Author: Trichy Farook

சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும்

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள் சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும் (உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும். இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் […]

வெட்டுக்கிளி பற்றிய ஹதீஸ்

வெட்டுக்கிளி பற்றிய ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 375) 3221- حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُلاَثَةَ ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرٍ […]

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!- 2

தொடர்–2 அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! சென்ற தொடரில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்களில் அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்துவதன் விளக்கத்தை அறிந்தோம். இந்தத் தொடரில், படைத்தவனுக்கு நன்றி செலுத்துவதன் வெளிப்பாடாகவும், புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திடவும் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதைப் பற்றி அறிந்துகொள்வோம். நாயனுக்கு நன்றி செலுத்த அல்ஹம்துலில்லாஹ் கூறுவோம் நாம் இக்கட்டான சூழலில் துவண்டு கிடக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் உதவும் பொழுதோ, அல்லது ஒருவரின் உதவிக்காக அவரிடம் தேடிச் சென்ற […]

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் பப்ஜி

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் பப்ஜி இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்கள், செல்ஃபோன்களில் செயலிகள் மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டு கேம்கள் இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின் வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள் உலக அரங்கில் பரவுகின்றது. இதுபோன்ற கேம்கள், கார்ட்டூன் சேனல்கள் வெறுமனே பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு […]

கற்பனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கத்தின் இன்பங்கள்

சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் ஏராளம் ஏராளம், அவற்றை முழுமையாக கற்பனை கூட செய்ய இயலாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றை பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளவற்றில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்! ஈமானுடன் நல்அமல்களும் அவசியம்! الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَآبٍ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29) وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ بِالَّتِي تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ […]

மங்கையர் நலன் நாடும் மாமறை

மங்கையர் நலன் நாடும் மாமறை சமூகம் எனும் கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமெனில் அதன் அடித்தளமாகத் திகழும் ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தோடு வாழ்வது அவசியம். ஆகவேதான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், ஒழுக்கமே உண்மையான சொத்து போன்ற சொற்கள் சமூக வழக்கில் உள்ளன. இந்த வகையில், பொதுநலன் பேணும் இஸ்லாமிய மார்க்கம் ஆண்களும் பெண்களும் சுய ஒழுக்கத்தோடு வாழுமாறு அதிகம் போதிக்கிறது. அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி இருப்பது போன்று, சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அவற்றில் ஆரம்பகட்ட […]

மஹரை மகத்துவப்படுத்திய  திருக்குர்ஆன்

மஹரை மகத்துவப்படுத்திய திருக்குர்ஆன் இறைவன் இந்த உலகத்தைப் படைத்து கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் மொழி பேசுகின்ற ஒவ்வொரு தூதர்களை இறைவன் அனுப்பி மக்களுக்கு நேர்வழி காட்டியிருக்கின்றான். மேலும், தூதர்களை இறைவன் அனுப்பும் போது, சில அற்புதங்களையும் இறைவன் கொடுத்தனுப்பியிருக்கின்றான். அப்படிப்பட்ட தூதர்களில் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருளை அருட்கொடையாக, அற்புதமாகக் கொடுத்து, உலகம் அழிகின்ற […]

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே! வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான். கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான். கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை […]

தக்லீதைத் தகர்த்தெறியும் திருக்குர்ஆன்

தக்லீதைத் தகர்த்தெறியும் திருக்குர்ஆன் மனித சமுதாயம் நேரான வழியில் செல்வதற்காக அல்லாஹ் இறுதித் தூதராக முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்கு அல்குர்ஆன் என்ற இறைவேதத்தையும், ஏனைய மார்க்க ஞானங்களையும் இறைவன் வழங்கி அதனையே உலகம் அழியும் வரை தோன்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் எனும் மார்க்கமாகவும் ஆக்கினான். ஆனால் இறைவனின் நேர்வழியை மனித சமுதாயத்திற்குப் போதித்த இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, எவர்களின் சொற்களும், செயல்களும் மார்க்க ஆதாரமாகக் […]

அவ்லியாக்கள் மறுமையில் கைகொடுப்பார்களா? கை விடுவார்களா?

