Author: Kamila

மாநபி வழியில் மழைத் தொழுகை

மாநபி வழியில் மழைத் தொழுகை நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம். حدثنا هارونُ بنُ سعيد الأيلي، حدثنا خالدُ […]

செல்வத்தை விட மானம் பெரிது!

செல்வத்தை விட மானம் பெரிது! பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம், மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம், மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம் காணப்பட்டாலும் பொருளாதாரத்தை விட மானம் மரியாதையே முதன்மையான செல்வம் என்று இஸ்லாம் போதிக்கிறது. சுயமரியாதையை விட்டால்தான் பணம் கிடைக்கும் என்றால் பணத்தை அலட்சியம் செய்து விட்டு சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று […]

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்

வணக்கங்களில் மிக முக்கியமானதும், வணக்கங்களில் மிக அடிப்படையானதும் துஆ எனும் பிரார்த்தனையாகும். அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய எஜமானன். அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகளே, அவனுடைய அடிமைகளே என்ற ஓரிறைக் கொள்கைக்கு அடிப்படையாய்த் திகழ்வது பிரார்த்தனைதான். ஒருவன் அல்லாஹ்விடம் மட்டும் தன்னுடைய தேவைகளைக் கேட்கும் போதும், தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோரும் போதும் அல்லாஹ் எஜமானன் என்பதையும், தான் அல்லாஹ்வின் அடிமை என்பதையும் அவன் இறைவனிடம் ஒப்புக் கொள்கிறான். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். وَقَالَ […]

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது. நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! […]

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும்

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும் அற்புத அல்குர்ஆன் வழங்கப்பட்ட அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ஐவேளைத் தொழுகைகளிலும் பள்ளிவாசல் நிரம்பி வழியத் துவங்கி விடும். கடமையான தொழுகைக்கு வருகிறார்களோ இல்லையோ தராவீஹ் என்றழைக்கப்படும் இரவுத் தொழுகைக்கு ஒரு சாரார் வந்து விடுவர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு நிம்மதி இருக்காது. இன்னொரு சாரார் ஆரம்ப மூன்று நாட்கள் வந்து கலந்து கொண்டு ரமளான் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதன் பிறகு மாதக் கடைசியில் […]

தந்தைக்காக உம்ரா மட்டும் செய்யலாமா?

தந்தைக்காக உம்ரா மட்டும் செய்யலாமா? கூடாது. எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகிறது. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். […]

மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்

முன்னுரை இறைவனின் படைப்புகளில் மிகஅற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள். என்னதான் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும் சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறு செய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் மலக்குமார்கள், இறைவனின் கட்டளையை அப்படியே! பின்பற்றி நடப்பவர்கள். இறைவனுக்கு மாறுசெய்யவே! தெரியாதவர்கள். திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப்பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்ய மாட்டார்கள் என வர்ணிக்கின்றான். இவர்கள் இறைவனின் வேலையாள்கள். இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும். மலக்குகள் நமக்காக […]

கடனும் அதன் சட்டத்திட்டங்களும்

முன்னுரை கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தவிட்டால் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மறுமையில் மாபெரும் நன்மையை பெரும் உயிர்தியாகி (ஷஹீத்) உடைய கடன் பாவங்கள்கூட மன்னிக்கப்படாது. அணைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும், கடனைத் தவிர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, ”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே! மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் […]

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்

தூய்மையான உணவுப் பொருட்களைத் தான் சாப்பிட வேண்டும் நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! (அல்(அல்குர்ஆன்: 2:172)➚ சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ 256 பிஸ்மில்லாஹ் என்று கூறி, […]

ஸலவாத்து

ஸலவாத் ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வாசலை அடைக்கின்றார்கள். ”கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். […]

அழைப்புப் பணி

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே! இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகிவிட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே! அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.(அல்குர்ஆன்: 3:103)➚ அழைப்புப் பணியின் சிறப்பு அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து […]

அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்

முன்னுரை இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான். அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள். இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது. அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள் (அல்குர்ஆன்: 83:15)➚ மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண்கூடாக காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாக பார்க்கிறோமோ! அதுபோன்று அல்லாஹ்வை காண்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ்,(புகாரி: […]

ரமளானின் சிறப்புகள்

முன்னுரை மாதங்களில் மிகச் சிறப்பிற்குரிய மாதமாக ரமலான் மாதத்தைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஏனென்றால், அம்மாதத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது. இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த ரமலான் மாதத்தில் இருப்பதை பின் வரும் செய்திகளில் அறியலாம். அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம் ”ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:(புகாரி: 1898) ➚,(முஸ்லிம்: 1956) ➚ ”ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் […]

பெண் பர்தாவைப் பேண வேண்டும்

முன்னுரை பெண்களை தங்கள் ஆடைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும், அந்நிய ஆண்களிடம் தான் மறைக்க வேண்டிய உறுப்பினங்கள் பற்றியும் மேலும், மஹராமான ஆண்கள் யார் யார் என்றும் பின் வரும் செய்திகளில் பார்ப்போம். மஹராமான ஆண்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது […]

அமானிதம் பாழ்படுத்தப்படும்

முன்னுரை மனைவியுடைய நகைகளையும் சொத்துக்களையும் விற்று கடன் வாங்கி கொடுத்தப் பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக்கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலைநிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள். வாங்கியக் கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டுவிட்டு ஓடி ஒழியும் கல்நெஞ்சக்காரர்களை கணக்கில் அடக்கிவிட முடியாது. நிலத்தை விற்பதாகக் கூறி பொய்யான பத்திரத்தைக் காட்டி ஏமாற்றும் நெஞ்சில் ஈரமில்லாத ஆசாமிகள் அலைகடலென திரண்டுவிட்டார்கள். இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் இந்த கயவர்களை பற்றி […]

மது

முன்னுரை மது, சூதாட்டம் போன்றவை மார்க்கம் தடை செய்துள்ளவை. அவை ஒருபோதும் நன்மை தராது. மேலும், மது அருந்தினால் அவர்களுக்கு சாட்டையால் அடித்து துன்புறுத்தவும் மேலும் அதனை தொடர்ந்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் நபி (ஸல்) அவர்கள் கட்டளை விதித்துள்ள அளவிற்கு மிகப்பெரிய குற்றமாகும். மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ”அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” […]

நோன்பின் சட்டங்கள்

முன்னுரை நோன்பின் சட்டங்கள் மற்றும் நோன்பினால் ஏற்படும் நன்மைகள் என்ன என அணைத்து செய்திகளையும் இங்கு தொகுத்து கூறப்பட்டுள்ளது. நிய்யத் செய்தல் நிய்யத் என்பதன் பொருள் மனதால் நினைப்பதாகும். எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி),(புகாரி: 1) ➚ நோன்பை முறிக்கும் செயல்கள் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று […]

எழந்து நிற்பது

முன்னுரை மனிதன் இவ்வுலகின் வாழும் போது ஒவ்வொருவரையும் சார்ந்து வாழ்கின்றான். அவ்வாறு வாழும் போது தனது வசதிக்கேற்றாற்போல் ஒருவருக்கொருவர் எழுந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பணம் இருந்தால் ஒரு மரியாதை! பணம் இல்லையென்றால் அவமரியாதை! நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்காக எக்காலமும் எழுந்து நிற்பதை தடை செய்துள்ளார்கள் என்ற செய்திகள் பின் வருமாறு. மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே மார்க்க அறிஞர்களை கண்ணியப்படுத்துவதற்காக பொது மக்களும் அவர்களுக்காக எழுந்து நிற்கின்றார்கள். இதை ஒரு வணக்கம் என்று […]

அல்லாஹ்வை நேசிப்போம், ஈமானைப் பாதுகாப்போம்

முன்னுரை அல்லாஹ்வை நேசித்தால் தான் ஈமானின் சுவையை உணர முடியும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் பல செய்திகளில் மேற்கோள் காட்டியுள்ளார்கள். அல்லாஹ்வை தொழுதால் தான் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களாக ஆக முடியும். அவ்வாறு அல்லாஹ்வின் நேசத்தை பெற வழிகளை பார்ப்போம். தொழுகை தரக்கூடிய இன்பம் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: […]

