Author: Kamila

பால்ய விவாகம் கூடுமா?

சிறு வயது ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா? பதில்: ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் குறித்து சில விமர்சனங்களும் உள்ளன. அந்த விமர்சனங்களுக்குக் காரணம் இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும், பால்ய விவாகத்தை […]

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?

நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் கூறும் ‎போது, லுஹர், அஸர் மட்டுமே அங்கு ‎கடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷா ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை என்றும் ‎கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால் ‎சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்ற ‎கட்டத்தில் தொழுகையைக் கணித்துத் […]

இரகசியமாகத் திருமணம் செய்யலாமா?

இரகசியமாகத் திருமணம் செய்யலாமா? வலீமாவை திருமணத்தோடு சேர்த்து கொடுக்கலாமா? திருமணம் செய்வதற்கு உற்றார் உறவினர் தேவையில்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு சாட்சி இருந்தால் போதும் என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) திருமணம் செய்த போது அனைவருக்கும் வலீமா விருந்து கொடுக்கச் சொன்னார்கள். இதை திருமண அன்றே அனைவரையும் அழைத்துக் கொடுத்தால் செலவு, காலம் ஆகியவை குறையும். எனவே இவ்வாறு செய்யலாமா? பதில்: செலவு குறைந்த, […]

அக்கா மகளை மணந்திருந்தால்?

எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இப்போது இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்று உணர்கிறார். இந்த நிலையில் அவர் என்ன செய்வது? பதில்: உடன் பிறந்த சகோதரியின் மகளை மணமுடிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், […]

இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்?

அலி (ரலி) அவர்களை மற்றொரு திருமணம் செய்ய நபிகளார் தடை விதித்தது ஏன்? பதில்: ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. எனினும் இரண்டாம் திருமணம் செய்வதின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இரண்டாம் திருமண விஷயத்தை முதல் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும்போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் […]

வரதட்சணை கேட்பதால் திருமணம் செய்யாமல் இருக்கலாமா?

ஒரு இஸ்லாமியப் பெண் வரதட்சணை வாங்கும் ஆணைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா? நமது சமுதாயத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் இல்லை எனும் நிலைமை இருக்கும்போது அப்படிச் செய்தால் அந்த பெண்ணின் நிலை என்ன? பதில்: வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. மார்க்கத்தில் அனுமதி இல்லாத வழிகளில் எதனையும் அடையக் கூடாது என்பது திருமணத்துக்கும் பொருந்தக் கூடியதாகும். வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் நடக்கும் என்றால் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் […]

14) இறைமறுப்பின் மறுபதிப்பே இஹ்யா

இஹ்யாவில் இடம் பெறுகின்ற கஸ்ஸாலியின் கருத்துக்களை தர்உத் தஆருள் என்று நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அவர் குறிப்பிடுவதாவது: கஸ்ஸாலி வெளிப்படையான, அந்தரங்கமான ஞானத்தைப் பற்றியெல்லாம் தனது இஹ்யாவில் பேசுகின்றார். அப்போது அவர் கொள்கைச் சட்டங்கள் என்ற பாடத்தில் தெரிவிக்கின்ற ஒரு செய்தியை இப்போது நாம் பார்ப்போம். ஒரு சாரார் அல்லாஹ்வின் தன்மைகளிலும் பண்புகளிலும் மாற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். (உதாரணத்திற்கு, “அல்லாஹ்வின் கை என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும்’ […]

13) கிரேக்கத் தத்துவத்தில் இறங்கிய கஸ்ஸாலி

இஹ்யாவைப் பற்றி பல்வேறு மார்க்க அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த ஜூலை இதழில் ஹாபிழ் தஹபீ அவர்களின் விமர்சனத்தையும், விழிப்பூட்டும் எச்சரிக்கையையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியருல் அஃலாமின் நுபலாவில் குறிப்பிடுவதாவது: கஸ்ஸாலி பல்வேறு அறிஞர்களின் கண்டனத்திற்கும், கடிந்துரைக்கும் உள்ளானார். விதியைப் பற்றிய அவரது அறியாமைக் கருத்தும் கண்டனக் கணைகளுக்கு இலக்கானது. “விதியைப் பற்றி சில ரகசியங்கள் உண்டு. அதைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்பது […]

