Tamil Bayan Points

13) ஆபாச சட்டங்கள்

நூல்கள்: மத்ஹபுகள்

Last Updated on December 17, 2019 by

ஆபாச சட்டங்கள்

விபச்சாரத்துக்கான தண்டனையில் இருந்து தப்பிக்க தந்திரம்

விபச்சாரம் செய்பவர்களுக்கு 100 கசையடி அடிக்க வேண்டும். இது திருக்குர்ஆன் கூறும் சட்டம். அவ்வாறு கசையடிப்பதால் விபச்சாரம் குறையும் என்பது இதற்கான காரணம்.

ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலான மஙானி எனும் தமிழ்நூலில் இது குறித்து எழுதியுள்ள சட்டத்தைப் பாருங்கள்!

ஐம்பது சிறு குச்சிகளுள்ள ஒரு கட்டினால் இரண்டு தடவை அடித்தாலும் நூறு அடிகள் நிறைவேறிவிடும். ஆனால், அதிலுள்ள ஒவ்வொரு குச்சியும் அவனுடைய மேனியில் பட வேண்டும்.

விபச்சாரம் செய்தவனுக்கு நூறு கசையடிகள் கொடுப்பதற்குப் பதிலாக ஐம்பது மெல்லிய குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டுமாம்! ஐம்பது குச்சிகளும் விபச்சாரம் செய்தவனின் மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டுமாம். இவ்வாறு செய்தால் நூறு கசையடி அடித்ததாக ஆகிவிடுமாம். இந்தக் குற்றத்துக்கு இதுதான் தண்டனையா? இவ்வாறு செய்தால் விபச்சாரம் ஒழிந்து விடுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கசையடி அடித்தார்களா?

இதை நியாயப்படுத்த மத்ஹபு உலமாக்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

مسند أحمد 21935 – حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، (2) حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ إِسْحَاقَ، عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَشَجِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ: كَانَ بَيْنَ أَبْيَاتِنَا إِنْسَانٌ مُخْدَجٌ ضَعِيفٌ، لَمْ يُرَعْ أَهْلُ الدَّارِ إِلَّا وَهُوَ عَلَى أَمَةٍ مِنْ إِمَاءِ الدَّارِ يَخْبُثُ بِهَا، وَكَانَ مُسْلِمًا، فَرَفَعَ شَأْنَهُ سَعْدٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” اضْرِبُوهُ حَدَّهُ ” قَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّهُ أَضْعَفُ مِنْ ذَلِكَ، إِنْ ضَرَبْنَاهُ مِائَةً قَتَلْنَاهُ قَالَ: ” فَخُذُوا لَهُ عِثْكَالًا فِيهِ مِائَةُ شِمْرَاخٍ، فَاضْرِبُوهُ بِهِ ضَرْبَةً وَاحِدَةً، وَخَلُّوا سَبِيلَهُ “

“நான், என்னிடம் வந்த ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு விட்டேன்” என்று ஒருவர் கூறினார். விபச்சாரம் புரிந்த அந்த மனிதரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தகவல் தெரிவித்த ஸஹாபாக்கள், “அவரை உங்களிடம் தூக்கிக் கொண்டு வந்தால் அவருடைய எலும்புகள் நொறுங்கிப் போய்விடும் அளவுக்குக் கடும் நோய் வாய்ப்பட்டவராக அவர் இருக்கிறார்” என்றும் “இவருக்கு ஏற்பட்டுள்ளது போன்ற துன்பம் வேறு எந்த மனிதருக்கும் ஏற்பட்டதாக நாங்கள் கருதவில்லை” என்றும் “எலும்பில் தோல் மட்டுமே உள்ளது” (சதையே இல்லை) என்றும் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 100 குச்சிகளை எடுத்து அவற்றைக் கொண்டு ஓர் அடி அடிக்குமாறு கட்டளையிட்டார்கள்.

நூல் : அஹ்மது

எந்த மனிதரும் சந்தித்திராத அளவுக்கு அம்மனிதர் மோசமாக நோய்வாய்ப் பட்டிருக்கிறார்; சதை என்பது அறவே இல்லை; அவரைத் தூக்கிக் கொண்டு வந்தால் எலும்பு நொறுங்கி விடும் என்று இதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ள ஒருவரால் எப்படி விபச்சாரம் செய்ய முடியும்? தூக்கிக்கொண்டு வந்தால் எலும்பு முறிந்து விடும் என்றால் அவர் விபச்சாரம் செய்யும் போதே எலும்புகள் முறிந்திருக்குமே?

விபச்சாரம் செய்யும் அளவுக்கு அந்த மனிதர் திடகாத்திரமாக இருந்தார் என்றும், தூக்கினாலே எலும்பு முறிந்து விடும் என்ற நிலையில் இருந்தார் என்றும் தனக்குத் தானே இந்த ஹதீஸ் முரண்படுவதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அப்படி ஆதாரமாகக் கொண்டாலும் மஙானி என்ற நூலில் பொதுவாக விபச்சாரம் செய்யும் எவருக்கும் இந்தச் சட்டத்தை அமுல்படுத்தலாம் என்று தான் உள்ளது.

விபச்சாரம் செய்யும் பிரமுகர்களைத் தண்டனையில் இருந்து காப்பாற்றவே இது போல் ஃபத்வாக்களை எழுதி வைத்துள்ளனர் என்பது தான் உண்மையாகும்.

மிருகத்தனமான சட்டம்

உளுவை முறிக்கும் காரியங்கள் யாவை? குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். ஆனால் மத்ஹபு நூல்கள் இச்சட்டத்தைக் கூறும் சாக்கில் எவ்வளவு கேவலமாகவும், ஆபாசமாகவும் கற்பனை செய்துள்ளனர்.

பெண்கள் எந்தக் காரியத்தைச் செய்தால் அவர்களுக்கு குளிப்பு கடமையாகாது என்பதை மத்ஹபு நூல் எப்படி விளக்குகிறது என்பதைப் பாருங்கள்!

(وَ) لَا عِنْدَ (إدْخَالِ إصْبَعٍ وَنَحْوِهِ) كَذَكَرِ غَيْرِ آدَمِيٍّ وَذَكَرِ خُنْثَى وَمَيِّتٍ وَصَبِيٍّ لَا يَشْتَهِي وَمَا يُصْنَعُ مِنْ نَحْوِ خَشَبٍ (فِي الدُّبُرِ أَوْ الْقُبُلِ) عَلَى الْمُخْتَارِ (وَ) لَا عِنْدَ (وَطْءِ بَهِيمَةٍ أَوْ مَيْتَةٍ أَوْ صَغِيرَةٍ غَيْرِ مُشْتَهَاةٍ) بِأَنْ تَصِيرَ مُفْضَاةً بِالْوَطْءِ وَإِنْ غَابَتْ الْحَشَفَةُ وَلَا يَنْتَقِضُ الْوُضُوءُ، فَلَا يَلْزَمُ إلَّا غَسْلُ الذَّكَرِ- الدر المختار