வெட்கம்

முன்னுரை பொதுவாக, வெட்கப்படுவது என்றாலே அது பெண்களுக்குரிய செயல் என்றுதான் நாம் அனைவரும் நினைத்திருக்கின்றோம். மாறாக, வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும். மேலும், வெட்க உணர்வைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய செய்திகளைப் பார்ப்போம். அழகும், அசிங்கமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கெட்டவார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(திர்மிதீ: 1897) ➚ […]

போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்

முன்னுரை நபி (ஸல்) அவர்கள் இந்த உலக வாழ்க்கையை மனிதன் எவ்வாறு விரும்பிங்கிறான் என்றும் எவ்வாறு விரும்ப வேண்டுமென்றும் மிக தெளிவாக கூறியுள்ளார். மனிதன் தன் பேராசைக் காரணமாகவே நரகில் செல்கிறான். போதும் என்ற மனம் பெரும்பாலாரிடத்தில் இருப்பதில்லை. செல்வத்தை உபயோகிக்கும் முறை நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ‘எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள். […]

நபிகளாரின் நற்குணங்க பணிவு

முன்னுரை அலாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் எளிமையாகவும், பணிவாகவும் ஒரு போதும் கடுஞ்சொற்களை பேசாது எதிரிகளிடத்திலும் அன்பான வார்த்தைகளாலும் பேசி வந்துள்ளார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கின்றது. மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும், சமூக சேவை […]

பாவமன்னிப்பு

முன்னுரை மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு பரிகாரம் தான் அல்லாஹ்விடம் கேட்கும் பாவமன்னிப்பாகும். அவ்வாறு பாவமன்னிப்பு கேட்பது இறைவனுக்கு மிகவும் பிடித்த செயலாகும். அதற்குரிய நேரங்களையும், வரைமுறைகளை பின் வரும் செய்திகளில் அறியலாம். அல்லாஹ் விரும்பக்கூடியவர்கள் திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” (அல்குர்ஆன்: 2:222)➚ நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன்: 4:31)➚ ”உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற […]

தக்லீத்

முன்னுரை அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் பின்பற்றி வாழ வேண்டும் என்றால், எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்றும் அவர்கள் தான் பின்பற்றுவதற்கு தகுதியானவர்கள் என்றும் நினைக்கும் அளவிற்கு அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த வழிமுறைப் படி நம் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும். முன்னோர்களை நம்பி வழிகெடுதல் “அல்லாஹ் இறக்கி வாய்த்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த […]

கடன் பட அஞ்சுவோம்

முன்னுரை நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்காமலிருக்க அதிகம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். கடன் வாங்கினால் பொய் பேச நேரிடும் என்றும் வாக்குறுதியை மீறுதல் ஏற்படும் என்றும் பயந்துள்ளார்கள் என்பதை பின் வரும் செய்திகளிலிருந்து அறியலாம். கடனை விட்டு பாதுகாப்பு தேடிய உத்தம நபி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல்) (ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா (ரலி) […]

உழைப்பு

முன்னுரை ஒருவர் தான் உழைத்து உண்பதை விட சிறந்த உணவாக ஏதும் இருக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை பின் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நபிமார்களும் தான் வாழ்வில் கடுமையாக உழைத்து தான் வாழ்திருக்கிறார்கள். அவ்வாறு சம்பாதித்ததில் நல் வழியில் செலவிடல் வேண்டும் . சிறந்த உணவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் […]

இறுதி நபித்துவம்

இறுதி நபித்துவம் ”எனக்கும், எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் அழகாக அலங்கரித்து ஒரு வீட்டைக் கட்டி விட்டு ஒரு மூலையில் செங்கல் அளவிற்கு இடத்தை விட்ட ஒரு மனிதனைப் போன்று. மக்கள் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து ஆச்சரியம் அடைந்து ”அந்த செங்கல் பதிக்கப்பட்டு இருக்கக்கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த செங்கல்! நானே நபிமார்களின் முத்திரையானவன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 3535) ➚ இன்னும் […]

