Author: Trichy Farook

குடியுரிமை மசோதா சொல்வது என்ன?

குடியுரிமை மசோதா சொல்வது என்ன? மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதா நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த மசோதாவில் என்ன கூறப்பட்டுள்ளது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த மசோதாவை பாஜக அரசு ஏன் கொண்டு வருகின்றது? இஸ்லாமியர்கள் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றார்கள்? இஸ்லாமியர்கள் அல்லாத நடுநிலை மக்களும் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றர்கள்? என்பதை தெரிந்து கொண்டால்தான் பாஜகவின் பாசிச சிந்தனையையும் விசர்ச்சனத்தையும் இஸ்லாமியர்களின் மீதான அடக்குமுறையையும் உணர்ந்து கொள்ள […]

நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர்

நசிர் அல்-தின் அல்-துசி – வானியல் மற்றும் கோணவியல் (Trigonometry) வல்லுநர் 1201 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டிலுள்ள டஸ் என்ற நகரில் அல்-துசி பிறந்தார். இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். கணிதம் மற்றும் வானியல் சார்ந்த பல ஆய்வுகளை அல்-துசி அவர்கள் மேற்கொகாண்டுள்ளார். அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில நூல்கள் கீழே தரப்பட்டுள்ளது: • கிதாப் அல்-ஷக்ல் அல்- கட்டா (Kitab al-Shakl al-qatta) கோணவியல் குறித்த ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகம் • அல்-தத்கிரா […]

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன?

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன? இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்ற பிறகு இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1950 ஆம் ஆண்டிற்கு முன்பதாக இந்தியாவில் பிறந்திருந்தி ருந்தாலோ அல்லது அதற்கு 1955 ஆம் ஆண்டுக்கு முன்பதாக […]

முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா

முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா முகலாயர்கள் படையெடுத்து வந்தவர்கள் எனும் கருத்துருவாக்கம் சமீக கால, மத ரீதியிலான அரசியலின் வருகைக்கு பின் உருவாக்கப்பட்ட ஒன்று தானே அன்றி, முகலாயர்களின் ஆட்சி காலத்திலோ, அதற்கு பின்னரோ இந்த கருத்தானது நிலை கொள்ளவில்லை. இதுவே, அவர்கள் தங்களை முழுமையாகவே இந்தியர்கள் எனும் அடையாளத்துடன் காட்டிக் கொண்டே இருந்துள்ளார்கள் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. இந்தியர்களை திருமணம் செய்ததோடு, அவர்களின் வம்சங்கள் ராஜபுத்திர வழி தலை முறையையே கொண்டிருந்தது. பெற்றோர் […]

சாதிக் கொடுமையினால் அடித்து கொல்லப்பட்ட தலித்

பஞ்சாபில் துன்புறுத்தப்பட்ட தலித் சட்டங்களும் விழிப்புணர்வு திட்டங்கள் பலவும் நம் தேசத்தில் அமலில் இருந்தும் இந்தியாவில் தீண்டாமை கொடுமைகளை மட்டும் ஒழித்து விட இயலவில்லை. இன்னும் சொல்வதானால், தற்போதைய பாஜக ஆட்சியின் கீழே, மக்கள் சாதிய பிளவுகளால் மேலும் பிளவுண்ட சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். மேல் சாதியினர் தங்களை உயர்வாய் கருதுவதும், கீழ் சாதியினராக அறியப்பட்டவர்களை அவர்கள் இழிவாக கருதுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதற்கு சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த கோர சம்பவம் ஒன்றே […]

சிறுபான்மையினர்கள் மீது தொடரும் ஆதிக்க வெறி

தொடரும் ஆதிக்க வெறி இஸ்லாமியர்களுக்கும் , ஏனைய சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உயர் கல்வி கிடைக்கப்பெற தகுதியற்ற தேசமாக இந்தியா மாறி வருகிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வின் பெயரால் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை சமூகங்களின் மருத்துவக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மத்திய அரசு. விளைவு, அனிதா துவங்கி சமீபத்தில் மோனிஷா வரை அதற்கான நிகழ்ந்த தற்கொலைகளின் பட்டியல் நீளம். ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர் ரோஹித் விமுலா, தமக்கு ஏற்பட்ட […]

நீதியே! உன் விலை என்ன?

