Author: Trichy Farook

சொத்தைவிட கடன் அதிகமாக இருந்தால்

இருக்கும் சொத்தை விட , இறந்தவர் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் அதிகமாக இருந்தால், இருக்கும் சொத்தை வைத்து முதலில் கடனில் ஒரு பகுதியை செலுத்தி விட்டு, வாரிசுதாரர்கள் அந்தக் கடனின் மீதிக்கு பொறுப்பேற்க வேண்டும். ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11-12➚வது வசனங்களில், இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், […]

சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால்…

சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால், இருக்கும் சொத்து முழுவதையும், இறந்தவரின் மனைவியோ அல்லது மகனோ மட்டும் எடுத்துக் கொள்ளலாமா? கூடாது. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். அல்குர் ஆன் 4:7➚ அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் […]

மாற்றுமத ஆணை திருமணம் செய்யலாமா?

ஆணின் கேள்வி நான் ஒரு முஸ்லிம் பெண். நான் விரும்பும் ஒரு இந்து ஆணை திருமணம் செய்யலாமா? பதில் இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. இணைவைப்பவர்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது. ‘(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் […]

நஜ்ஜாஷி மன்னர் திருமண விருந்து கொடுத்தாரா?

நபிகள் நாகயமும் அன்னை உம்மு ஹபீபா அவர்களும் திருமணம்செய்த போது, உம்மு ஹபீபா அவர்களின் தந்தை அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் தானாக முன்வந்து வலீமா விருந்து கொடுத்தார்கள். இந்தச் செய்தி ஹாகிம் தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்பரா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ42 ல் […]

காதலிக்கலாமா ?

காதலிக்கலாமா? காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திரும்ணமே செய்ய வேண்டும். இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம். காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் […]

நான் காதலிக்கும் பெண்ணை, பெற்றோர் மறுக்கின்றனர்

மகனின் புகார் நான் காதலிக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை, எனக்கு திருமணம் செய்து வைக்க, எனது பெற்றோர் மறுக்கின்றனர். நான் என்ன செய்வது? தீர்வு உங்களது விருப்பத்தை பெற்றோர்களுக்கு முடிந்த வரை புரிய வையுங்கள். அதைத் தாண்டி, நீங்கள் விரும்பக் கூடியவர் மார்க்க அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று அவர்கள் மறுத்தால் அதை மீறுவது, உங்கள் மீது குற்றமாகி விடும். அவ்வாறு இல்லாமல் இன வெறி, குல வெறி போன்ற காரணத்துக்காகவோ, பெண்வீட்டார் பொருளாதாரத்தில் ஏழை […]

ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை

உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும் போதும் வீட்டில் தூங்கும் போதும் […]

மனைவி இல்லை, பிள்ளை இல்லை, சகோதரர்களை கவனித்து பெற்றோரின் பங்கு

இறந்தவருக்குப் பிள்ளைகள், மனைவி இல்லாத நிலையில் இறந்தவருக்குப் சகோதரர்கள் இல்லாவிட்டால், தந்தைக்கு மூன்றில் இரண்டு பாகம் (2/3) தரப்பட வேண்டும். தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3) தரப்பட வேண்டும். يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ […]

மரண சாசனம் – வஸிய்யத் என்றால் என்ன?

வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும். வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு அறவே வஸிய்யத் செய்யலாகாது. பங்கு பெறாதவர்களுக்கு வஸிய்யத் செய்யலாம். வாரிசுதாரர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது: (மரண சாஸனத்தின் மூலம் வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன்: 4:12)➚ எனவே வாரிசுகளுக்குக் கிடைக்க வேண்டிய […]

நிறைய வேண்டாம்! பரக்கத் போதும்!

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! கோடான கோடி செல்வம் இருந்தாலும், இறைவன் அதில் பரக்கத்தை நீக்கி விட்டால் அந்த செல்வத்தைக் கொண்டு எதனையும் சாதிக்க இயலாது. மிகக் குறைவான செல்வம் இருந்தாலும் அதில் இறைவனது பரக்கத் இருந்தால் அது கோடி ரூபாய் செய்யும் வேலையை சுலபமாக செய்துவிடும். இதுவே மறைமுகமான அபிவிருத்தியாகும். இந்த மறைமுகமான அபிவிருத்தியாக இருக்கிற பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த சிறிய உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம். விரலை சூப்புதல் முஸ்லிம்களில் […]

அருள் வளம் (பரக்கத்) பெறுவது எப்படி?

