கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை எனும் நற்பண்பு. பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுத்தார் பூமியாள்வார், பொறுமை கடலினும் பெரிது, […]