அவ்லியாக்கள் மறுமையில் கைகொடுப்பார்களா? கை விடுவார்களா? அல்குர்ஆன் அளிக்கும் அழகிய விளக்கம் அதிகமான முஸ்லிம்கள் அவ்லியாக்கள் மீது அதீதமான, அலாதியான பற்றும் பாசமும் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் அவர்களின் நினைவாகப் பள்ளிவாசல்களை மிஞ்சும் அளவுக்கு வானளாவிய மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றிற்காகக் கந்தூரிகள், சந்தனகூடுகள், கொடியேற்றங்கள் போன்றவை ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. அவர்களின் பெயரால் மீலாது விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மவ்லிதுகள் ஓதப்படுகின்றன. அந்த மவ்லிதுக்காக புலவுச் சோறு சமைக்கப்பட்டு புனிதம், புண்ணியம் என்ற பெயரில் விநியோகிக்கப்படுகின்றன. […]

அல்லாஹ்வா? அவ்லியாவா?

அல்லாஹ்வா? அவ்லியாவா? குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை எல்லாம் வல்ல அல்லாஹ், அன்றைய மக்காவில் வாழ்ந்த மக்களுக்கு ஒரே ஒரு ஏக நாயனை மட்டும் வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான். وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே […]

நன்மைகளின் களஞ்சியம் திருக்குர்ஆன்

நன்மைகளின் களஞ்சியம் திருக்குர்ஆன் குர்ஆன் முஃமின்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பொற்களஞ்சியமாக இருக்கின்றது. குர்ஆன் இரண்டு விதமான நன்மைகளைத் தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று, அதை அதன் மூல மொழியான அரபியில் வாசிக்கின்ற போது கிடைக்கும் நன்மைகள். மற்றொன்று அதைப் பொருளுணர்ந்து நம் தாய் மொழியில் படிக்கும் போது கிடைக்கும் நன்மைகள். ஆனால், இன்று இவ்விரண்டு விதமாகவும் படிக்கின்ற வாய்ப்புகள் மிக இலகுவாக வாய்க்கப்பட்டும் கூட அதைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் நன்மை ஓடையைத் தாங்களே அணை […]

வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம்

வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம் திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும் வெகு தொலைவில் நிற்கின்றது. அது எந்தெந்தத் துறைகளில் விலகி நிற்கின்றது? என்பதைக் கீழ்க்காணும் பட்டியல் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கடவுள் கொள்கை உலகத்தைப் படைத்து, இயக்கிக் கொண்டிருப்பவன் ஏக இறைவனான ஒரே கடவுள் தான். அவனுக்கு நிகராக, இணையாக யாருமில்லை என்பது தான் இஸ்லாமிய கடவுள் கொள்கையாகும். உலகத்திலேயே பாமரன் முதல் பண்டிதன் வரை அத்தனை ரக மக்களும் […]

பொய்யர்கள் அழிவார்கள்!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கத்தில் மனிதர்கள் செய்கின்ற செயல்களில் நன்மையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? தீமையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? என்பதை ஏராளமான உபதேசங்களின் மூலமாக மிகவும் விரிவாகவும், எளிமையான முறையிலும் அறிவுரை கூறப்பட்டிருக்கின்றது. நாம் செய்யக்கூடிய கேடுகெட்ட காரியங்களைப் பொறுத்தே இம்மையிலும், மறுமையிலும் தண்டனை வழங்கப்படும் என்று […]

தொழுகை முடிந்ததும் அறிவிப்புகள் செய்யலாமா?