விரலையோ, மனிதனல்லாத உயிரினங்களின் ஆணுறுப்பையோ, அரவாணியின் ஆணுறுப்பையோ, பினத்தின் ஆணுறுப்பையோ, ஆசை வைக்க முடியாத சிறுவனின் ஆணுறுப்பையோ, மரத்தால் செய்யப்பட்ட செயற்கை ஆணுறுப்பையோ ஒரு பெண் தனது முன் துவாரத்திலோ, பின் துவாரத்திலோ நுழைத்தால் அவளுக்கு குளிப்பு கடமையாகாது. மிருகத்துடனோ, செத்த பிணத்துடனோ, ஆசை வைக்க முடியாத சிறுமியுடனோ, ஒரு ஆண் உடலுறவு கொண்டால் அவன் மீது குளிப்பு கடமை இல்லை. உளூவும் முறியாது. உறுப்பைக் கழுவினால் போதும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் மூமினான பெண்கள் செய்ய அஞ்சும் கேவலமான காரியங்களை மூமினான பெண்கள் செய்வார்கள் என்று சித்தரித்துள்ளனர். ஒரு மூமினான பெண் செத்தவனின் ஆணுறுப்பை, அல்லது மிருகங்களின் ஆணுறுப்பை, பச்சிளம் பாலகனின் ஆணுறுப்பை, அல்லது செயற்கையான ஆணுறுப்பை தனது முன் துவாரத்தில் நுழைத்தால், அல்லது பின் துவாரத்தில் நுழைத்தால் குளிப்பு கடமையில்லை என்று எழுதியவன் இமாமாக இருப்பானா? கஞ்சா போதையில் காமவெறியில் ஊறித்திளைத்தவனாக இருப்பானா? இப்படி அசிங்கம் பிடித்த செய்திகளை மார்க்கம் என்ற பெயரில் படித்தவர்கள் ஆலிம்களாக இருப்பார்களா? காம லோலன்களாக இருப்பார்களா? சிந்தித்துப் பாருங்கள்!

அது போல் மூமினான ஆண்கள், செத்த பெண்ணுடன், அல்லது பச்சிளம் குழந்தையுடன் உறவு கொள்வார்களா? இப்படிச் செய்யத் துணிந்தவன் குளிப்பு எப்போது கடமை என்று மார்க்கத்தை அறியத் துடிப்பானா? தங்களின் ஆபாச வக்கிர எண்ணங்களுக்குத் தீனி போடுவதற்கே இவ்வாறு எழுதி வைத்துள்ளனர்.

அட கேடுகெட்ட மூடர்களே இந்தக் கேடு கெட்ட செயலைச் செய்தால் குளிப்பு கடமை இல்லை என்றும் உளு முறியாது என்றும் இயற்றிய சட்டத்துக்கு எந்தக் குர்ஆன் வசனம் ஆதாரம்? எந்த ஹதீஸ் ஆதாரம்? இதுபோல் செக்ஸ் கதைகளைப் பாடத்திட்டத்தில் வைத்து வெட்கமில்லாமல் இதைப் படித்துக் கொடுத்து ஆலிம் பட்டம் வழங்குகிறார்கள். மத்ஹபு இமாம்களின் வக்கிர புத்திக்கு மற்றொரு உதாரணம் பாருங்கள்!

கற்பனைக்கும் எட்டாத ஆபாசக் கற்பனை

يَعْنِي لَوْ فِي دُبُرِ غَيْرِهِ، أَمَّا فِي دُبُرِ نَفْسِهِ فَرَجَّحَ فِي النَّهْرِ عَدَمَ الْوُجُوبِ إلَّا بِالْإِنْزَالِ الدر المختار

ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இறையச்சமுடைய எந்த மனிதனாவது இப்படியெல்லாம் கற்பனை செய்வானா? இந்தச் சட்டம் எந்த வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? எந்த நபிமொழியின் அடிப்படையில் இது இயற்றப்பட்டது? சில ஆபாச சட்டங்களைப் பற்றி நாம் கேள்வி எழுப்பும் போது அப்படி யாராவது நடந்து விட்டால் அதற்கான சட்டம் என்ன என்பதைச் சொல்ல வேண்டாமா? அதற்காகத் தான் எங்கள் இமாம்கள் இப்படி தூரநோக்குடன் ஆய்வு செய்துள்ளனர் என்று உளறுவார்கள்.

இந்தச் சட்டத்துக்கு அப்படி உளறக் கூட முடியாது. தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தல் என்பது யாருக்கும் நடக்காத நடக்க சாத்தியமில்லாத ஒன்றாகும். ஒருவன் மிருக உணர்வு மேலோங்கியவனாக இருந்தாலும் இப்படி நடக்க சாத்தியமில்லை என்று தெரிந்து கொண்டே ஆபாசமாகக் கற்பனை செய்கிறார்கள் என்றால் இவர்கள் மார்க்க அறிஞர்களா? மஞ்சள் பத்திரிகையில் எழுதுபவர்களா?

இதற்குப் போட்டியாக ஷாஃபி மத்ஹப் கூறுவதைப் பாருங்கள்!

وشمل الفرج فرج نفسه كأن أدخل ذكره في دبره فيحد به. – إعانة الطالبين –

ஆணுறுப்பு என்ற வார்த்தை தன்னுடைய ஆணுறுப்பையும் குறிக்கும். எனவே ஒருவன் தன்னுடைய ஆணுறுப்பைத் தனது பின் துவாரத்தில் விட்டான் என்றால் அதற்காக அவனுக்குத் தண்டனை கொடுக்கப்படும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனா

இரண்டும் வெவ்வேறு சட்டங்களைக் கூறினாலும் தனது ஆண்குறியை தனது பின் துவாரத்தில் நுழைக்கும் சாத்தியமற்றதைப் பற்றி ரொம்ப ஆய்வு செய்துள்ளனர். இதன் பிறகும் இவர்களை நல்லறிஞர்களாக உங்களால் மதிக்க முடிகிறதா?

நோன்புக்குக் கேவலம்

நோன்பு என்பது ஒரு கேடயம் என்று மார்க்கம் சொல்கிறது. திருமணம் ஆகாமல் இருப்பவர் வழி தவறிவிடாமல் இருப்பதற்கு நோன்பு நோற்பது கேடயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

அந்த நோன்பை எந்த அளவுக்கு கொச்சைப் படுத்தியுள்ளனர் என்று பாருங்கள்!

فَإِنْ جَامَعَ بَهِيمَةً، أَوْ مَيْتَةً فَلَيْسَ عَلَيْهِ الْكَفَّارَةُ أَنْزَلَ أَوْ لَمْ يُنْزِلْ عِنْدَنَا خِلَافًا للِشَّافِعِيِّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى فَإِنَّ السَّبَبَ عِنْدَهُ الْجِمَاعُ الْمُعْدِمُ لِلصَّوْمِ وَقَدْ وُجِدَ وَلَكِنَّا نَقُولُ الْجِنَايَةُ لَا تَتَكَامَلُ إلَّا بِاقْتِضَاءِ شَهْوَةِ الْمَحَلِّ، وَهَذَا الْمَحَلُّ غَيْرُ مُشْتَهًى عِنْدَ الْعُقَلَاءِ – المبسوط

நோன்பு வைத்துக் கொண்டு செத்த பிணத்துடனோ, மிருகத்துடனோ ஒருவன் உடலுறவு கொண்டு விந்து வெளிப்பட்டாலும், வெளிப்படாவிட்டாலும் நோன்பை முறித்ததற்கான கப்ஃபாரா (பரிகாரம்) அவசியம் இல்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மப்சூத்

