Author: Trichy Farook

நினைப்பதெல்லாம் கிடைக்கும்  நித்திய வாழ்க்கை

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இம்மைக்கும், மறுமைக்கும் இடையேயான வேறுபாட்டினை நாம் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சத்தியப் பாதையில் உறுதியாக இருக்க முடியும். அவ்வகையில் இவ்வுலக வாழ்வை விடவும் சொர்க்க வாழ்வு எந்தளவு சிறந்தது என்பது குறித்து ஒரு முக்கியமான செய்தியை இப்போது பார்க்க இருக்கிறோம். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு […]

திருக்குர்ஆனைத் திருப்பிப் பாருங்கள்!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அகில உலகத்திற்கும் இறுதித்தூதராக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி, திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான். இந்தத் திருக்குர்ஆன் மூலமாக உலகம் அழிகின்ற நாள் வரைக்கும் உள்ள மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை வழிகாட்டுதல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் ஏராளமான இடங்களில் அறிவுரை கூறுகின்றான். […]

நீயா? நானா?

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித சமுதாயம் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றியிருந்தாலும் அனைவரும் ஒரே குணம் படைத்தவர்களாக இல்லை. சிலர் மென்மையானவர்களாக இருப்பார்கள். சிலர் அதற்கு நேரெதிராகக் கடும்போக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் அதிகம் பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள். சிலர் அனைவருக்கும் நலம் நாடுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் பல்வேறு […]

வைர, வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா?

வைர, வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா? ஜகாத் என்பது நம்முடைய செல்வத்தினைத் தூய்மைப்படுத்துவதற்காக இறைவன் கடமையாக்கிய ஒரு வணக்கமாகும். ‘தங்கத்தையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக’ (9:34➚) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த […]

ஒரு பரேலவிச இதழின் புளுகு மூட்டைகள்

ஒரு பரேலவிச இதழின் புளுகு மூட்டைகள் இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் கொள்கையே பரேலவிசக் கொள்கை எனப்படும். இக்கொள்கைக்கு அடிப்படை பொய், புரட்டு, புளுகு மூட்டைகள் தாம். இவையே பரேலவிசக் கொள்கையின் அஸ்திவாரங்கள் ஆகும். அத்தகைய பரேலவிசம் எனும் விஷத்தைத் தாங்கிய இதழ் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. (அவ்விதழின் பெயரை அலட்சியம் செய்து விட்டு, அதனுள் பொதிந்திருந்த விஷமக் கருத்திற்கான விளக்கத்தை இக்கட்டுரையில் தருகிறோம்.) நபிகளாரின் தாயார் ஆமினா அவர்கள் முஸ்லிம் என்பது தான் […]

குழந்தைக்குத் தாய்ப்பால்!

குழந்தைக்குத் தாய்ப்பால்! குர்ஆனை உறுதிப்படுத்தும் நாட்டு நடப்புகள் தாய்ப்பால் தொடர்பாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ளதைப் போல், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளது. இவர்களால் உலகப் பொதுமறை என்று மெச்சப்படுகின்ற திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலைப் பேசுகின்றது. ஆனால் அது தாய்ப்பாலைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அல்லாஹ்வின் வேதமோ தாய்ப்பாலைப் பற்றிப் […]

திருக்குர்ஆனைக் கற்போம்! கற்பிப்போம்!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித சமுதாயம் நேர்வழியில் நடப்பதற்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் எல்லாம் வல்ல இறைவன் தனது திருத்தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான். இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கினார்கள். வேதங்களின் கட்டளைகளையும் விளக்கிக் கூறினார்கள், வாழ்ந்தும் காட்டினார்கள். ஆனால் வேதம் கொடுக்கப்பட்ட எல்லா சமுதாயமும் இறைத்தூதர்களின் காலத்துக்குப் […]