தொழுகை முடிந்ததும் அறிவிப்புகள் செய்யலாமா? ஏகத்துவ அடிப்படையில் அமைந்த ஐவேளை தொழுகைக்கான பள்ளிவாசல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த பள்ளிவாசல்கள் வெறுமனே ஐவேளைத் தொழுகைகளுக்கான ஸ்தலாமாக மட்டுமிராமல் அழைப்புப் பணி, சமுதாயப் பணி என்று பல்வேறு பணிகளை முன்னெடுத்துச் செல்லும் மையங்களாகவும் இருக்கிறது. அந்த பணிகள் தொடர்பான அறிவிப்புகள் மக்கள் ஒன்றினையும் நேராமான தொழுகை நேரத்தில் ஸலாம் கொடுத்து முடிந்ததும் பல இடங்களில் செய்யப்படுகிறது. இவ்வாறு தொழுகை முடிந்ததும் அறிவிப்பு செய்தல் என்பது […]

பாவங்கள் மன்னிக்கப்பட எளிய வழிகள்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! கனிவும் மாண்பும் மிகுந்த ஏக இறைவன், படைப்பினங்களில் மிக உயர்ந்த படைப்பாக மனித குலத்தைத் தேர்வு செய்திருக்கிறான். எந்த உயிரினத்திற்கும் வழங்காத பகுத்தறிவை மனித இனத்திற்கு வழங்கி, எதுவெல்லாம் நன்மை, எதுவெல்லாம் தீமை என்பதை பிரித்துக் காட்டியுள்ளான். நன்மை செய்தால் கிடைக்கும் வெகுமதியைப் பற்றியும், தீமை செய்வதால் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றியும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? […]

குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?

குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி? ஷியாக்களின் புரட்டு வாதம் உலகில் ஷியாக்கள் அல்லாத முஸ்லிம்களில் உள்ள அனைத்து பிரிவினரும் குர்ஆன் எள்ளளவு மாற்றத்திற்கும் இம்மியளவு திருத்ததிற்கும் அறவே உள்ளாகவில்லை என்று ஆணித்தரமான நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் ஷியாக்கள் மட்டும் இதற்கு நேர்மாற்றமான கருத்தில் இருக்கின்றனர். இதுவரை நாம் கண்ட அல்காஃபி என்ற நூலில் கலீனீ அறிவிக்கின்ற இரண்டு அறிவிப்புகளும் தற்போது இருப்பதைப் போன்ற குர்ஆனின் மூன்று மடங்கு வசனங்கள் காணாமல் போய்விட்டன […]

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள்

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள் சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும் (உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும். இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் […]

அல்லாஹ்வின் தூதரே  அழகிய ஆசிரியர்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித சமுதாயம் பின்பற்றுவதற்கு ஏற்ற மார்க்கம், இஸ்லாம் மட்டுமே! மனிதனை சக்திக்கு மீறிய சோதிக்கிற எந்தவொரு சட்டத்தையும் இதில் பார்க்கவே முடியாது. இந்த மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் புரிந்து கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் மிகவும் எளிதானது. عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ […]

08) நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே! நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்துதான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, […]

பொறுப்பு – ஓர் அமானிதம்

பொறுப்பு – ஓர் அமானிதம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம்! அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்ற மகத்துவம் நிறைந்த ஓரிறைக் கொள்கையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் அருளால் பல்வேறு விதமான பொறுப்புகளையும், பதவிகளையும், அந்தஸ்துகளையும் மனிதர்களில் பெரும்பாலோர் பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். இந்தப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அனைவரும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பை இறைவனின் புறத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்ற அமானிதம், சோதனை, இறைக்கட்டளை என்றே நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம். […]

கொலையை விட குழப்பம் கொடியது!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு தனிமனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் நிலையும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரங்களில் சரியானதையும் தவறானதையும் பிரித்தறிய முடியாத அளவுக்குக் குழப்பங்கள் ஏற்படலாம்; அதனால் மக்களைத் தடுமாற்றமும் பதட்டமும் பற்றிப் பிடித்துக் கொள்ளும். இத்தகைய சூழ்நிலை பற்றியும் அப்போது கையாள வேண்டிய முறை பற்றியும் இஸ்லாம் விளக்கியுள்ளது. […]