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களாகிய நமக்கு இறைவன் வழங்கி இருக்கிற அருட்கொடைகளில் ஒன்றான பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம். அபிவிருத்தியின் அவசியம் இவ்வுலுகில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் […]

இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்குத்தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொருத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகாமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி, சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனையையும் சீர்படுத்தக் […]

தொழுகையைப் பேணுவோம்

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. உள்ளத்தின் அசுத்தத்தை நீக்கும் أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، […]

என்னைச் சார்ந்தவனில்லை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் […]

செல்ஃபி பைத்தியங்கள்

‘செல்பி’ எனப்படும் சுய புகைப்படம் எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல அமெரிக்க செய்தி நிறுவனமான ‘வொஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது. ‘செல்பி’ அறிமுகமான புதிதில் வர்த்தக நிலையங்கள், பூங்கா, சுற்றுலாத்தளம் என்று பல்வேறு இடங்களில் ‘செல்பி’ எடுத்துக் கொண்ட இள வயதினர், அதிக “Like” குகளுக்கு ஆசைப்பட்டு ரெயில் கூரை, உயரமான மலை, என்று ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், ‘செல்பி’ உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. […]

கழிவறைகளிலும் இனி இன்டர்நெட்

பீஜிங் நகரில் இலவச வை-ஃபை வசதியுடன்கூடிய நூறு நவீன கழிவறைகளை பீஜிங் மாநகராட்சி அமைக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அங்கு இந்த ஆண்டுக்குள் இலவசமாக வை-ஃபை இண்டர்நெட் வசதியுடன் கொண்ட நூறு நவீன கழிவறைகளை அதிகளவில் கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த வை-ஃபை கழிவறைகள் நிறுவப்படுகிறது. இதுதவிர, இந்நகரத்தில் ஆங்காங்கே ஏ.டி.எம் இயந்திரங்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், […]

மாடு வளர்க்கும் எறும்புகள்!

அசுவினி என்றழைக்கப்படும் எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன. இவ்வசுவினிகளை பாதுகாக்க, உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. இவை தேனெறும்புகள் (honey ants) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வேலை அசுவினிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும், அவற்றிற்கு உணவளிப்பதும், அவை இடும் முட்டைகளை பாதுகாத்து […]

செயற்கை நீர் சாத்தியமா:

செயற்கையாக நீரை உருவாக்குவது மிகவும் கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக் கூடியவை. ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடியவில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்சிஜன், இரட்டை அணு வாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு […]

பாக்டீரியாவும் நன்மைக்கே

குடிநீரில் எண்ணற்ற நுண்ணியிரிகள் (பாக்டீரியா) காணப்படுகின்றன. இதனால் தான் நீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குடிநீர் குழாய்களில் தான் இந்த நுண்ணியிரிகள் அதிகம் காணப்படுகின்றன. இவை குழாய்களின் உள்ளே ஒரு மெல்லிய படலத்தை (பயோபிலிம்) உருவாக்கி, நீர் மாசு படாமல் காக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்களைவிட, நுண்ணயிரிகளின் உதவியால் குழாய்களில் தான் குடிநீர் அதிகம் சுத்தம் செய்யப்படுகிறது. இது, முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைய ஆராய்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக ஒரு மில்லி லிட்டர் […]

மனித மூளையின் கொள்ளளவு

முன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.ஒரு பெடாபைட் என்பது சுமார் […]

தூங்கும் மாணவர்களை கண்டுபிடிக்கும் சாதனம்

கெடுபிடிகளுக்கு பேர் போன சீனாவில், கல்லுாரி வகுப்பறைகளில், பின் வரிசையில் அமர்ந்து துாங்குவது இனிமேல் சாத்தியமில்லாமல் போகலாம். சீனாவிலுள்ள சிசுவான் பல்கலைக்கழகத்தின் கணினி துறை பேராசிரியரான வெய் சியாவோயாங், தன் மாணவர்களுக்கு போரடிக்கிறதா என்பதை கண்டுபிடிக்க, முக பாவங்களை அடையாளம் காணும் மென்பொருளையும், முகத்தைப் படிக்கும் கருவியையும் உருவாக்கி இருக்கிறார். இந்த மென்பொருள், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் முகங்களை முகப் படிப்பான் மூலம் கண்காணிக்கிறது. வகுப்பு நடக்கும்போது மாணவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, குறிப்பிட்ட […]

கண் அறுவை சிகிச்சை நடத்திய ரோபோ

ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை நிறைவேற்றி […]

தடை செய்யப்பட்ட சம்பாத்தியமும் அதனால் ஏற்படும் தீங்குகளும்!

