Author: Kamila

3) இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 29:48)➚ ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் இந்த வசனத்திற்கு ஓர் அழகான விளக்கத்தை வழங்குகின்றார்கள். முஹம்மதே! இந்தக் குர்ஆனை உங்களுடைய சமுதாயத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் நீண்ட காலம் அவர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அப்போது எந்தவொரு நூலைப் படிக்கவும் எழுதவும் உங்களுக்குத் தெரியாது. இன்னும் […]

2) இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள்

“அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் உத்தரவின் பேரில் இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டிய உண்மைக் காரணங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி ஆவார். இவர் மொராக்கோ என்ற (மக்ரிப்) நாட்டைச் சேர்ந்த நவீன கால மார்க்க அறிஞராவார். அவர் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தைத் தான் ஏகத்துவத்தில் தந்துள்ளோம். இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனை […]

1) முன்னுரை

முன்னுரை: இமாம் கஸ்ஸாலி என்று அழைக்கப்படுகின்ற கஸ்ஸாலிக்கு உலக அளவில் ஒரு தாக்கமிருக்கின்றது. அது இந்திய அளவில் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழகத்தில் அவரது தாக்கம் எல்லை தாண்டி ஊடுறுவியிருக்கின்றது. “வானத்தின் ரட்சகனே! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்த அற்பனின் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!” என்று இங்குள்ள ஆலிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளிவாசல்களில் நடைபெறுகின்ற பாடசாலைகளில், மழலையர் பள்ளிக்கூடங்களில் பயில வருகின்ற பிஞ்சுகளின் நெஞ்சுகளில் இந்த நஞ்சை ஊற்றியும் […]

புனித பூமியில் புனிதம் நிறைந்த மஸ்ஜிதுல் அக்ஸா

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! விசாலமான சிரியா – ஜெருசலம் பகுதியில் அமைந்திருக்கின்ற பகுதிகளுக்கும், அங்கு அமையப் பெற்றிருக்கின்ற புனிதம் பொருந்திய மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை நமக்குப் பாடமாகவும் – படிப்பினையாகவும் கற்றுத் தருகின்றார்கள். புனிதம் நிறைந்த பூமியின் சிறப்புக்கள் குறித்து தொடர்ச்சியாக அறிந்து கொள்வோம். நேர்ச்சையை நிறைவேற்ற சொன்ன நபிகளார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்காவை அல்லாஹ் வெற்றியளித்தால் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் […]

சிறந்த நற்பண்புகளும், சுவனத்து மாளிகையும்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகின் மோகத்திற்கும், தாகத்திற்கும் இரையாகுபவர்கள் மனித இனத்தவர்களே! அதன் அலங்காரத்தின் மீது அலாதி ஆர்வம் கொண்டு அதை அடைந்திட படாதபாடுபடுகின்றனர். அந்தப் பேராசைகளுள் பெரும்பங்கு வகிப்பது “சொந்த வீட்டில் சொகுசாக வசிக்கவேண்டும்” என்பதே! இயற்கை வளத்தில், தமக்கான நிலத்தில், உயர் தரத்தில் இல்லம் அமைத்திட வேண்டும் என்பது பலரின் உள்ளத்தில் உலாவும் கற்பனையாக உள்ளது. எனினும், இவ்வுலகில் கட்டப்படும் கோட்டை கொத்தளங்களும், மாட மாளிகைகளும் மண்ணாய் போகும் என்பதில் அங்குலம் […]

சூனியத்திற்கு அற்புதங்கள் ஆதாரமாகுமா?