இஸ்லாத்தின் பார்வையில் அன்பளிப்பு

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரையிலும் அன்பளிப்பு வாங்குவதும், வழங்குவதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்து ஒரு கலாச்சாரமாகும். நமது வீட்டில் நடைபெறுகின்ற மார்க்கம் அனுமதித்த, மார்க்கம் அனுமதிக்காத விஷேசங்களில், குழந்தை பிறப்பு முதற்கொண்டு, திருமணம், பெயர் சூட்டுவிழா, புதுமனை புகுவிழா என அனைத்து விதமான காரியங்களிலும் அன்பளிப்பு […]

கதை வடிவில் மார்க்கம் அறிவோம்

கதை வடிவில் மார்க்கம் அறிவோம் “கண்டதைப் படி பண்டிதனாவாய்” என்பது பன்னெடுங்காலமாகத் தமிழில் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளில் ஒன்றாகும். மார்க்கத்துக்கு முரணில்லாத நல்லவற்றில் இதை வாசிப்பேன், அதை வாசிக்க மாட்டேன் என்று எந்த ஒதுக்குதலும் இல்லாமல் வாசிக்கின்றவன் நிச்சயம் கற்றுத்தேர்ந்த கல்விமானாக உருவாவான் என்பது நிதர்சனமான உண்மையும் கூட. ஆனால், இன்றைய தலைமுறையினரின் நவீன வாழ்க்கையில் புத்தக வாசிப்பு என்பது அரிதான ஒன்றாகிவிட்டது. தான் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை ஒருவன் வாசிக்கின்ற போது கூட […]

துறக்க வேண்டிய தீய பண்புகள்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அவனது அன்பையும் அருளையும் பெற இயலும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று, அவனிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தரும் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதாகும். மற்றொன்று, அவன் தடுத்துள்ள தீய பண்புகளை விட்டும் விலகியிருப்பதாகும். இந்த வகையில் படைத்தவனிடம் கெட்ட […]

முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்?

முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்? அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 113:1-5)➚ சூரத்துல் ஃபலக் என்னும் திருமறைக்குர்ஆனின் 113வது அத்தியாயத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் தீங்கிலிருந்து நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் ஒரு விஷயமாக ‘‘முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் […]

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!-1

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒவ்வொரு நாளும் நமது தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் துவங்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்கிறோம். இரவில் உறங்கும் முன்பும் பிறரை சந்தித்துப் பேசுகையில் நாம் நலமுடன் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவும் அல்ஹம்துலில்லாஹ் என்கிறோம். இப்படி அனுதினமும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும் நாம், அதன் பொருள், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று புரிந்திருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையில் பொதிந்திருக்கும் ஏராளமான விளக்கங்களையும் […]

அகில உலகமும் அலீக்கே சொந்தம்!

அகில உலகமும் அலீக்கே சொந்தம்! அலீ ஆதரவாளர்களின் அநியாய வாதம்! عن أبي عبد الله أنه قال: إن الدنيا والآخرة للإمام يضعها حيث يشاء ويدفعها إلى من يشأ” -”الكافي في الأصول” ص409 ج ط إيران இம்மையும் மறுமையும் இமாமுக்கே சொந்தம்.அவர் அதைத் தான் நாடியவாறு வைப்பார். தான் நாடியவரிடம் கொடுத்து விடுவார். இவ்வாறு ஷியாக்களின் இமாமான அபூஅப்தில்லாஹ் அறிவிக்கின்றார். நூல்: அல்காஃபி ஃபில் உஸூல் இங்கே இவர்கள் […]

பயனுள்ள கல்வியை வேண்டுவோம்

பயனுள்ள கல்வியை வேண்டுவோம் மனிதன் இணைந்திருக்கக் கூடிய குடும்பம், வணிகம், அரசியல் என எந்த ஒரு துறையையும் விட்டு வைக்காமல் நமது மார்க்கம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் மனித வாழ்வில் இன்றியமையாததாய் இருக்கக் கூடிய கல்வித் துறை குறித்தும் அதிகம் போதிக்கின்றது. இஸ்லாம் அல்லாத இன்னபிற மதங்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமல்லாமல், தாழ்ந்த சாதியினர் கல்வி கற்கக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது அருள்மறையோ […]