وَلَوْ جَامَعَ بَهِيمَةً فَأَنْزَلَ فَسَدَ صَوْمُهُ وَعَلَيْهِ الْقَضَاءُ وَلَا كَفَّارَةَ عَلَيْهِ لِأَنَّهُ وَإِنْ وُجِدَ الْجِمَاعُ صُورَةً وَمَعْنًى وَهُوَ قَضَاءُ الشَّهْوَةِ لَكِنْ عَلَى سَبِيلِ الْقُصُورِ لِسَعَةِ الْمَحَلِّ، وَلَوْ جَامَعَهَا وَلَمْ يُنْزِلْ لَا يَفْسُدُ – بدائع الصنائع

மிருகத்துடன் உறவுகொண்டு விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியும். அந்த நோன்பைக் களா செய்ய வேண்டும். உடலுறவு நடந்தாலும் அது பூரணமானதாக இல்லாமல் குறைபாடு உடையதாக உள்ளதால் நோன்பை முறித்ததற்கான பரிகாரம் தேவையில்லை. விந்து வெளிப்படாமல் மிருகத்துடன் உறவுகொண்டால் நோன்பு முறியாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய பதாயிவுஸ் ஸனாயிவு

செத்த பிணத்துடன் அல்லது மிருகத்துடன் ஒருவன் உறவு கொள்வானா? இவ்வாறு செய்தால் நோன்பு முறித்ததற்கான பரிகாரம் செய்யத் தேவை இல்லை என்று சட்டமியற்றி பாவம் செய்யத்தூண்டும் மத்ஹபுகள் நமக்குத் தேவைதானா? நோன்பாளியின் இறையச்சத்தைப் போக்கும் வகையில் கேடு கெட்டவர்கள் தான் மத்ஹபு சட்டத்தை எழுதியுள்ளனர் என்பது தெரிகிறதா?

இப்படி கேவலமாக உங்கள் புத்தி ஏன் வேலை செய்கிறது என்று நாம் கேட்டால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா? எங்கள் இமாம்கள் மட்டுமா ஆபாசமாகச் சட்டம் சொன்னார்கள்? நபிகள் நாயகமே சொல்லி உள்ளார்கள் என்று நெஞ்சழுத்தத்துடன் கூறுகின்றனர்.

سنن أبي داود 4464 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَاقْتُلُوهُ وَاقْتُلُوهَا مَعَهُ»

மிருகத்துடன் புணர்பவனையும் அம்மிருகத்தையும் கொன்று விடுங்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் அபூதாவூத்)

ஒரு மனிதன் ஆசையின் உச்சக் கட்டத்தில் இவ்விதம் செய்து விட்டால் என்ன சட்டம் என்பதைச் சொல்ல வந்த இமாம்களின் சொற்கள் ஆபாசமென்றால் மேற்கூறப்பட்ட ஹதீஸிலும் அவ்விதமே வந்துள்ளது. ஆகையால் நபி (ஸல்) அவர்களின் சொல்லும் ஆபாசம் என்று சொல்ல முன்வருவார்களா? அதையும் மிருகத்தனமானது என்று சொல்வார்களா?

என்று மத்ஹபு வெறி தலைக்கேறிய ஆலிம்சாக்கள் கூறுகின்றனர்.

“மிருகத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை” என்று கூறுவதும், மிருகத்துடன் புணர்ந்தால் அவனைக் கொல்லுங்கள் என்பதும் சமமாக இந்த அயோக்கியர்களுக்குத் தெரிகிறது. இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்க காரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இது ஒரு பாவமான காரியம் என்ற கருத்து இதில் அடங்கியிருக்கவில்லை.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறு செய்பவனைக் கொல்லுங்கள் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்ய நினைப்பவனுக்கு அச்சம் ஊட்டப்படுகிறது. இத்தகைய காரியத்தைச் செய்பவன் உலகில் வாழவே தகுதியற்றவன் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இதைச் செய்தால் குளிக்கத் தேவையில்லை என்று கூறி காட்டுமிராண்டிகளுக்குச் சட்டம் வகுக்கும் அந்த மூடர்களின் கற்பனை எங்கே? இத்தகையோரை உலகில் வாழவே விடக் கூடாது என்ற அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கை எங்கே?

பாவிகளா! உங்கள் ஆபாசக் கற்பனையையும், அல்லாஹ்வின் தூதருடைய அர்த்தமுள்ள அறிவுரையையும் உங்களால் எப்படிச் சமமாகக் கருத முடிகிறது? இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் இவர்கள் கற்பனை செய்த சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளதைக் கூட இவர்கள் உணரவில்லை. மிருகத்துடன் புணர்ந்தவன் உலகில் வாழவே கூடாது என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுவதால் இவனுக்குக் குளிப்பு கடமையா என்ற கேள்வியே அடிபட்டுப் போகின்றது. இவனுக்குக் குளிப்பு கடமையில்லை என்று எழுதிய இவர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தனர் என்பதை விளக்கட்டும்.

சாதாரண நேரத்திலேயே மிருகத்துடன் புணர்பவன் தண்டிக்கப்பட வேண்டும்; கொல்லப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நோன்பு வைத்திருப்பவன் நிச்சயம் இப்படியெல்லாம் செய்ய மாட்டான். இது போன்ற தீய எண்ணங்களைத் தடுக்கத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு இவ்வாறு செய்தால் பரிகாரம் தேவையில்லை என்று எழுதி வைத்ததன் மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன? இந்தப் பாவத்தைச் சாதாரணமான காரியமாகச் சித்தரிக்கவில்லையா? நோன்பின் புனிதத்தைப் பாழாக்கவில்லையா?

சிறுமியுடன் உறவு கொண்டால் குளிப்பு கடமை இல்லை

لَا يَجِبُ الْغُسْلُ بِوَطْءِ صَغِيرَةٍ غَيْرِ مُشْتَهَاةٍ وَلَا يَنْتَقِضُ الْوُضُوءُ – در المختار

ஆசைவைக்க முடியாத சிறுமியுடன் உடலுறவு கொண்டால் குளிப்பும் கடமையில்லை. உளூவும் முறியாது

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ரத்துல் முஹ்தார்

இவ்வளவு ஆபாசமாகக் கூட கற்பனை செய்ய முடியுமா? இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்க காரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இது ஒரு பாவமான காரியம் என்ற கருத்து இதில் அடங்கியிருக்கவில்லை. இப்படி நடக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இதனால் குளிப்பு கடமையில்லை என்று எப்படிக் கூற முடியும்? அதற்கான ஆதாரம் என்ன?

ஒரு நாள் வயதுக் குழந்தையைச் சீரழித்தல்

பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை காமவெறி கொண்ட பெண்கூட காமத்துடன் பார்க்க மாட்டாள். அது போல் பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையை காம வெறியன் கூட காமத்துடன் பார்க்க மாட்டான். ஆனால் அப்படிச் செய்தால் என்ன சட்டம் என்று மத்ஹபு சட்ட மடையர்கள் ஆய்வு செய்துள்ளதப் பாருங்கள்!