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே

வணக்கங்கள் யாவுமே அல்லாஹ் ஒருவனுக்கே!!! தொழுகையை குறிப்பதற்குக் கூட திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸிலும் ”கியாம்” நிற்றல் என்ற பொருள் தரக் கூடிய அரபிச் சொல் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள். (அல்குர்ஆன்: 2:238)➚ மேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக் குறிப்பதற்கு கியாமுல் லைல் (இரவில் நிற்றல்) என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையும் பினவரும் வசனத்திருந்து விளங்கிக் கொள்ளலாம். இரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக! (அல்குர்ஆன்: 73:2)➚ யார் ரமலானில் ஈமானோடும், […]

நம்பிக்கைக் கொண்டவர்களே!

பொறுமையாய் இருங்கள் ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:155)➚ தூய்மையானவற்றை உண்ணுங்கள் நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! (அல்குர்ஆன்: 2:172)➚ பழிக்கு பழி கடமையாகும் நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திர மானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற […]

உயிரினும் மேலான உத்தம நபி

உறவினர்களை விட உயர்ந்த உத்தம நபி ஓர் இறை நம்பிக்கையாளர் எனப்படுபவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருக்க வேண்டிய உறவு சாதாரண தொண்டன், தன்னுடைய அரசியல் கட்சித் தலைவர் மீது கொண்டிருக்கும் உறவைப் போன்றதல்ல! அவனது தாய், தந்தையர், மனைவி மக்கள் மற்றும் உலக மக்களில் யார் மீது கொண்டிருக்கும் உறவு, அன்பு, பாசத்தை விடவும் நபி (ஸல்) அவர்கள் மீது கொள்ள வேண்டிய அன்பு அழுத்தமான ஒன்றாக இருக்க வேண்டும். இதை அல்லாஹ் தனது […]

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

முதுமை ஒரு பலவீனம் முதுமை என்பது மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு பலவீனமாகும். முதுமையை எட்டியவர்கள் சாப்பிட முடியாமல் நடக்க முடியாமல் தன்னுடைய இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் மூளை குழம்பி, முழுக்க முழுக்க ஒரு குழந்தை எப்படி பெற்றோரைச் சார்ந்து வாழுமோ அது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். நபிகளாரின் பிரார்த்தனை இதனால் இவர்களும் சிரமப்படுவதோடு மற்றவர்களும் இவர்களுக்காக சிரமப்பட வேண்டிய நிலை உருவாகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தள்ளாத வயதைத், […]

இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை

முன்னுரை இறந்தவர்களுக்காக உயிருள்ளவர்கள் சில நன்மையான காரியங்களைச் செய்வதால் இறந்தவருக்கு நன்மை ஏற்படுகிறது. அந்த நன்மையான காரியங்கள் எது எதுவென்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். நபியவர்கள் காட்டித் தந்த விஷயங்களைத் தாண்டி நாமாக எதையும் செய்யக் கூடாது. இறந்தவருக்காகத் தர்மம் செய்யலாம் இறந்தவருக்காக உயிருடன் இருப்பவர் தர்மத்தைச் செய்தால் அதனால் இறந்தவர் பலனடைவார். இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”என் தாய் திடீரென இறந்து விட்டார். […]

நல்லிணக்கம்

நல்லிணக்கத்தை போதிக்கும் வசனம் நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் […]

அமானிதம்

முன்னுரை இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் அமானிதத்தோடு தான் வாழ்கின்றனர். ஆனால், அதனை பெரும்பாலோனோர் மதிப்பதே இல்லை. அதனை பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும். அமானிதத்தை எவ்வாறு பேண வேண்டும் என்று பின் வரும் ஹதீஸ்களில் காண்போம். அமானிதம் பாழ்படும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் […]