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது. இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை திரட்டுவதிலும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றது. தடை ஏன்? எல்லையை மீறும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மைக்காகவே இதுபோன்ற எல்லைகளையும் […]

பிறர் மானம் காப்போம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! தன்மானம் பேணச் சொல்லும் இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய மானத்தையும், […]

அல்லாஹ்வை நேசிப்போம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகத்தில் வாழும் போது, ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை. அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தைத் தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை. அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை. இந்த […]

எலும்பை ஒடித்துவிடாதே

பெண் என்றால் இப்படித் தான் பெண்’ – இந்தச் சொல்லுக்கு எத்தனையோ விதமான பொருள்கள் நடைமுறையில் வழங்கப்படுகின்றது. அமைதியின் பிறப்பிடம்; அன்பின் உறைவிடம்; சகிப்புத் தன்மையின் உச்சக்கட்டம்; இன்னும் இதுபோன்று பல விளக்கங்களுக்கு அந்த ஒற்றை வார்த்தை இலக்காகிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் மேற்கண்ட விளக்கங்களில் ஒன்று கூடப் பொருந்தாத நிலையில்தான் நிகழ்காலப் பெண்களின் வாழ்க்கைத் தரம் அமைந்துள்ளது. இத்தகையவர்களை மனைவிகளாக பெற்ற கணவர்கள், அவர்களின் தவறுகளை மன்னித்து, மனைவியிடம் நல்ல முறையில் நடக்க வேண்டும். சிறுசிறு […]

மறப்போம்! மன்னிப்போம்!

தவறு இல்லாதவர் யார்? மனிதன் இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட போதே அவன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். كُلُّ بَنِي آدَمَ يُخْطِئُ بِاللَّيْلِ وَالنَّهَارِ ஆதமின் மக்கள் அனைவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கின்றனர் என்பது நபிமொழி. (அஹ்மத்: 21420, 20451) ➚ மனிதன் தவறு செய்பவனாகப் படைக்கப்பட்டுள்ளதால், மனிதர்களிடம் ஏற்படும் தவறுகளை மன்னிக்கும் பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும். அமல்கள் சமர்பிக்கப்படும் நாள் تُعْرَضُ الْأَعْمَالُ فِي كُلِّ يَوْمِ خَمِيسٍ وَاثْنَيْنِ، فَيَغْفِرُ اللهُ عَزَّ وَجَلَّ […]

அபயம் பெற்ற அற்புத பூமி

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைத்தூதரின் பிரார்த்தனை மக்கள் விரும்பிச் செல்கின்ற இடங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் எங்குமே பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டத்தை மக்காவில் உள்ள இறையில்லமான கஃபாவில் நம்மால் காண முடிகிறது. மக்கள் உள்ளங்களை ஈர்க்கும் புனிதத் தலமாகவும் பாதுகாப்பு மையமாகவும் இதை ஆக்குமாறு […]

இறைவனின் மன்னிப்பு வேண்டுமா?

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் கேட்கும் துஆக்களில் மிகவும் முக்கியமானது இறைவா! என்னை மன்னித்துவிடு!” என்பதுதான். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை ஏழை முதல் பண்காரன் வரை எந்த பாகுபாடுமின்றி அனைவரும் கேட்டாக வேண்டும். முதல் நபி ஆதம் (அலை) முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) வரை அனைவருமே இவ்வாறு கேட்டவர்கள் […]

அணுவளவு நன்மை செய்தவரும்…

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எவ்வளவு சிறிதாயினும் காண்பார் இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏ وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ அணு அளவு நன்மை செய்தவர் அதைக் […]

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

நாம் மறுமைக்காக வாழும் சமுதாயம் ஆடம்பர வாழ்க்கையில் ஆட்பட்டு கிடக்கும் இன்றைய சூழலில் பொருளாதராத்தை ஈட்ட வேண்டிய நிர்பந்தத்தில் அனைத்து மக்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய மக்களின் நிலையோ இதில் சற்று மாறுபட்டு உள்ளது. பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்த கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கை மேம்படுத்த கடுமையாக உழைக்கிறார்கள். இதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே நேரத்தில் இவ்வுலுக […]

நாணம் இல்லாவிடில் நாசம் தான்

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் […]

தவிர்ந்து கொள்ள வேண்டிய தீயபண்புகள்

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைநம்பிக்கை கொண்ட மக்களிடையே இருக்கக் கூடாத பல்வேறு தீய பண்புகளை இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. இந்த தீய பண்புகளின் காரணமாக மனிதன், தன்னை சுற்றி வாழும் மக்களுக்கு இடையூறு அளிப்பதோடு, தன்னுடைய மறுமை வாழ்விற்கும் வேட்டு வைக்கிறான். அதில் குறிப்பாக, கஞ்சத்தனம் இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் […]