(وقوله: ذكر أو أنثى) أي ولو صغيرا فلو أولج مكلف ذكره في فرج صغيرة ولو بنت يوم فإنه يحد كما أن المرأة المكلفة لو أدخلت ذكر صبي ولو ابن يوم في فرجها فإنها تحد – إعانة الطالبين

ஒரு ஆண் தனது ஆணுறுப்பை பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையின் உறுப்பில் நுழைத்தால் தண்டிக்கப்படுவான். அது போல் ஒரு பெண், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உறுப்பை தனது உறுப்புக்குள் நுழைத்தால் அவளும் தண்டிக்கப்படுவாள்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்

தண்டிக்கப்படுவார்கள் என்று தான் எழுதப்பட்டுள்ளது என நல்லெண்ணம் வைக்க முடியாது. எந்த மனிதனுடைய மனதிலும் தோன்றாத காமவெறி தலைக்கேறியதால் தான் இப்படியெல்லம் கற்பனைச் சட்டங்களை வகுத்துள்ளனர் என்பதைத் தான் இங்கே கவனிக்க வேண்டும்.

மிருகத்துடனும் செத்த பிணத்துடனும் உடலுறவு

மிருகத்துடனும், செத்த பிணத்துடனும் உடலுறவு கொள்வதைத் தூண்டும் வகையிலும் மத்ஹபுக் கயவர்கள் சட்டம் இயற்றி அதை மதரஸாவில் படித்துக் கொடுக்கின்றனர்.

(أَوْ أَدْخَلَ ذَكَرَهُ فِي بَهِيمَةٍ) أَوْ مَيْتَةٍ (مِنْ غَيْرِ إنْزَالٍ) أَوْ (مَسَّ فَرْجَ بَهِيمَةٍ أَوْ قُبُلَهَا فَأَنْزَلَ أَوْ أَقْطَرَ فِي إحْلِيلِهِ) مَاءً أَوْ دُهْنًا وَإِنْ وَصَلَ إلَى الْمَثَانَةِ عَلَى الْمَذْهَبِ، وَأَمَّا فِي قُبُلِهَا فَمُفْسِدٌ إجْمَاعًا لِأَنَّهُ كَالْحُقْنَةِ. رد المحتار

ஒருவன் தன் ஆணுறுப்பை ஒரு மிருகத்திடமோ, பிணத்திடமோ இந்திரியம் வெளிப்படாதவாறு செலுத்தினாலும், மிருகத்தின் (பெண்) உறுப்பைத் தொட்டு அல்லது முத்தமிட்டு இந்திரியம் வெளிப்பட்டாலும், தன்னுடைய ஆணுறுப்பின் துவாரத்தில் தண்ணீரை அல்லது எண்ணையை சொட்டு விட்டு, அது உள்ளே இருக்கும் மூத்திரப் பையை அடைந்தாலும் நமது மத்ஹபின் படி நோன்பு முறியாது. ஆனால் நோன்பு வைத்துள்ள பெண் தனது பிறப்புறுப்பின் துவாரத்தில் எண்ணையை விட்டு அது மூத்திரப்பை வரை சென்றால் நோன்பு முறிந்து விடும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

சாதாரண மனிதன் கூட பிணத்துடன் உடலுறவு கொள்ள மாட்டான். நோன்பு வைத்து இருப்பவன் இதுபோல் கேடுகெட்ட செயலைச் செய்ய மாட்டான். ஆனால் மத்ஹப் அறிஞர்கள் என்ற காமக்கொடூரர்கள் இப்படியெல்லாம் கற்பனை செய்துள்ளனர். அப்படி ஒருவன் மிருகமாக நடந்து கொண்டால் நோன்பு மூறியும் என்று சொல்லி இருந்தால் கூட ஓரளவு ஆறுதல் அடையலாம். இப்படியெல்லாம் செய்தால் நோன்பு முறியாது என்று இந்தக் கயவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

மனைவியுடன் உறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும்; ஒரு நோன்பை முறித்ததற்காக அறுபது நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ்வுக்குப் பயந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனுக்கு இவர்கள் காட்டும் வழி என்ன?

மிருகத்துடன் உறவு கொள்! அல்லது பிணத்துடன் உறவு கொள்! உன் நோன்புக்கு பாதிப்பு வராது என்று சட்டம் கூறி மக்களை வழிகெடுக்கும் மத்ஹப் தேவையா? சிந்தித்துப் பாருங்கள்! மேலும் நோன்பு வைத்துள்ள ஆண்களோ, பெண்களோ தமது உறுப்புக்குள் ஏன் எண்ணையை விட வேண்டும்? அது மூத்திரப்பை வரை எப்படிச் செல்லும்? அதை ஸ்கேன் செய்து பார்த்து இந்த மூடர்கள் கண்டுபிடித்தார்களா?

ஹஜ் செய்யும் பெண்ணைக் கொச்சைப்படுத்துதல்

وَكَذَا لَوْ اسْتَدْخَلَتْ ذَكَرَ حِمَارٍ أَوْ ذَكَرًا مَقْطُوعًا فَسَدَ حَجُّهَا إجْمَاعًا رد المحتار

இவ்வாறே ஒருத்தி தன் பெண்ணுறுப்பில் கழுதையின் ஆணுறுப்பைத் திணித்தாலோ, அல்லது துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பைத் திணித்தாலோ ஏகோபித்த முடிவின் படி அவளது ஹஜ் வீணாகி விடும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ரத்துல் முஹ்தார்

மிருகத்துடன் ஆண் உறவு கொண்டால் அவனது ஹஜ் முறியாது என்றும், மிருகத்துடன் பெண் உறவு கொண்டால் அவளது ஹஜ் முறியும் என்றும் முரண்பாடாகச் சட்டம் வகுத்தது ஏன் என்பதற்கு காமுகர்களான மத்ஹப் சட்ட நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பாருங்கள்!

(قوله وكذا لو استدخلت ذكر حمار) والفرق بينه وبين ما إذا وطئ بهيمة حيث لا يفسد حجه أن داعي الشهوة في النساء أتم فلم تكن في جانبهن قاصرة، بخلاف الرجل إذا جامع بهيمة ط (رد المحتار)

மிருகத்துடன் ஆண் உறவு கொண்டால் அவனது ஹஜ் முறியாது என்பதற்கும், மிருகத்துடன் பெண் உறவு கொண்டால் அவளது ஹஜ் முறியும் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆண்கள் மிருகத்துடன் உறவு கொண்டால் பூரண இன்பம் கிடைக்காது. ஆனால் பெண்கள் தமது உறுப்பில் எதை விட்டாலும் பூரண இன்பம் கிடைத்து விடும். இதுதான் வித்தியாசம்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ரத்துல் முஹ்தார்

மஞ்சள் பத்திரிகையில் எழுதத் தகுதியானவர்கள் தான் இமாம்கள் என்ற போர்வையில் இச்சட்டங்களை எழுதியுள்ளனர் என்று தெளிவாகத் தெரிகின்றது. புனிதமான ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்களை இவ்வளவு கேவலமாகவும், அசிங்கமாகவும் சித்தரித்து எழுதியுள்ள இந்த மத்ஹபுச் சட்டங்களை குறைந்த பட்ச மார்க்கப் பற்று உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியுமா?