இறை நினைவும்  அதன் நன்மைகளும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் நிம்மதியாக வாழ்வதற்கும் அவனுடைய உள்ளம் நிம்மதி அடைவதற்கும் இறை நினைவு தான் சிறந்த தீர்வாக இருக்கிறது. இறைநினைவு மூலம் இவ்வுலகில் மட்டுமல்ல மறுமையிலும் அதன் நன்மைகள் பெறுமதியாக மனிதனுக்கு பெற்றுத் தருகிறது. அவ்வாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய இறைநினைவுககளைப் […]

தர்மம் தலை காக்கும்!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தில் எல்லா வகையான நற்காரியங்களும் நற்பண்புகளும் போதிக்கப்பட்டு உள்ளது. அவற்றுள் முக்கியமான ஒன்று, தர்மம் செய்வதாகும். தர்மம் தலைகாக்கும் என்று பழமொழி சொல்வார்கள். அது எப்படிக் காக்கும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறது. நாம் பெற்றுள்ள பொருளாதாரத்தை, பொருட்களை நல்வழியில் செலவழிப்பது பற்றிய செய்திகள் பல […]

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா?

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா? அல்லாஹ்வின் பேரருளால் இந்த வருட ரமலான் மாதம் வந்ததே தெரியாத அளவுக்கு மிக வேகமாக நம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. காலங்கள் செல்லச்செல்ல அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு வருடந்தோறும் ரமலான் மாதம் வருவதும் போவதுமாக இருந்து வருவதைப் பார்க்கின்றோம். அதே சமயம் முஸ்லிம்களில் சிலரிடம், அற்புதமான புனிதம் நிறைந்த ரமலான் மாதம், அருள் பொங்கும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம், நம்முடைய பாவங்களை எல்லாம் கழுவி சுத்தப்படுத்த வந்த […]

Life Insurance Banking Finance பணிகள் கூடுமா?

Health care, Life Insurance and Banking Finance சம்பந்தபட்ட சாஃப்ட்வேர் பணிகளை செய்து கொடுக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), (முஸ்லிம்: 3258) ➚ நீங்கள் தயாரிக்கும் மென்பொருள் வட்டித் தொழிலுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இருந்தால் அந்த பணியை நீங்கள் […]

மார்க்கத்தின் பார்வையில் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவம்

மார்க்கத்தின் பார்வையில் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவம் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து மதீனாவிற்கு வந்தவுடன் அவர்கள் முதலில் அல்லாஹ்விற்காக ஓர் ஆலயத்தைத் தான் கட்டியெழுப்பினார்கள். மஸ்ஜிதுன் நபவீ எனும் அந்த ஆலயம் தான் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் செய்யும் இடமாகவும், இஸ்லாமிய ஆட்சியின் மையமாகவும், மக்களுக்குக் கல்வி போதிக்கும் பல்கலைக் கழகமாகவும், ஏழை எளியவர்களுக்குப் புகலிடமாகவும், அனைத்து நற்பணிகளுக்கும் அடித்தளமாகவும் விளங்கியது. அது போன்று இவ்வுலகில் ஆலயம் என முதன்முதலில் அமைக்கப்பட்டது இறையில்லமான “கஅபா” ஆலயம்தான். […]

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்! அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட போது மக்காவில் உள்ள இறைமறுப்பாளர்கள் அந்தக் குர்ஆனை மக்கள் செவியுற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ “இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!’’ என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 41:26) இதை நாம் அபூபக்ர் (ரலி) அவர்களின் […]

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை -2

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள் நவீன ஸலஃபிக் கொள்கையைப் பின்பற்றுபவர்களிடத்தில் பல்வேறு வழிகேடுகள் நிறைந்து காணப்படுகிறது. இது தொடர்பான பல்வேறு சான்றுகளை ( வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை) முதல் கட்டுரையில் நாம் கண்டோம். அதைத் தொடர்ந்து இன்னும் பல சான்றுகளை இந்த இரண்டாம் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கின்றோம். நவீன ஸலஃபுகள், இமாம் இப்னு தைமிய்யா அவர்களைத் தங்களுடைய கொள்கைக்கு முன்மாதிரியாகக் கருதுகின்றனர். தங்களுடைய உரைகளிலும், எழுத்துக்களிலும் இமாம் இப்னு […]

ஈமானில் உள்ள ஏற்றத்தாழ்வு

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலக வாழ்கையில் மனிதர்கள் அனைவரும் எல்லா விஷயங்களிலும் சமமானவர்களாக இருப்பதில்லை. சிலர் பொருளாதாரா ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். சிலர் அறிவு ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இன்னும் சிலர் நிற ரீதியாக கருப்பு, வெள்ளை என்று ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இப்படியாக ஒட்டு மொத்த மனித […]

ஆன்லைன் திருமணம் அனுமதிக்கப்பட்டதா-?