உறவை வெறுத்தவன் இருந்தால், ரஹ்மத் இறங்காது

உறவினரை வெறுத்தவன் இருக்கும் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் – அல்அதபுல் முஃப்ரத்-63 இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பொய்யர் ஆவார். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

நபிகளாரின் நற்குணங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது. தன்னடக்கம் اسْتَبَّ رَجُلاَنِ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ قَالَ […]

முதல் நட்பு

முதல் நட்பு உறவு என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ நட்பு என்ற உறவு அனைவருக்கும் இருக்கும். இது ஒரு வித்தியாசமான உறவு. நம் மீது ஒரு வித அன்பு வைத்துப் பழகி, நம் இன்ப துன்பங்களை பங்கிட்டுக் கொள்ளும். இளமை முதல் முதுமை வரை பல கோணங்களில் இந்த நட்பு வரும். இந்த நட்பின் மூலம் பல உதவிகள் பெற்று முன்னேறியவர்கள் பலர். பொதுவாக தாய் தந்தை, அண்ணன் தம்பி, […]

தலாக் விட்டு 7 மாதம் ஆகிவிட்டது. மீண்டும் சேரலாமா?

மனைவியின் புகார் ? எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். […]

அழைப்புப் பணி செய்வோம்!

அழைப்புப் பணியே அழகிய பணி! وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? (அல்குர்ஆன்: 41:33) அழைப்புப் பணியை, சிறப்பு மிக்க பணி என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ […]

வாழ்க்கையே வணக்கமாக….

துறவுடன் அறத்தைச் சேர்த்து, துறவறம் என்று கூறி, தமிழ் மொழியில் துறவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். உலகமெங்கும் உள்ள மதங்களில், மார்க்கங்களில் துறவுக்கு ஒரு மரியாதை இருப்பதால் தான் துறவறம் என்று கூறி தமிழ் மக்கள் அழகு பார்க்கின்றனர். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரை துறவுக்கு அரைக் காசுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல! அதற்கு அனுமதியும் கிடையாது. 5063- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، أَخْبَرَنَا حُمَيْدُ […]

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக […]

வாய் விட்டுச் சிரிப்போம்!

இஸ்லாமிய ஒழுங்குகள் சிரிப்பின் ஓழுங்குகள் சிரிப்பின் ஒழுங்குகள் பற்றி நமக்கு சில வரையறைகளை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது அவற்றை நாம் அறிந்து நடக்கவேண்டும். நபிகளாரின் வாழ்விலும் அதுபோன்ற பல நிகழ்வுகள் நடத்துள்ளது அவற்றையும் நாம் இந்த உரையில் காணலாம். சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள் நபியவர்களைச் சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்து கொள்ளலாம். […]

இஸ்லாத்தை ஏற்றவரை தடுத்ததற்காக இறைவசனம் இறங்கியதா?

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 64:14)➚ ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவரது மனைவி, மக்கள் அவரைத் தடுத்ததாகவும், அதைக் குறிப்பிட்டே இந்த வசனம் அருளப்பட்டதாகவும் திர்மிதி என்ற நூலில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.

சபித்து குனூத் ஓதியபோது வசனம் இறங்கியதா?

கீழ்காணும் ஹதீஸ் ஏற்புடையது அல்ல நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லி விட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்” என்ற (3:128➚) வசனத்தை அருளினான். அறிவிப்பவர்: […]

08) உணவுகள் சட்ட சுருக்கம்

உண்ணக்கூடாதவைகளில் சில. 1) தாமாகச் செத்தவை (முறையாக அறுக்கப்படாமல் செத்தவை. சாகடிக்கப்பட்டவை) 2) கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும் 3) அடிப்பட்டுச் செத்ததும், 4) கீழே விழுந்து செத்ததும் 5) முட்டப்பட்டுச் செத்ததும், 6) வன விலங்குகளால் சாப்பிடப்பட்டுச் செத்ததும் உண்ண ஹலாலான பிராணி செத்துவிட்டால், வேறு வகையில் பயன்படுத்தலாம். (உதா, ஆட்டின் தோல்) உண்ண ஹராமாக்கப்பட்ட பிராணியை, கொழுப்பு போன்ற அதன் பிற பாகங்ளை விற்கவும், வேறு வகையில் பயன்படுத்தவும் கூடாது. (உதா, பன்றியின் கொழுப்பு) வேட்டை […]