தும்மலுக்கு அல்ஹம்துலில்லாஹி துலங்கும் அறிவியல் உண்மை

தும்மலுக்கு அல்ஹம்துலில்லாஹி துலங்கும் அறிவியல் உண்மை தும்மல் வரும் போது அடக்குகின்றீர்களா? அவ்வாறு அடக்காதீர்கள். காரணம் தும்மலை அடக்கினால் அது பேராபத்தில் போய் முடியும் என லண்டனில், மருத்துவர்களின் மருத்துவ ஆய்வுகளையும் அனுபவங்களையும் வெளியிடுகின்ற BMJ Case Reports என்ற மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது. அது குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு: முன்னர் எந்த நோயினாலும் பாதிக்கப்படாத ஒரு 34 வயது நோயாளி, வீங்கிய கழுத்துடன் தனக்கு உணவு எதுவும் விழுங்க முடியவில்லை; தொண்டையில் ஒரே உறுத்தலாக இருக்கின்றது […]

அழிக்கப்பட்ட அசத்தியமும் சாதனை படைத்த சத்தியமும்

அழிக்கப்பட்ட அசத்தியமும் சாதனை படைத்த சத்தியமும் மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லா மதமும் எம்மதமே! எதுவும் எனக்கு சம்மதமே என்று கூறுகின்ற எவருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எல்லா மதமும் என் மதமில்லை. இஸ்லாம் மட்டுமே என் மதம். இது மட்டுமே எனக்கு சம்மதம் என்று கூறும் பொழுது ஏற்படுகிற பிரச்சனை அவ்வளவு சாதாரணமான பிரச்சனையாக இருக்கவில்லை. ஏனெனில் ஏனைய மதங்களை விட இஸ்லாம் மார்க்கம் சிறந்ததாக இருக்கிறது. இஸ்லாத்தில் அப்படியென்ன சிறப்பம்சம் […]

ஏழைகளே உங்களைத்தான்!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏழைகளைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதிகமாக சிறப்பித்து கூறி இருக்கிறார்கள். அவ்வாறு சிறப்பித்து கூறப்பட்ட சில செய்திகளை இந்த உரையில் காண்போம்… இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலருக்கு சிலரை விட அந்தஸ்துகளையும், […]

அனுமதிக்கப்பட்ட பொய்கள்

அனுமதிக்கப்பட்ட பொய்கள் நபியவர்கள் இரவுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் கண்விழித்தால் அவருடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது. எனவே இது போன்று பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பதும் கணவன் மனைவிக்குள்ள கடமை என்று விளங்குகிறது. வெறுமனே தாம்பத்யம் மட்டுமே இல்லறக் கடமை கிடையாது. மற்ற விஷயங்களிலும் மனைவிக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) […]

தீமைக்குத் துணைபோகாதீர்!

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம், அதன் நலனை நாடும் வகையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இது குறித்து குர்ஆன் ஹதீஸில் நிறைய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்த உரையில் காண்போம்.. நன்மையை ஏவி தீமையை தடுப்போம் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து […]

வருமுன் காப்போம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் வாழும் இவ்வுலக வாழ்க்கையானது நிரந்தரமற்றது. அப்படிப்ட்ட ஓர் உலகில் வாழும் நாம் நம்மை மறுமைக்காக எவ்வாறு தயாரித்துக் கொள்ள வேண்டும், இவ்வுலக வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நபிகளார் உபதேசித்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்.. செத்த ஆட்டைவிட இவ்வுலக […]

சொர்க்கத்திற்குத் தவழ்ந்து செல்லும் நபித்தோழர்?

சொர்க்கத்திற்குத் தவழ்ந்து செல்லும் நபித்தோழர்? مسند أحمد موافقا لثلاث طبعات – (6 / 115) 23698- حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ حَسَّانَ ، قَالَ : أَخْبَرَنَا عُمَارَةُ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : بَيْنَمَا عَائِشَةُ فِي بَيْتِهَا إِذْ سَمِعَتْ صَوْتًا فِي الْمَدِينَةِ ، فَقَالَتْ : مَا هَذَا ؟ قَالُوا : عِيرٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ […]

பெண்கள் மோதிரம் அணிந்து வெளியே செல்லலாமா?