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ஏகத்துவமாகும். அல்லாஹ்விற்கு எந்த வகையிலும் அணுவளவு கூட இணை கற்பிக்காதவரே வெற்றி பெற முடியும். ஆனால், இஸ்லாத்தின் அடிப்படை கலிமாவிற்கு எதிரான இணைவைப்பு நம்பிக்கையை இஸ்லாத்தின் பெயராலே இன்று இஸ்லாமிய சமுதாயம் கொண்டிருக்கிறது. அதிலும் தர்கா வழிபாடும் தாயத்தும் இணைவைப்பு என்று ஏற்றுக் கொண்டவர்கள் கூட சூனியம் விஷயத்தில் சூனியம் ஆகியிருப்பதே வேதனைக்குரிய விஷயம். தர்கா வழிபாடு எப்படி இணைவைப்போ அதே அடிப்படைதான் சற்றும் குறையாமல் சூனிய நம்பிக்கையிலும் […]

இணை வைத்தல் – மாபெரும் அநியாயம்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! லுக்மான் (அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகளை அறிந்து வருகின்றோம். அவைகளில் முதலாவதாக அவர்கள் தம் மகனுக்கு முன்வைத்த அறிவுரை என்ன என்பதை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான். லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு (எதையும்) இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 31:13)➚ முதலாவதாக, இணைவைத்தல் என்ற மகத்தான அநியாயத்தைக் குறித்தே தமது பிள்ளைக்கு லுக்மான் (அலை) அவர்கள் […]

மார்க்க உரைகள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனை அலசி ஆராய்ந்து, மக்களுக்கு மார்க்கத்தை அறிவுரைக்கும் ஆலிம்கள், முதலில் தங்களின் வாழ்வை வான்மறை அடிப்படையில் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அதனைத் தொடர்ந்து, அந்த ஆலிம்களால் நிகழ்த்தப்படும் மார்க்க உரைகள் மனிதர்கள் வாழ்வில் எத்தகைய திருத்தத்தைத் தரவேண்டும் என்பதை இத்தொடரில் பார்ப்போம். எழுத்துக்கள் மூலம் ஏற்ப்படுத்திட முடியாத எழுச்சியைக் கூட பேச்சின் மூலம் பாய்ச்சிட முடியும். அரியனையைப் பிடிக்க அரசியல் பேசுபவர்களும், மதபோதகர்களும், […]

பரேலவிகளின் பச்சைப் பொய்கள்..!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் பரிசுத்தமானது. இந்த மார்க்கத்தில் எந்தவிதமான கோணல்களும், குறைகளும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான முறையில் இந்த மார்க்கத்தை இறைவன் மனித குலத்துக்கு வழங்கியிருக்கின்றான். இந்தப் பரிசுத்தமான இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் வகையில் பல்லாண்டு காலமாக இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு அவதூறுப் பிரச்சாரங்கள், கட்டுக்கதைகள், இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று மார்க்கத்தைக் கற்றறிந்த நபர்களால் மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தின் பெயரால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சமகாலத்தில் சமூக வலைத்தளங்களின் […]

ஆன்மீகத்தின் பெயரால் மோசடிகளை அறவே ஒழித்த அருள்மறை!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் வழியாகப் பல வசனங்களில் ஒட்டுமொத்த மனிதர்களையும் நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொண்டவர்களை நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொள்ளாத மக்களை நோக்கிப் பேசுகிறான்; முழுமையாக நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கிப் பேசுகிறான். குறிப்பாக, பல இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விளித்துப் பேசுகிறான். அந்த வசனங்களில் மக்களுக்கு அறிவிக்குமாறு பல்வேறு செய்திகளை அல்லாஹ் நபிகளாருக்கு அறிவுறுத்துகிறான். காலங்காலமாக எந்த விசயத்தில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அதற்கு […]

புறம் பேசுவதை செவியேற்பது தடை & புறம் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு… புறம் பேசுவதைச் செவியேற்பது தடைசெய்யப்பட்டதாகும். யார் தடைசெய்யப்பட்ட புறம் பேசுதலை செவியேற்கிறாரோ அவர் அதனை மறுத்து, புறம் பேசியவரை நிராகரிக்க வேண்டும். அவருக்கு இயலாவிட்டால், அல்லது அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சபையை விட்டும் அவருக்கு வெளியேறுவது சாத்தியமானால் வெளியேறிவிடவேண்டும். قال اللَّه تعالى: ﴿وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ ﴾ அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் அவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதனைப் புறக்கணிப்பார்கள்.(அல்குர்ஆன்: 28:55)➚ وقال تعالى: ﴿ […]