07) ஜனாஸா தொழுகை சட்ட சுருக்கம்

ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும் இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும். ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் பெண் ஜனாஸா வயிற்றுக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் உளு அவசியம், கிப்லாவை முன்னோக்க வேண்டும் ருகூவு, ஸஜ்தா, அத்தஹியாத்து கிடையாது நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூறலாம் முதல் தக்பீருக்கு பின், சூரதுல் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டும் சத்தமாக அல்லது […]

06) சத்தியம் சட்ட சுருக்கம்

சத்தியம் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்யவேண்டும் மற்றதின் மீது சத்தியம் செய்தால், லாயிலாஹ இல்லல்லாஹ் கூற வேண்டும் வாக்குறுதி அடிப்படையிலான சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம் சத்தியம் செய்தவர் இயலாவிடில், முறிக்கலாம். முறித்தால் பரிகாரம் செய்யவேண்டும். இன்ஷா அல்லாஹ் சேர்த்துக் கூறினால் பரிகாரம் இல்லை பைஅத் என்றால் உறுதிமொழி என்று பொருள் தொழுகை, நோன்பு போன்ற மார்க்க பைஅத் நபியிடம் மட்டுமே செய்யவேண்டும் கொடுக்கல், வாங்கல் உலக உறுதிமொழி யாரிடமும் செய்யலாம் பொய் சத்தியம் செய்வது பெரும் பாவம் […]

05) நேர்ச்சை சட்ட சுருக்கம்

நேர்ச்சையை தவிர்ப்பது நன்று. துஆ செய்ய செய்துவிட்டால், நிறைவேற்றுவது அவசியம் தவறான நேர்ச்சைகளை நிறைவேற்றக் கூடாது. நேர்ச்சை இஸ்லாமிய அமல்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அல்லது உலக நன்மையான காரியமாக இருக்கலாம். கூடாத நேர்ச்சைகள் உதாரணத்திற்கு, 1) மௌன விரதம் 2) முடி வெட்டுதல் 3) அலகு குத்துதல் 4) வெறும் காலால் நடத்தல் 5) வெயிலில் நிற்றல் 4) சாப்பிடாமல் இருத்தல் 5) செருப்பு, சட்டை அணியாதிருந்தல் 6) முழு சொத்தையும் தர்மம் செய்தல் போன்றவை […]

04) இரவு தொழுகை சட்ட சுருக்கம்

ரமளான் மற்றும் அனைத்து இரவுகளிலும் தொழப்படும் சுன்னத்தான தொழுகையே இரவுத் தொழுகை எனப்படும். பல்வேறு பெயர்கள் – 1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல் லைல் 3) தஹஜ்ஜுத் 4) வித்ர் தராவீஹ் என்ற பெயர் ஹதீஸில் இல்லை. ரமளான் இரவுத் தொழுகையினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் ஆரம்ப நேரம் இஷாவிற்கு பின்னிலிருந்து இறுதி நேரம் பஜ்ர் வரை எனினும், வித்ரை மட்டும் பஜ்ருக்கு பின்னரும் தொழலாம் இரவுத்தொழுகை தொழாவிடில், பகலில் 12 ரகஅத் தொழலாம் எண்ணிக்கை, […]

இறந்தவர்கள் நினைவாக நினைவுத்தூண் எழுப்பலாமா?

இறந்தவர்கள் நினைவாக நினைவுத்தூண் எழுப்பலாமா? கேள்வி: 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சகோதரர்களின் ஞாபகார்த்தமாக எமது ஊரின் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒரு நினைவுத்தூபி எழுப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறு மரணித்தவர்களின் ஞாபகார்த்தமாக நினைவுத் தூபிகளைக் கட்டியெழுப்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா? – முஹம்மது ஃபஹ்மி, இலங்கை பதில்: இறந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் எழுப்புவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. நபிகள் நாயகம் […]

மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையே!

மவ்லிதுகளில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக் காட்டுவதென்றால் அதற்கு இந்த இதழின் பக்கங்கள் இடம் கொடாது. அதற்கென்று தனியாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த அபத்தங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் சுப்ஹான மவ்லிது, யாகுத்பா போன்ற நூல்களை வாங்கிப் பார்வையிடுக! மவ்லிதுகள் இஸ்லாமிய அடிப்படையைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியவை என்பதையும், இது யூதர்களால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் பரப்பி விடப்பட்டவை என்பதையும் இப்போது பார்ப்போம். ஜிப்ரீலை மட்டம் தட்டும் மவ்லிது எல்லாம் வல்ல அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு […]

Next Page » « Previous Page