Author: Trichy Farook

நித்யானந்தாவின் அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும்

நித்யானந்தாவின் அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும் ஆன்மீகத்தின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களில் அதிகமானோர் சொகுசு சாமியார்கள். நாட்டில் எத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் நாடே பிரளயத்தில் சிக்கினாலும் அதுபற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாதவர்கள் இந்த சொகுசு சாமியார்கள். அந்த வகை கார்ப்பரேட் சாமியார்களில் பலர் பலவகையில் சர்ச்சையில் சிக்குவார்கள். பணமோசடி மற்றும் பாலியல் சர்ச்சைகளில் இந்த சொகுசு சாமியார்கள் அடிக்கடி சிக்கிக் கொண்டாலும் அதை மறைக்க ஏதாவது ஒன்றைச் செய்து மக்களை திசை மாற்றி விடும் வேலையைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். […]

ஸ்மார்ட்போன் செயலியால் வாழ்க்கையைத் தொலைத்த விபரீதம்

ஸ்மார்ட்போன் செயலியால் வாழ்க்கையைத் தொலைத்த விபரீதம் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் தவழும் இந்தக் காலத்தில் டப்ஸ்மாஷ் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தால் அதிகம் விரும்பப்படும் சீரழிவாக இந்த டப்ஸ்மாஷ் உள்ளது. செல்போன் முகப்பு கேமிராவில் வீடியோ எடுத்தபடி சினிமாவில் வரும் வசனங்களுக்கு வாயசைத்து முகபாவனை காட்டுவதன் பெயர்தான் டப்ஸ்மாஷ் ஆகும். இதில் தனியாக வசனம் பேசுவதும் உண்டு, அதுபோல ஆண்கள் பெண்கள் இணைந்து பேசுவதும் உண்டு. அவ்வாறு ஆண்களும் பெண்களும் இணைந்து […]

மன நோயை அதிகரிக்கும் வீடியோ கேம்ஸ்

மன நோயை அதிகரிக்கும் வீடியோ கேம்ஸ் ஆதிகாலத்திலிருந்து கடந்து வந்து தற்போது நவீன விஞ்ஞானம் ஆன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இன்றைக்குள்ள பல நவீன சாதனங்களால் பல சாதனைகளை புரிந்தாலும், இந்த நவீன சாதனங்களால் பல வேதனைகளும் மனித சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது! எனவே இந்த நவீன உலகத்தில் நவீன சாதனங்களால் ஏற்படுகிற சில பாதிப்புகளை கீழே நாம் விழிப்புணர்வுக்காக குறிப்பிடுகிறோம்! வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் ஒருவித […]

புதைக்கப்பட்ட வரலாறு, முளைக்கும் அற்புதம்!

புதைக்கப்பட்ட வரலாறு, முளைக்கும் அற்புதம்! வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மைசூர் சிங்கம் திப்பு சுல்தானின் வரலாறுகளை அரசாங்கம் திட்டமிட்டு மறைத்தாலும் திப்புவின் அடையாளங்களை அவரது வீர தீரச் செயல்கள் பல நேரங்களில் தானாகவே வெளிப்பட்டு திப்பு சுல்தானின் வரலாற்றை பறைசாற்றாமல் இருப்பதில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஜோதி என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிடுவதற்கு பள்ளம் தோண்டிய போது 350 […]

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே நிரூபித்த அமெரிக்க இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே நிரூபித்த அமெரிக்க இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்! மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். இந்த நோய் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் தொழுகையாளிகளாக உள்ள முஸ்லிம்களை தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50மூ கட்டுப்படுத்தலாம் […]

கெட்ட எண்ணங்கள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கெட்ட எண்ணங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! கெட்ட எண்ணங்கள் يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ […]

பகைவரையும் நேசராக்கிய மன்னிக்கும் தன்மை

பகைவரையும் நேசராக்கிய மன்னிக்கும் தன்மை உலகத்தில் முதல் எதிரியாக நபிகள் நாயகத்தையும், வெறுக்கும் மார்க்கமாக இஸ்லாத்தையும், பகை நாடாக மதீனாவையும் கருதினார் ஸுமாமா பின் உஸால். அன்பு மார்க்கமாம் இஸ்லாத்தையும், அதைப் போதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அம்மார்க்கத்தைப் பின்பற்றும் அருமைத் தோழர்களையும் சில நாட்கள் பார்த்த ஸுமாமாவின் உள்ளம் இஸ்லாத்திற்கு முன்னால் அடிபணிந்தது. இந்த சுமாமாவை மாற்றியது நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் குணம். இதோ வரலாற்றில் என்றும் மங்காத பிரகாசமாய் ஒளிவீசும் சுமாமாவின் வரலாற்றைப் […]