பெண்கள் மோதிரம் அணிந்து வெளியே செல்லலாமா? கேள்வி: பெண்கள் வெளியே செல்லும் போது மோதிரம், வளையல், கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து செல்லலாமா? ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா? பதில்: பெண்கள் தங்களது அலங்காரங்களை கணவன் மற்றும் மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) உறவினர் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا […]

ஒன்றுக்குப் பத்து! ஓரிறையின் பரிசு!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சிறிய அமல்களின் மூலம் அதிக நன்மைகளை சம்பாதிக்கும் வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கற்றுத்தந்து இருக்கிறார்கள். அந்த அமல்களில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.. ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்ற அளவுக்கு முன்வாழ்ந்த சமுதாய மக்கள் ஆயுள் வழங்கப்பட்டிருந்தனர். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا […]

தீண்டாமை ஒழிப்பில் தோற்றுப் போன திட்டங்கள்

தீண்டாமை ஒழிப்பில் தோற்றுப் போன திட்டங்கள் இந்தியாவில் புரையோடிப் போன தீண்டாமையைக் களைய, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த, பிற இனங்களைச் சார்ந்த சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர். நாத்திகம் கடவுள், விதி, பாவம், புண்ணியம், வேதம் போன்றவற்றின் மீது கொண்ட நம்பிக்கையும் தீண்டாமைக்கு ஒரு காரணம் என்று முடிவு கட்டி, கடவுள் கிடையாது என்று நாத்திகத்தின் பால் சென்றார் ஈ.வெ. ராமசாமி. கடவுள் கிடையாது; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; காட்டுமிராண்டி என்று அவர் தமிழக […]

மாற்றம் தரும் மாமறை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயக்கம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் இறைவேத வசனங்ளின் மூலம் அவ்வப்போது நபிகளார் அதிகமாக போதித்து வந்தார்கள். அப்படி போதித்த தருணத்தில் அந்த சஹாபாக்கள் இறைவசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்ட போதனைகளை அப்படியே கேட்டு நடைமுறைபடுத்தினார்கள். அந்த இறைவசனம் அவர்களை மாற்றியது. எவ்வாறு அவர்களை மாற்றியது என்பதை நபிகளார் காலத்திலும் சஹாபாக்கள் காலத்திலும் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்.. எனக்கு […]

ஒருவனே தேவன்! ஒன்றே குலம்!

ஒருவனே தேவன்! ஒன்றே குலம்! ஒரே கடவுள் என்ற வட்டத்திற்குள் உலக மக்கள் வந்து விட்டால் கடவுள் நம்பிக்கையில் அவர்களுக்கு மத்தியில் ஓர் இணக்கம், ஐக்கியம் ஏற்பட்டு அதன் மூலம் தத்துவ ரீதியில் அவர்கள் ஒரே குலமாகி விடுகின்றனர். அந்த ஒற்றுமை வெறும் சிந்தனையாக ஏட்டளவில் இருக்கக்கூடாது. அது செயல்பாட்டளவில் வந்து விட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அதைத் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான். மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை […]

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை

அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை கொல்லப்படும் முஸ்லிம்கள்! கொதிக்கும் நடுநிலையாளர்கள்! 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சார்ந்த அஃப்சல் குருவுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறு அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. அது அரசாங்கம் ஒரு முஸ்லிம் மீது நடத்திய படுகொலை என்றே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்லாது நடுநிலைவாதிகளும் […]

நல்லாட்சியாளர்களை அல்லாஹ்விடம் கோருவது தொடர்பான துஆ

நல்லாட்சியாளர்களை அல்லாஹ்விடம் கோருவது தொடர்பான துஆ சமூக ஊடகங்கள் வாயிலாக ஏராளமான பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். அதன் உண்மை நிலையறியாத மக்கள் அதைச் சரியான செய்தியென்று நம்பி அதன்படி அமல் செய்யத் துவங்கிவிடுகின்றனர். அந்த அடிப்படையில், நல்லாட்சியாளர்களை அல்லாஹ்விடம் கோருவது தொடர்பான ஒரு துஆ தற்போது அதிகமான மக்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த செய்தியின் உண்மைத் தன்மையைப் பார்ப்போம். “எங்கள் மீது இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டிவிடாதே!” […]

மறுமை வெற்றிக்காக  என்ன செய்திருக்கிறோம்?