நீதியே! உன் விலை என்ன? இந்தியாவில் மட்டும் நீதிமன்றம் என்பதை ‘கூட்டுமனசாட்சி மன்றம்’ என்றோ ‘நம்பிக்கைமன்றம்’ என்றோ பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என சொல்லத்தக்க வகையில், நீதியை நிலை நாட்ட வேண்டிய மன்றங்கள் அனைத்தும் ஏதோவொரு சாராருக்கு சார்பு நிலை எடுக்கின்ற அவல நிலையை மேற்கொள்கின்றன. சான்றுகளுடனும் ஆதாரங்களுடனும் நிறுவப்பட வேண்டிய நீதியானது, பெரும் பான்மையினரின் விருப்பம், கூட்டு மனசாட்சி, குறிப்பிட்ட சாராரின் நம்பிக்கை எனும் குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றது. அப்சல் குரு, […]

5) வழிகேடர்களின் ஆதாரங்கள்

வழிகேடர்களின் ஆதாரங்கள் முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34➚, 7:11➚, 15:29➚,30,31, 17:61➚, 18:50➚, 20:116➚, 38:72➚ ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும். நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. […]

4) ஸலாமின் ஒழுங்குகள்

ஸலாமின் ஒழுங்குகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது யார் வேண்டுமானாலும் ஸலாம் சொல்வதற்கு முந்தலாம் என்றாலும் யார் முந்திக் கொள்வது சரியான முறை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு ஸலாம் கூற வேண்டும். நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவருக்கு ஸலாம் வற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மீது ஸலாம் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6232, […]

3) பல வகைச் சொற்கள்

பல வகைச் சொற்கள் அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது முகமன் கூறுவதற்கான சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் முகமன் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸலாமுன் அலை(க்)கும் அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதற்கு பதிலாக ஸலாமுன் அலை(க்)கும் என்றும் முகமன் கூறலாம். (முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் […]

2) சந்திக்கும் வேளையில்

சந்திக்கும் வேளையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு சொற்கள் மூலம் முகம கூறுகின்றனர். சந்திக்கப்படுபவர் முக்கியமான நபர் என்றால் அவரது காலில் விழுதும், கூனிக் குறுகுவதும் சிலருக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் இஸ்லாம் கற்றுத் தரும் முகமன் மனிதனின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாதவகையிலும், சம நிலையில் அன்பு செலுத்துவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது என்பதையும், ஸலாம் கூறும் ஒழுங்குகளையும் கீழ்க்காணும் தலைப்புக்களில் தெளிவாக விளக்கும் நூல். இஸ்லாத்தின் முகமன் ஸலாம் ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள் […]

1) முன்னுரை

முன்னுரை நூலின் பெயர்: சந்திக்கும் வேளையில் ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர். சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் […]

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு மத ரீதியிலான துன்புறுத்தல் காரணம்

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு மத ரீதியிலான துன்புறுத்தல் காரணம் ஆசிரியரால் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் மாணவி ஃபாத்திமா லத்தீஃப், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சென்னை ஐ ஐ டியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தமது ஆசிரியர் சுதர்சன் பத்மனாபன் தான் தன் தற்கொலைக்கு காரணம் என்பதாக செல்ஃபோனில் குறிப்பு எழுதி விட்டு மரணித்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் இந்த மறைவுக்கு நீதி கேட்டு அவள் பெற்றோர் கேரள முதல்வரை அணுகியிருக்கின்றனர். […]

தற்கொலையில் தமிழகம் முதலிடம்

தற்கொலையில் தமிழகம் முதலிடம் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம். மாநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தடுப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்நேகா என்ற தனியார் அமைப்பு அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தியாவில் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்கொலையில் முன்னணியில் இருக்கின்ற மாநிலங்கள் தமிழகம், மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம். […]

இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி”

இஸ்லாத்தை ஏற்ற “கேதரின் ஹெசெல்டின்” ஜோஅன் பெய்லி”  உலகளாவிய அளவில் நாளுக்கு நாள் இஸ்லாமிய மார்க்கத்தை பலதரப்பட்ட மதத்தை சார்ந்தவர்களில் முக்கியமான பிரமுகர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக் கின்றார்கள் என்பதை தொடர்ந்து நாம் அறிந்து வருகின்றோம்! அதன் தொடர்ச்சியாக; இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது “Islam Oppresses Women” என்பதாகும். அதாவது “இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றது” என்ற வாதமாகும். இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறு வாதங்கள் எப்படி […]