சுவனத்தில் ஹோமோ செக்ஸா

) وَلَا تَكُونُ) اللِّوَاطَةُ (فِي الْجَنَّةِ عَلَى الصَّحِيحِ) لِأَنَّهُ تَعَالَى اسْتَقْبَحَهَا وَسَمَّاهَا خَبِيثَةً، وَالْجَنَّةُ مُنَزَّهَةٌ عَنْهَا فَتْحٌ . (رد المحتار –

சரியான கருத்துப்படி, சுவனத்தில் ஆணுக்கு ஆண் உறவு கொள்தல் இல்லை. ஏனெனில் அல்லாஹ் அதை அருவருக்கத் தக்கதாக ஆக்கி, அதை அசிங்கம் என்று குறிப்பிடுகின்றான். சுவனம் இத்தகைய அசிங்கத்தை விட்டும் தூய்மையாக்கப் பட்டதாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

சரியான கருத்துப்படி என்று சொல்வதன் மூலம் இவர்களின் மத்ஹபில் சொர்க்கத்தில் ஓரினச்சேர்க்கை உள்ளது என்ற கருத்தும் உள்ளது என்று தெரிகிறது.

நல்லடியார்களுக்கு இறைவன் பரிசாக வழங்கும் சுவனத்தைப் பற்றிக் கூறும் போது கூட இந்த மத்ஹபு நூலாசிரியர்கள் தங்கள் வக்கிரப் புத்தியை விடவில்லை. சொர்க்கத்தில் ஹோமோ செக்ஸ் உண்டா? என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த உலகத்தில் அதில் ஆர்வம் உள்ளவர்கள் தான் மறுமையில் அதற்கு அனுமதி உள்ளதா? என்று ஆய்வு செய்வார்கள். மத்ஹபு நூலாசிரியர்கள் காமக் கொடூரர்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

பெற்ற மகளைக் காமக்கண் கொண்டு பார்க்கும் தந்தை

وَفِي الْخَانِيَّةِ إنَّ النَّظَرَ إلَى فَرَجِ ابْنَتِهِ بِشَهْوَةٍ يُوجِبُ حُرْمَةَ امْرَأَتِهِ وَكَذَا لَوْ فَزِعَتْ فَدَخَلَتْ فِرَاشَ أَبِيهَا عُرْيَانَةً فَانْتَشَرَ لَهَا أَبُوهَا تَحْرُمُ عَلَيْهِ أُمُّهَا (الدر المختار –

தந்தை தனது மகளின் பெண்ணுறுப்பை இச்சையுடன் பார்ப்பதால் அவருடைய மனைவி அவருக்கு ஹராமாகி விடுவாள். இது போலவே மகள், திடுக்கிட்டுத் தனது தந்தையின் படுக்கை நோக்கி நிர்வாணமாகச் சென்று அதனால் தந்தைக்கு இச்சை கிளம்பி விடுமாயின் அவளது தாய் இவருக்குத் ஹராமாகி விடுவாள்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

மிருகங்களுக்குக் கூட தோன்றாத இந்தச் செயலை, மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில் எழுதி வைத்துள்ளனர். குர்ஆன், ஹதீஸில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கூடக் கேட்க முடியாத அளவுக்குக் கொச்சையான, அருவருக்கத்தக்க, ஆபாசக் களஞ்சியங்களாகத் திகழும் இந்த மத்ஹபு நூல்களைக் குப்பையில் கொண்டு போய் போட வேண்டாமா?

ஒரு தந்தை பெற்ற மகளின் பெண்ணுறுப்பைப் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இதை அவன் வந்து தண்டோரா போடுவானா? பெற்ற மகளையே காமத்துடன் அணுகியவன் மனைவி அவனுக்கு ஹராமாகி விடுவாள் என்ற சட்டத்தை மட்டும் மதித்து நடப்பானோ? சரியான வடிகட்டிய முட்டாள்கள் தான் இது போல் சட்டம் எழுத முடியும் என்று தெரிகிறதா?

பன்றி நாய்களையும் விட்டு வைக்காத நாதாரிகள்

لو نَزَا كلبٌ أو خنزيرٌ على آدمِيّة فولَدَت آدَمِياً كان الوَلَدُ نَجِساً، ومع ذلك هو مُكلَّفٌ بالصلاة وغيرها. (فتح المعين –

ஒரு நாய் அல்லது பன்றி, மனித இனத்தைச் சார்ந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டு அவள் ஒரு மனிதக் குழந்தையைப் பெற்றால் அந்தக் குழந்தை அசுத்தமானவன் ஆவான். இவ்வாறு அசுத்தமாக இருப்பதுடனே தொழுகை மற்றும் இதர கடமைகள் அவன் மீது கடமையாக்கப்பட்டு உள்ளன.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய பத்ஹுல் முயீன்

فإن نزا مأكول على مأكولة فولدت ولدا على صورة الآدمي فإنه طاهر مأكول فلو حفظ القرآن وعمل خطيبا وصلى بنا عيد الأضحى جاز أن يضحى به بعد ذلك (إعانة الطالبين

ஒரு உண்ணத்தக்க ஆண்பிராணி ஒரு உண்ணத்தக்க பெண்பிராணியிடம் உடலுறவு கொண்டு மனித வடிவத்தில் ஒரு ஆண்குழந்தையை அது பெற்றெடுத்தால் அந்தக் குழந்தை பரிசுத்தமானதாகும். உண்ணத்தக்கதாகும். அவன் குர்ஆனை மனப்பாடம் செய்து, கத்தீபாக பணிசெய்தாலும் சரியே. அவன் நமக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழவைத்தால் அதற்குப் பிறகு அவனை குர்பானி கொடுப்பதும் கூடும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத்தாலிபீன்

ஆடும் ஆடும் சேர்ந்தால் மனித வடிவில் குழந்தை பிறக்குமா? அப்படி பிறந்தாலும் மனிதனைப் போல் பகுத்தறிவுடனும் மனிதத் தன்மையுடனும் பிறக்குமா? மத்ஹபு இமாம்கள் எனப்படும் இவர்களுக்கு காமவெறிதான் மேலோங்கி இருந்ததே தவிர பொது அறிவு அறவே இல்லை என்பதற்கு இந்த மடமை தக்க ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்த மடையர்களைப் பின்பற்றினால் வெற்றி பெற முடியுமா என்று சிந்தியுங்கள்!

பெண்ணுறுப்பில் பஞ்சை நுழைத்தால் நோன்பு முறியுமா?

இறையச்சத்தை அதிகரிப்பதற்காக அல்லாஹ் கடமையாக்கிய நோன்பையும், நோன்பாளிகளையும் இந்தக் காமக் கொடூர மத்ஹபினர் எந்த அளவுக்கு இழிவுபடுத்தியுள்ளனர் என்பதைப் பாருங்கள்!

