இவ்வசனங்களில் (2:129➚, 2:151➚, 3:164➚, 4:113➚, 62:2➚) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * திருக்குர்ஆனை ஓதிக் காட்டுவது * மக்களைத் தூய்மைப்படுத்துவது * மக்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பது * மக்கள் அறியாதவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது ஆகியவை அந்த நான்கு பணிகள். இந்த நான்கு சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை. திருக்குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகம் (ஸல்) […]