12) அல்லாஹ்வின் ஆற்றலுக்கு அணை போடும் கஸ்ஸாலி

அறிவுக்கடல் கஸ்ஸாலி என்று தமிழக ஆலிம்களில் பாராட்டப்படுகின்ற கஸ்ஸாலி ஷியா சிந்தனைவாதி என்பதைக் கடந்த இதழில் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் கண்டோம். இவர் அறிவுக்கடல் அல்ல! அறியாமைக் கடல் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைப் பார்த்து இருக்கிறோம். மார்க்கம் என்ற பெயரில் அறியாமைக் களத்தில் நின்று இவர் ஆடிய ஆட்டம் சாதாரண ஆட்டமல்ல! சகிக்க முடியாத ஆட்டமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹீக்கு மாற்றாக, தவமிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தனி வஹீ உதிக்கும் என்ற இவரது கதையளப்பை […]

11) உமருக்குப் பதவி வெறியாம் உளறும் கஸ்ஸாலி

இஹ்யாவைப் பற்றி அறிஞர்களின் அடுக்கடுக்கான விமர்சனங்களையும் சாய்வு, சார்பு சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அலாதியான அலசல்களையும் பார்த்து வருகிறோம். கனவில் கஸ்ஸாலியின் நூல்களைக் கண்டேன். அவரது நூல்களின் எழுத்துக்கள் படங்களாகக் காட்சியளித்தன என்று அபூநஸ்ர் அஹ்மத் பின் முஹம்மது பின் அப்துல்காதிர் என்பார் சத்தியமிட்டுக் கூறியதை நான் செவியுற்றேன் என அபூ ஆமிரில் அப்தரீ விமர்சனம் செய்துள்ளார். இதை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரில் தெரிவிக்கின்றார். கஸ்ஸாலியின் நூல்களுக்கு மதிப்பேற்றுவதற்காக மலிவான இந்தக் கனவுக் கதைகளை அடித்து […]

10) குர்ஆன் ஓதாதே! கூறுகிறார் கஸ்ஸாலி!

கஸ்ஸாலியின் இஹ்யாவைப் பற்றியும், அவரது நச்சுக் கருத்துக்களைப் பற்றிய அறிஞர்களின் மேற்கோள்கள் பற்றியும் பல்வேறு நூற்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை நாம் இதுவரை கண்டோம். “குர்ஆன் ஓதுவதிலும், ஹதீஸை எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது; ஏனென்றால் ஞானம் என்ற சட்டையை அணிவதை விட்டும் குர்ஆன், ஹதீஸின் ஈடுபாடு நம்மைத் தடுத்துவிடும்’ என்று கஸ்ஸாலி கூறியதாக காழி அப்துல்லாஹ் என்பார் கூறியதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அவர் கூறுகின்ற இந்தச் செய்தியை நேரடியாக இஹ்யாவிலிருந்து பார்ப்போம். யார் அல்லாஹ்வுக்காக ஆகி விட்டாரோ அவருக்காக […]

9) காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி

இஹ்யாவை பல்வேறு இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனங்களை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இமாம் மாலிக் அவர்கள் மக்களிடம் மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது, இதற்கு இதுதான் விளக்கம், இதற்கு இதுதான் கருத்து, இதைத் தாண்டி வேறு விளக்கமில்லை என்று சொல்லாமல் மிகப் பெரிய பேணுதலையும் பாதுகாப்பையும் மேற்கொண்டார்கள். இதை அவரது ஆதரவாளர்கள் நன்கு உணர்ந்து வைத்திருந்தார்கள். ஆனால் […]