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை

பாபர் மஸ்ஜித் சர்ச்சை: கடந்து வந்த பாதை கவர்னர் இப்ராஹிம் லோதியின் மேற்பார்வையில் முகலாய மன்னர் பாபர், உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பாபர் மசூதியை கடந்த 1526 ஆம் ஆண்டு கட்டினார். 1949 மசூதியின் உள்ளே, ராமர், சீதை சிலைகள் இரவோடு இரவாக வைக்கப்பட, பிரச்சனை ஆரம்பமாகிறது. சிலைகள் தானாக உருவாகி விட்டன, தமது ஜென்மஸ்தானத்தில் ராமர் அவதரித்து விட்டார் என்பதாக புரளிகள் கிளப்பப்பட, மதக் கலவரத்திற்கான முதல் வித்து அங்கே தூவப்படுகிறது. பள்ளிவாசல் பூட்டப்படுகிறது..! சிலைகளை […]

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு

மதச்சார்பின்மைக்கு எதிரான பாபர் மசூதி தீர்ப்பு கடந்த 60 ஆண்டுகளாக பாபர் மசூதி நிலம் சம்பந்தமான வழக்கு நடைபெற்றது. உலகே எதிர்பார்த்த அதன் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடத்திற்கு உரிமை கோரி மூன்று பேர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விசித்திரம் என்னவென்றால் குழந்தை இராமன் சிலை ஒரு மனுதாரராகவும், நிர்மோகி அகோரா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் மனுதாரர் ஆவார்கள். இந்த மூன்று தரப்பினர் களுக்கிடையே 2.77 […]

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் • குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது. • ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது • அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. • மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது. • அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன. • மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட […]

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் முரண்பாடுகள் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடியும். பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ள ஆலோசனைகளுக்கு எதிராக அதே தீர்ப்பில் அந்த நீதிபதியே முரண்படுகின்றார் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! தீர்ப்பை வழங்குவதற்கு முன்னாள் பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், மதச்சார்பின்மையே அரசியல் […]

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பாபர் மசூதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் (9/11/19) அன்று தனது தீர்ப்பை வழங்கியது. பாபர் மசூதி நிலம் முழுக்க ராம் லல்லா தரப்பினருக்கு உரியது, அங்கு அவர்கள் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க மத்திய – மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறுகின்றது. இது எந்த விதத்திலும் […]

இறந்துபோன மனிதநேயம்

இறந்துபோன மனிதநேயம் ஆம்புலன்ஸ் வாகனம் மறுக்கப் படுவதால் வட மாநிலங்களில் பலர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந் துள்ளது. வட மாநிலத்தவர்கள் இரக்க மற்றவர்கள் மனிதாபிமான மற்றவர்கள் என்றெல்லாம் விதவிதமாக சொல்லியும் எழுதியும் முடித்தவர்களுக்கு கடந்த வாரம் தமிழகத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு அதனால் ஒரு உயிர் பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் சுத்துக்கேணி. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அங்கிருக்கும் ஒரு செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். […]

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்”

இஸ்லாத்தை ஏற்ற “ஜாய் கிம்” நாளுக்கு நாள் இஸ்லாத்தின் பக்கம் அலையலையாய் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக, உலக அளவில் மக்களால் பிரபல்யமாக பார்க்கப்படுகின்ற பலதரப்பட்ட திறமை பெற்றவர்கள், ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சினிமா பிரபலங்கள் என்று சொல்லி பலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு தழுவுகின்றனர். அந்த வரிசையில், கொரியாவை சார்ந்த பிரபல பாப் இசையின் நட்ச்சத்திரம் ஜாய் கிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். ஜாய் […]

6) முடிவுரை

6) முடிவுரை இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மூலம் கீழ்க்கண்ட உண்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எந்த மனிதனுக்கும் அற்புதம் செய்யும் ஆற்றல் வழங்கப்படவில்லை. நபிமார்களுக்கு மட்டும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் நினைத்த நேரத்தில் செய்து காட்ட முடியாது. அல்லாஹ் அனுமதி அளிக்கும் போது மட்டும் தான் செய்ய முடியும். நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் தவிர மற்ற விஷயங்ககளின் அவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இருந்தனர். நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறும் […]

5) நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

5) நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா? நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர மற்ற யாரும் அற்புதங்கள் செய்ய முடியாது. நபித்தோழர்களோ, மற்ற நல்லடியார்களோ தாம் வாழும் காலத்தில் செய்தததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் கட்டுக் கதைகளாகும். ஏனெனில் ஒருவர் […]

4) நபிமார்கள் வழியாக அல்லாஹ்வே அற்புதங்களை செய்தான்!