தாடியின் நன்மைகள்

தாடியின் நன்மைகள் சத்திய மார்க்கம் – தாடியின் நன்மைகள் : அறிவியல் சான்றுகள் – இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள் – டாக்டர் த.முஹம்மது கிஸார் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட சில இளங்கலை மாணவர்களிடம், தாடி […]

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க […]

பாலைவனங்கள்

பாலைவனங்கள் பாலைவனங்கள் புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை. வரையறை பொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங்களை […]

பாதிரியார்களின் துயரம் தரும் துறவறம்

பாதிரியார்களின் துயரம் தரும் துறவறம் கிறிஸ்தவ பாதிரியார்களின் துறவறக் கொள்கையால் உலகெங்கும் சர்ச்சைக்குரிய துயரத்தில் மாட்டிக் கொண்டே வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக கத்தோலிக்க ஆண், பெண் இருவரும் சன்னியாசியாகிறார்கள். இவர்களின் ஆண்களை பாதிரியார் என்றும், பெண்களை கன்னியாஸ்திரிகள் என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கிறார்கள். இந்த பாதிரிமார்களும், கன்னியாஸ்திரிகளும் உலகெங்கும் அன்றாடம் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார்கள். பாதிரியார்கள் பலாத்கார குற்றவாளிகளாக மாறுவது ஏன்? கேரளாவில் என்னதான் நடக்கிறது? இந்தக் கேள்வியைக் கேட்டது வேறு யாருமல்ல. ஏ.கே.சிக்ரி, அசோக் […]

சிலைகளுக்கு சக்தியில்லை என நிருபிக்கும் சிலை திருடர்கள்

சிலைகளுக்கு சக்தியில்லை என நிருபிக்கும் சிலை திருடர்கள் சிலை கடத்தலை தடுக்கா விட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.மகாதேவர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கோவில்களில் உள்ள சிலைகள் களவாடப்பட்டு, பின்னர் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த சிலை திருட்டில் பூசாரிகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் என பலரும் ஈடுபட்டு மாட்டியுள்ளனர். கற்களால் சாதாரணமாக […]

பெருகிவரும் தற்கொலைகள்: தீர்வு என்ன?

பெருகிவரும் தற்கொலைகள்: தீர்வு என்ன? நம் நாட்டில் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு வழிப்பறி போன்ற குற்றங்களை பொறுத்தவரையில் இதுவெல்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு துன்பத்தைக் கொடுக்கும் வகையில் ஒரு பக்கம் நம் நாட்டிலே நடந்தாலும், மனிதன் தனக்குத் தானே தீங்கிழைக்கக் கூடிய ஒரு மூடப்பழக்கமும் மக்களிடத்திலே அதிகமாக உண்டாகியிருக்கிறது. மிக நீண்ட நெடிய காலமாக நம் நாட்டிலும் சரி இந்த ஒட்டுமொத்த உலகத்திலும் சரி தற்கொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதை […]

சத்துணவில் வந்த சாதி சர்ச்சை

சத்துணவில் வந்த சாதி சர்ச்சை உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணில் இருந்து படைத்தோம் என இஸ்லாம் கூறுகின்றது. அதனால்தான் இஸ்லாம், சாதி என்ற பிரச்சினை இல்லாமல் அனைத்து மக்களும் சமம் என்று வெற்றி நடை போடுகின்றது. அனைத்து மக்களும் சரிசமம் என்று சொல்லும் இஸ்லாத்தை நோக்கி தினம் தினம் மக்கள் படையெடுத்து வருவதைக் காணலாம். வெளியூருக்குப் பயணம் செய்பவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிடும் யாரும் இதை சமைத்தவன் எந்த சாதி என்று […]

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு என்ன?