இப்ராஹீம் நபி ஒரு ஹனீஃப் முஸ்லிமா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இப்ராஹீம் நபி (அலை) ஹனீஃப் முஸ்லிமா? அப்படியென்றால் என்ன? என்று ஒருவர் ஆச்சரியத்துடன் விழிப்புருவங்களை உயர்த்தி வினா எழுப்பலாம். ஹனஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஷாஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதென்ன ஹனீஃப் முஸ்லிம் என்று கேட்கலாம். ஆம்! அல்லாஹ் திருக்குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களை ஹனீஃப் முஸ்லிம் என்று குறிப்பிடுகின்றான். யூதர்கள், கிறிஸ்துவர்கள், இணைவைப்பவர்கள் ஆகியோர் அவர்களைத் தங்களுக்கென்று உரிமைக் கொண்டாடும்போது அவர்களை இவ்வாறு குறிப்பிடுகின்றான. உலகில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், (முஷ்ரிக்குகள் […]

மறையும், மாற்றமும் – 2

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வில் அளப்பெரும் அளவில் அங்கம் வகித்துள்ளது திருமறைக் குர்ஆன். சூரியன் உதித்தது முதல் இரவு உறக்கம் வரை பல்வேறு நிலைகளில் அவனது வாழ்வு திருமறையோடு பின்னிப்பிணைந்தும், இணைந்தும் உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திலும் திருமறையின் பங்கெடுப்பு, அதன் முக்கியத்துவங்கள் மற்றும் முதன்மைத்துவங்கள் அளவற்றதும், அலாதியானதுமாகும். தொழுகையில் தோள்கொடுக்கும் திருமறை தொழுகைகளில் பலவகைகள் உள்ளன. ஐநேர கடமையான தொழுகைகள், அதற்குரிய முன் பின் சுன்னத்தான தொழுகைகள், இரவுத் […]

வஹீ இறங்கிய புனித மாதத்தில்…. வஹீயை மட்டுமே பின்பற்ற உறுதி ஏற்போம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! புனித ரமளான் மாதத்தில் புண்ணியம் தரும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? திருக்குர்ஆன் பதில் அளிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன்: 2:185)➚ புனிதக் குர்ஆன் அருளப்பட்டதால் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்று அது தெரிவிக்கின்றது. தூர் மலையை உங்களுக்கு மேலாக உயர்த்தி, “நாம் […]

போதையின் பிடியில் சமுதாய இளைஞர்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம்மைப் போல் நமதுபிள்ளைகள்,வருங்காலதலை முறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை. ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி […]

எதிர்ப்பும் ஏகத்துவமும் – அபு சுஃப்யான் (ரலி) அவர்களின் வரலாறு

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தற்பொழுது உலகில் ஏராளமான மதங்களும், சமயங்களும், சித்தாந்தங்களும், பல்கிப்பெருகி விட்டன. என்னதான் பல பிரிவுகள் பிரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று வாதிட்டாலும் அனைவரின் ஆதி மார்க்கம் என்பது இஸ்லாம் தான். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாமாகத் தான் இருந்தது. இன்னும் ஒவ்வொருவரும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கின்றார். அவரவரின் பெற்றோர் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறிவிடுகின்றனர். எனவே இஸ்லாத்திற்குத் தான் உலகின் முதல் மார்க்கம் […]

ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அருள் நிறைந்த ரமலான் மாதத்தில் நல்லறங்கள் அதிகம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் அதிகம் இருக்கும். இதை இன்னும் அதிகப்படுத்த பரவலாக பலவீனமான பொய்யான செய்திகளை ஆலிம்கள் மக்களிடம் பயான் செய்துவருகின்றனர். நல்லறங்கள் செய்வதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகளையே கூறவேண்டும். பொய்யான செய்திகளை மக்களிடம் கூறக்கூடாது என்பதற்கும் மக்கள் இது போன்ற செய்திகளில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகளை தொகுத்து தருகிறோம். நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள் 8312 – […]

நபித்தோழர்கள் எவரையும் பின்பற்றலாமா?