4) நபிமார்கள் வழியாக அல்லாஹ்வே அற்புதங்களை செய்தான்! நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும். ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். கோமாவில் […]

3) நபிமார்களுக்கு அற்புதங்கள் வழங்கப்பட்டது ஏன்?

நபிமார்களுக்கு அற்புதங்கள் வழங்கப்பட்டது ஏன்? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதைத் திருக்குர்ஆனும் சொல்லிக்காட்டுகிறது. மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது (அல்குர்ஆன்: 17:94)➚ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் […]

2) அற்புதங்கள் என்றால் என்ன?

அற்புதங்கள் ஓர் ஆய்வு அற்புதங்கள் என்றால் என்ன? எந்த மனிதனாலும், எவ்வளவு முயற்சித்தாலும் செய்ய முடியாத – அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை மகான்களால் செய்ய முடியும் என்று அதிகமான மக்கள் நம்புகின்றனர். இதைத் தான் அற்புதம் என்று கூறுகின்றனர். இறைத்தூதர்கள் எனும் நபிமார்கள் மனிதனால் செய்ய முடியாத – இறைவனால் மட்டுமே செய்ய முடிந்த – சில காரியங்களைச் செய்துள்ளதாக திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. மகான்கள் மனிதனால் இயலாத காரியங்களைச் செய்வார்கள் என்பதற்கு […]

1) முன்னுரை

முன்னுரை முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் நுழைந்ததற்கான காரணங்களில் அற்புதங்கள் குறித்த அறியாமை முதன்மையானதாகும். யாரேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்வதாகத் தெரியும் போதும், ஏதாவது அதிசயத்தைச் செய்தார்கள் என்று கேள்விப்படும் போதும் அவர்களிடம் மனித சக்தியை மிஞ்சிய கூடுதல் சக்தி உள்ளதாக பாமர மக்கள் கருதுகிறார்கள். அவர்கள் மெய்யாகவே அந்த அற்புதத்தைச் செய்தார்களா? அல்லது தந்திரம் செய்து இப்படி எமாற்றினார்களா? என்று சிந்திக்கத் தவறுகின்றனர். இவ்வாறு செய்யும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளதா? இதற்கு திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான […]

4) மாபெரும் பத்து அடையாளங்கள்

மாபெரும் பத்து அடையாளங்கள் இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். 1 – புகை மூட்டம் 2 – தஜ்ஜால் 3 – (அதிசயப்) பிராணி 4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 5 – ஈஸா (அலை) இறங்கி வருவது 6 – யஃஜுஜ், மஃஜுஜ் 7 – கிழக்கே ஒரு பூகம்பம் 8 – மேற்கே ஒரு பூகம்பம் 9 – அரபு தீபகற்பத்தில் […]

3) சிறிய அடையாளங்கள்

சிறிய அடையாளங்கள் மகளின் தயவில் தாய் பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து, மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும். 4777 – إِذَا وَلَدَتِ المَرْأَةُ رَبَّتَهَا، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا  50 – إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு […]

2) முன்னுரை

முன்னுரை கியாமத் நாளின் அடையாளங்கள் முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும். அல்லாஹ்வை நம்ப வேண்டும். வானவர்களை நம்ப வேண்டும். வேதங்களை நம்ப வேண்டும். தூதர்களை நம்ப வேண்டும். இறுதி நாளை நம்ப வேண்டும். விதியை நம்ப வேண்டும். ‘இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு சொர்க்கத்தையும், தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான்” என்பது அந்த ஆறு விஷயங்களில் […]

1) அறிமுகம்

அறிமுகம் நூலின் பெயர் : கியாமத் நாளின் அடையாளங்கள் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர். சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு […]