)أَوْ أَدْخَلَ أُصْبُعَهُ الْيَابِسَةَ فِيهِ) أَيْ دُبُرِهِ أَوْ فَرْجِهَا وَلَوْ مُبْتَلَّةً فَسَدَ , وَلَوْ أَدْخَلَتْ قُطْنَةً إنْ غَابَتْ فَسَدَ وَإِنْ بَقِيَ طَرَفُهَا فِي فَرْجِهَا الْخَارِجِ لَا (الدر المختار –

ஒருவன் ஈரமில்லாத தன்னுடைய விரலை தன்னுடைய பின்துவாரத்திலோ, மனைவியின் பெண்ணுறுப்பிலோ நுழைத்தால் நோன்பு முறியாது. அது ஈரமானதாக இருந்தால் நோன்பு முறிந்து விடும். ஒரு பெண் பஞ்சை தன் உறுப்பில் நுழைத்து அது முழுவதும் மறைந்து விட்டால் நோன்பு முறிந்து விடும். அவளது வெளிப்புற உறுப்பில் அந்தப் பஞ்சின் நுனிப்பகுதி தெரிந்தால் நோன்பு முறியாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முஹ்தார்

காமக்கடலில் மூழ்கித் திளைத்தவனுக்குத் தான் இது போல் கற்பனை செய்யத் தோன்றும். அல்லாஹ்வை அஞ்சி மறுமையை நம்பும் நன்மக்களுக்கு இது போல் கற்பனை செய்யத் தோன்றுமா? சிந்தித்துப் பாருங்கள்!

அடிமைப் பெண் முன்னிலையில் உடலுறவு

மனைவியியுடன் உடலுறவு கொள்வது யாரும் பார்க்காத வகையில் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். நாகரீகமுள்ள எந்த மனிதனும் மற்றவர்கள் முன்னிலையில் மனைவியுடன் உடலுறவு கொள்ள மாட்டான்.

ஆனால் மத்ஹப் கூறுவதைப் பாருங்கள்!

لَا بَأْسَ بِوَطْءِ الْمَنْكُوحَةِ بِمُعَايَنَةِ الْأَمَةِ دُونَ عَكْسِهِ – رد المحتار –

அடிமைப் பெண் நேரடியாகப் பார்க்கும் விதத்தில் ஒருவன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதில் தவறில்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

வெட்கம் ஈமானில் உள்ளது என்று சொன்ன இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படி ஒரு சட்டத்தை எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

صحيح مسلم 74 – (338) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، قَالَ: أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ»

ஓர் ஆண் மற்றொரு ஆணின் மர்ம உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மர்ம உறுப்பைப் பார்க்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 512

இந்த நபிமொழிகளுக்கும், பொதுவான மனித நாகரிகத்துக்கும் முரணாக இன்னொரு பெண்ணின் முன்னிலையில் மனைவியுடன் உடலுறவு கொள்ளலாம் என்று எழுதி வைத்த இவர்கள் மார்க்க அறிஞர்களா? இப்லீசின் உடன்பிறப்புக்களா? சிந்தித்துப் பாருங்கள்!

கன்னியை அறியும் சோதனை

திருமணத்துக்குப் பின் மனைவியுடன் உடலுறவு கொள்ளவில்லை என்றோ திருமணத்தின் போது மனைவி கன்னித்தன்மையுடன் இருக்கவில்லை என்றோ கணவன் வாதிட்டால் அவனது மனைவிக்கு கன்னிப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று மத்ஹபு சட்ட வல்லுனர்கள் சட்டமியற்றியுள்ளதைப் பாருங்கள்!

ثُمَّ كَيْفَ يَعْرِفُ أَنَّهَا بِكْرٌ أَوْ ثَيِّبٌ؟ قَالُوا: يَدْفَعُ فِي فَرْجِهَا أَصْغَرَ بَيْضَةٍ مِنْ بَيْضِ الدَّجَاجِ، فَإِنْ دَخَلَ بِلَا عُنْفٍ فَثَيِّبٌ وَإِلَّا فَبِكْرٌ. وَقِيلَ إنْ أَمْكَنَهَا أَنْ تَبُولَ عَلَى الْجِدَارِ فَبِكْرٌ وَإِلَّا فَثَيِّبٌ، وَقِيلَ تُكْسَرُ الْبَيْضَةُ فَتُصَبُّ فِي فَرْجِهَا فَإِنْ دَخَلَتْ فَثَيِّبٌ وَإِلَّا فَبِكْرٌ العناية شرح الهداية

அவளது பிறப்பு உறுப்புக்குள் சின்ன கோழி முட்டையை நுழைக்க வேண்டும். அது எளிதாக உள்ளே சென்றால் அவள் கன்னித்தன்மை இழந்தவள். அவ்வாறு இல்லாவிட்டால் அவள் கன்னிப்பெண்ணாவாள். ஒரு சுவற்றை நோக்கி அவளை சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும். அவள் சுவற்றில் சிறுநீர் கழித்தால் அவள் கன்னியாவாள். அவ்வாறு இல்லாவிட்டால் அவள் கன்னித்தன்மை இழந்தவளாவாள் என்று மற்றொரு வழியும் சொல்லப்பட்டுள்ளது. அல்லது முட்டையை உடைத்து உள்ளே ஊற்ற வேண்டும். அது உள்ளே போய்விட்டால் அவள் கன்னித்தன்மை இழந்தவள். உள்ளே போகாவிட்டால்  அவள் கண்ணியாவாள் என்று மற்றொரு சோதனை முறையும் உள்ளது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இனாயா

சரியான காமவெறியர்கள் தான் உலமாக்கள் என்ற பெயரில் இது போல் சட்டம் இயற்றியுள்ளனர் என்று தெரிகிறதா?

ஹஜ்ஜைக் களங்கப்படுத்திய கயவர்கள்

இறையச்சத்தை அதிகரிப்பதற்காக ஹஜ் செய்பவர் தனது ஆசாபாசங்களை அடக்கிக் கொண்டு பேணுதலைக் கடைப்பிடிப்பார். மனைவியுடன் சேர்ந்து ஹஜ் செய்பவர் கூட மனைவி அருகில் இருந்தும் அதிகக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார். ஆனால் காமவெறியர்களான மத்ஹபு இமாம்கள் எவ்வளவு கேவலமாக சட்டம் இயற்றியுள்ளனர் என்று பாருங்கள்.

)أَوْ أَدْخَلَ ذَكَرَهُ فِي بَهِيمَةٍ) أَوْ مَيْتَةٍ (مِنْ غَيْرِ إنْزَالٍ) أَوْ (مَسَّ فَرْجَ بَهِيمَةٍ أَوْ قُبُلَهَا فَأَنْزَلَ أَوْ أَقْطَرَ فِي إحْلِيلِهِ) مَاءً أَوْ دُهْنًا وَإِنْ وَصَلَ إلَى الْمَثَانَةِ عَلَى الْمَذْهَبِ، وَأَمَّا فِي قُبُلِهَا فَمُفْسِدٌ إجْمَاعًا لِأَنَّهُ كَالْحُقْنَةِ. الدر المختار

ஹஜ்ஜின் போது தனது ஆணுறுப்பை மிருகத்திடமோ, செத்த பினத்திடமோ விந்து வெளிப்படாத வகையில் நுழைத்தால், அல்லது மிருகத்தின் பெண்ணுறுப்பைத் தொட்டு, அல்லது அவளது பிறப்புறுப்பை முத்தமிட்டு விந்து வெளிப்பட்டால், அல்லது தனது ஆணுறுப்புக்குள் தண்ணீரையோ எண்ணையையோ விட்டு அது சிறுநீர்ப்பை வரை சென்றால் இக்காரியங்களால் ஹஜ் முறியாது. ஒரு பெண் தண்ணீரையோ, எண்ணையையோ தனது உறுப்புக்குள் விட்டால் அவளது ஹஜ் முறியும். இது ஏகாபித்த முடிவாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

وَلَوْ جَامَعَ بَهِيمَةً وَأَنْزَلَ لَمْ يَفْسُدْ حَجُّهُ وَعَلَيْهِ دَمٌ، وَإِنْ لَمْ يُنْزِلْ فَلَا شَيْءَ عَلَيْهِ، وَالِاسْتِمْنَاءُ بِالْكَفِّ عَلَى هَذَا – فتح القدير

மிருகத்துடன் உடலுறவு கொண்டு விந்து வெளிப்பட்டாலும் ஹஜ் முறியாது. ஒரு ஆட்டை அறுப்பது அவன் மீது கடமையாகும். விந்து வெளிப்படாமல் மிருகத்துடன் உடலுறவு கொண்டால் அதுவும் தேவையில்லை. சுய இன்பம் அனுபவிப்பதும் இப்படித்தான். (அதாவது ஹஜ் முறியாது, எந்தப் பரிகாரமும் தேவையில்லை.)