நபித்தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸின் நிலை…. என்தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள். அவர்களில் எவர்களை பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழியடைவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில செய்திகள் நபிமொழி தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. இந்த செய்திகள் அறிவிப்பாளர் வரிசையை கவனித்தும் கருத்தை கவனித்தும் சரியானதா? என்பதைக் காண்போம். மேற் சொன்ன கருத்தை பிரதிபலிக்கும் வகையில் சில வாசகங்கள் கூடுதல் குறைவாக பின்வரும் ஆறு நபித்தோழர்கள் வழியாக இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) ஜாபிர் […]

நாய் வாய் வைத்த பாத்திரத்தின் செய்தியில் முரண்பாடா?

நாய் வாய் வைத்த பாத்திரத்தின் செய்தியில் முரண்பாடா? இன்று நம் கைகளில் தவழுக்கின்ற நபிமொழிகள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏராளமான நபித்தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்த தாபியீன்கள், தபவு தாபியீன்கள் பலரின் வழியாக வந்துள்ளன. ஆதலால், சிலர் அறிவித்த செய்திகள் சிலரின் செய்திகளுக்கு மாற்றமாகவும், முரணாகவும், கூடுதல் குறைவாகவும், புரிதலை விட்டு சற்று தூரமானவைகளாகவும் உள்ளன. இதில் நாம் அனைவரும் அறிந்த, பிரபலமான ஹதீஸான, “நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும்” என்ற […]

மரணத்தின் பிடியில் மனிதன்

மனிதர்களின் சிந்தனைகளிலும் கருத்துகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அரிதாக ஓரிரு விஷயங்களில் தான் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கின்றது. அப்படியான ஒன்று தான், மரணம். உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே தீரும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய மரணம் தொடர்பாக இஸ்லாமிய மார்க்கம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். விதிக்கப்பட்ட மரணம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே தான் நமது வாழ்வு இருக்கிறது. மனித வாழ்வுக்குப் […]

மறையும், மாற்றமும்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற திருக்குர்ஆனுடைய மாண்புகளும், அதனுடைய மதிப்புகளும் எதற்கு என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம். இவ்வேதத்திற்கு ஏன் இன்ன விசேஷங்கள்? ஏன் இவ்வளவு விதரணைகள்? ஏன் அல்லாஹ் ஒரு தூதரை நியமித்து, அவருக்கு ஓர் வேதத்தை நிச்சயித்து அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்? ஒரு சராசரி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்விலும் ஏன் இம்மறை ஒட்டி உறவாடவேண்டும்? குர்ஆன் ஓதுவதாலும், மனனமிடுவதாலும் ஏன் இத்தனை பெரிய நன்மைகளை இறைவன் நமக்குத் […]

இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி) 

எல்லாம் வல்ல கண்ணியத்திற்கு அல்லாஹ்வின் நல்லடியார்களே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான். அவனது வணக்கத்தில் யாரும் பங்கு பெற முடியாது. ஒரு வானவராக இருந்தாலும் நபியாக இருந்தாலும் யாரும் அதில் உரிமை பெற முடியாது. அதே போல அல்லாஹ்வுடைய இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ் விதித்த சட்டங்களையும் யாராலும் உரிமை கொண்டாட முடியாது என்பதை இச்செய்தியில் காண்போம். பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவர் முஃகீஸ் என்று அழைக்கப்படுவார். (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை […]

10) காத்திருந்து கிடைத்த அருட்பேறு

ஆண்டுகள் உருண்டோடின. இரு மனைவிகள் இருந்தும் அவருக்கு பிள்ளைப் பேறு கிட்டாமலே இருந்தது . வயதோ முதிர்ந்து கொண்டு வந்தது. பிள்ளைக்கு ஆசைப்படாத மனிதரும் இந்த பூமியில் உண்டா என்ன?? அவரும் ஒரு பிள்ளைக்கு ஆசைப்பட்டார். “இறைவா! எனக்கு சாலிஹான நல்ல பிள்ளையைத் தா…” என்று பிரார்த்தனை செய்தார். இப்ராஹிமின் பிரார்த்தனைகளை இறைவன் தட்டியதில்லை. அவர் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்டபோது தவிர . அனைவருக்கும் ஒரே நீதி தான் இறைவனிடம். தனக்கு மிகப் பிரியமான மனிதரான இப்ராஹிம் […]