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்ற மாபெரும் ஒற்றை இலக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட மக்கள், எல்லா வகையிலும் அந்த மறுமைக்கேற்பத் தமது வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில், நற்செயல் செய்வதின் அவசியத்தையும் அவற்றை அதிகம் […]

நீதிக்கு சாட்சியாளர்களாகி விடுங்கள்!!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவன் இந்த உலகத்தில் மனிதப் படைப்புகளை, பிற உயிரினங்களைக் காட்டிலும் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். மேலும், பகுத்தறிவின் மூலமாகவும், சிந்தனை ஆற்றலின் மூலமாகவும் மனிதர்கள் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதற்கு ஏற்ற சூழலை இறைவன் வழங்கி இருக்கின்றான். இதுபோன்ற ஏராளமான சிந்தனை ஆற்றல்கள், கூரிய அறிவு […]

புகை  தொழுகைக்குப் பகை

புகை தொழுகைக்குப் பகை புகைப்பவர் பொதுவாக புகை தன்னைப் பாதிக்கும் என்று தெளிவாகவே விளங்கி வைத்திருக்கின்றார். ஆனால் அது அடுத்தவரை எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஒருவர் புகைக்கும் போது அவருக்கு அருகில் உள்ளவரும் புகைப் பொருளை பாவிக்காமலேயே புகைத்தவராகின்றார். இது புகைப்பவரால் அடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பாகும். புகைத்து விட்டு வருகின்ற இவர், ஓர் அவையில் அமரும் போது அருகில் உள்ளவர் இவருடைய வாயிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றார். இது அடுத்தவருக்கு ஏற்படும் இன்னொரு […]

மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும்

மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் ஒன்று திருமறை குர்ஆனும், மற்றொன்று ஆதாரப்பூர்வமான நபிவழியும் தான் என்பதில் துளிகூட நமக்கு ஐயம் இல்லை. இதைத்தவிர மார்க்கத்தின் பெயரால் சொல்லப்படும் அனைத்தும் வழிகேடு என்பதைப் பல வருடங்களாக உலகெங்கும் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். அதில் முக்கியமான ஒன்றாக, திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகளை ஏற்று கொள்ளக் கூடாது என்றும் அதன் முரண்பாடுகள் நீங்கும் வரை (ஹதீஸ் கலையின் விதிபடி) அதைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும் […]

எது நாகரீகம்?

எது நாகரீகம்? அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலங்கள் மாற மாற அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் கண்டுகொண்டே இருக்கிறோம். நமது சிறு வயதில் கண்கவர் பொருளாக இருந்த மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி, மாட்டுவண்டி போன்றவை இன்று தடம் தெரியாமல் அழிந்து விட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற பொருட்கள் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. இவையெல்லாம் இன்றைய சமூகம் கண்ட வளர்ச்சி என்று […]

நன்மைகளை அள்ளிக் கொள்வோம்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகில் வாழும் போது நமது செயல்கள் எவ்வாறு இருந்ததோ அதன் அடிப்படையில் தான் அல்லாஹ் மறுமையில் நமக்குத் தீர்ப்பு வழங்குவான். இதை நினைவில் கொண்டு தீமையான காரியங்களை விட்டு விலகி இருப்பதோடு, முடிந்தளவுக்கு நன்மையான காரியங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும். இத்தகைய ஆர்வமும் அக்கறையும் எப்போதும் […]