8) பூமியின் பொய் களஞ்சியம் இஹ்யா

அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலா என்ற நூலில் எழுதியிருந்ததைக் கடந்த இதழில் கண்டோம். ஹாபிழ் தஹபீ அவர்களின் பிரம்மாண்டமான, பிரமாதமான இந்தக் குறிப்பு, முஸ்லிம்களின் மாபெரும் தலைவரான இப்னு தாஷிபீன் அவர்கள் சென்ற நேரிய பாதையை மிகத் தெளிவாக விளக்குகின்ற வரலாற்றுப் பதிவாகும். இறையியல், தத்துவவியல் மற்றும் சாபத்திற்கும் கோபத்திற்கும் இலக்கான சூபிஸக் கோட்பாடு போன்றவை எங்கிருந்து வந்தாலும் அந்த பித்அத் […]

7) மனிதனைக் கடவுளாக்கும் மடமைக் கொள்கை

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கஸ்ஸாலியின் “அல்மன்னூன் பிஹா அலா கைரி அஹ்லிஹா’ என்ற நூலை விமர்சனம் செய்யும் போது இப்னு தைமிய்யா அவர்கள் கூறுவதாவது: “தன் சக்திக்கு ஏற்ப மனிதன், இறைநிலைக்கு ஒப்பாவது தான் தத்துவவியல்” என்று சூபிகள் கூறுவது தான் இதுவரை நாம் கண்ட விஷயங்களிலேயே மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். உண்மை, தனித்தன்மை, செயல்பாடுகளில் அல்லாஹ்வுக்கு அடியானை ஒப்பாக்குகின்ற சூபிகளின் இந்த நிலைப்பாட்டில் ஒரு கூட்டம் அவர்களுடன் […]

நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா?

பதில்: நீங்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ […]

சுனாமியும் சோதிடமும்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு நல்ல நேரம் பார்த்துத் திருமணம் நடத்த வேண்டும்; நல்ல நேரம் பார்த்துத் தாலி கட்ட வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வீடு குடிபுக வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வியாபாரம் தொடங்க வேண்டும். இப்படி நேரம் பார்ப்பது எல்லா சமுதாய மக்களையும் ஆட்டிப் படைக்கும் அறியாமையாகும். இதில் தூய முஸ்லிம்கள் மட்டும் விதிவிலக்கு பெறுகின்றனர். […]

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா?

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா? மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டியும், உலக மகளிர் இயக்கம் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தது. கடுமையான, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு அதற்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பெற்று ராஜ்யசபையில் இந்த மசோதா, கடந்த மார்ச் 9 அன்று நிறைவேறியது. ஆனால் இது நாடாளுமன்றத்தில் […]

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..?

நல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா? பதில்: பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம். إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِىَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمْ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு […]

ஞாபக மறதி நோய்க்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையே தீர்வு

நிரூபித்த அமெரிக்க, இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்! மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். இந்த நோய் ஐவேளைத் தொழுகைகளைக் குறித்த நேரத்தில் தொழும் முஸ்லிம்களைத் தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க – இஸ்ரேலிய விஞ்ஞானிகள் […]

சொர்க்கம் பூமியில் தான் உருவாக்கப்படுமா?

சொர்க்கம் வானத்தில் இல்லையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போதும், இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது என்ற காரணத்தினால் நமது கூற்றை சிலர் மறுக்கின்றனர். உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று குர்ஆன் கூறுவதாலும், பச்சை நிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் […]

09) அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது ஏன்?

கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’ விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் […]

8) விதியை வெல்ல முடியுமா?

