கின்ற காரணத்தினால் இருக்கின்ற சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூட பெரிதாகச் சித்தரிக்கின்ற மனநிலை இன்று பெரும்பாலான நபர்களிடத்தில் காணப்படுகின்றது. இந்தக் காரணத்துக்காகவே விவாகரத்துச் செய்து கொண்ட தம்பதிகளும் உண்டு. சிலர் அவசரத் தேவைக்காக […]