முன்னுரை மனைவியுடைய நகைகளையும் சொத்துக்களையும் விற்று கடன் வாங்கி கொடுத்தப் பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக்கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலைநிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள். வாங்கியக் கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டுவிட்டு ஓடி ஒழியும் கல்நெஞ்சக்காரர்களை கணக்கில் அடக்கிவிட முடியாது. நிலத்தை விற்பதாகக் கூறி பொய்யான பத்திரத்தைக் காட்டி ஏமாற்றும் நெஞ்சில் ஈரமில்லாத ஆசாமிகள் அலைகடலென திரண்டுவிட்டார்கள். இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் இந்த கயவர்களை பற்றி […]