முகமன் கூறுதல்

முன்னுரை ஸலாம் கூறுவதன் சிறப்பையும், நன்மையையும் நாம் அறிந்தால் அனைவருக்கும் இதனை சொல்லி கொண்டே இருப்போம். பின் வரும் செய்திகளில் ஸலாம் கூறுவதன் நன்மைகளையும், எங்கு, எப்படி கூற வேண்டும்? கூறக் கூடாது ? என்பன செய்திகளை பார்ப்போம். வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறுதல் ஒருவருடைய வீட்டிற்கு நாம் செல்லும் போது அவர் எந்த நிலையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம். பெண்கள் பெரும்பாலும் வெளியே தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில் மறைக்கமாட்டார்கள். தன்னுடைய […]

ஏகத்துவமும் சோதனைகளும்

முன்னுரை எப்போது நாம் சத்தியத்தை எடுத்துரைக்கிறோமோ அன்று முதல் நமக்கு சோதனையும் தொடரும். அவனின் மார்க்க பட்டருக்கு தகுந்தார் போல் சோதனைகளின் அளவு இருக்கும் என்ற செய்தியை பின் வரும் ஹதீஸ்களில் இருந்து பார்ப்போம். அதிகமாக சோதிக்கப்பட்டவர்கள் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ”நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு […]

கப்ரில் உள்ளவர்கள் செவியேற்பார்களா?

முன்னுரை இவ்வுலகில் வாழும் பெரும்பாலான மக்கள் திருக்குர் ஆனில் கூறப்பட்டது போல் பெரியார்களையும், முன்னோர்களையும் பின் பற்ற கூடியவர்களாக வாழ்ந்து நரகத்தை நோக்கி செல்கின்றனர். அவர்களின் அறியாமையே இதற்கு காரணம். பின் வரும் செய்துகளை உணர்ந்து அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கக்கூடிய செயலை கைவிட வேண்டும். முறையிட தகுதியானவன் திருக்குர்ஆன் கூறுகிறது. அனைத்தையும் செவியேற்கின்ற வல்ல இறைவனிடம் மட்டும் நம்முடைய தேவைகளை முறையிட வேண்டும். நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது!(அல்குர்ஆன்: 27:80)➚ உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் […]

பாவத்தை கழுவும் தொழுகை

முன்னுரை முஸ்லிமான ஒவ்வொருவருக்கும் தொழுகை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த தொழுகையின் முக்கியத்துவத்தையும், மேலும் தொழாதவனின் நிலைப் பற்றியும் காணலாம் . தொழுகையின் முக்கியத்துவம் ”உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். ”அவரது அழுக்குகளில் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள். ”இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் […]

வீதியின் ஒழுக்கங்கள்

முன்னுரை நாம் நம் வீடு அல்லாமல் பிற வீடுகளுக்கு செல்லும் போது ஸலாம் கூறி அனுமதி கோராமல் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள், மற்ற வீடுகளுக்கு செல்லும் போது பேண வேண்டிய ஒழுக்கங்களை சரி வர கூறியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் செயல் பட வேண்டும். வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்தி செல்ல வேண்டும் (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது […]

செல்வம் ஒரு சோதனையே!

முன்னுரை இவ்வுலகில் பணம் சம்பாதிப்பது என்பது தான் பெரும்பாலானோரின் பிராதான இலாக்காக இருக்கிறது. இஸ்லாம், செல்வத்தைப் பற்றியும், அதனால் வரும் அபாயங்களையும் பற்றியும் அழகாக கூறுகின்றது. கவர்ச்சித் தருபவை பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகளிடம் உள்ளது. (அல்குர்ஆன்: 3:14)➚ உங்களின் மக்கட் […]

ஜின்களை வசப்படுத்த முடியுமா?

