கனவில் அல்கவ்ஸர் அருகே நின்ற நபி (ஸல்) — வழி மாறிச் சென்ற இரு கூட்டத்தினர்

ஹதீஸ் சம்பவங்கள்

“அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு”

بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ، فَقَالَ: هَلُمَّ، فَقُلْتُ: أَيْنَ؟ قَالَ: إِلَى النَّارِ وَاللَّهِ، قُلْتُ: وَمَا شَأْنُهُمْ؟ قَالَ: إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى. ثُمَّ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ، فَقَالَ: هَلُمَّ، قُلْتُ أَيْنَ؟ قَالَ: إِلَى النَّارِ وَاللَّهِ، قُلْتُ: مَا شَأْنُهُمْ؟ قَالَ: إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى، فَلاَ أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلَّا مِثْلُ هَمَلِ النَّعَمِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் ‘எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’

என்றேன். அவர் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்’ என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் ‘(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். அவர் ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்’ என்று பதிலளித்தார்.

அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை. என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் – (புகாரி: 6587)

கவ்ஸர் தடாகத்தில் தம்மை நோக்கி வரும் தம் சமுதாயத்தினரை நபி (ஸல்) அடையாளம் கண்டுகொள்கிறார்கள்; ஆனால் சிலரை கடைசி நேரத்தில் அவர்களை நோக்கி வராமல் இழுத்துச் செல்கிறார்கள் — வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டதே காரணம். நம்பிக்கை கொண்டதோடு நின்றுவிடாமல், இறுதிவரை அதைக் காத்துக்கொள்வதே இறைவனிடம் முக்கியமானது என்பதை இக்கனவு காட்டுகிறது.

காணாமல் போன ஒட்டகத்தைப் போல சிலரே தப்புவார்கள் என்று நபி (ஸல்) சொன்னது நம் ஒவ்வொருவரையும் எச்சரிக்கை செய்யவே. நேர்வழி பெற்றபின் மீண்டும் பழைய வழிக்குத் திரும்பிவிடாமல், நாம் இன்று எங்கு நிற்கிறோம் என்பதை அடிக்கடி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.