09) ஒட்டும் இல்லை உறவும் இல்லை

ஹாஜரா (அலை) அவர்கள் வந்தவுடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாக ஆனது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் அழைப்பு பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல ஒவ்வொருவராக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். இஸ்லாம் என்பது, தன்னைப் படைத்த இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டுச் சரணடைதல் ஆகும். இறைவனல்லாத மற்ற பொருட்களை விட்டும் முற்றிலும் விலகி விடுதலும் ஆகும் . இறைவனின் நீதியான சட்டதிட்டங்களுக்கு மனிதகுலம் கீழ்படியும் போது சுரண்டல்களில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் மக்கள் விடுதலை அடைகிறார்கள். இறை நம்பிக்கைகள் […]

08) கொடுங்கோல் மன்னனின் பரிசு

பொழுதுகள் வேகமாய்க் கழிந்தன. ஒவ்வொருவரிடமும் இறைவனையும் இறைச்சட்டங்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டும், அநியாயமான விசயங்களை எதிர்த்து பேசியும், நன்மையான விசயங்களை கற்றுத் தந்தும் அவரது நாட்கள் நகர்ந்தன . அவருக்கு தகுந்தாற்ப் போன்றே அவரது வாழ்க்கை துணையும் அமையப் பெற்றார் . அவரது மனைவி பெயர் சாரா(அலை). அவரும் இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கைகளை முற்றாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார் . தன் கணவருக்கு முற்றும் கட்டுப்பட்டவராக , உறுதுணையாகத் திகழ்ந்த அற்புதமான பெண்மணி. பலகாலம் அந்த ஊரில் அவர்கள் […]

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும், தர்மம் செய்யுமாறும் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். (புகாரி: 1040, 1041, 1042, 1043, 1044) ➚ கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை. விஞ்ஞான அடிப்படையில் வெறும் கண்ணால் […]

லுக்மான் அவர்கள் நபியா?

லுக்மான் அவர்கள் நபியா? நபி என்பவர் யார்? இறைவனின் கட்டளைகளை அல்லாஹ்விடமிருந்து வஹீயின் மூலம் பெற்று மக்களிடம் சொல்பவர்தான் நபி (இறைத்தூதர்) என்று சொல்லப்படும். அல்லாஹ்விடமிருந்து வஹீ செய்தியை பெற்றவர், மக்களிடம் ஓரிறைக் கொள்கை பிரச்சாரம் செய்தவர் என்பதற்கு திருக்குர்ஆன் அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஆதாரம் இருக்க வேண்டும். உதாரணமாக: وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ “என்னைத் தவிர வேறெந்தக் கடவுளும் […]

சாபத்திற்குரிய யூதர்கள்…! – 1

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! யூதர்கள் என்பவர்கள் யார்? யூதர்கள் எப்படிப்பட்ட குணநலன் கொண்டவர்கள்? யூதர்களின் மோசமான தன்மைகள் என்ன? என்பது குறித்து தொடர்ச்சியான பல்வேறு விதமான செய்திகளை நாம் அறிந்து வருகின்றோம்.எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் அதில் சில நல்லவர்களும் இருப்பார்கள். அதுபோன்றே யூத சமுதாயத்திலும் நல்லவர்களும் இருக்கலாம். ஆனால் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் விஷயத்திலும் யூத சமுதாயம் மிக மோசமான நிலையைக் கொண்டிருந்ததால் அதைப் பற்றி நாம் […]

ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனி துஆ உண்டா?

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! நம்முடைய காரியங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று இறைவன் திருக்குர்ஆனில் கட்டளையிடுகிறான். وَشَاوِرْهُمْ فِى ٱلْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَوَكِّلِينَ காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 3:159)➚ ஆலோசனை செய்யும் முன் ஏதும் துஆ ஓதவேண்டும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ நாம் தேடிப்பார்த்த வரை […]

“கசகசா” மார்க்கதில் அனுமதிக்கப்பட்டதா?

இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும். இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த […]

நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது?

நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது. இதுபோன்று உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை? மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான். நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை இந்தச் சமுதாயத்துக்கு அத்தாட்சியாக ஆக்கியது போன்று கொடுங்கோல அரசன் ஃபிர்அவ்னுடைய உடலையும் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான். ஒவ்வொரு நபிக்கும் ஒரு […]

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம்

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம் சஹ்லா என்ற நபித்தோழியர் சாலிம் என்பவரை சிறு குழந்தையிலிருந்து வளர்த்துக் கொண்டிருந்தார். சாலிம் தாடி முளைத்த பெரிய இளைஞராக வளர்ந்துவிட்டார். இந்நிலையில் வளர்ப்புக் குழந்தைகள், பெற்றெடுத்த குழந்தைகளின் அந்தஸ்தை அடைய முடியாது. வளர்ப்புக் குழந்தைகளானாலும் அவர்கள் பெரியவராகி விட்டால் அவர்களும் அந்நிய ஆண்களாவார்கள் என்ற சட்டத்தை அல்லாஹ் விதித்தான். இதற்குப் பின் சாலிம் தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதால் தனது கணவர் அபூஹுதைஃபா கோபம் கொள்வதாக சஹ்லா (ரலி) அவர்கள் […]

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று-2

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று ஊர் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்பவரைக் கைது செய்து வந்தார்கள். பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள். மூன்று நாளுக்குப் பிறகு அவர் நபிகளாரால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தைப் பாருங்கள். ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, […]

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று-1

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே […]

இணைவைப்பே தீமைகளின் தாய்!-2

சென்ற இதழின் தொடர்ச்சி… இணைவைப்பே தீமைகளின் தாய்! மதியை மயக்கும் மது இணைவைப்புக் கொள்கையுடைய சித்தாந்தங்கள் வெறும் அர்த்தமற்ற ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன. அவை கண்மூடித் தனமான நம்பிக்கைகள், செயல்கள் போன்றவற்றில் மனிதர்களைத் தள்ளுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றன. ஓரிறைக் கொள்கையான இஸ்லாமோ முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது. ஆன்மீகம் எனும் எல்லையைத் தாண்டி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் துறை களிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில் மனிதனின் ஒழுக்க வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. அவற்றுள் ஒன்றாக, […]

இறை மார்க்கம்  ஓர் எளிய மார்க்கமே!

இறை மார்க்கம் ஓர் எளிய மார்க்கமே! 2:185➚ شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை […]

கடன் அட்டை கூடுமா?(CREDIT CARD?

கடன் அட்டை கூடுமா?(CREDIT CARD)? இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை? பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம். கடன் அட்டைகளை தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு முன்பே பணத்தை கடன் அட்டைகளை […]

தீண்டாமையைத் தகர்த்த இறைவேதம்

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன் சமூகத்தில் ஒரு மனிதன் சக மனிதர்கள் மூலம் சந்திக்கும் கொடுமைகளுள் மிகவும் கொடியது தீண்டாமை. இன்றைய காலத்திலும் நடக்கும் தீண்டாமை சம்பவங்கள் இதற்குப் போதுமான சாட்சிகளாக இருக்கின்றன. சில நபர்கள், ஏதேனும் ஒரு வகையில் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள்; பிற மக்களை இழிவாகக் கருதுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராகப் பல வகையில் அநீதி இழைக்கிறார்கள். இதுதான் தீண்டாமைக் கொடுமைக்கு மூல காரணம். இதன் விளைவாக, கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தாழ்ந்த குல […]

கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்!

கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்! இணை வைப்பு எனும் ஷிர்க் இல்லையென்றால் நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் நன்கு ஆழப் பதிந்து விட்டது. 4:116➚ اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏ தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்) ஹஜ் என்ற வணக்கத்தின் கடமையைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான். 3:97➚ فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏ அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஜகாத்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம் (ஜகாத்) இஸ்லாமியக் கடமைகள் ஐந்து. அவற்றில் ஜகாத்தும் ஒரு கடமையாகும். திருக்குர்ஆனில் அல்லாஹ் தொழுகையைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான். 2:43➚ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ‏ தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! (அல்குர்ஆன்: 2:43)➚ இதுபோன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெறுகின்றன. இதன் அடிப்படையில் மக்கள் ஜகாத் வழங்குகின்றார்கள். ஆனால் அதிலும் மக்கள் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள். […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்! (ரமலான்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்! சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கமாகும். ஆனால் அது நடைமுறையில் கடினமான மார்க்கமாக ஆக்கப்பட்டு விட்டது. மார்க்கம் மக்களுக்கு இரண்டு துறைகளில் சட்ட திட்டங்களையும் வழிகாட்டல்களையும் அளித்திருக்கின்றது. வணக்கவியல், வாழ்வியல். வணக்கவியல் என்றால் உலூ, தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் குறிக்கும். வாழ்வியல் என்றால் திருமணம், விவாகரத்து, மரணம், பாகப்பிரிவினை, வணிகம், விவசாயம் போன்றவற்றைக் குறிக்கும். வணக்கவியல், வாழ்வியலுக்கு இது ஒரு சுருக்கமான விளக்கமாகும். இவ்விரண்டு துறைகளிலும் […]

ரமளானே வருக! வருக!

ரமளானே வருக! வருக! இந்த உலகத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏராளமான நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்வாறு நல்லமல்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து வந்தால் நாளை மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்றும் இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான். மனிதர்களுக்கு, தங்களுடைய வாழ்க்கையில் காலத்தைக் கணக்கிடுவதற்காக சில மாதங்களை இறைவன் வழங்கியிருக்கின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மாதங்களில் சில மாதங்களை புனித மாதமாகவும், சில மாதங்களில் நாம் செய்கின்ற நல்லமல்களுக்கு மேலதிகமான நன்மைகளை […]

5) வழிகேடர்களின் ஆதாரங்கள்

வழிகேடர்களின் ஆதாரங்கள் முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34➚, 7:11➚, 15:29-31➚, 17:61➚, 18:50➚, 20:116➚, 38:72➚ ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும். நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. […]

கொள்கை விளக்கங்கள்

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிக்குப் பங்கில்லை (நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்குமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 3:128)➚ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, […]

நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்

வஹீ எனும் இறைச் செய்தியின் துவக்கம் (நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (அல்குர்ஆன்: 96:1-5)➚ நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் […]

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே! தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். […]

அருள் பொங்கும் மாதமே! வருக!

அருள் பொங்கும் மாதமே! வருக! இறைவனின் மாபெரும் உதவியால் இந்த வருடமும் ரமளான் மாதத்தை முஸ்லிம்களாகிய நாம் அடைந்திருக்கின்றோம். அருள் பொங்கும்மாதம்! பாவங்களைக் கழுவி மனிதர்களை சுத்தப்படுத்துகின்ற மாதம்! அமல்களைஅதிகரிக்கச் செய்கின்ற மாதம்! ‘பொறுமையைப் போதிக்கின்றமாதம்! இறையச்சத்தை ஊட்டுகின்ற மாதம்! வணக்க வழிபாடுகளில்அக்கறை செலுத்தவைக்கின்ற மாதம்! இது போன்ற ஆயிரமாயிரம் குணாதிசயங்களைக்கொண்ட சிறப்பிற்குரிய ரமளானில் நாம் பாதப்படிகளை எடுத்துவைத் திருக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் நம்மிடத்தில்வந்து செல்கின்றது. ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மிடத்தில் வரும்போதும் ஒரு […]

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன ?

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பல நேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ […]

சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?

சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா? இல்லை. இது அத்தஹியாத்திற்கு உரியது. பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்துக் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள். இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்து பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை […]

Next Page » « Previous Page