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் கதீர்

وَكَذَا لَوْ اسْتَدْخَلَتْ ذَكَرَ حِمَارٍ أَوْ ذَكَرًا مَقْطُوعًا فَسَدَ حَجُّهَا إجْمَاعًا الدر المختار

ஹஜ்ஜுக்குச் சென்றவள் கழுதையின் ஆணுறுப்பையோ, வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பையோ தனது பெண்ணுறுப்பில் நுழைத்தால் அவளது ஹஜ் முறியும். இது ஏகோபித்த முடிவாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

மிருகத்துடன் ஆண் புணர்ந்தால் ஹஜ் முறியாது என்றும், பெண்ணுக்கு முறியும் என்றும் வேறுபடுத்தி சட்டம் இயற்றிய காரணத்தை காமவெறி சட்ட வல்லுனர்கள் எப்படி விளக்குகிறார்கள் என்று பாருங்கள்!

(قَوْلُهُ وَكَذَا لَوْ اسْتَدْخَلَتْ ذَكَرَ حِمَارٍ) وَالْفَرْقُ بَيْنَهُ وَبَيْنَ مَا إذَا وَطِئَ بَهِيمَةً حَيْثُ لَا يَفْسُدُ حَجُّهُ أَنَّ دَاعِيَ الشَّهْوَةِ فِي النِّسَاءِ أَتَمُّ فَلَمْ تَكُنْ فِي جَانِبِهِنَّ قَاصِرَةٌ، بِخِلَافِ الرَّجُلِ إذَا جَامَعَ بَهِيمَةً ط رد المحتار

பெண்கள் மிருகத்துடன் சேர்ந்தாலும் அவர்களுக்குப் பூரண இன்பம் கிடைத்து விடும். அவர்களின் இன்பத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. ஆனால் ஆண்கள் மிருகத்துடன் சேர்ந்தால் அவர்களுக்குப் பூரண இன்பம் கிடைக்காது. எனவே மிருகத்துடன் சேரும் பெண்ணின் ஹஜ் முறியும். ஆணின் ஹஜ் முறியாது

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

وَعَنْ أَبِي حَنِيفَةَ أَنَّهُ لَا يَفْسُدُ بِالْجِمَاعِ فِي الدُّبُرِ لِقُصُورِ مَعْنَى الْجِمَاعِ فِيهِ؛ وَلِهَذَا لَا يَجِبُ بِهِ الْحَدُّ عِنْدَهُ، وَلَا فَرْقَ فِي ذَلِكَ بَيْنَ أَنْ يَكُونَ عَامِدًا، أَوْ نَاسِيًا طَائِعًا أَوْ مُكْرَهًا لِمَا ذَكَرْنَا فِي الصَّوْمِ. تبيين الحقائق

ஹஜ்ஜுக்குப் போய் மலத்துவாரத்தில் உறவு கொண்டால் ஏகோபித்த கருத்துப்படி ஹஜ் முறியாது; ஏனெனில் இதில் பூரண இன்பம் இல்லை என்று அபூஹனீஃபா கூருகிறார். வேண்டுமென்று செய்தல், மறதியாகச் செய்தல், விரும்பிச் செய்தல், கட்டாயப்படுத்திச் செய்தல் ஆகியவற்றுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்பதும் அபூஹனீஃபாவின் கருத்தாகும்.

وَلَوْ وَطِئَ بَهِيمَةً لَا يَفْسُدُ حَجُّهُ ؛ لِمَا قُلْنَا وَلَا كَفَّارَةَ عَلَيْهِ إلَّا إذَا أَنْزَلَ لِأَنَّهُ لَيْسَ بِاسْتِمْتَاعٍ مَقْصُودٍ بِخِلَافِ الْجِمَاعِ فِيمَا دُونَ الْفَرْجِ – بدائع الصنائع في ترتيب الشرائع

ஹஜ்ஜுக்குச் சென்றவன் மிருகத்துடன் உடலுறவு கொண்டால் அவனது ஹஜ் பாழாகாது. விந்து வெளிப்படாவிட்டால் அதற்கு பரிகாரமும் தேவை இல்லை. விந்து வெளிப்பட்டால் பரிகாரம் தேவை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய பதாயிவுஸ் ஸனாயிவு

வாடகை கொடுத்து விபச்சாரம் செய்வது குற்றமாகாது

விபச்சாரம் செய்பவன், விபச்சாரிக்கு உரிய வாடகையைக் கொடுக்காமல் விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை உண்டாம். வாடகை பேசி விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை இல்லையாம். இதோ காமவெறி தலைக்கு ஏறிய மத்ஹபு சட்ட வல்லுனர்கள் கூறுவதைப் பாருங்கள்!

(وَلَا) حَدَّ (بِالزِّنَا بِالْمُسْتَأْجَرَةِ لَهُ) أَيْ لِلزِّنَا. وَالْحَقُّ وُجُوبُ الْحَدِّ كَالْمُسْتَأْجَرَةِ لِلْخِدْمَةِ فَتْحٌ- الدر المختار

விபச்சாரம் செய்வதற்காக கூலி பேசிய பெண்ணிடம் விபச்சாரம் செய்பவனுக்கு விபச்சாரத்திற்கான தண்டனை இல்லை. சரியான கருத்துப்படி தண்டனை உண்டு என்று ஃபத்ஹுல் கதீர் ஆசிரியர் கூறுகிறார்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

சரியான கருத்துப்படி தண்டனை உண்டு என்று சொல்லி விட்டார்களே என்று மதிமயங்கிட வேண்டாம். இதையும் பாருங்கள்!

(قَوْلُهُ وَالْحَقُّ وُجُوبُ الْحَدِّ) أَيْ كَمَا هُوَ قَوْلُهُمَا، وَهَذَا بَحْثٌ لِصَاحِبِ الْفَتْحِ، وَسَكَتَ عَلَيْهِ فِي النَّهْرِ وَالْمُتُونِ وَالشُّرُوحِ عَلَى قَوْلِ الْإِمَامِ – الدر المختار

அபூயூசுப், முஹம்மத் ஆகியோரின் கருத்துப்படி ஃபத்ஹுல் கதீர் ஆசிரியர் தண்டனை உண்டு என்று கூறுகிறார். ஆனால் வாடகை கொடுத்து விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை என்ற இமாம் அபூஹனீபாவின் கருத்தை எடுத்துக்காட்டிய நஹ்ர், மற்றும் மூல நூல்கள், விரிவுரை நூல்களில் அபூஹனீபா கூறியதை எதிர்த்து எதுவும் கூறவில்லை. (எனவே ஃபத்ஹுல் கதீர் ஆசிரியரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும்.)