பருவ மழையும் பரவும் நோய்களும்

பருவ மழையும் பரவும் நோய்களும் ‘வாராது வந்த மாமணியே!’ என வடகிழக்குப் பருவமழையை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். வானிலை ஆய்வு அறிவித்தபடி அக்டோபர் 17-2019 அன்று முதல் மழை துவங்கி விட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்வின் அருளால் வறட்சியைப் போக்கும் விதமாக, பருவமழைக் காலம் நமக்கு முன்னால் வந்திருக்கின்றது. ஒவ்வொரு பருவமழையின் போதும் ‘சென்ற ஆண்டு பெய்த பருவமழையைக் காட்டிலும் இந்த ஆண்டு பெய்த மழையளவு சதவிகிதம் குறைவு’ என வானிலை ஆய்வு […]

உளூவினால் கிடைக்கும் உடனடியான பலன்கள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒருவர் உறக்கத்தை விட்டு எழுந்தவுடன் மீண்டும் உறங்கவேண்டும் என்ற சோர்வூட்டும் எண்ணம் உள்ளிருந்து பிறந்து கொண்டிருக்கும். மீண்டும் படுக்கைக்குப் போய் விடுவோமா என்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கும். சொக்குப்பொடி போட்டு இரு கண்களையும் சொருக வைத்து சொக்குகின்ற, தூக்கப்பிடியில் நம்மைச் சிக்க வைக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு முடிவு கட்டுவது நாம் செய்கின்ற […]

சமூக அக்கறை கொள்வோம்

சமூக அக்கறை கொள்வோம் இந்த உலகில் உயிரோடு படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும், தன்னை சுற்றி வாழும் மற்ற உயிரினங்கள் மீது ஏதோ ஒரு விதத்தில் அக்கறை கொள்ளக் கூடியதாகத்தான் படைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் பார்வையில் அக்கறை என்பது இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று “என் குடும்பத்தார்கள், என் உறவினர்கள், என் நண்பர்கள்” என்ற சுயநலம் கலந்த சுயநல அக்கறையாகும். மற்றொன்று சமூகம் தவறான வழியில் தன் பயணத்தைத் துவக்கும் பொழுது “என் நாட்டவர், என் சமூகத்தார்” என்று கூறும் […]

தனிமையில் ஒரு மனிதன்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகத்தில் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் மட்டும் தான் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெற முடியும் என்பதை இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம். என்றாலும், நவீன காலம் என்பது மனிதர்களைக் கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கி பல தரப்பட்ட ஷைத்தானிய சிந்தனைகளை […]

உலகை விரும்பாத உத்தம தூதர்

உலகை விரும்பாத உத்தம தூதர் இவ்வுலகில் மனிதர்களின் புறத்திலிருந்து நிகழும் பல்வேறு தீமைகளுக்கு அச்சாரமாக திகழ்வது உலக ஆசையே! உலக இன்பங்களின் மீதுள்ள அளவற்ற மோகமும் அதீத பற்றும் தான் மனிதனைத் தீமைகள் செய்யத் தூண்டுகிறது. பணம், பொருள், பதவி, அந்தஸ்து என இவற்றில் ஒன்றின் மீது கொண்டுள்ள மோகம் மனிதனை எந்த நிலைக்கும் கொண்டு சென்று விடுகிறது. ஒரு கட்டத்தில் இவையே வாழ்க்கை, குறிக்கோள், இலட்சியம் இவை இல்லையேல் வாழ்க்கையே இல்லை. என்ற நிலைக்குச் சிலர் […]

காக்கப்படும் மனித உரிமைகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மத சித்தாந்தங்கள் என்றால் கடவுள் கொள்கையுடன் தங்கள் போதனையை சுருக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பரவலான புரிதலுக்கு மாற்றமாக, மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தலையிடுகின்ற, தீர்வளிக்கின்ற சித்தாந்தமாக இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அமைந்துள்ளது. உலக வாழ்வில் எவையெல்லாம் அனுமதிக்கப் பட்டவை என்பதை இஸ்லாம் வரையறுத்துள்ளது. என்னென்ன […]

அருளா? சோதனையா?