பின்வரும் கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? ஒரு மனிதரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதர் திரும்பி வர மாட்டார்; அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் செல்கிறார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து நீங்கள் சில தினங்களுக்கு முன் ஏதாவது செய்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் சில ஏழைப் […]

நபியவர்களின் எச்சரிக்கைகளை மறுக்கும் பரேலவிகள்

அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்விற்கு நிகராகவோ, இணையகவோ யாரையும் வைக்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கொள்கையான தவ்ஹீத் (ஏகத்துவம்) ஆகும். அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு நிகர் எவருமில்லை. அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது அல்லது உதவி கோருவது இணைவைப்பு (ஷிர்க்) எனப்படும், இது பெரும் பாவமாகும். தம்மைக் கடவுள் நிலைக்கு யாரும் உயர்த்தி விடக் கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர் […]

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் 15:2➚ இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன. رُبَمَا يَوَدُّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَوۡ كَانُوۡا مُسۡلِمِيۡنَ “தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே” என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன்: 15:2)➚ டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம், கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் […]

பூமி நிலையாக நிற்கிறதா?

இஸ்லாமிய அறிஞரின் அறியாமை சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியில் உலகிற்கு முதலில் கூறியவர் கலிலியோ என்ற அறிஞர் ஆவார். இவர் இத்தாலியில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் பிறந்தார். அதே பிப்ரவரி 15, 2015 ஆம் நாளில் துபாய் சார்ஜாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சவூதி அரேபிய அறிஞர் “பன்தர் அல்ஹைபரி” அவர்களிடம் பூமி சுற்றுகிறதா? அல்லது நிலையாக நிற்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. […]

பணக்காரக் கடவுள்களின் பயன்படாத பொருளாதாரம்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மும்பையில் 200 ஆண்டு காலப் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. யானைமுகக் கடவுளான கணேஷன் கோயில், வளைத்து வளைத்து மாட்டப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 65 காவல் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தக் கண்காணிப்புக் கேமராக்கள்? காவல் காக்கும் அதிகாரிகள்? இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று! 67 மில்லியன் டாலர் மதிப்பிலான 158 கிலோ தங்கக் காணிக்கைகள் இந்தக் […]

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம். நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம் ஆகியவை மனித சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற அளவுகோல் தானே தவிர அவை மனித சமுதாயத்தைக் […]

ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா?

நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒன்றைப் பார்ப்போம். ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா? ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது தொடர்பாக, இலந்தை இலை கலந்த தண்ணீரால் அல்லது கற்பூரம் கலந்த […]

குழந்தை வளர்ப்பு அறிவியலும் இஸ்லாமும்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் இறைவன் நமக்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளில் மிகப்பெரும் அருட்கொடைதான் “நம் குழந்தைச் செல்வங்கள்” ஒவ்வொரு சிறு குழந்தையும் நாளை இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் என்பதைத் தாண்டி, பெற்றோர்களாகிய நம்மை வழிநடத்தி, பாதுகாக்க இருப்பவர்களும் இந்தக் குழந்தைகள்தான். ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு தாய், தந்தையின் கனவுகள் என்பது எண்ணிலடங்காதவை ஆகும். “என் பிள்ளை என்னைவிடச் சிறந்தவனாக இருப்பான்” “என் பிள்ளை நான் சாதிக்காததையெல்லாம் சாதித்துக் காட்டுவான்” […]

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

பள்ளிவாசல்களில் அமர்ந்து உலக விஷயங்களை பேசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளியில் பேசினால் நாற்பது ஆண்டு கால நன்மைகள் அல்லது தொழுகைகள் அழிந்து விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாக ஒரு செய்தியை பல பள்ளிவாசல்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதிகமான மக்களும் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாகவே இன்றளவும் நம்பியுள்ளனர். உண்மையில் இவ்வாறு ஹதீஸ் உள்ளதா? இதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம். الحديث في المسجد يأكل الحسنات كما تأكل […]