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு என்ன? காஷ்மீரில் கயவர்களால் நாசம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அந்த இரத்தம் காய்வதற்குள் அடுத்து இன்னொரு மோசமான பாலியல் தாக்குதல் நடந்துள்ளது. இம்முறை சென்னை நகரில். சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தினரும் வசித்து வருகின்றார்கள். அந்தக் குடும்பத்தார்கள் அப்பகுதியில் ஒரு எலக்ட்ரிக் கடை […]

மஷ்ஹூர் مشهور

மஷ்ஹூர் مشهور எல்லா மட்டங்களிலும் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் மஷ்ஹூர் எனப்படும். மூன்று நபித்தோழர்கள் ஒரு செய்தியை அறிவித்து, அம்மூவர் வழியாக கேட்டவர்களும் தலா மூவருக்கு அறிவித்து இப்படி சங்கிலித்தொடராக எல்லா நிலையிலும் மூவர் அல்லது அதைவிட அதிகமானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மஷ்ஹூர் ஆகும். இது முதவாதிர் என்ற வகை ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். இத்தகைய ஹதீஸ்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. மஷ்ஹூர் مشهور எல்லா மட்டங்களிலும் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் […]

2. ஹபருல் வாஹித் خبر الواحد (தனி நபர் அறிவிப்பது)

2. ஹபருல் வாஹித் خبر الواحد  (தனி நபர் அறிவிப்பது) தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்படாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள். இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹுர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.

1. முதவா(த்)திர் المتواتر (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

அறிவிப்பவரின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துதல் எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. முதவா(த்)திர் المتواتر  (ஒருமித்து அறிவிக்கப்படுவது) ஒரு செய்தியை ஒருவர்; இருவர் அல்ல; ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவா(த்)திர் என்று கூறுவர். மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் […]

3. மக்தூவு المقطوع (முறிக்கப்பட்டது)

3. மக்தூவு المقطوع  (முறிக்கப்பட்டது) நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

2. மவ்கூஃப் الموقوف

2. மவ்கூஃப் الموقوف சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைபட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும். அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார்; இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. என்றால் மவ்கூஃப் எனப்படும். நம்பகமான […]

1. முஸ்னத், மர்ஃபூவு (المسند– المرفوع)

1. முஸ்னத், மர்ஃபூவு (المسند– المرفوع) முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள். முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான். முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும். […]

3. மஜ்ஹுல் المجهول (யாரென அறியப்படாதவர்கள்)

3. மஜ்ஹுல் المجهول  (யாரென அறியப்படாதவர்கள்) ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர். இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார். அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? […]

2. மக்லுாப் المقلوب (மாறாட்டம்)

2. மக்லுாப் المقلوب  (மாறாட்டம்) சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்குமாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்குமாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் […]

1. முள்தரப் المضطرب

பலவீனமான ஹதீஸ்களின் மேலும் ஒரு வகை 1. முள்தரப் المضطرب குழப்பமானது என்று இதன் பொருள். முள்தரப் என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களின் ஒரு வகையாகும். ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அது ஷாத் எனப்படுகின்றது என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். முள்தரப் என்பது ஓரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம்உள்ளது. ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் […]

3. முத்ரஜ் المدرج (இடைச்செருகல்)

3. முத்ரஜ் المدرج  (இடைச்செருகல்)  ஹதீஸின் அறிவிப்பாளர், ஹதீஸை அறிவிக்கும் போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுண்டு.  இந்த நேரத்தில் இதை ஓது என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர், இந்த நேரத்தில்இதை ஓது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்து விட்டு, இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள் என்று சுய கருத்தையும் கூறிவிடுவார்.   இத்தகைய இடைச்செருகல் உள்ள ஹதீஸ்கள் முத்ரஜ் எனப்படும். இத்தகைய […]

2. முஅன்அன் المعنعن

2. முஅன்அன் المعنعن அன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும். அன் அபீஹுரைரா (அபூஹுரைரா வழியாக) அன் ஆயிஷா (ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.  நமக்குச் சொன்னார்;  நமக்கு அறிவித்தார்; எனக்குச் சொன்னார்; என்னிடம் சொன்னார்; நம்மிடம் தெரிவித்தார்; நான் காதால் அவரிடம் செவியுற்றேன் என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும். ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே […]