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த உலகத்தில் கடத்துவதற்கு இன்றியமையாத விஷயங்களில் ஒன்று பொருளாதாரம். பொருளாதாரம் இருந்தால் தான் நமது வாழ்க்கையின் அங்கங்களாக இருக்கும் பல காரியங்களை நிறைவேற்ற முடியும். மார்க்கத்தின் பல கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பொருளாதாரம் ஒரு நிபந்தனையாக உள்ளது. மலை போல் நன்மையைப் பெற்றுத்தரும் உபரியான காரியங்களைச் செய்வதற்கும் […]

தஃவா களத்தில் தளர்ந்து விடாதீர்

தஃவா களத்தில் தளர்ந்து விடாதீர் மனிதர்களில் சிலர், ஒரு காரியத்தில் பலமுறை தோற்றுவிட்டால் மீண்டும் அதற்கு முயற்சி செய்யாமல் கைவிடக்கூடிய காட்சியை நம்மால் காண முடிகிறது. இது மனிதர்களிடத்தில் அறவே இருக்க கூடாத ஒரு பண்பாகும். இதற்கு நபியவர்களின் வாழ்க்கை நமக்குப் பெரும் பாடமாக உள்ளது. நபியவர்கள் இந்த ஏகத்துவத்தை ஆரம்பத்தில் ரகசிய பிரச்சாரமாகச் செய்து வந்தார்கள். அப்போது அதை பகிரங்கப்படுத்தும் படி வேத அறிவிப்பு வந்த பிறகு அதை பகிரங்கப்படுத்தினார்கள். ‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை […]

உரிமைகளை உரிய முறையில் வழங்குவோம்

உரிமைகளை உரிய முறையில் வழங்குவோம் பிறரிடம் இருந்து தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைப் பெறுவதில் முனைப்பாக இருக்கும் பல பேர், அவர்கள் அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு சக மனிதர்களுக்குத் தர வேண்டிய உரிமையை நிறைவேற்றாமல் புறக்கணிப்பது பெரும்பாவம் என்று எச்சரித்த நபியவர்கள், இந்த விஷயத்தில் எப்போதும் சரியாக நடந்து கொண்டார்கள். எந்த வகையிலும் பிறருடைய உரிமையைப் பறிக்கவும் இல்லை; பாழ்படுத்தவும் இல்லை. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த […]

சுவனத்தை நோக்கி விரையுங்கள்

அமல்களின் சிறப்புகள் சுவனத்தை நோக்கி விரையுங்கள் اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏ அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.(அல்குர்ஆன்: 21:90) اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۙ‏ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَۙ‏ وَالَّذِيْنَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُوْنَۙ‏ وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ […]

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும்

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும் நாடாளுமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் மோடி ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாத்திரத்தில் இந்துத்துவாவினரின் வெறியாட்டமும் வேட்டையும் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது. மோடியின் 2.0 ஆட்சியின் ஆரம்பமே இப்படி அட்டகாசமாக இருக்கின்றது என்றால் இனி எப்படியிருக்கும் என்று எடை போட்டுக் கொள்ளுங்கள். மிருகத்தனம்: 1 ரமளான் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை. ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயது நிரம்பிய காஸிம் தோள்பட்டையில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து, கடுமையான காயத்துடன் […]

இல்லறம் இனிக்க

இல்லறம் இனிக்க ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றிய மனித சமுதாயம் இன்று கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு குடும்பத்தைச் சுற்றி வாழ்கிறான். ஒவ்வொரு மனிதனின் நிம்மதியையும், மன நெருக்கடியையும் தீர்மானிக்கும் விஷயங்களில் பெரும் பங்கு வகிக்கக் கூடியவையாக குடும்பங்களே இருக்கின்றன. நிம்மதிக்கான வழி பொருளாதாரத்தில் இருக்கிறது என்று கற்பனை செய்து கொண்டு ஓடுகிற சில மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் கிட்டுகிறது. ஆனால் நிம்மதியில்லை. எவ்வளவு கோடிகள் தன்னிடத்தில் அவர் வைத்திருந்தாலும் […]

