முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபித்தோழர்களில் ஏராளமான இளைஞர்கள் இருந்தனர். இன்னும் சொல்வதென்றால், ஆறு, ஏழு வயதுடைய சிறுவர்கள் கூட, போர்க்களங்களில் இருபது, முப்பது வயதுடையவர்களுக்கு நிகராக ஏராளமாக சாதனை புரிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் காலத்தில் மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் கடந்து உறுதியாக திகழ்ந்தார்கள் என்றால், அவர்கள் குர்ஆனில் ஆழ்ந்த […]