ஆன்லைன் திருமணம் அனுமதிக்கப்பட்டதா-? நமது சமுதாயத்தில் இப்போது டெலிஃபோன் நிகாஹ், செல்ஃபோன் நிகாஹ், ஸ்கைப் நிகாஹ், வீடியோ கான்ஃபரன்ஸிங் நிகாஹ், ஈமெயில் நிகாஹ், வாட்ஸ் அப் நிகாஹ் போன்ற சொல்லாடல்கள் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனாலும் பிரச்சனைகள் உருவாகி அது வெடித்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று அதிலும் மோடி அரசாங்கம் மூக்கை நுழைப்பதற்கு அடித்தளமிடுகின்றது. தலாக்கே ஆன்லைனில் நடைபெறும் போது நிகாஹ் ஆன்லைனில் நடக்கக்கூடாதா? என்ற புரட்சி படைக்க ஒரு கூட்டம் களமிறங்கி விட்டது. அந்தப் […]

தடுமாற்றம்! தடம் மாற்றும்!!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏதோ ஒரு வேளையில் தன்னை அறிந்தோ, அறியாமலோ பாவமான காரியங்களில் தடுமாறி விழுந்து விடுவதைப் பார்க்கின்றோம். சிலர் செய்கின்ற பாவம் வெளியே தெரிந்து விட்டால் அவர் பாவி என்றும், பலர் செய்கின்ற பாவம் வெளியே தெரியாததன் காரணத்தினால் அவர் நல்லவர் […]

இதுதான் உலகம்!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இம்மைக்கும் மறுமைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். மறுமை வாழ்வின் உயர்வை அறிந்திருந்தால் மட்டும் போதாது. இந்த உலகம் எந்தளவுக்குக் கீழானது என்பதையும் புரிந்திருப்பது அவசியம். ஆகவேதான், உலகத்தின் நிலையைப் பற்றிய உதாரணங்கள், ஒப்பீடுகள் மார்க்கத்தில் அதிகம் கூறப்படுள்ளன. அந்தச் செய்திகளை அறிவதே இவ்வுரையின் நோக்கம்.. நிரந்தமற்ற […]

அற்பமாகக் கருதாதீர்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு, திருப்தி கொள்ளப்பட்ட இஸ்லாம் எனும் ஓர் உன்னத மார்க்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, இறைவன் நமக்கு வழங்கிய வற்றாப் பேரருள் ஆகும். இம்மார்க்கத்தில் முஸ்லிம்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு நற்செயலுக்கும் அளவில்லாக் கூலி வழங்கப்படுகிறது. இந்தப் பாக்கியம் முஸ்லிமல்லாத வேறெவருக்கும் கிட்டுவதில்லை. சக […]

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை-1

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள் நவீன ஸலபிக் கொள்கையினரின் முன்னோடிகளில் ஒருவர் இமாம் இப்னு தைமிய்யா ஆவார்கள். இப்னு தைமிய்யா அவர்கள் ஏராளமான ஷிர்க்கான காரியங்களையும், பித்அத்துக்களையும் ஒழிப்பதில் முன்னோடியாகவும், தியாகியாகவும் இருந்துள்ளார். மார்க்கத்திற்காக இப்னு தைமிய்யா செய்த தியாகங்களையும் ஆய்வுகளையும் மதித்துப் போற்றுகின்ற அதேவேளையில் அவருடைய அனைத்துக் கருத்துக்களுமே சரியானவை தான் என்று நம்பிக்கை கொள்ளும் வழிகேட்டிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீன ஸலபிக் கொள்கையினர், சூனியத்தினால் […]