எறும்பும் பறவையும் கற்றுத்தரும் பாடம்

எறும்பும் பறவையும் கற்றுத்தரும் பாடம் துரு துருவென ஓடும் எறும்பை சுறுசுறுப்புக்கு உதாரணம் காட்டுவதும், உணவிற்காகப் பல மைல்கள் தூரம் பறந்து செல்லும் பறவையை கடின உழைப்பிற்கு உதாரணம் காட்டுவதும் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒன்றே! எறும்பிலும் பறவையிலும் மனிதர்கள் கற்றுக் கொள்ளத்தக்க பல சிறப்புமிக்க அம்சங்கள் இருந்தாலும் இந்தக் கட்டுரையில் நாம் அதனைப்பற்றி ஆராய முற்படவில்லை. மனித குலத்திற்கு அறிவுரையாக அருளப்பட்ட திருக்குர்ஆன் பல இறைத்தூதர்களின் வரலாறுகளைப் பதிவு செய்துள்ளது. சில நல்லடியார்களின் வரலாற்றினையும் எடுத்துக் […]

புகழுக்கு ஆசைப்படாத பெருமானார்

புகழுக்கு ஆசைப்படாத பெருமானார் சமூகத்தில் மனிதர்கள் அனைவருக்கும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சில வகையான ஆசைகள் பரவலாகப் பலரிடமும் இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பட்டியலில் புகழ் ஆசை என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த உலகில் சின்னச்சின்ன விஷயத்திலும் கூட, பொதுவெளியில் தனது பெயர் பெருமையாகச் சொல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பலரின் இயல்பாக இருக்கிறது. இதனால் தம்மைப் பற்றி உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தும் செய்திகளை மட்டுமே மக்களிடம் பகிர்ந்து கொளவார்கள். தங்களது அந்தஸ்த்தை […]

முஸ்லிம்களே தளர்ந்து விடாதீர்கள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களை இறைவன் படைத்திருக்கின்றான். ஒவ்வொரு சாராரும் ஒரு குறிப்பிட்ட மதங்களையும், சித்தாந்தங்களையும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பான்மையான மக்கள் பல கடவுள் கொள்கையிலும், அல்லாஹ்வின் தூதர் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகக் கொண்டு ஒரு பெருங்கூட்டமும், கடவுளே இல்லை என்று ஒரு கூட்டமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். […]

மனிதகுல விரோதியும் பகிரங்க எதிரியும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான். மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து, அவர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட்டு, அவர்களை வழிகெடுத்து, நிரந்தர நரகவாதிகளாக ஆக்குவதே இந்த […]

இறைநேசர் ஆகிட எளிய வழிகள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அவ்லியா என்ற வார்த்தை வலீ என்பதன் பன்மையாகும். வலீ என்றால் பொறுப்பாளன், அதிகாரி, எஜமான், நேசன் என்று பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. நாம் இங்கே பார்ப்பது, அல்லாஹ்வின் நேசன் என்ற பொருளில் அமைந்த வலியுல்லாஹ்வைத் தான். இறைநேசராவதற்கு என்ன வழி? சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் […]

ஷியாக்களின் அபத்தம்

ஷியாக்களின் அபத்தம் இறங்கிய குர்ஆன் வேறு, இருக்கின்ற குர்ஆன் வேறு அல்குர்ஆன் இறங்கியதிலிருந்து இன்றைய தினம் வரை அடித்தல், திருத்தலுக்கு இடமில்லாத வகையில் தனிப்பெரும் அற்புதமாக அது திகழ்ந்து வருகின்றது. اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன்: 15:9) அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியின்படி திருக்குர்ஆன் இதுவரை பாதுக்காக்கப்பட்டு வருகின்றது. இனியும் யுகமுடிவு நாள் வரை பாதுகாக்கப்படும். ஆனால் ஷியாக்களோ திருக்குர்ஆன் திருத்தப்பட்டது என்ற […]