1. முதல்லஸ் المدلس

பலவீனமான ஹதீஸ்களின் இன்னொரு வகை அறிவிக்கப்படும் விதத்தைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும். 1. முதல்லஸ் المدلس பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் தத்லீஸ் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். மறைத்தல், இருட்டடிப்புச் செய்தல் என்பது இதன் பொருளாகும். ஒரு அறிவிப்பாளர் தனக்கு சொன்னவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறுதல் ஹதீஸ் கலையில் தத்லீஸ் எனப்படும். உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியை அப்பாஸ் (ரலி) […]

2. முன்கர் المنكر (நிராகரிக்கப்பட்டது)

2. முன்கர் المنكر  (நிராகரிக்கப்பட்டது) ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட நம்பகத் தன்மையிலும், நினைவாற்றலிலும் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும். ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற […]

1. ஷாத் الشاذ

பலவீனமான ஹதீஸ்களின் மற்றொரு வகை அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும். 1. ஷாத் الشاذ அரிதானது என்பது இதன் பொருள். ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கன்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒருவர் அறிவிப்பது […]

4. முஅல்லக் المعلق

4. முஅல்லக் المعلق ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும். வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும். உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும். அல்லது உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டிய திர்மிதீ முதல் ஹதீஸில் ஹன்னாத் என்ற தனது ஆசிரியரான அறிவிப்பாளரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் […]

3. முஃளல் المعضل

3. முஃளல் المعضل ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்பார்கள். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும். ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இவையும் பலவீனமான ஹதீஸ்களாகும்.

2. முன்கதிவு المنقطع (தொடர்பு அறுந்தது)

2. முன்கதிவு المنقطع  (தொடர்பு அறுந்தது) நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். இடையில் வேறு அறிவிப்பாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள். உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். ஹன்னாத்,  வகீவு,  இஸ்ராயீல்,  ஸிமாக், முஸ்அப், இப்னு உமர், நபிகள் நாயகம். இதில் உதாரணமாக ஸிமாக் என்பவர் குறிப்பிடப்படாமல் ஹன்னாத்,  வகீவு,  இஸ்ராயீல், […]

1. முர்ஸல் المرسل

1. முர்ஸல் المرسل ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும். உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். அதில் இப்னு உமர் என்ற நபித்தோழர் விடுபட்டு விட்டால் அது முர்ஸல் எனும் வகையில் சேரும். ஹன்னாத்  வகீவு,  இஸ்ராயீல்,  ஸிமாக்,  முஸ்அப், நபிகள் நாயகம் என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் […]

பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்

ளயீஃப் الضعيف  (பலவீனமானவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீஃப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். காரணம் எதுவாயினும் சந்தேகத்துக்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது. சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது? உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே. (அல்குர்ஆன்: 17:36)➚ என்று அல்லாஹ் கூறுகின்றான். 2518 – حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ […]

3. மத்ரூக் المتروك (விடப்படுவதற்கு ஏற்றது)

3. மத்ரூக் المتروك  (விடப்படுவதற்கு ஏற்றது) மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும். அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படா விட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும். மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். […]

2. மவ்ளூவு الموضوع (இட்டுக்கட்டப்பட்டது)

2. மவ்ளூவு الموضوع  (இட்டுக்கட்டப்பட்டது) ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றையோ,  செய்யாதவற்றையோ,  அங்கீகரிக்காதவற்றையோ அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும். திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை. புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை. அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டவை. இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை […]

1. ஸஹீஹ் الصحيح (ஆதாரப்பூர்வமானவை)

1. ஸஹீஹ் الصحيح (ஆதாரப்பூர்வமானவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் […]

ஹதீஸ்கள் எவ்வாறு பிரித்தறியப்பட்டன?