நபிகளாரின் ஏழ்மை வாழ்வு

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உணவில் நிறைவில்லாமல் வாழ்ந்த ஒரு தலைவர், ஒருவேளை உணவு போக அடுத்த வேளை உணவுக்குப் போதிய இருப்பில்லாத ஒரு தலைவர், உடையிலாவது ஏகபோகமாகப் பெற்றிருந்தார்களா? என்றால் இல்லை என்பதைத் தான் அன்னாரது ஏழ்மை வாழ்வு எடுத்துரைக்கின்றது. ஒட்டுப் போட்ட ஆடையணிந்த உலகத்தலைவர் عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كِسَاءً مُلَبَّدًا، وَقَالَتْ: فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ […]

அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு புனித ரமலான் மாதத்தை இறைவன் அடையாளப்படுத்தும்போது, ‘ரமலான் மாதம் எத்தகையதென்றால் அந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுகிறான். அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளில் ஒன்று ரமளான் மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கமாக கூறியிருக்கின்றார்கள். அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்று நன்மக்களாகலாம். […]

ரமலான் மாத செய்தி சொன்னால் நரகத்திலிருந்து விடுதலையா?

ரமலான் மாதம் வந்துவிட்டால் பல பொய்யான செய்திகள் மக்களிடம் உலா வரத் தொடங்கின்றன. உண்மையான செய்திகளை விட பொய்யான செய்திகள் மிக விரைவாக மக்களிடம் போய் சேர்ந்துவிடுகின்றன. அவற்றில் ஒன்றுதான் பின்வரும் செய்தி. من بلغ الناس بشهر رمضان حرمه على النار யார் ரமலான் பற்றிய செய்தியை பிறருக்கு அறிவிக்கிறாரோ அவர் மீது நரகம் ஹராமாக்கப்படும். இந்த செய்தி எந்த ஆதாரப்பூர்வமான நூல்களிலும் இடம்பெறவில்லை. பலவீனமான, இட்டுகட்டப்பட்ட செய்திகளை அடையாளம் காட்டும் நூல்களிலும் இது […]

வித்ரு குனூத் தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானதா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நாம் செய்கிற எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும், அது குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ வழிகாட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படையை மார்க்கம் நமக்கு வழியுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக, நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அமைத்து கொள்ள வேண்டும். عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி […]

பிரார்த்திக்கும் முன் நாம் கவனிக்க வேண்டியவை

கண்ணெதிரே இல்லாத சகோதரருக்காக பிரார்த்திப்பதின் சிறப்பு قال اللَّه تعالى: ﴿وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ﴾ அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இறைவா! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! என்று கூறுகின்றனர்.. (அல்குர்ஆன்: 59:10)➚ وقال تعالى: ﴿اسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ﴾ அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) உமது பாவத்திற்காகவும், இறை […]

இறைமன்னிப்பைப் பெற்றிட இறைத்தூதரை மட்டுமே பின்பற்றுவோம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்த உரையில் காண்போம். ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ உறுதிமொழியில் ஒருவர் உறுதியாக இருப்பதே அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அது அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட இந்தக் கொள்கை இவ்வுலகில் வாழும் ஏராளமான மனிதர்களுக்குக் கிடைக்காமல் நமக்குக் கிடைத்திருப்பது இறைவனின் […]

மரணம் பற்றிய மார்க்க நினைவூட்டல்கள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மரணம் என்பது சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய விசயம் அல்ல. அதில் அநேகமான பாடங்களும் படிப்பினைகளும் பொதிந்துள்ளன. மரணத்தை மையப்புள்ளியாகக் கொண்டு மார்க்கத்தில் நிறைய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம். மரணம் எனும் மகத்தான சான்று! ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கு அவனது ஆற்றலைப் புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற விசயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அந்த வகையில் மரணம் என்பது மகத்தான […]

ரமளான் – கூலி தரும் குர்ஆன் மாதம்

ரமளான்: கூலி தரும் குர்ஆன் மாதம் அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த ரமளான் மாதத்தின் பெயரை அல்லாஹ் குறிப்பிடும் அளவுக்கு இதன் சிறப்பு தான் என்ன? அதையும் அல்லாஹ்வே சொல்கிறான். இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் […]