மார்க்கம் அறிவோம்! மறுமை வெல்வோம்!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். எந்தவொரு கொள்கையும் கோட்பாடும் கூறாத அளவுக்கு இஸ்லாம் கல்வியைக் குறித்து அதிகம் போதித்துள்ளது. கல்வி என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், அதிலுள்ள அடிப்படைத் தன்மைகள், அம்சங்களைக் கவனித்து, அதைப் பல வகைகளாகப் பிரிக்க இயலும். அவற்றுள் முக்கிய ஒன்றான, மார்க்கக் கல்வி பற்றிய சில தகவல்களை இந்த […]

எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்

எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம். உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக! உறுதியானது (மரணம்) வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! (அல்குர்ஆன்: 15:97-99)➚ இம்மூன்று வசனங்களிலும் இறைவன் ஏராளமான படிப்பினைகளை மனித குலத்துக்கு வழங்கியிருக்கின்றான். முதல் வசனத்தில் குரைஷி காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சில சொற்களின் மூலமாக கஷ்டம் கொடுத்து மனதை நெருக்கடிக்குள்ளாக்கியதை அல்லாஹ் கூறுகின்றான். இரண்டாம் வசனத்தில் அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணமாக […]

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா? வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படை ‘வஹீ’ எனும் இறைச் செய்தி மட்டும்தான். வஹீ அல்லாத எந்த ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படையாக ஆகாது. இதனை திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் மிகத் தெளிவாக, கடுகளவும் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றன. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 7:3) (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! […]

தாம்பத்தியத்திற்குத் தடையா?

தாம்பத்தியத்திற்குத் தடையா? இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது பேண வேண்டிய ஒழுங்குகளையும், அது சம்பந்தமான விதிமுறைகள் என்னவென்பதையும் இந்தக் குடும்பவியல் தொடரில் தெரிந்து கொள்வது அவசியமாகும். பொதுவாக முஸ்லிம்களோ பிற சமூக மக்களோ இல்லறக் கடமைக்கென பல நிபந்தனைகளை அவர்களாகவே வகுத்து வைத்துள்ளனர். குடும்பத்தில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நாட்களிலோ, நேரங்களிலோ அல்லது குறிப்பிட்ட மாதங்களிலோ இல்லறக் கடமையை நிறைவேற்றக் கூடாது என்று நம்புகின்றனர். இன்னும் பலர் நல்ல நேரம், கெட்ட […]

மன அழுத்தம் தரும் தேர்வுகளும் மார்க்கம் தரும் தீர்வுகளும்

மன அழுத்தம் தரும் தேர்வுகளும் மார்க்கம் தரும் தீர்வுகளும் எல்லாம் வல்ல ரஹ்மான் தன்னுடைய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சட்ட திட்டங்களையும் லேசாக்கி வைத்துள்ளான். ஆனால் நாம் தான் அதன் விதிமுறைகளை மாற்றி, செயல்களைக் கடினமானதாக்கி, நமக்கு நாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். இது தேர்வுக் காலம். பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் எழுதப்பட்டு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை விடப் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். […]

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக! பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறான். அவற்றுள் ஒரு வசனத்தைப் பாருங்கள். رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا  ۖ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ […]

தவறுகளை நியாயப்படுத்தாதீர்!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அகில உலகத்தையும் படைத்திருக்கின்ற இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாகவும், பின்பற்ற வேண்டிய வழிமுறையாகவும் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை இறைவன் வழங்கியிருக்கின்றான். இந்தப் பேரருட்கொடையின் மூலம் உலக மாந்தர்கள் அனைவரும் அதிகமான படிப்பினைகளையும், பாடங்களையும், […]

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, படைக்கப்பட்ட மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான வழிமுறைகளையும், அமல்களையும் கற்றுத் தருகின்றான். இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற அமல்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகை. முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. கடமையான தொழுகையை தொழாமல் விடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என இஸ்லாம் கூறுகின்றது. […]

Next Page » « Previous Page