ஏந்தல் நபியின் எளிய வாழ்க்கை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். அவர் நினைத்தால் பல இடங்களை விலைக்கு வாங்க முடியும். பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியும். நிறைய வாகனங்களை வைத்துக் கொள்ள முடியும். ஆனால், ஏழை என்று அடுத்தவர்கள் சொல்லும் அளவுக்கு அவரது வாழ்க்கை மிகவும் எளிமையாக இருக்கிறது. ஓலைக் குடிசையில் குடும்பத்தோடு […]

மக்களுக்கு நெருக்கமான மாபெரும் தலைவர்.!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சமூகத்தில் பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளைச் சார்ந்த மக்களால் போற்றப்படும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது நடை, உடை, பாவனை போன்ற வெளிப்படைத் தோற்றமே அவர்களின் அந்தஸ்தை காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் தகுதிக்கும் பொறுப்புக்கும் ஏற்ப இருக்கிறார்கள் என்று அதற்குக் காரணத்தைச் சொல்லக் கூடும். அதுகூடப் […]

பிறருக்காகப் பிரார்த்திப்போம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனுக்கும் அடியானுக்கும் இடையேயான உறவையும் நெருக்கத்தையும் உயிரோட்டமாக வைத்திருப்பவற்றில் பிரார்த்தனைக்கு மிக முக்கிய பங்குண்டு. வறண்ட நிலமாகக் காட்சியளித்த, பாலைவன பூமியான மக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையே காரணம் என்பதைப் புரிந்தால் பிரார்த்தனைக்கென்று உள்ள தனித்துவமிக்க வலிமையை அறியலாம். உறுதியான நம்பிக்கையோடு இறைவனிடம் செய்யப்படும் எந்தப் […]

தவ்ஹீத் நெஞ்சமே தடுமாறாதே!

தவ்ஹீத் நெஞ்சமே தடுமாறாதே! வேதனைகளாலும் சோதனைகளாலும் மன அழுத்தங்களாலும் சூழப்பட்டது தான் இந்த உலக வாழ்க்கை! இதுபோன்ற சோதனைகளிலிருந்து நம்மை மீட்டெடுத்த அபூர்வ அருட்கொடை தான் இஸ்லாம். நாம் எதை வாழ்க்கையின் அடித்தளமாக உருவாக்கி வைத்திருக்கிறோமோ அந்த இன்பங்களாலும் சில சமயம் வேதனைகள் ஏற்படும். பொருளாதாரம், பெண்ணாசை போன்றவையும் இதில் அடங்கும். இத்தகைய உலகக் கவர்ச்சிகளால் நாம் நேரடியாகச் சோதனைகளைச் சந்திக்க நேரலாம். இதுபோன்ற சமயத்தில் எக்காலத்திற்கும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தை, எக்காரணத்தைக் […]

கோடை வெயிலில் கல்வி தாகம்

கோடை வெயிலில் கல்வி தாகம் கோடை வெயில் தனது வேலையை மிகக் கச்சிதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓரிரு மணி நேரங்களுக்கு மேல் வாகனங்களில் பயணிக்க முடியவில்லை. ஒரு தர்பூசணியை உள்ளே அனுப்பினால் தான் நம்முடைய ஆற்றலை ஒருசில மணி நேரத்திற்காவது தக்க வைக்க முடியும். வெயில் அதிகமாவதைப் போன்றே நம் குழந்தைகளின் மீதுள்ள அக்கறையும் அதிகரிக்கிறது. கோடை விடுமுறை வேறு வந்து விட்டது. இனி இரண்டு மாதங்களுக்குக் குழந்தைகள் நம்முடன் தான் இருப்பார்கள். நம்முடன் இருப்பதை விட […]

Next Page » « Previous Page