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஒரு நாட்டை அல்லது ஒரு சமுதாயத்தை ஆளுகின்ற சட்டம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த புனிதச் சட்டமாக இருக்கலாம்; அல்லது மக்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்ட மனிதச் சட்டமாக இருக்கலாம். அதே போன்று ஒரு சங்கத்தை, கழகத்தை, அமைப்பை ஆளுகின்ற துணைச் சட்டமாக இருக்கலாம். எந்தச் சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்திற்கு முன் அனைவரும், ஏழை – பணக்காரன், ஆள்பவர் – ஆளப்படுவோர், ஆண் – பெண், நிர்வாகி – உறுப்பினர் […]

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா? ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது. பெண்கள் அணிந்து கொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக நாமும் இதே கருத்தையே சொல்லிக் கொண்டு வருகின்றோம். இந்த நமது நிலைப்பாட்டிற்கு எதிராகச் சில அறிஞர்கள், பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்து வேறுபாடு, நமக்கு முந்தைய […]

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? -2

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? ஆடை தரையில் படாமல் கணுக்கால் வரை உடுத்திக் கொள்வதற்குத் தடையில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த இதழில் கண்டோம். இதற்கு மாற்றமாக, கணுக்காலில் ஆடை படவே கூடாது என்று வாதிடுவோர் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். அவற்றைப் பார்ப்போம். முதல் ஆதாரம் ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். “நான் கீழாடையை எதுவரைக்கும் அணியலாம்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை […]

இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே!

இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே! அதிகாலை கிழக்கு வெளுத்ததிலிருந்து வாய்க்கும் வயிற்றுக்கும் பூட்டு! உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்! அந்தி சாய்ந்து சூரியன் அஸ்தமனமாகும் அந்தப் பொன்னிற மாலை நேரத்தை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிறந்த குழந்தை முகம் பார்த்ததும் பிரசவித்த தாய்க்கு அத்தனை வேதனைகளும் பறந்து விடுவது போல், பட்ட வலிகள் அத்தனையும் அவள் மறந்திடுவது போல், ஒரு நோன்பாளி தான் பட்ட தாகம், பசி அனைத்தையும் நோன்பு துறந்ததும் மறந்து விடுகின்றார். சூடேறிய […]

மலையின்றி மழையில்லை

மலையின்றி மழையில்லை தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகளின் பயன்களையும் அதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ற மதில் சுவர்கள் போன்ற பாதுகாப்புகளையும் கடந்த தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மலைகளின் இன்னபிற பயன்களைப் பார்ப்போம். இந்த மலைகள் உண்மையில் வானிலிருந்து பொழிகின்ற மழைக்கு மட்டுமல்ல! பனிப்பொழிவின் வங்கிகளாகவும் திகழ்கின்றன. தென்மேற்குப் பருவமழை, நிலப்பகுதிகளில் இடைவிடாத அடைமழையை அள்ளிப் பொழியும் அதேவேளையில் மலைகளின் உச்சிகளில் பனிமழையைப் பொழிகின்றது. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம். (அல்குர்ஆன்: 77:27)➚ மலையையும் […]

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? -1

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? கரண்டைக்குக் கீழாக ஆடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாகப் பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது. ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறி வருகிறோம். நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது […]

தவ்ஹீதுக்கு முன் தானம், தர்மம் தவ்ஹீதுக்குப் பின் கஞ்சத்தனமா?