14) முடிவுரை

முடிவுரை இந்த மார்க்கத்துக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்வின் சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. எளிதானது. யாருக்கும் அனீதி இழைக்காதது. நாகரீகமானது. ஆனால் மத்ஹபுகள் மடமைகளின் தொகுப்பாகவும், ஆபாசமாகவும் அருவருக்கத் தக்கவையாகவும், இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், எல்லாவிதமான பாவங்களையும் மென்மைப்படுத்தி அவற்றைச் செய்யத் தூண்டக்கூடியதாகவும், நமது இறையச்சத்தையும் வணக்க வழிபாட்டையும் பாழாக்கக் கூடியதாகவும், பெண்களுக்கு கொடுமை இழைப்பதாகவும், குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிரான போர்ப் பிரகடணமாகவும், மறுமையில் நரகப்படுகுழியில் நம்மைத் தள்ளக்கூடியதாகவும் அமைந்துள்ளதால் மத்ஹபுகளை சமுதாயத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவோம். […]

13) ஆபாச சட்டங்கள்

ஆபாச சட்டங்கள் விபச்சாரத்துக்கான தண்டனையில் இருந்து தப்பிக்க தந்திரம் விபச்சாரம் செய்பவர்களுக்கு 100 கசையடி அடிக்க வேண்டும். இது திருக்குர்ஆன் கூறும் சட்டம். அவ்வாறு கசையடிப்பதால் விபச்சாரம் குறையும் என்பது இதற்கான காரணம். ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலான மஙானி எனும் தமிழ்நூலில் இது குறித்து எழுதியுள்ள சட்டத்தைப் பாருங்கள்! ஐம்பது சிறு குச்சிகளுள்ள ஒரு கட்டினால் இரண்டு தடவை அடித்தாலும் நூறு அடிகள் நிறைவேறிவிடும். ஆனால், அதிலுள்ள ஒவ்வொரு குச்சியும் அவனுடைய மேனியில் பட வேண்டும். […]

12) குற்றவியல் சட்டங்கள்

குற்றவியல் சட்டங்கள் திருட்டை ஊக்குவிக்கும் மத்ஹபுகள் (وَإِنْ) نَقَبَ ثُمَّ (نَاوَلَهُ آخَرَ مِنْ خَارِجِ) الدَّارِ (أَوْ أَدْخَلَ يَدَهُ فِي بَيْتٍ وَأَخَذَ) وَيُسَمَّى اللِّصَّ الظَّرِيفَ. وَلَوْ وَضَعَهُ فِي النَّقْبِ ثُمَّ خَرَجَ وَأَخَذَهُ لَمْ يُقْطَعْ فِي الصَّحِيحِ . الدر المختار ஒருவன் சுவற்றில் துளை போட்டு உள்ளே சென்று, மற்றொருவன் வீட்டுக்கு வெளியில் இருந்து பொருளை வாங்கினால், அல்லது வீட்டுக்குள் கையை விட்டு எடுத்தால் அவனது கை […]

11) தந்திரங்கள் மூலம் சட்டத்தை வளைத்தல்

தந்திரங்கள் மூலம் சட்டத்தை வளைத்தல் மார்க்கச் சட்டங்கள் மறுமை வாழ்வுக்கு அஞ்சி கடைப்பிடிக்க வேண்டியவை என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் மார்க்கச் சட்டம் இதுதான் என்று தெரிந்து கொண்டு அதை மீறுவதற்காக மத்ஹப் நூல்களில் தந்திரங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அல்லாஹ்வையே ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை எவன் உள்ளத்தில் உள்ளதோ அவன் தான் தந்திரங்களைக் கையாண்டு அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவான். அத்தகைய கேடுகெட்டவர்களால் தான் மத்ஹப் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய சட்டங்கள் மத்ஹப் […]

10) குடும்பப் பிரச்சனைகள்

குடும்பப் பிரச்சனைகள்  நான்கு வருட கர்ப்பம் ஒரு குழந்தை கர்ப்ப அறையில் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதில் பல சட்டப்பிரச்சனைகள் உள்ளன. கணவனுடன் தொடர்பு இல்லாத பெண் பெற்றெடுக்கும் குழந்தை அந்தக் கணவனுடைய குழந்தை என்று முடிவு செய்வது முக்கியமான பிரச்சனையாகும். இது குறித்து மத்ஹப் சட்டப்புலிகள் கூறுவது என்ன என்பதைப் பாருங்கள்! فَصْلٌ فِي ثُبُوتِ النَّسَبِ (أَكْثَرُ مُدَّةِ الْحَمْلِ سَنَتَانِ) لِخَبَرِ عَائِشَةَ – رَضِيَ اللَّهُ عَنْهَا – كَمَا مَرَّ […]

9) நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள்

நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள் இவர்களின் வடிகட்டிய முட்டாள்தனத்தை மேலும் பாருங்கள் واعلم أن لحيته عليه الصلاة والسلام كانت عظيمة ولا يقال كثيفة لما فيه من البشاعة وكان عدد شعرها مائة ألف وأربعة وعشرين ألفا بعدد الأنبياء كما في رواية إعانة الطالبين மொத்த நபிமார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நபிகள் நாயகத்தின் தலைமுடிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரமாகும். நூல் ஷாஃபி […]

3) வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்!

வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்! இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்விடமிருந்து இறைத்தூதர்கள் வழியாக மனித குலத்துக்கு வழங்கப்பட்ட மார்க்கமாகும். இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே. அறிந்து கொள்க! இந்தத் தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. (அல்குர்ஆன்: 39:3)➚.) இஸ்லாத்தின் பெயரால் எதைச் சொல்வதாக இருந்தாலும், செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெற்ற  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். இம்மார்க்கத்தின் அதிபதி அல்லாஹ் தான் என்பதன் அர்த்தம் இதுதான். […]

2) நான்கு இமாம்கள் ஓர் அறிமுகம்

நான்கு இமாம்கள் ஓர் அறிமுகம் இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற அறிஞர்கள் தோன்றி மார்க்கப்பணிகள் செய்துள்ளனர். நபித்தோழர்களில் மார்க்க அறிவு பெற்றவர்கள் அவர்களில் சிறந்தவர்களாவர். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) உள்ளிட்ட எண்ணற்ற நபித்தோழர்கள் மார்க்க அறிஞர்களாக இருந்தும் அவர்கள் பெயரால் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. தாபியீன்களில் ஏராளமான மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் பெயராலும் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் ஏராளமான அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு அவர்களில் […]

8) மடமையான சட்டங்கள்

மடமையான சட்டங்கள் இமாமை அறுத்து குர்பானி கொடுக்கலாம். மத்ஹபு அறிஞர்கள் எந்த அளவு மூடர்களாக இருந்துள்ளனர் என்பதற்கும், ஆபாசமாகச் சிந்திப்பதையே ஆய்வு என்று கருதியுள்ளனர் என்பதற்கும் பின் வரும் அதிசயச் சட்டம் ஆதாரமாக அமைந்துள்ளது. فإن نزا مأكول على مأكولة فولدت ولدا على صورة الآدمي فإنه طاهر مأكول فلو حفظ القرآن وعمل خطيبا وصلى بنا عيد الأضحى جاز أن يضحى به بعد ذلك وبه يلغز […]

7) தொழுகையின் சட்டங்கள்

தொழவைக்கும் இமாமுக்கு தகுதி என்ன? தொழுகை நடத்தும் இமாமாக ஒருவரை நியமிக்க வேண்டுமானால் அவருக்கு கீழ்க்காணும் தகுதிகள் இருக்க வேண்டும் என்று ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தார் கூறுகிறது. ثُمَّ أَصْبَحُهُمْ: أَيْ أَسْمَحُهُمْ وَجْهًا، ثُمَّ أَكْثَرُهُمْ حَسَبًا (ثُمَّ الْأَشْرَفُ نَسَبًا) زَادَ فِي الْبُرْهَانِ: ثُمَّ الْأَحْسَنُ صَوْتًا. وَفِي الْأَشْبَاهِ قَبِيلَ ثَمَنِ الْمِثْلِ: ثُمَّ الْأَحْسَنُ زَوْجَةً. ثُمَّ الْأَكْثَرُ مَالًا، ثُمَّ الْأَكْثَرُ جَاهًا (ثُمَّ […]

6) உளூவின் சட்டங்கள்

உளூவின் சட்டங்கள் மத்ஹப் நூல்களில் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாகவும், ஆதாரமற்றதாகவும் தொழுகையைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலும் பல சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம் தலை என்றால் ஒரு முடி என்று அர்த்தமாம் தலைக்கு மஸஹ் செய்வது உளுவின் கடமைகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைக்கு எப்படி மஸஹ் செய்ய வேண்டும் என்பதைச் செயல் மூலம் விளக்கியுள்ளனர். ஆனால் ஷாஃபி மத்ஹப் சட்டத்தைப் பாருங்கள்! قوله ولو بعض شعرة واحدة […]

5) இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள் மத்ஹபுகள் என்பன திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாக இருந்தும் எப்படி இச்சமுதாயத்தில் நிலைபெற்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் சிறு வயதினரை மூளைச்சலவை செய்து மத்ஹபு வெறியை ஊட்டி ஆலிம்களை உருவாக்குவார்கள். மத்ஹபு இமாம்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்துக்குச் சமமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை விட மேலானவர்கள் என்றும் கட்டுக்கதைகளைப் போதிப்பார்கள். ஆலிம் படிப்பு படிக்கச் சென்றவருக்கு சிறு […]

4) மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்

மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள் அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா? மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் போது அனைவரும் ஆய்வு செய்ய முடியாது என்பதால் பாமர மக்கள் மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி மத்ஹபை நியாயப்படுத்துகின்றனர். இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை. மத்ஹபை நம்பக் கூடியவர்கள் உலகில் ஒரே ஒரு மத்ஹப் தான் உள்ளது எனக் கூறுவதில்லை. நான்கு மத்ஹபுகள் உள்ளன என்பதுதான் அவர்களின் வாதம். இந்த நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் […]

1) முன்னுரை

முன்னுரை இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவின் பொருளைத் தக்க முறையில் ஒருவர் அறிந்து கொண்டால் மத்ஹபுக்கும், இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார். லாயிலாஹ இல்லல்லாஹ் என்றால் வணக்கத்துக்கு உரியவன் […]

2) மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி?

மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி? தம்மை விட ஏதோ ஒருவகையில் பெரியவர்களாக இருப்பவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமான மனிதர்களின் உள்ளங்களில் இயல்பாகவே அமைந்துள்ளது. தன்னைவிட ஏதோ ஒருவகையில் சிறியவர்களாக இருப்பவர்கள் தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதும் மனிதர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இது நல்ல பண்பு தான் என்றாலும் மரியாதை செலுத்துவதன் எல்லை எது என்பதை மரியாதை செய்பவர்களும் அறியவில்லை. மரியாதையை எதிர்பார்ப்பவர்களும் அறியவில்லை. ஏதோ ஒரு வகையில் நம்மைவிட ஒருவர் […]

1) அறிமுகம்

அறிமுகம் மதத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் வயதில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து பணியும் வழக்கம் முஸ்லிமல்லாத மக்களிடம் நடைமுறையில் உள்ளது. சில முஸ்லிம்களும் இதைக் காப்பியடித்து மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைப் புனிதமான காரியமாகக் கருதுகின்றனர். ஒரு மனிதனை எப்படி மதிக்க வேண்டும்? எந்த அளவுக்குக் கண்ணியப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது. அதைப் பேணாமல் பிற மதத்தவர்களைக் காப்பியடித்து சில முஸ்லிம்கள் மத குருமார்களின் கைகளைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அவர்களின் கையால் அற்பமான […]

5) கனவுகளின் பலன்கள்

கனவுகளின் பலன்கள் நல்ல கனவுகள் நற்செய்தி கூறுபவை என்றால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் காணுகின்ற கனவுகளின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது? இது பலருக்கும் இருக்கின்ற சந்தேகம். கனவுகளின் பலன்கள் என்ற பெயரில் பலரும் நூல்களை எழுதித் தள்ளியுள்ளனர். இப்னு ஸீரின் என்பவர் கனவுகளின் விளக்கத்தை அறிந்தவராக இருந்தார் எனவும் கூறி வருகின்றனர். இவையாவும் கட்டுக் கதைகள் தான். இன்னின்ன கனவுக்கு இது தான் பலன் என்றெல்லாம் அவர்கள் கூறுவதற்கு குர்ஆனிலோ, நபிமொழியிலோ எந்த ஆதாரமும் இல்லை. ‘யானையைக் […]

4) நல்ல கனவும், கெட்ட கனவும்..!

நல்ல கனவு கண்டால்… நற்செய்தி கூறும் வகையில் நாம் கனவு கண்டால் நமக்கு ஏற்படவுள்ள நன்மையை முன் கூட்டியே அல்லாஹ் அறிவித்துத் தருவதாக கருதிக் கொள்ள வேண்டும். (நல்ல கனவின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை கனவின் பலன்கள்‘ என்ற தலைப்பில் பின்னர் நாம் கூறியுள்ளோம்) நல்ல கனவைக் காணும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் நமக்கு வழிகாட்டியுள்ளது. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் தமக்குப் பணிவது போல் யூசுப் நபியவர்கள் கனவு […]

Next Page » « Previous Page