முன்னுரை இவ்வுலகில் ஜின் என்றாலே அது ஒரு பேய், பிசாசு போன்று மக்கள் சித்தரித்துள்ளனர். மனிதர்களில் சிலர் ஜின்னை வைத்து பிளப்பும் நடத்தி வருகிறார்கள். ஜின் என்ற ஒன்று உள்ளதாக திருக்குர் ஆனில் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதனை நம்மால் பார்க்கவே முடியாத நிலையில் எவ்வாறு அதனை வைத்து நல்லது, கெட்டதை நடத்த முடியும்? ஜின்னை பற்றி நபிகளாருக்கு, திருக்குர் ஆனும் கூறியுள்ளதை காண்போம். மனிதர்களை போன்றே ஜின்களும் உள்ளனர் இறைவனுடைய படைப்பில் ஜின்கள் என்று ஒரு […]

பார்வையைப் பாதுகாப்போம்

முன்னுரை இஸ்லாம், பார்வைகளைப் தாழ்த்தி கொள்ளுதலை பற்றி மிக துல்லியமாக எடுத்துரைக்கிறது. ஏனென்றால் பார்வைகளால் பல அபாயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு செயலை செயல் வடிவில் செய்தால் மட்டும் தான் பாவம் என்று நினைக்கிறோம். மாறாக, ஒருவன் தன் பார்வையால் ஒரு அந்நியப் பெண்னை பார்ப்பது கூட கண்ணால் செய்யக் கூடிய விபச்சாரமாகும். மேலும், பார்வையால் செய்யக் கூடிய பாவங்கள் பின் வருமாறு. கண்ணும் நாவும் செய்கின்ற விபச்சாரம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது […]

அண்டை வீட்டாரின் உரிமைகள்

முன்னுரை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதரை பற்றி தெரிய வேண்டுமானால் அவருடைய அண்டை வீட்டாரிடம் கேட்டால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறும் அளவிற்கு அண்டைவீட்டார்களின் முக்கியத்துவங்கள் பின் வருமாறு. மூன்று வகை அண்டை வீட்டார் ”அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர். 1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டைவீட்டார். அவருக்கு அண்டைவீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது. 2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமான அண்டைவீட்டார். […]

பெண்களே! ஒழுக்கம் பேணுவோம்!

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதரிகளே! இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. பெண்கள் பேண வேண்டிய பல்வேறு ஒழுக்கங்களை மார்க்கம் நமக்கு கற்றுத் தருகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் தற்போது காண்போம்! அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம் وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ… தமது பார்வைகளைத் […]

மூடநம்பிக்கைகள் நுழைந்துவிட்ட முஹர்ரம் மாதம்!

முஹர்ரம் மாதம் إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ سورة التوبة வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் […]

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா? ஸீனத், அல்இர்ஷாத் மகளிர் கல்வியகம், மேலப்பாளையம் தமிழகத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏகத்துவம் என்ற ஜோதி சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. எங்கு நோக்கினும் ஆர்ப்பரிக்கும் ஏகத்துவ சொந்தங்கள். அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம் மற்றும் சமுதாய […]

பெருமானார் புன்னகை பூத்த பொழுதுகள்

இறைவனால் மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளில் ஒன்று தான் ‘சிரிப்பு’ என்பதாகும். ஒருவருடைய மனதில் மகிழ்ச்சியும், இன்பமும் ஏற்படும்போது அது அவரது சிரிப்பின் மூலமாக வெளிப்படுகின்றது. இது இயற்கையாகவே நிகழக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட, தானே மனிதனைச் சிரிக்க வைப்பதாக இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறிக் காட்டுகின்றான். وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ‏ அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். (அல்குர்ஆன்: 53:43)➚ ஆக, அழுகை, சிரிப்பு ஆகிய உணர்வுகள் சுழன்று வரும் வகையிலேயே அல்லாஹ் […]

வாக்குமீறுதல்

வாக்குமீறுதல் آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ. நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 33) ➚ இன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ […]

கஞ்சனும், வள்ளலும்

கஞ்சனும், வள்ளலும் مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا فَأَمَّا الْمُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلاَّ سَبَغَتْ ، أَوْ وَفَرَتْ – عَلَى جِلْدِهِ حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ وَأَمَّا الْبَخِيلُ فَلاَ يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلاَّ لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا فَهُوَ يُوَسِّعُهَا ، وَلاَ تَتَّسِعُ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஞ்சனுக்கும், […]

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ. அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் […]

Next Page » « Previous Page