ஹதீஸ்கள் எவ்வாறு பிரித்தறியப்பட்டன? இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் சரியான செய்திகளும், தவறான செய்திகளும் கலந்து விட்டன. ஹதீஸ் என்று சொல்லப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதா? அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? சந்தேகத்துக்கு இடமானதா? என்று பிரித்தறியும் அவசியம் இதனால் தான் ஏற்பட்டது. இப்படிப் பிரித்தறியாமல் இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாதவைகளை மார்க்கம் என்று கருதும் நிலை ஏற்பட்டு இருக்கும். இஸ்லாம் அதன் தூய வடைவில் மக்களுக்குக் கிடைக்காமல் […]

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள் சிலர் முதுமையில் மூளை குழம்பி நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர். இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஸகானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து […]

7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்

7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர் ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டியுள்ளனர். இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவார்கள். யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபிவழி மருத்துவம் எனப் பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபிவழி மருத்துவம் என்றனர். ஒவ்வொரு நோய்க்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் […]

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள் மக்கள் மத்தியில் உருக்கமாகவும், சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர். நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும், வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள். […]

5. இயக்க வெறி

5. இயக்க வெறி மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன. மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள். அலீ (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள். துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை. ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள். நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு […]

4. மன்னர்களை மகிழ்விக்க

4. மன்னர்களை மகிழ்விக்க மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தர வேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள். மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார். மன்னர்களுக்குத் தண்டனை இல்லை. மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை. என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய […]

3. தனி மரியாதை பெறுவதற்காக

3. தனி மரியாதை பெறுவதற்காக மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள். حَدِيثُ إِذَا جَلَسَ الْمُتَعَلِّمُ بَيْنَ يَدَيِ الْعَالِمِ فَتَحَ اللَّهُ عَلَيْهِ سَبْعِينَ بَابًا مِنَ […]

2. ஆர்வக் கோளாறு

2. ஆர்வக் கோளாறு  மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர். மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள். இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு இவர்கள் நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள். நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் […]

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

இப்படி ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள் பல தரப்பட்டவர்களாக இருந்தனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன. அது குறித்து நாம் அறிந்து கொண்டால் தான் சரியானவை, தவறானவை என்று ஹதீஸ்களப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக அறியலாம். 1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்கு இந்த வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் […]

திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடு என்ன?

திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடு என்ன? திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளாக இருப்பது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னவையும், செய்தவையும் அல்லாஹ்வால் அருளப்பட்டவை தான். ஏனெனில் மார்க்க விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எதையும் கூற மாட்டார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படுவதை மட்டுமே அவர்கள் மார்க்கம் என்று காட்டித்தருவார்கள். எனவே திருக்குர்ஆனும் இறைச் செய்தி தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச்செய்தி தான். இரண்டையும் முழுமையாகப் பின்பற்றுவது […]

அறிமுகம்

சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் நூலின் பெயர் : சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் அறிமுகம் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையைப் புரிந்து கொண்ட மக்களுக்கு சில குழப்பங்கள் உள்ளன. திருக்குர்ஆனை முழுமையாக நாம் ஏற்றுச் செயல்படுகிறோம். திருக்குர்ஆனில் ஏற்கத்தக்கவை, ஏற்கத்தகாதவை என்று இரு வகைகள் இல்லை. அனைத்துமே ஏற்கத்தக்கவை […]

7) விதியை நம்புவதால் என்ன நன்மை

விதி நம்பிக்கை மனிதனைச் சோம்பேறியாக்குமா இஸ்லாத்தில் விதியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது போல் வேறு மதங்களிலும் தலைவிதி என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாம் சொல்லும் விதி நம்பிக்கைக்கும் மற்றவர்களின் விதி குறித்த நம்பிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்பதால் நாம் உழைக்கத் தேவை இல்லை. நமக்கு எது விதிக்கப்பட்டதோ அது நாம் உழைக்காவிட்டாலும் நமக்குக் கிடைத்து விடும் என்று மற்ற மதங்கள் சொல்வது போல் இஸ்லாம் விதியை நம்பச் சொல்லவில்லை. நோய் […]

6) நிரூபணம்

விதியை நிரூபிக்கும் அறிவியல் இறைவனின் படைப்புகளில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு மற்ற படைப்பினங்களுக்கு வழங்கப்படவில்லை. அறிவின் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். ஆனாலும் அல்லாஹ்வின் ஆட்சியின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது. விதியைப் பற்றிய முரண்பாடில்லாத சரியான விளக்கத்தை அறியும் ஆற்றலை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கவில்லை என்று புரிந்து கொண்டால் இதை முரண்பாடாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இப்படி புரிந்து கொள்வது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை வாழ்ந்த மக்களுக்கு இயலாத ஒன்றாகத் […]

Next Page » « Previous Page