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலர் லோக்கல் (கிராம, நகர, மாவட்ட அளவிலான) தர்ஹாக்களுக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். தர்ஹாக்களுக்குச் சந்தனம் பூசுதல், விளக்கேற்றுதல், போர்வை போர்த்துதல், உண்டியல் காணிக்கை போன்ற வகைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தார்கள். ரீஜினல் அவ்லியா – அதாவது நாகூர், ஏர்வாடி போன்ற மாநில அளவிலான தர்ஹாக்களுக்குப் பயணம் செய்து சென்று தங்கள் கைகளிலிருந்து காசு பணத்தைக் காலி செய்தனர். இந்திய அளவில் அஜ்மீர் போன்ற நேஷனல் அவ்லியா, இன்டர்நேஷனல் […]

இலக்கணமும் தலைக்கனமும்

இலக்கணமும் தலைக்கனமும் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! (அல்குர்ஆன்: 19:30-32)➚வசனங்களில், “நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று ஈஸா (அலை) அவர்கள் கூறும் வாசகத்திற்கு விளக்கத்தைச் சுட்டிக் காட்டி, இந்த விளக்கம் தான் ஈஸா மரணித்து விட்டார் என்ற காதியானிகளின் வாதத்திற்குப் பேரிடியாக அமைந்தது. அந்த விளக்கம் இதோ: ஈஸா நபி மரணிக்கவில்லை (அல்குர்ஆன்: 19:30-32)➚ஆகிய வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி […]

பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்

முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி! பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி! ஊழலற்ற அரசு! உன்னத நாடு! இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. 2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக செய்த சூழ்ச்சிகள் பலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்தமுறை அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, தனது ஆசான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சேர்ந்து களத்தில் இறங்கியது. மோடியின் உயிருக்கு ஆபத்து, இந்தியன் […]

6) அறியாமைக் கடல் கஸ்ஸாலி

அறியாமைக் கடல் கஸ்ஸாலி கஸ்ஸாலியின் ஆக்கங்களில் மண்டிக் கிடக்கின்ற வழிகேடுகள், அசத்தியக் கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் வண்டி வண்டியாக எடுத்து, அவற்றை அலசி ஆய்வு செய்திருக்கின்றார்கள். அவற்றின் சாராம்சக் கருத்துக்களை உங்களின் பார்வைக்குத் தருகின்றோம். தர்உ தஆருலில் அக்ல் வந்நக்ல் – அறிவுக்கும் இறைச்செய்திக்கும் இடையிலான மோதலைக் களைதல் என்ற தனது நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கஸ்ஸாலியின் மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலை விமர்சனம் செய்கின்றார்கள். மிஷ்காத்துல் அன்வார் […]

5) சூபிஸத்தின் சுய வரலாறு

சூபிஸத்தின் சுய வரலாறு சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது? முதல் மூன்று நூற்றாண்டுகளில் சூபிஸம் என்ற வார்த்தை பிரபலமாகவே இல்லை என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள். இப்னு தைமிய்யாவிற்கு முன்பு இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கல்தான் ஆகியோரும் கூறியுள்ளனர். உலக வாழ்க்கையில் நாட்டம் கொள்ளாமல் மறுமை வாழ்க்கையை மையமாகக் கொண்டு வணக்கத்தில் திளைத்த ஏழை எளியவர்களாக நபித்தோழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் சூபிகள் என்று அவர்களில் யாருக்கும் பட்டம் சூட்டப்படவில்லை. எனவே […]

4) சூபிஸம் – ஓர் ஆய்வு

சூபிஸம் – ஓர் ஆய்வு முன்னுரை சூபிஸம்… இது இஸ்லாத்தில் புகுந்துவிட்ட ஒரு புதிய கலாச்சாரமாகும். அதன் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அமைப்பைத் தாக்கி, தகர்க்க வேண்டும்; அதன் ஒருங்கிணைப்பையும் ஒன்றிணைப்பையும் உருக்குலைக்க வேண்டும்; இஸ்லாமிய அமைப்பின் ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டும். முஸ்லிம்களை என்றும் எழ முடியாத ஏமாற்றுப் பேர்வழிகளாக்க வேண்டும். படைப்பு மற்றும் படைப்பினத்தின் இயற்கைத் தன்மைகளைத் தலைகீழாக மாற்றி விடவேண்டும். மனித அறிவு, சிந்தனைகளை முற்றிலும் மழுங்கடிக்க வேண்டும். நீண்ட நெடிய காலமாக, […]

Next Page » « Previous Page