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

ஹனஃபி மத்ஹப் சட்டப்படி ஓசியாக விபச்சாரம் செய்வதுதான் தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னரே வாடகை பேசிக் கொண்டு விபச்சாரம் செய்பவனுக்குத் தண்டனை இல்லை.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் உள்ள ஒருவன் இப்படி அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவானா? இந்த மூடர்களின் சட்டப்படி விபச்சாரம் செய்யும் யாரையும் தண்டிக்க முடியாது. ஏனெனில் விபச்சாரம் செய்து மாட்டிக் கொள்பவன் வாடகையைக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால் அவனைத் தண்டிக்க முடியாது.

பைத்தியத்துடன் விபச் சாரம் செய்தால் தண்டனை இல்லை

தண்டிக்கப்படாமல் விபச்சாரம் செய்யும் வழியை மத்ஹபுகள் எவ்வாறு கற்றுத் தருகின்றன என்று பாருங்கள்!

فَإِذَا دَعَتْ الْعَاقِلَةُ الْبَالِغَةُ مَجْنُونًا أَوْ صَبِيًّا إلَى نَفْسِهَا فَزَنَى بِهَا لَا حَدَّ عَلَيْهَا عِنْدَنَا، المبسوط

ஒரு பெண் சிறுவனையோ, பைத்தியக்காரனையோ தன்னிடம் அழைத்து அவர்களுடன் விபச்சாரம் செய்தால் அவளுக்குத் தண்டனை இல்லை.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மப்ஸுத்

இந்தச் சட்டத்துக்கான ஆதாரம் என்ன? மத்ஹப் சட்ட வல்லுனர்கள் கூறுவதைப் பாருங்கள்!

(وَحُجَّتُنَا) فِي ذَلِكَ أَنَّهَا مَكَّنَتْ نَفْسَهَا مِنْ فَاعِلٍ لَمْ يَأْثَمْ وَلَمْ يُحْرَجْ فَلَا يَلْزَمْهَا الْحَدُّ كَمَا لَوْ مَكَّنَتْ نَفْسَهَا مِنْ زَوْجِهَا وَبَيَانُ الْوَصْفِ ظَاهِرٌ – المبسوط

இச்சட்டத்துக்குரிய ஆதாரம் என்னவென்றால் விபச்சாரக் குற்றம் யாரிடம் ஏற்படாதோ அத்தகையவனுக்கு அவள் இடமளித்துள்ளாள். (சிறுவனுக்கும், கிறுக்கனுக்கும் எந்தக் குற்றமும் வராது.) எனவே தன் கணவனுக்கு இடமளித்தால் அது எப்படி குற்றமாகாதோ அது போல் இதுவும் குற்றமில்லை என்பதால் அவளுக்குத் தண்டனை இல்லை. இது தெளிவான விஷயமாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மப்ஸுத்

விபச்சாரம் செய்ய விரும்புபவள் பைத்தியக்காரனையோ, சிறுவனையோ பயன்படுத்திக் கொள்ள இந்தச் சட்டம் தூண்டுகிறது. எவ்வளவு கேவலமான பிறவிகளாக இந்தச் சட்ட வல்லுனர்கள் இருந்துள்ளனர் என்பது தெரிகிறதா?

ஆட்டம் போட்டாலும் குளிப்பு கடமையில்லையாம்!

(و) منها (إيلاج بخرقة مانعة من وجود اللذة) على الأصح وقدمنا لزوم الغسل به احتياطا- مراقي الفلاح

இன்பத்தைத் தடுக்கும் வகையில் ஒரு துணியை ஆணுறுப்பில் சுற்றிக் கொண்டு உடலுறவு கொண்டால் குளிப்பு கடமை இல்லை. பேணுதலுக்காக குளித்துக் கொள்ளலாம்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மராகில் ஃபலாஹ்

(و) ومنها (وطء بهيمة أو) امرأة (ميتة من غير إنزال) مني لعدم كمال سببه- مراقي الفلاح

விந்து வெளிப்படாத வகையில் மிருகத்துடன் உடலுறவு கொண்டாலோ பெண் ஜனாஸாவுடன் உடலுறவு கொண்டாலோ குளிப்பு கடமையாகாது. ஏனெனில் இதில் பூரண இன்பம் கிடைக்காது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மராகில் ஃபலாஹ்

(و) منها (إصابة بكر لم تزل) الإصابة (بكارتها من غير إنزال) – مراقي الفلاح

கன்னிப்பெண்ணுடன் கன்னித்திரை கிழியாத வகையில் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய மராகில் ஃபலாஹ்

இதுபோன்ற சட்டங்கள் இறையச்சமுடையவர்களால் எழுதப்பட்டது என்று கருத முடியுமா?

மிருகத்துடனோ, பிணத்துடனோ உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகாது

முஸ்லிம்களின் ஒழுக்கத்தில் எந்த அளவுக்கு காமக் கொடூர மத்ஹபினர் விளையாடியுள்ளனர் என்று பாருங்கள்!

(فِي أَحَدِ) مُتَعَلِّقٌ بِإِيلَاجِ (سَبِيلَيْ آدَمِيٍّ) احْتِرَازٌ عَنْ سَائِرِ الْحَيَوَانَاتِ فَإِنَّ إدْخَالَهَا فِي أَحَدِ سَبِيلَيْ الْبَهَائِمِ لَا يُوجِبُ غُسْلًا لِقِلَّةِ الرَّغْبَةِ (حَيٍّ) احْتِرَازٌ عَنْ إدْخَالِهَا فِي أَحَدِ سَبِيلَيْ مَيِّتٍ فَإِنَّهُ أَيْضًا لَا يَجِبُ الْغُسْلُ- درر الحكام شرح غرر الأحكام

மனிதனிடம் உடலுறவு கொண்டால் தான் குளிப்பு கடமையாகும். மிருகத்துடன் உடலுறவு கொண்டால் அதில் ஈடுபாடு குறைவு என்பதால் குளிப்பு கடமையாகாது. உயிருடன் உள்ளவரிடம் உடலுறவு கொண்டால் தான் குளிப்பு கடமையாகும். பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துரருல் ஹுக்காம்

குளிப்பு கடமையாகாது என்பது மட்டுமல்ல. உளூவும் நீங்காதாம்

وَعَلَى هَذَا الْخِلَافِ إذَا أَتَى بَهِيمَةً فَأَنْزَلَ وَإِنْ لَمْ يُنْزِلْ لَا يَفْسُدُ صَوْمُهُ بِالِاتِّفَاقِ وَلَا يُنْتَقَضُ وُضُوءُهُ – تبيين الحقائق شرح كنز الدقائق

ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த ஒருவன் மிருகத்துடன் உடலுறவு கொண்டு விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியும். இல்லாவிட்டால் நோன்பு முறியாது. உளூவும் முறியாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய தப்யீனுல் ஹகாயிக்